• வணக்கம் 🙏🏻 இந்து நாவல்ஸ் தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்
Administrator
Staff member
Messages
258
Reaction score
272
Points
63
அத்தியாயம் - 14

மது வீர் சென்றதில் இருந்து வீடே வெறிசோடி இருக்க, இரவாக இரவாக ரகு எப்போது வேண்டுமானாலும் வந்துவிடுவான் என்ற எண்ணமே மிதுவை அச்சுறுத்த போதுமானதாக இருந்தது.

அவன் தாய் தந்தை இருக்கும் போதே கொஞ்சமும் அவனை அடக்க முடியாது. இப்போது சொல்லவே வேண்டாம்! முரணான முரடன் தன்னிடம் அத்துமீறி நடந்து கொள்வானே என்ற பதைபதைப்போடே நேரத்தை பார்த்துக்கொண்டிருந்தவள், படபடவென கதவு தட்டும் சத்தத்தில் திடுக்கிட்டு பதறி எழுந்தாள்.

"ஏய் கடுகுஊ.. எம்புட்டு நேரம் கதவ தட்டுறது.. உள்ள என்ன டி பண்ற" ரகுவின் ஓலக்குரலை கேட்டு கதிகலங்கியது மிதுவுக்கு.

அடிமேல் அடிவைத்து கதவை நெருங்கிய மிது, நடுங்கும் கை கொண்டு தாழ்பாலை திறப்பதற்குள், படபட.. படபடவென ஓயாது தட்டிய தட்டில் விரிசலே விழிந்திருக்கும் அத்தேக்குமர கதவு.

"தோ இருக்க கதவ தொறக்க இம்புட்டு நேரமா உனக்கு.." கதவை அடித்து திறந்துகொண்டு வரும் போதே காரசாரமாக வெடித்தவனை கண்டதும், முத்து முத்தாக வியர்வை துளிகள் பூத்து விட்டது அச்சத்தில்.

அடர்ந்த புருவங்களுக்கு கீழுள்ள கூரிய விழிகளால், மௌனமாக தரை நோக்கி நின்ற மனைவியை ஏறிட்டு பார்த்த ரகு, வேறேதும் பேசாது அறைக்குள் சென்றவன், சற்று நேரத்தில் எல்லாம் குளித்து முடித்து இடையில் ஒரு லுங்கியை மட்டும் கட்டிக்கொண்டு, டிவி முன்பு சும்மனமிட்டு அமர்ந்தான்.

ரகு அப்படி அமர்ந்தால் உணவுக்காக தான் என வந்த சிறிது நாட்கள் ஆனாலும் நன்றாக கவனித்து வைத்திருந்த மிது, அவன் வாய் திறக்கும் முன்னவே மது செய்து வைத்திருந்த இடியாப்பத்தை கொண்டு வந்து வைத்தவள், நியாபகமாக தேங்காய் பாலில் நாட்டுச்சக்கரை கலந்து ஆப்பம் மீது ஊற்றியவளை, "யார் செய்தது?" என்பது போல இமைகள் சுருக்கி கேள்வியாக பார்க்க,

"உ..உங்க அம்மா போகும் முன்ன உ.ங்களுக்காக ரெடி பண்ணி வச்சிட்டு போனாங்க.." அப்பப்பா.. அவன் கள்ளுண்ட விழிகள் பார்த்து பேசவே அத்தனை தடுமாற்றமாகி போனது. முக்கியமாக மரியாதையாக பேசவேண்டும், இல்லையேல் சாத்தான் வேதம் ஓதி விடுமே!

ஒன்றும் சொல்லாமல் உண்ண தொடங்கிய ரகு, அமைதியாக நியூஸ் சேனலை வைத்தான்.

"பூவையூர் கூவத்தில் உடல் சிதைந்த நிலையில் ஆண் சடலம் மீட்டெடுப்பு.
போலீஸார் விசாரணையின் போது,
சடலமாக கிடைத்தவன், பெண்களை கடத்தி நாடு நாடாக விற்கும் கடத்தல்வாதி கும்பலின் முக்கிய கையாள் என்ற திடுக்கிடும் உண்மைகள் தெரியவந்துள்ளது.

இவன் இறப்பின் மர்மம் என்ன? இவனோடு மற்றும் பல கடத்தல்வாதிகளும் ஊருக்குள் படையெடுத்து பதுங்கி உள்ளனரா? என்ற தீவிர விசாரணையில் போலீஸார் ஈடுபட்டுள்ளர்"

முக்கிய செய்தியாக தொலைக்காட்சியில் ஓடிக்கொண்டிருக்க,

"பொண்ண கடத்திட்டு போயி வித்து சீரழிக்கிரவனுக்கும், வலுக்கட்டாயமா வீடு புகுந்து கற்பழிக்கிறவனுக்கும் பெருசா என்ன வித்தியாசம் இருந்திட போது.." வாய்க்குள் முணுமுணுத்த மிது, ஆர்ப்பாட்டமின்றி பரபரப்பு செய்தியை பார்த்துக்கொண்டிருந்த ரகுவை வெறுமையாக காண,

"அவன் ஒருத்தரம் வித்துட்டா அந்த பொண்ணு கை மாறி போயிட்டே இருக்கும்.. ந்நா தாலி கட்டி கூடவே வச்சிருக்கேன் அம்புட்டுதேன் வித்தியாசம்" எஃது குரல் முழங்கியதை கேட்டு, நிலநடுக்கம் கண்டது போல கால்கள் தடுமாறி நெஞ்சி திடுக்கிட்டு நின்றாள் மிது.

"ஒருமுறை கூட எனக்கு நீங்க எவ்ளோ பெரிய தவறை செஞ்சிருக்கீங்கன்னு யோசிக்கவே மாட்டீங்களா.." என்ன முயற்சித்தும் ஆற்றாமையை அடக்கமுடியவில்லை அவளால்.

"அப்டி மூளைய கசக்கி கஸ்ட்டபட்டு யோசிக்கிற அளவுக்கு, அம்புட்டு பெரிய தப்ப ஒன்னும் ந்நா பண்ணி இல்லையே!" நக்கலாக அவன் பதிலுரைத்ததை கேட்டு, ஆத்திரத்தில் உள்ளம் குமுறியது பாவைக்கு.

அதற்கு மேலும் தனியா இருக்கும் நேரத்தில் அவனிடம் பேச்சி வளர்க்க விரும்பாமல், அறைக்குள் செல்ல முனைய,

"ஏய்.. சாப்ட்டுட்டு இருக்கேன்ல நீபாட்டுக்கு கூட இருந்து கவனிக்காம போறே.. வந்து ஒக்காருடி" சின்னமான கர்ஜனையில், தன் தலைவிதியை நொந்துகொண்டு அவன் எதிரில் அமர்ந்தவளை,

"இன்னொரு இடியாப்பம் வையி.. பால தட்ட பத்து ஊத்து, எனக்கு ஊத்த நெனைக்காத.. சாப்பிடுறேனே குடிக்க தண்ணி வைக்க தெரியாது.. தண்ணி குடிக்காம ந்நா விக்கிக்கிட்டு சாகனும் அதுதானே உன் எண்ணம்..

தண்ணிய சொம்புல கொண்டாடின்னா, சொப்புல கொண்டார.. உன் அப்பன் என்ன டி வளத்தி வச்சிருக்கான் உன்னைய.." மிது அமர்ந்ததில் இருந்தே வாய் ஓயாது தூற்றி, ஏன்டா டிவிய பாத்து அப்படி சொன்னோம் என யோசிக்கும் அளவிற்கு அவளை படாத பாடு படுத்தி விட்டான் ரகு.

"இந்தா.. தரையவே வெறிச்சிட்டு இருந்தா என்ன அர்த்தம், அம்மணிக்கு சாப்புட்ற எண்ணம் இல்லையா.." என்றான் அதட்டலாக.

"இ.இல்ல.. எனக்கு ப்.பசிக்கல.." திக்கித் திணறிய மிதுக்கு, இவனிடம் தனியாக சிக்கி இருப்பதே வயிற்றுக்குள் புளியை கரைக்க, இதில் எங்கிருந்து உணவு உள்ளிறங்கும்.

"ம்ம்.. புடி.." அவள் மடியில் வைக்கப்பட்ட உணவு தட்டையும் அவனையும் மிது மாறி மாறி அதிசயமாக பார்க்க, "நல்லா சாப்ட்டு தெம்பாகு, அப்பதேன் மாமாகூட சடுகுடு விளையாட முடியும்"

கழுத்தோடு துப்பட்டா பதிந்து கிடக்க, துப்பட்டா மறைக்க வேண்டிய பகுதியில் இவன் பார்வை பதித்து சொன்னதன் பொருள் உணர்ந்தவளின் கரம், அவசரமாக துப்பட்டாவை இழுத்து சரிசெய்து கொண்டாலும், படபடப்பு என்னவோ தீர்ந்தபாடில்லை.

"என்ன ஊட்டி விடணுமா.." என்றான் ஒரு தினுசான பார்வை பார்த்து.

ஹாங்.. என பதறிய மிது, "சரியான முரட்டு ராஸ்கல்.." மனதில் அர்ச்சித்து மின்னல் வேகத்தில் உண்டு முடித்தவள், நாலு பாத்திரத்தை தேய்க்க நாலு மணிநேரமாக சமையல் கூடத்தில் நேரத்தை கடத்திக்கொண்டிருக்க, பொறுத்து பொறுத்து பார்த்தவனும் கொக்காக கெண்டைமீனை கவ்விகொண்டு வந்துவிட்டான்.

உள்ளுக்குள் அதீத பயம் பதட்டம் எக்கச்சக்கமாக பெண்ணை ஆட்டிப்படைக்க, எப்படி ரகுவின் அத்துமீரலை சகித்துக்கொள்ள போகிறோம் என்ற கலக்கத்துடன் இருந்த மிது, அவனது இழுவிசைக்கு தகந்தார் போல வாய் பேசாது வளைந்து கொடுத்தவள், அவன் தூக்கி வந்து மெத்தையில் போட்ட பின்னும் எதுவும் செய்யாமல் அமைதியாக இருப்பதை உணர்ந்து மெல்ல கண் திறந்து பார்த்தாள்.

அவளருகில் மல்லாக்க படுத்து ஏதோ தீவிர யோசனையில் இருந்தவனை, மூச்சி சத்தம் இல்லாது அமைதியாக பார்த்த மிது, "என்ன முரட்டு பைய அமைதியா படுத்திருக்கான்" அதிசயத்து நினைத்தவள், எங்கே தானாக எதுவும் பேச போயி தனக்கே வினையாகி விடுமோ என்ற அச்சத்தில் ஒடுங்கி படுத்திருந்த மிது, எப்போது கண்ணுறங்கினாளோ!

அவள் உறங்கிய மறுநொடியில் இருந்து, ரகுவின் கதகதப்பான இறுகிய அணைப்பிற்குள் இடம் மாறி, அவனது சுவாச மூச்சை உள்ளிழுத்து சுகமான நித்திரை கொண்டதை உணராது போனாள் பாவை.

** ** **

தேவாலயங்களை புதுப்பிக்கும் பூஜை மற்றும் பணிகளை நல்லபடியாக தொடங்கி வைத்த குரு, கட்சி வேலைகளை முடித்து விட்டு வீடு திரும்ப மாலை நான்கு மணியாகி விட்டது.

அதிகாலையில் இருந்து தொடர்ந்து அலைச்சல், அதிக பணிசுமை என தேக அலுப்பு தட்டிவிட, ஆவி பறக்கும் சூட்டில் நன்கு குளியல் போட்டு வந்த குரு, வீட்டில் இருக்கும் போது அணியும் சாதாரண கட்டம் போட்ட லுங்கியை கட்டிக்கொண்டு, முண்டா பணியனுடன் ஹாலில் உள்ள சோபாவில் அமர, சூடான டீயை தொம்மென மேசையில் வைத்தார் ராஜேஸ்வரி.

"என்ன ம்மா, இன்னைக்கு ரொம்ப சூடா இருக்க.. அப்பா ஊருக்கு போய்ட்டாரா என்ன" தாயின் கோபம் ஏன் என அறிந்த குரு, கேலி பேசி டீயை ஊதி உறிந்தான்.

"உனக்கு எல்லாமே விளையாட்டா போச்சி குரு.. மிது படிப்பை முடிச்சதும் எப்படா உனக்கு கட்டி வைக்கலாம்னு காத்திருந்தது நான் தான். ஆனா எப்போ அவ கெட்டு போனவன்னு தெரிஞ்சிதோ அப்பவே என் ஆசையெல்லாம் போயே போச்சி..

இருந்தும் என் அண்ணனுக்காகவும் உனக்காகவும் அரை மனசா சம்மதிச்சி கடைசில என்னாச்சி, அந்த கல்யாணமும் நின்னு போச்சி.." மூச்சி விடாமல் பேசும் தாயை பேச விட்டு வேடிக்கை பார்த்தான் சிவகுரு.

"என்ன நேரமோ, பாலாக்கும் பெரிய ஆபத்து நடந்து உயிர் பிழைச்சி வந்திருக்கான்.. இதுக்கு மேல முடியாது குரு, எனக்கு உன் சந்தோஷம் தான் முக்கியம். அம்மா நல்ல பொண்ணா பாத்து உனக்கு கட்டி வைக்கிறேன், அதுக்கு சம்மதம் சொல்லுபா.." அவன் சம்மதத்திற்காக வேண்டி நின்றார் ராஜேஸ்வரி.

"உனக்கே தெரியும் எனக்கு கல்யாணத்துல எல்லாம் விருப்பமே இல்லைனு.. மாமா திடீர்னு வந்து மிதுக்கு ஒரு பிரச்சனைனு சொன்னதும் மனசு தாங்காம அவளை கல்யாணம் பண்ண சம்மதிச்சேனே தவிர, கல்யாணம் பண்ற ஆசையினால இல்ல.

உனக்கு அப்டி ரொம்ப ஆசையா இருந்தா பாலாக்கு பொண்ணு பாத்து கட்டி வைம்மா.. என்னைய ஆளவிடு.." தலைக்கு மேல் கும்பிட்டு போட்டவன் மேலும் இங்கிருந்தால் தாயின் கண்ணீரை பார்க்க நேரிடுமே என்ற வருத்தத்தில் இடத்தை காலி செய்திருந்தான்.

இளைய மகன் பாலாவை விட, மூத்த மகன் என்றால் அத்தனை பிரியம் ராஜேஸ்வரிக்கு. கொஞ்சம் ராவடித்தனம் கொண்டவன் தான் என்றாலும் அன்பானவன் பொறுப்பானவன். குடும்ப நலன் மட்டுமில்லாது ஊரார் நலனுக்காகவும் நல்லதை மட்டுமே யோசித்து செய்வதில் சிவகுருவை அடித்துக்கொள்ள முடியாது.

அப்பேர்ப்பட்ட மகனின் வாழ்க்கை நல்லபடியாக சிறக்க வைக்க ஒரு தாயாக நினைப்பது தவறில்லையே! என்பது அவர் எண்ணம். ஆனால் மாமியார் என்று வரும்போது சற்று சுயநலம் இருக்கவே செய்கிறது.

அவன் சென்ற திசையையே சோகமாக அவர் பார்த்திருக்க,

"கல்யாணம் கட்டி வையினு வாய திறந்து கேக்குறவனுக்கு கட்டி வைக்காம, கல்யாணமே வேண்டான்னு ஓடி ஒளியிரவனை தேடி தேடி கெஞ்சிறதே உனக்கு வேலையா போச்சிம்மா.." பெரிதாக சலித்துக்கொண்டு நொண்டி நொண்டி நடந்து வந்த பாலாவை முறைப்பாக கண்டார்.

"வீட்டுக்கு அடங்காம முழு குடி குடிச்சிட்டு ஆக்சிடென்ட் ஆஸ்பத்திரினு படுத்து கெடந்துட்டு வந்திருக்க, இதுல உனக்கு கல்யாணம் வேற கட்டி வைக்கணுமா..

வர வர உன் ஆசைக்கு அளவே இல்லாம போச்சி பாலா.. இனியாவது ஒழுங்கா இரு, உன் அண்ணனுக்கு கல்யாணம் பண்ண பிறகு உனக்கு பாக்கலாம்" கண்டிப்புடன் சொன்ன ராஜேஸ்வரி தோட்ட பராமரிப்பை கவனிக்க சென்றிட, முகம் கருத்த நிலையில் கைமுஷ்டி இறுக நின்றான் பாலகுரு.

தொடரும்.
 

Author: Indhu Novels
Article Title: அத்தியாயம் 14
Source URL: Indhu Novels-https://indhunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top