Hello! It seems that you are using AdBlock - some functions may not be available. Please add us as exceptions. Thank you for understanding!
  • வணக்கம் 🙏🏻 இந்து நாவல்ஸ் தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்
  • இந்து நாவால்ஸ் தளத்தில் எழுத விரும்புவோர், indhunovel@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு செய்தி அனுப்பவும். கற்பனைகளை காவியமாக்குங்கள் ✍🏻💖

அத்தியாயம் 21

Administrator
Staff member
Messages
300
Reaction score
215
Points
63
அத்தியாயம் 21

அரவிந்தின் இறுக்கமான அனைப்புக்குள் இருந்த முல்லையின் இதயம் தாரு மாறாக அடித்துக் கொண்டது.

"சார் என்ன பண்றீங்க, பாட்டி நம்மள தான் பாக்குறாங்க".. , அவன் அனைப்புகுள்ளே நெளிந்தபடி மெல்லிய குரலில் கூச்சலிட்டாள் முல்லை.

அப்போது தான் தான் அவசரத்தில் உணர்ச்சிவசப்பட்டு,, என்ன காரியம் செய்து விட்டோம் என்று மூளையில் உரைக்க.. சட்டென அவளை விட்டு விலகியவன், பாட்டியை பார்த்தான் சங்கடமாக..

பாட்டி எல்லை இல்லா மிகுந்த மகிழ்ச்சியுடன், இருவரையும் பார்த்து புன்னகைத்தபடி இருந்தவர்.... "கண்ணா, எனக்கு என்ன சொல்றதுன்னு ஒன்னும் புரியல, ரொம்ப சந்தோஷமா இருக்குப்பா.. ரெண்டு பேரும் மனச விட்டு பேசி, இதுவரை நடந்த கசப்பான எல்லாத்தையும் மறந்துட்டு, ஒருத்தரை ஒருத்தர் நல்லா புரிஞ்சிகிட்டு ஒரு புது அத்தியாயத்தோட உங்க வாழ்க்கையை தொடங்குங்க"
இருவரையும் வாழ்த்தி மனமார்ந்து ஆசி வழங்கினார்.

இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டவர்களாக, முதலில் முல்லை பாட்டி காலில் விழுந்து வணங்க, அவளை தொடர்ந்து ஏதோ மனதில் ஒரு வித பரவசமாக அரவிந்தும் அவர் காலில் விழவும், "பிள்ளை குட்டிகளோட நல்லா இருங்க கண்ணுங்குளா, நீங்க பட்ட கஷ்டங்களுக்கு இனிமே நல்லா இருப்பீங்க..." என்றவர் இருவர் தலையை வருடி விட்டார்.

அதற்கு மேல் என்ன பேசுவது என்று யாருக்குமே புரியாமல் அமைதியாக இருக்க, அந்த அமைதியை கலைக்கவே அரவிந்த் முல்லையின் தவ புதல்வன் வீரிட்டு கத்த ஆரமித்தான்.

முல்லை தூக்குவதற்கு முன்னவே அரவிந்த் சென்று குழந்தையை தூக்கி தோளில் போட்டு தட்டி கொடுக்கவும், அப்போது வாசலில் ஒரு பெண் ஒருத்தி வந்து நின்று, சார் என குரல் கொடுக்கவும் சரியாக இருந்தது..

அந்த பெண்ணை பார்த்த அரவிந்த், "ஹான் நீங்க தான் தனலட்சுமி'யா" என்றான்.

"ம்ம்.. ஆமா சார், டாக்டர். பிரவீன் சொன்னாரு அதான் வந்தேன்"

"ஓகே உள்ள வாங்க" என்றவன்.. "எல்லாமே பிரவீன் சொல்லி இருப்பான்னு நினைக்கிறேன், நானும் ஒரு முறை சொல்லிடறேன்.. இந்த குழந்தைக்கு தான் நீங்க தாய் பால் கொடுக்கணும்.. ஒரு ஆறு மாசத்துக்கு நீங்க உங்க பேமிலியோட இங்க வந்து தங்கிக்கோங்க, உங்களுக்கு தேவையான எல்லா வசதியும் நான் செஞ்சி கொடுத்துடுவேன் சரியா" என்றான் ஆளுமை நிறைந்த குரலில்.

சரி சார், என்று பவ்யாமாக அந்த பெண் சொன்னதும் ,..
"ம்ம்.. குட்.. இந்தாங்க குழந்தை பசில ரொம்ப அழறான்" என்றவன் குழந்தையை அந்த பெண்ணிடம் கொடுக்க, அந்த பெண்ணும் குழந்தையை வாங்கிக் கொண்டு அவளுக்கு கொடுக்கப் பட்ட அறைக்கு சென்றால்...

இதை அனைத்தையும், பாட்டியும் முல்லையும் முதலில் ஒன்றும் புரியாது பின் புரிந்ததும்,, பாட்டி புன்னகைத்துக் கொள்ள, முல்லையோ ஆச்சிரியத்தில் விழி விரித்து பார்த்து நின்றாள்.

இருவரையும் ஒன்றும் தெரியாதவனை போல் பார்த்தவன்..
"என்ன ரெண்டு பேரும் என்னை அப்டி பாக்குறீங்க, இதெல்லாம் இவன் எப்ப பண்ணான்னா, அதெல்லாம் கார்ல வரும்போதே என் பிரண்ட் பிரவீன்க்கு மெசேஜ் அனுப்பி, அனுக்குட்டிக்கு தாய் பால் கொடுக்க ஆள் அனுப்புன மாதிரி உடனே அனுப்ப சொல்லி இருந்தேன்.. அதான் இவங்கள அனுப்பி விட்டான்.". என்றவனாக, "முல்ல உன்கிட்ட நான் கொஞ்சம் பேசணுமே " சற்றே தயங்கி கேட்டான்.
.
முல்லை பாட்டியை பார்க்க, "போம்மா" அவர் சொல்ல, இருவரும் அரவிந்த் அறையில் உள்ள பால்கனியில் வந்து எதிர் எதிர் புறம் நின்றவளாக, ஒருவர் முகத்தை ஒருவர் பார்ப்பதும், பின் குனிந்து கொள்வதும், பின் வேறெங்கோ பார்ப்பதுமாய் இப்படியே அரை மணி நேரம் கடந்து போனது..

மெதுவாக முல்லை தான், சார் ஏதோ பேசணும்னு கூப்ட்டு வந்து அமைதியா இருக்கீங்களே" என இழுவையாக ஆரமித்தாள்.

"ம்ம்.. பேசணும் தான், நிறைய பேசணும்.. அதுக்கு முன்னாடி என் பேரு" அவன் ஆரமிக்கும் போதே,

"தெரியும் சார், பாட்டி சொன்னாங்க"

"அப்பறம் ஏன் இந்த சார்.."

"திடிர்னு உங்க பேரை சொல்லி எப்டி கூப்பிட, இத்தனை நாளுல உங்களை சார்'னு கூப்ட்டு பழகி போச்சி அதான்..."

"ஓகே பைன், உனக்கு என்ன எப்ப எப்டி கூப்ட தோணுதோ அப்ப கூப்டு.. உனக்கு என்னை பத்தி எதுவுமே தெரியாம எப்டி என்னை உன் புருஷனா ஏத்துகிட்ட... அதுவும் இது எனக்கு முதல் கல்யாணம் இல்லைனு தெரிஞ்சும்" வருத்தம் தோய்ந்த குரலில் கேட்டவன் முகம் வாடியே இருந்தது.

அதை உணர்ந்து கொண்ட முல்லை..
"சார், இங்க நான் வந்த அன்னைக்கு பாட்டி உங்க பாஸ்ட் பத்தி கொஞ்சம் கொஞ்சம் சொன்னாங்க, கேக்கவே கஷ்டமா தான் இருந்துச்சி.. எத்தனை பெரிய நம்பிக்கை துரோகம், அதை நீங்க எப்டி தாங்கிகிட்டிங்க.. எனக்கு அதை நினைச்சாலே நெஞ்சி பதறுது.. பட் நான் அதனால உங்க மேல பரிதாபப்பட்டு எல்லாம் உங்கள நான் ஏத்துக்கிட்டதா சொல்ல வரல..

அதான் வெளியவே சொன்னேனே, உங்களுக்கு ஒன்னுனா எனக்கும் சேத்தே வலிக்குது சார்.. ஏன்" என அப்பாவியாக கேட்டவளை, வாரி அணைத்துக் கொள்ள பரபரத்த கரங்களை மார்பின் குறுக்கே கட்டிக் கொண்டவனாக, "எங்க வலிக்குது முல்ல" என்றான் அவளை குறும்பாக பார்த்து.

இங்க, என இதயம் இருக்கும் பகுதியை தொட்டு காட்ட.. அடித்த நொடி அவளின் கரத்தை பிடித்து இழுத்து அவனுடன் ஒட்டி நிற்க்க வைத்துக் கொண்டவனாக,
இருக்கைகளாலும் அவள் கன்னம் ஏந்தி, பாவையின் முகத்தை ஆழ்ந்து பார்த்தான்.

ஆடவனின் இத்தகைய நெருக்கத்தில், சுவாசம் அடிதிகரித்து, இமைகள் படபடக்க கால்கல் விடவிடத்து தோய்ந்து போவதை போல் இருக்க உடல் சிலிர்த்து போனது முல்லைக்கு...

அவளின் இந்த அவஸ்தைகளை உணர்ந்து கொண்டவன்... மெல்லிய புன்னகையுடன், "முல்ல எது எப்டியோ, எனக்கான தேவதைய நான் பாத்துட்டேன்.. அவ எனக்காகவே கடல் கடந்து வந்த இளவரசி, இப்படி ஒருத்தி என் வாழ்க்கைல வர ரொம்ப தாமதம் ஆகிடுச்சி.. இவ மட்டும் என் வாழ்க்கைல முன்னாடியே வந்திருந்தா நான் எதையும் இழந்து இருக்க மாட்டேன்" என்றவனின் சோகம் அவளையும் அடைந்து வாட்ட்டியது..

சத்தியமா சொல்றேன் முல்ல, இதுவரை நான் சைட் அடிக்காத பொண்ணுங்களே கிடையாது, ஆனா எந்த ஒரு பொண்ணு மேலையும் காதல் வந்ததே இல்லை... அதுவும் கீதா மேல எனக்கு எந்த உணர்வும் வந்ததே கிடையாது, அவ கூட நான் பிரண்ட்டா பழகினப்பயும் சரி, மனசே இல்லாம அவளுக்கு தாலி கட்டின பிறகும் சரி.. அவளுக்கும் எனக்கும் நடந்த அந்த ஒரு நாள் தாம்பத்தியம், அது என்னை பொறுத்த வரை ரேப்.." என்றவனின் குரல் உடைந்து போனது..

"ஏன் முல்ல, பெண்களுக்கு மட்டும் தான் பிடிக்காதவன் கட்டாய படுத்தி அவளோட உறவு வச்சுக்கிட்டா கற்பழிப்புன்னு சொல்லுவாங்களா...
அப்ப ஆண்களை கட்டாயப் படுத்தி அவனோட உறவு வச்சுக்கிட்டா அதுக்கு பேர் என்ன முல்ல..." அந்த நாளின் தாக்கத்தில் அவன் கண்கள் கலங்கி சிவந்து போய் இருந்தது...

"காத்திருந்த முல்ல, அவளுக்காக காதல் எனக்குள்ள எப்ப வரும்னு.. அவ எனக்கானவ இல்லாதப்போ எப்டி அவ மேல காதல் வரும், கடைசி வரைக்கும் வரல முல்ல,... அப்டிபட்ட காதலோட ஃபீல்னா என்னன்னு உன்ன முதல் தடவை பாக்கும் போதே எனக்குள்ள வந்துச்சி, அது எப்ப தெரியுமா காதல் தான்னு எனக்குள்ள உறுதியாச்சி" அவன் நிறுத்தி அவள் முகம் பார்க்க...
அவளும் அதனை தெரிந்து கொள்ள ஆவலாக அவனை தான் பார்த்துக் கொண்டு இருந்தால்..

"அன்னைக்கு எனக்கு வாயோட வாய் வச்சி தண்ணி குடுத்தியே அப்ப.." அவன் கண்ணடிக்க...
அதை நினைத்து கூச்சமாக தலை கவிழப் போனவலை, குனிய விடாது பிடித்துக் கொண்டவன்.."ஏன் முல்ல உங்க ஊர்ல யாருக்காவது புரை ஏறினா அப்டி தான் தண்ணி குடிக்க குடுப்பாங்களோ" குறும்பாக அவளை சீண்ட...
அதில் வெட்கம் கொண்டவள்," சார் என்ன நீங்க அது ஏதோ நான் தெரியாம உங்களுக்கு காரத்தை கொடுத்தால அப்டி பண்ணேன்.. அதுக்கு போய்" அவள் சிணுங்கி... "அந்த இடத்துல கண்டிப்பா உங்களை தவிர வேற யாரு இருந்தாலும் அப்டி பன்னி இருக்க மாட்டேன்" அவள் தெளிவாக உரைக்க, அதில் கர்வம் கொண்டாலும், அவளின் நேரடி பதிலில் ஆணவன் வெட்க்கம் கொண்டதை கவனித்து விட்டால் மங்கை...

மேலும் தொடர்ந்தவன், "அவ மேல காதல் இல்லாததாலையோ என்னவோ அவ எனக்கு துரோகம் பன்னது கூட எனக்கு பெருசா தெரியல முல்ல, ஏன்னா அவ மேல எனக்கு ஏதாவது ஒரு உணர்வு இருந்தா தானே எனக்கு அது பெருசா தோணும்... ஆனா அவளோட சீப்பான ஆசைக்காக அவ என்ன யூஸ் பன்னிகிட்டது தான் என்னால இப்ப வரைக்கும் தாங்க முடியல..." என்றான் வேதனையாக.

அவள் கன்னத்தில் மீது இருந்த அரவிந்தின் கரங்கள் மேல் அவளின் இரு கரத்தையும் வைத்தவள்.. "சார்... எனக்கு என்ன சொல்றதுன்னு ஒன்னும் புரியல, ஆனா ஒன்னும் மட்டும் சொல்ல விரும்புறேன்" என்றவள் நிறுத்தி அவனையே பார்க்க..
அவனும் என்ன என ஆர்வமாக கேட்டான்.

பட்டென உரைத்து விட்டால், "ஐ லவ் யூ சார்.." என்று... அதில் அவன் தான் காதில் விழிந்தது நிஜம்தானா என சாசர் போல் கண்களை விரித்து அவளை கண்டவன் "மு.முல்ல நீ இப்ப என்ன சொன்ன.."

"ஐ லவ் யூ சார்'ன்னு சொன்னேன், ஏன் உங்க காதுல ஏதாவது மாத்தி விழுந்துடுச்சா.." என்றாள் குறும்பாக.

"இல்லையே சரியா விழுந்ததால தான் திரும்பவும் கேட்டேன் என் ஸ்வீட் பொண்டாட்டி" என்றவன் அவள் நெற்றியில் முத்தம் வைத்து, "ஐ லவ் யூ டூ முல்ல... நான் உடலவுல வேனா அசுத்தமா கலங்கமானவனா இருக்கலாம்.. ஆனா என் மனசளவுல இன்னும் நான் கலங்கமில்லாதவனா தான் இருக்கேன் முல்ல" அவனின் கண்ணில் தெரிந்த அவளுக்கான காதலில் உருகி போனாள் பாவை..
மழை...
 

Author: Indhu Novels
Article Title: அத்தியாயம் 21
Source URL: Indhu Novels-https://indhunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top