Hello! It seems that you are using AdBlock - some functions may not be available. Please add us as exceptions. Thank you for understanding!
  • வணக்கம் 🙏🏻 இந்து நாவல்ஸ் தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்
Administrator
Staff member
Messages
282
Reaction score
301
Points
63
அத்தியாயம் - 11

ரகுவின் செயலில் உள்ளுக்குள் குமையும் வேதனையுடன், அவனுக்கடியில் கண்ணீர் வழிய நசுங்கிக்கிடந்த மிதுவின் தேகமெல்லாம் விஷம் தொய்ந்த முட்களாய் குத்தியது.

"இன்னும் எவ்வளவு நேரம் எம்மேல இப்டி சொகுசா படுத்திருப்ப, எனக்கு ம்..மூ..ச்சி முட்டுது.." மலைமாடு கனத்திற்கு இருந்தவனை அசைக்க முடியாது முயல்குட்டி தவிக்க, இவனோ ஆசுவாசமாக அவளது கழுத்து வளைவில் புதைந்து, உதடுகளால் தீவிர ஆராய்ச்சியில் இருந்தான்.

"மச்.. இப்பதானே மாஞ்சி மாஞ்சி பாடம் எடுத்தேன், அதுக்குள்ள என்ன டி மரியாதை தேயிது.. ஒழுங்கா கேக்க வேண்டிய விதத்துல கேளு, அப்பதே எந்திரிப்பேன்" முரட்டுக்குரல் அதிர, சட்டென கழுத்து வளைவில் இருந்த முகத்தை தூக்கி சுவாசக்காற்று அவள் முகத்தில் மோத சொன்னவன், துடிக்கும் பெண் அதரத்தை மோக விழிகளால் கூர்ந்து நோக்க, மிது மனம் நொந்து போனது தான் மிச்சம்.

"ம்..மூச்சி முட்டுது ம்.மா.மா.. ப்ளீஸ் கொஞ்சம் எந்திரிங்க.." இப்படி ஒரு துயர நிலை தனக்கு வரும் என நினைத்துக் கூட பார்த்திடாதவளின், வார்த்தைகள் திக்கித் திணறியது.

"என்ன டி, மாமாக்கு மட்டும் நெட்வொர்க் கெடைக்கலையா உன் வாய்க்கு.. மாமானு நீ சொல்லைல அப்டியே எனக்கு நாடி நரம்பெல்லாம் முறுக்கி சும்மா ஜிவ்வுனு உச்சி வரைக்கும் சூடு பரவி பித்து புடிக்கணும்.. அப்டி.. ரொமான்டிக்கா ஆசையா நளினமா மாமாஆஆ..னு கூப்டு பாப்போம்.." அவள் மூக்கோடு மூக்குரசி, வரி வரியாக பூத்திருக்கும் செவ்விதழை நா நீட்டி எச்சில் வர்ணம் தீட்ட, அதிர்ச்சியில் நடுங்கி துடித்தது பெண் தேகம்.

விடாக்கண்ணனாக, அவளை படுத்தும் பாட்டில் அழுகையும் எரிச்சலும் முட்டிக்கொண்டு வந்தது. தற்போது அவனை எதுவும் செய்ய முடியாத நிலையில் மொத்தமாக ரகுவை வெறுத்து போனாள் மிது.

"சும்மா சொல்ல கூடாது, அழுதா கூட அழகா தான்டி இருக்க குட்டிகுடுகு" அவன் வர்ணத்தில் மினுமினுத்த இதழ்களையும், கண்ணீரில் பளபளத்த வெட்டும் இமைகளையும் கண்ணிமைக்காமல் கண்டவன் குரல், கிறக்கத்தில் கரகரத்து வர்ற, கண்களை மூடிக்கொண்டாள் இறுக்கமாக.

"என்னால முடியல ப்ளீஸ் எந்திரிங்க ம்.மாமா.." மிகவும் கடினப்பட்டு சொன்னவளுக்கு, அவன் எதிர்பார்த்த ஆசை அழைப்பை உச்சரிக்கவே பிடிக்கவில்லை.

"மச்.. ஆசையா சொல்ல சொன்னா வாய்ப்பாடு ஒப்பிக்கிற" கடுப்பாக சலித்த ரகு, "சரி போ மொத நாளாச்சேன்னு சும்மா விடுறேன், நாளைல இருந்து என்னைய நீ மாமானு கூப்பிடும் போது, தேன் உருகனும் புரிஞ்சிதா.." கடினக்குரல் எதிரொலிக்க, அவளது கன்னம் அழுத்தி நச் நச்.. என மீசை குத்த முத்தமிட்டவனாக, அவளுக்கு பக்கவாட்டில் புரண்டு படுத்து, மிதுவையும் தன்னை பார்த்து உடல் உரச படுக்க வைத்த ரகு,

"சாப்டியா..?" என்றான் கண்ணில் படும் தன்னவளின் ஒவ்வொரு அழகையும் பச்சையாக உள்வாங்கிக்கொண்டே, சுடிதார் மீது எசக்கு பிசக்காக கலைந்து கிடந்த அவன் சூடிய தாலிக் கயிற்றை தொட்டு வருடி நேராக்கி அழகு பார்த்தான்.

பதில் சொல்லாமல் கண்கள் திறவாது உதடு துடிக்க கிடந்த மிதுக்கு, ரகுவின் எல்லை மீறிய செயல் ஒவ்வொன்றும் அருவருக்கவே செய்திட, ஆடவனின் அடிவேர் பாவையின் தொடையில் தட்டி உறைய வைத்தது பெண்ணை.

"ஏய் உன்னையத்தான் டி கேக்குறேன்.. சாப்டியா.." சற்றே அதட்டலாக கேட்டு அவளது ஒற்றை காலை தூக்கி அவன் இடையில் போட்டு அழுத்த, "ஹக்.. உடல் துள்ளி அதிர்வு கண்டு, சட்டென அவனை விட்டு விலக முயன்றவளை, பிட்டத்தில் கை கொடுத்து கசக்கி மேலும் தன்னோடு அழுத்தியபடி புருவம் உயர்த்திப் பார்க்க,

"ஸ்..சா..சாப்டேன்.." என்றவளுக்கு உயிரே அவளிடம் இல்லை.

"ம்ம்.. இத்த மொதல்லே சொல்றதுக்கு என்ன, நீ சாப்ட்ட சரி.. வெளிய போய்ட்டு வந்த புருசன் சாப்ட்டானா இல்லையானு எந்த கவலையும் இல்லாம நீபாட்டுக்கு நிம்மதியா தூங்குற.. கல்யாணம் முடிஞ்சி ரெண்டு நாளாவுது, புருசன பட்டினி போட்டு இப்டி கண்டுக்கிடாம இருந்தா என்ன டி அர்த்தம்.."

முகம் இறுகி உருமியவனின் கிறக்கத்தில் உள்ள பிளவுமொழி அர்த்தம் அவளை அச்சுறுத்தியது மட்டுமில்லாது, செயல்மொழியாக ஆணவனின் இளைத்த இடையினை முன்னும் பின்னும் அசைத்துக்காட்டிட, பட்டினிக்காக அர்த்தம் விளங்கி, பதைபதைபுடன் அவனை நோக்கினாள் மிது.

"ஸ்ஸ்.. என்ன டி, என் பசி புரிஞ்சிதா.." படபடக்கும் அவளது மீன்விழிகளை பார்வையால் கவ்வி, கோணல் சிரிப்பு சிந்த, பலமாக மூச்சி வாங்கியது பெண்ணுக்கு.

"எ.எனக்கு இது பிடிக்கல.. ப்ளீஸ் விட்டுடு" என்ன முயன்றும் அவனது நெருக்கத்தை ஏற்க முடியாது வெம்பித் துடித்தாள் மிது.

"ம்ம்.. ஆனா எனக்கு புடிக்கிதே டி கடுகு.. இத்துனூன்டு இருக்க உன் உடம்புல என்னென்னலாம் அதிசயம் ஒளிஞ்சிருக்குனு, நிறுத்தி நிதானமா ஒவ்வொரு எடமா ஆராய்ச்சி பண்ணி, உன்னைய என்னோட இறுக்கி அப்டியே புதச்சி வச்சுக்கணும்.. நினச்ச எடத்துல எல்லாம் கடிச்சி திங்கணும்.. எனக்குள்ள நீ அசஞ்சி நெளிஞ்சி சொர்கத்தை கண்ணுல காட்டணும்.. இன்னும் எம்புட்டோ ஆசைகள் இருக்கு டி..

இம்புட்டையும் பண்ண ஒரு ராத்திரி போதுமா சொல்லு.. தீராபசி டி இது மாண்டாலும் அடங்காது.. நீ திணறத் திணற விதவிதமா கேட்டு அடம்புடிக்கும்.. அடக்கி உனக்குள்ள வச்சிக்கிறியா டி மிதூஊ.."

அப்பட்டமான காமபோதையில் இடை ஆட பிதற்றிக்கொண்டிருந்தவனை, அதீத அச்சத்தின் உச்சத்தில் கண்டு முகம் வெளிறிய மிது, போதையில் அவன் உடல் இளகிய சமையம் சுதாரித்தவளாக, சட்டென ரகுவை தள்ளிவிட்டு ஒரே ஓட்டமாக அறை கதவை திறந்துகொண்டு வெளியே ஓடி இருக்க, இவன் முகம் கருத்து போனது.

இரவு சமைத்த பாத்திரங்களை அனைத்தும் கழுவி போட்டு, 'மகன் இன்னும் சாப்பிட வரவில்லையே' என்ற யோசனையோடே மறுநாள் அவிக்க கொண்டைக்கடலையை ஊர வைத்த மது, குளிர்சாதன பெட்டியில் இருந்த மல்லிப் பூக்களை எடுத்து வந்து சரமாக தொடுக்க தொடங்கியவள், மூச்சிறைக்க ஓடி வந்த மிதுவின் கலைந்த கோலம் கண்ட மது மனம் பதறி போனது.

"அம்மாடி.." என வாயெக்க போன மது, ஏதாவது கேட்டால் மிது மீண்டும் கோபம் கொள்வாளோ என்ற எண்ணத்தில் உடனே வாய் மூடிக்கொண்டளுக்கு, மிதுவின் நிலையினை பார்க்க பார்க்க என்னவோ போல் மனம் பிசைந்தது.

"இந்த ரகு பையன் தான், என்னவோ செஞ்சி இவள பயம்புறுத்தி இருக்கணும். அதான் புள்ள பயந்து தலைதெறிக்க ஓடி வந்திருக்கா.. நானா பேசினாலும் கோவப்படுவா, இப்ப எப்டி அவள ந்நா சமாதானம் பண்றது.." என்ற தவிப்பில் பாதிகட்டிய பூச்சரத்துடன் கண்டும் காணாமலும் அப்படியே அமர்ந்திருப்பதை கண்ட மிதுக்கு,

'தான் இப்படி நிலையில் ஓடி வந்தும் ஒரு வார்த்தை கூட என்ன பிரச்சனை என கேளாது' அசையாமல் இருந்த மதுவை பார்க்க பார்க்க ஆத்திரம் தான் அதிகம் வந்தது.

அவள் பின்னோடே வந்த ரகு, வியர்த்து விருவிருக்க வேக மூச்சுடன் முறைப்பாக நின்றிருந்த மனைவியை கண்கள் சுருக்கிபார்த்தவன், அவள் பார்வை போன திசையினை கண்டதும் கை முஷ்டி இறுகியது.

"ஏய்.. எங்கன என்ன முறைச்சிட்டு நிக்கிற, போ போயி சோத்த போட்டு கொண்டா.." ஜவ்வு விடும் அளவிற்கு சத்தமிட்டு பட்டென அவள் முதுகில் தட்டி, மது மடியில் சென்று படுத்துக்கொள்ள, லேசாக தட்டிய தட்டே முதுகு கூன் விழுந்து விட்டது மிதுக்கு.

"என்ன பா, சோறு தானே அம்மா போட்டு கொண்டாறேன் இரு.." என எந்திரிக்க போன மதுவை தடுத்த ரகு,

"நீ இருமா, அவ செய்யட்டும்.. இதுகூட செய்யாட்டி இவ எதுக்கு எனக்கு பொஞ்சாதியா இருக்கா, இனிமே என் வேலை மொத்தமும் அவளே பாத்துக்கட்டும், நீ அப்பாவ மட்டும் கவனி.." மிதுக்கும் கேட்கும்படி சத்தமாக சொன்னவன், நக்கலாக 'போடி' என்க, பற்களை கடித்தபடி அடுப்படிக்கு சென்றாள் மிது.

"தப்பு பண்ற ரகு, நீ அவகிட்ட இம்புட்டு தூரம் முரட்டுத்தனமா நடந்துகிட்டின்னா அந்த புள்ளைக்கு உம்மேல வெறுப்பு தட்டிடும்பா.. நீ என்ன காரணத்துக்கு வேணாலும் அவளுக்கு தாலி கட்டி கூட்டிட்டு வந்திருக்கலாம், அதுக்காக அவ மனசு நோக நடந்து உன்னைய நீயே அவளுக்கு விரோதியாக்கிகாத ரகு..

பொண்ணுங்க மனசு ரொம்பவே மென்மையானது, காயம் பட்டா அத்தனை சீக்கிரத்துல வடு மறையாது. அம்மா சொல்றத கேட்டு, புரிஞ்சி நடந்துக்கோ கண்ணா.."

முத்துப்பிள்ளைக்கு மணிமணியாக பாடம் நடத்த, எங்கே அவன் காதில் விழுந்தது. அவன் இலக்கை அடையும் வரை யார் சொல்வதும் அவனுக்கு கேட்டிடாதவாரு மனதையும் மூளையையும் இரும்பு சங்கிலி கொண்டு பூட்டி வைத்திருப்பது அவன் மட்டும் தானே அறிவான்.

கண்மூடியபடி, அன்னைக்கு ம்.. கொட்டிக்கொண்டிருந்த ரகு, டங்ங்ங்.. என தரையில் தட்டு வைத்த சத்தத்தில் கண் விழுத்தவன், அவசரமாக அறைக்கு செல்ல போனவளை, சொடக்கிட்டு அழைத்தான்.

"பிச்சைக்காரனா டி ந்நா, தட்ட தூக்கி போட்டு போற.. மரியாதையா இங்கிட்டு வந்து பக்கத்துல ஒக்காந்து அந்த தட்ட கைல எடுத்து, நீயா சோத்த பெசஞ்சி எனக்கு ஊட்டி விடல, மவளே கைல உள்ள மொத்த விரலையும் துண்டு துண்டா நறுக்கி போட்டுடுவேன்.. வாடிஇஇ.." காட்டுக்குரல் அதிர கத்த, அவன் மனைவிக்கு மட்டுமா உடல் தூக்கிவாரி போட்டது, பெற்றவளுக்கும் வயிற்றில் புளியை கரைக்க பாவமாக பார்த்தாள் மருமகளை.

கால்கள் ஒன்றுகொன்று பலமாக பின்னிக்கொள்ள, தட்டுதடுமாறி அவனுக்கு பக்கத்தில் அமர்ந்து தட்டை கையில் எடுத்த மிதுக்கு தானாக கண்கள் கலங்க துவங்கிவிட்டது.

"ரகு அந்த புள்ள பாவம்பா, அம்மாதே உன் பக்கத்துல இருக்கேனே, ந்நா உனக்கு ஊட்டி விடுறேன்.. கொஞ்சம் கொஞ்சமா அவ உன்ன புரிஞ்சிகிட்டு தானா ஒனக்காக எல்லாம் செய்ய முன் வருவா, அதுவரைக்கும் அவகிட்ட நல்லபடியா நடந்துகிட்டு உன்னைய புரிஞ்சி வாழ அவகாசம் குடு கண்ணா.."

மென்மையாக சொல்லி புரிய வைத்த மதுவை காலாட்டியபடி பார்த்த ரகு,

"இதுல புரிஞ்சி வாழ என்னமா இருக்கு.. ந்நா இதுதே, ரகுபதினா அடாவடிக்காரன் முரடன் இந்த விசயம் ஊருக்கே தெரியுமே.. அம்புட்டு ஏன் இவளுக்கும் இவ குடும்பத்துக்கு கூட நல்லாவே தெரியுமே.. பொறவு என்ன? அப்டியே ஏத்துக்கிட்டு வாழ வேண்டியதுதே..

அதையும் மீறி ஏதாவது தெரியணும்னா, அவளே அத்த எங்கிட்டக்க வாய தொறந்து கேட்டு தெரிஞ்சிக்கட்டும்.. நீ பேசாம பூவ கட்டு தாயே.. ஆமா இந்த பூ யாருக்கு என் பொண்டாட்டிக்கா.." மனைவியின் சிவந்த முகத்தை அணுஅணுவாக கூர்ந்து நோக்கியபடி தாயிடம் பேச்சி வளர்க்க,

"ஆமா ரகு, காத்தால என் மருமக குளிச்சிட்டு வச்சிக்க கட்டி வைக்கிறேன்.. ஒன்னு பண்ணு ரகு பேசாம நீயே நாளைக்கு உன் கையாள மிது தலைல பூவ வச்சி விடு.. கல்யாணமாகி புருசன் கையாள பூவ வச்சிக்கிறது எல்லாம் பொண்ணுங்களுக்கு எம்புட்டு பெரிய கொடுப்பனை தெரியுமா.."

அவள் கணவன் நியாபகத்தில் மிதுவை மறந்த மது, பேசிக்கொண்டே போக,

"அதுக்கு என்னம்மா, அதே இம்புட்டு பூவு கட்டி வச்சிருக்கியே, அதுல பாதி குடு இப்பவே என் பொண்டாட்டி தலைல வச்சி விடுறேன்" என்றவன் மது மடியில் இருந்து வெடுக்கென எழுந்து, தாய் கையில் இருந்து பூவை பிடிங்கி, திருத்திருவென விழித்துக்கொண்டிருந்த மனைவி தோளைப்பற்றி திருப்பி, தானே அவள் தலையில் பூவை வைத்துவிட, இனம் புரியாத உணர்வு முதல் முதலாக மிது நெஞ்சில் தோன்றி, தேகம் சிலிர்த்து அடங்கியவளின் இருதயத்தில் படபடபை உண்டுபண்ணியது.

"ம்ம்.. இப்பதே பாக்க பொண்ணா லட்சமா அழகா இருக்கா இல்ல மா.." பூ சூடிய மனைவி அழகை கண்களில் பருகியபடி, அன்னையிடம் கிண்டல் செய்ய, மதுவும் அது கிண்டல் என புரியாது, சட்டென தலையாட்டி வைத்து மகனோடு சிரித்ததில், இவளுக்கு உள்ளுக்குள் குபுகுபுக்க செய்தது.

எப்போதும் அப்பாவி போலவே தன்னை காட்டிக்கொள்ளும் மாமியாரை, சோத்தை பிசைந்தபடியே முறைத்துக் கொண்டிருந்தவளை கண்ட ரகு, புறங்கையில் நறுக்கென கிள்ளி வைத்தான்.

"ஸ்ஸ்ஸ்.. ஆஆ.." அவள் வலியில் முனகி கரத்தை தேய்க்க,

"அங்க என்ன டி மொறப்பு, எம்புட்டு நேரமா சோத்த பெசைவ, ம்ம்.. வாயில வாயி.." ஆஆ.. என வாய் திறந்தவன் வில்லங்கப் பார்வை, அழுத்தமாக அவள் அங்கம் மேய்ந்து சொன்ன சங்கதியில் திடுக்கிட்டவளாய் மாமியாரை பார்த்தாள் மிது.

நல்லவேளையாக அவள் பூ தொடுப்பதில் பிசியாகிட, பெருமூச்சு விட்டு கைபிடி உணவை எடுத்து கணவனின் வாயருகே நடுக்கமாக எடுத்து வந்தவளை, முரட்டுப் பார்வையால் கொள்ளையிட்டபடி, விரலோடு சேர்த்து உணவை விழுங்க, சங்கடமாக நெளிந்தாள் முல்லைக்கொடியாக.

ஒரு விதத்தில் மது உடன் இருப்பதால் தான், கையும் காலும் வைத்துக்கொண்டு தன்னிடம் அதீத எல்லை மீறல் இல்லாமல், அவன் அன்னை அறியாது கல்மிஷம் செய்கிறான் என்பதை உணர்ந்துகொண்ட மிது, இப்படியே மதுவை அருகில் வைத்துக்கொண்டு இவனை விரட்டி விட்டு, தானும் இங்கேயே மாமியாருடன் இருந்து விடலாம் என மனதுக்குள் திட்டமிட்டவளின் முகம் பிரகாசிக்க, அவசரமாக கணவனுக்கு ஊட்டி முடித்து தட்டை கழுவுதொட்டியில் போட்டு கைகழுவி விட்டு திரும்பிய நேரம், முரட்டு தேகத்தில் பலமாக முட்டி நின்றாள் மிது.

"என்னைய மீறி உன் திட்டத்த நிறைவேத்த முடியுமா டி உன்னால..." கேலியாக கேட்ட ரகுவை, அவள் விழிவிரித்து நோக்க,

"என்ன அப்டி பாக்குற, அம்மாவ அப்பவே அவங்க ரூம்க்கு அனுப்பி விட்டாச்சி.. நீ வா தங்கோ நம்ம, நம்ம ரூம்க்கு போயி விட்டதுல இருந்து தொடங்கலாம்.." மிது சுதாரிக்கும் முன் சட்டென அவளை கையில் ஏந்தி இருக்க, பூவுடல் அப்பட்டமாக உதறல் எடுத்தது.

"கடுகு சைஸ்ல இருந்துட்டு, என்னைய வெரட்டவா திட்டம் போடற.. இப்ப வாடி உன்னைய அலற விடுறேன்" அவளது உதறல் உணர்ந்து உள்ளுக்குள் நகைத்த ரகு, பாவையின் தலையில் சூடி இருந்த மல்லிப்பூ வாசத்திலும், பூ மேனியவள் சந்தன வாசத்திலும் சித்தமும் மயங்கி, கிறங்கி போனான்.

தொடரும்.
 
Last edited:

Author: Indhu Novels
Article Title: அத்தியாயம் 11
Source URL: Indhu Novels-https://indhunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top