• வணக்கம் 🙏🏻 இந்து நாவல்ஸ் தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்
Administrator
Staff member
Messages
170
Reaction score
146
Points
43
அத்தியாயம் 4

மனம் நொந்து கண்ணீரை துடைத்துக் கொண்டு வீட்டை சுற்றி கொல்லை புறம் வந்த மது, அங்கேயே ஒரு கீற்று மற்றும் தகரத்தால் ஆன சிறிய பாத்ரூம் இருப்பதை கண்டவள் அதனுள் செல்ல, பேருக்கு தான் அது குளியல் அறை மற்றபடி அதனுள் என்ன செய்தாலும் வெளியே இருப்பவர்களுக்கு அப்பட்டமாக படம் போட்டு காட்டிவிடும். அந்த அளவுக்கு மிக மோசமாக தகரம் சல்லி சல்லியாக கிழிந்து ஓட்டை ஓட்டையாக இருக்க, கீற்றுகள் மக்கி கொட்டியது. கதவுக்கு, பழைய புடவையை கட்டி தொங்க விட பட்டிருந்தது, சிறிது வேகமாக காற்றடித்தாலும் அவ்வளவு தான்.

அவள் வீட்டில் கூட நிறைய திட்டுகள் விழும், அடிகள் விழும். ஆனால், அவளின் பாதுகாப்பிற்கு எந்த ஒரு பங்கமும் ஏற்பட்டதில்லை. சிறிய அறை என்றாலும் அதனுள்ளே குளியலறை இருக்கும். இங்கு குளியல் அறையே இப்படி என்றால் இன்னும் எது எது எப்படி இருக்குமோ என்ற பயம் அவள் நெஞ்சை கவ்வியது.

ஆத்திரத்தை அடக்கலாம் ஆனால் **த்தை, வயிறு உப்பி அடுத்த அடி எடுத்து வைக்க முடியாத நிலையில் ஒரு வித அச்சத்தோடே சுற்றி முற்றி பார்த்த மது, தற்போது அங்கு யாரும் இல்லை என்று அறிந்துக் கொண்டவள், தன் வேலையை முடித்துக் கொண்டு வெளியே வருவதற்குள் முகம் முழுதும் வியர்த்து ஊற்றி, இதயம் ரேஸ் வேகத்தில் ஓடி அடித்துக் கொண்டது.
பதட்டம் குறையாமல், வலது காலை எடுத்து வைத்து வீரின் அறைக்கு சென்ற பூவைக்கு அதிர்ச்சியில் தலையே சுற்றியது. அந்த இடத்தை சுற்றிலும் பார்த்தவளுக்கு அருவருத்து குமட்டிக் கொண்டு வர, இரு கைகளாலும் வாயை பொத்திக் கொண்டு போன வேகத்தில் அந்த அறையில் இருந்து வெளியேறியவள் சுவற்றில் சாய்ந்து தன் நிலையை எண்ணி விம்மி அழுதாள்.

அனல் தெறிக்கும் காய்ச்சலில் மருந்தை கூட குடுக்காது, தனது மூத்த தாரத்து ஐந்து வயதுடைய குழந்தை காவ்யாவின் உடல் நிலையை கூட கருத்தில்க் கொள்ளாமல், வீர் மது திருமணம் முடித்து வந்து கையோடு உணவருந்தி விட்டு அறைக்கு சென்றவர்கள் தான் பகல் எனும் பாராது கணேசணும் அவன் இரண்டாம் மனைவி விசாலாட்சியும் தங்களின் இல்லர சுகத்தில் பின்னி பிணைந்து இணைந்து கூடலில் மூழ்கி கிடந்தனர்.

இரவு ஏழு மணி அளவில் அனைத்தும் முடிந்து எழுந்த விசாலாட்சியை பார்த்து, "ஏய்ய். இந்தாரு டி கருப்பட்டி, உன்னைய என் கூட பொஞ்சாதியா வச்சிருக்க காரணமே உங்கொப்பன் உனக்கு குடுக்க போற சொத்துக்காகதே. இல்லைனா உன் கரிக்கட்ட மொகரைய எல்லாம் எவன் வச்சி செய்வான். அந்த **டியா தான் இந்த பொட்ட கழுதைய பெத்து போட்டு எவன்கூடவோ ஓடி போய்ட்டா. நீயும் ஆம்பள புள்ள பெத்து போடலன்னு வையி உன்னைய பத்தி உட்டுப்புட்டு, வீரா ஒரு சூப்பர் பிகர கட்டிட்டு வந்தான் பாரு அதே மாறி நானும் கட்டி, அதே மாறி என்ன அவளையே கூட மூணாவதா கட்டி அவ மூலமா ஆம்பள புள்ளய பெத்து போடுவ, புரிஞ்சிதா" தனது தம்பியின் மனைவி என்றும் பாராமல் கேவலமாக பேசி நாக்கை மடித்தான் கணேசன்.

"ஆமா இவனுக்கு தெனமும் இந்த கட்டில் பேச்சை விட்டா வேற பொழப்பு ஏது. எவளோ பெத்து போட்டு ஓடிய சனியனையே நான் பாத்துட்டு இருக்க வேண்டிய தலையெழுத்து, இதுல நான் வேற இன்னொன்ன பெத்துக்கணுமா. ஏதோ இவன் சொத்துக்கு நம்ம அடி போட்டு இவன ரெண்டாந்தாராம கட்டிட்டு வந்தா. எங்க அப்பங்கரான், ஏதோ வசதியான வீட்ல பொண்ணு கேக்குறாங்கலேன்னு, ரெண்டாந்தாரமா இருந்தாலும் பரவால்லன்னு, இல்லாத சொத்தை இருக்குறதா சொல்லி பீலா விட்டு, எல்லாமே என் பொண்ணுக்குதான்னு ஒரு சின்ன பொய்ய சொல்லி கட்டி வச்சா, இவன் வேற தெனமும் அதையே பிடிச்சி தொங்குனா என்ன பண்றது.

இருந்தாலும் எங்கப்பங்காரன் ஒரு குடுசை வீட்ட வச்சியே சாமார்த்தியமா பொய் சொல்லி எங்க அக்கா தங்கச்சி மூணு பேத்தையும் பெரிய வீட்ல கட்டி கொடுத்துட்டான். இந்த உண்மையெல்லாம் இந்த வீட்ல இருக்கவயளுக்கு தெரிய வரற்துக்கு முன்னாடி, இவங்க சொத்தை எல்லாம் நம்ம பேருல மாத்தி, எல்லாரையும் என் காலுகடில போட்டு மிதிச்சி நம்மகிட்ட கையேந்த வைக்கணும்" என்ற எண்ணத்துடன், அவனிடம் மண்டையாட்டி விட்டு அப்படியே குளிக்காமல் கொள்ளாமல் சமயகட்டுக்கு சென்று தட்டில் சோறு போட்டு வயிறு முட்ட உண்டு முடித்தவள் கொல்லை புறம் இருக்கும் குளியலறைக்கு வர,

அங்கு சுவரில் சாய்ந்து அமர்ந்து இரு கால்களில் முகத்தை புதைத்து இருந்த மதுவை கண்டு முகம் சுழித்தவள். "இந்தா, ஏய். இங்க என்ன பண்ற". என்ற அதட்டலான குரலில் விளுக்கென நிமிர்ந்த மது, விசாலாட்சி நின்ற கோலம் கண்டு முகத்தை திருப்பிக் கொண்டாள்.

அவள் மட்டும் இல்லை, விபரம் அறிந்த யாராக இருந்தாலும் இப்படி தான் அவளை பார்த்து முகத்தை திருப்பி இருப்பர்.

தலை முடி கலைந்து, சேலை மொத்தமும் கழண்டு அவளின் திடமான பெருத்த உடல் பாதி அப்படியே தெரிய, ரவிக்கையின் கொக்கிகளை கூட சரியாக மூடாது இருந்தவளின் உள்பாவாடை சேலை என அனைத்து இடங்களிலும் கழனிதண்ணீர் போன்ற பிசுபிசுவென கட்டிபதத்துடன் கூடிய ஈரம் ஆங்காங்கே படர்ந்து பார்ப்பதற்கே ஒவ்வாமையை ஏற்படுத்தும் அளவு அருவருப்பாக நின்றிருந்தாள்.

தன்னை பார்த்து முகத்தை திருப்பியவளை கண்டு எரிச்சலான விசாலாட்சி. வேகமாக அவள் கன்னம் பிடிக்க. முகம் சுணங்கிய மது "மச். என்ன பண்றீங்க விடுங்க" வலியை தாண்டி அவள் தொடுகை மதுக்கு அருவருப்பு தான் அதிகமாக இருந்தது.

விசாலாட்சி கையை அவள் கன்னத்தில் இருந்து எடுக்க போராட. "என்ன ஒரு எகத்தாலம் புடிச்சவளா இருக்க நீயி, இங்க பாரு இங்க நான்தே எல்லாமே, என்னைய கேக்காம இங்க ஒரு வேலையும் நடக்காது, என்கிட்ட இந்த மொகரைய திருப்புற வேலையெல்லாம் வச்சிக்கிடாத வகுந்து புடுவ வகுந்து. பாத்து நடந்துக்க" என்ற மிரட்டலோடு அவளின் மோவாயில் இருந்து கையை எடுத்தவள், குளியலறை சென்று, கொஞ்சம் கூட கூச்சநாச்சமின்றி உடைகளை கலந்து அப்படியே குளிக்க தொடங்கினாள்.

நல்ல வேலை மது உள்ளே இருந்ததால் அந்த கன்றாவியை கான முடியாமல் போனது. ஆனால் எத்தனை நாள் அவள் இன்று போல் உள்ளே இருந்து விட முடியும்.

நேரங்கள் கடக்க, மது வயிறு பசியில் மீண்டும் சத்தமிட தொடங்க, அவள் இந்த வீட்டில் நுழைந்தது முதல் அவள் கண்ட காட்சியில் எல்லாம் நினைத்து பார்த்தவளுக்கு எடுத்த பசி எல்லாம் எங்கோ பறந்து சென்றது.

அந்நேரம், தண்டை ஓசை அந்த இடத்தையே அதிர செய்ய நடந்து வந்த ராசம்மாளை கண்டு மிரண்டு போய் பார்த்த மது, வேகமாக எழுந்து நிற்க. தான் சொல்லியும் இன்னும் குளிக்காமல் உடை மாற்றமல் அப்படியே இருந்த மதுவை கண்டு கோவம் கொண்ட ராசம்மாள், ஓங்கி அவள் கன்னத்தில் ஒரு அறை விட, அடித்த வேகத்தில் ஆஆ. என்ற அலறி கன்னத்தில் கை வைத்துக் கொண்டவளுக்கு கண்ணீர் பொல பொலவென அருவியாக கொட்டியது.

"சிறுக்கி மவளே என்ன டி நெனச்சிட்டு இருக்கவ. குளிச்சிட்டு வேற சீல உடுத்தி மொத ராத்திரிக்கு தயாரா இருக்க சொன்னேனா இல்லையா. ஓஹ். வந்த ஒருநாளுலே கழுதை கொழுப்பெடுத்து அலையிதா, இரு டி உன் கொழுப்ப மொத்தமா கரைச்சிட்ற. இன்னுருமொற சொன்ன பேசுச்ச கேக்கமா இரு அப்ப தெரியும் இந்த ராசம்மா ஆருன்னு. ம்ம்ம். வெரசா போய் குளிச்சிட்டு, உன் சித்திகாரி கொடுத்து உட்ட உன் துணி மணி எல்லாம் வெளியதே கிடக்கு அதுல ஒரு நல்ல சீலயா எடுத்து மாத்தியா", என்று விரட்டி விட.
மாமியார் குரல் கேட்டதும், அவசரமாக குளித்து வந்த விசாலாட்சி, மதுவை திட்டி அனுப்பியதை நின்று வேடிக்கை பார்த்து விட்டு சென்றாள்.

விசாலாட்சிக்கு சொத்துகள் வரும் என்ற ஒரே காரணத்தினால் தான், அவளிடம் ராசம்மாள் தன் அதிகாரத்தை அவ்வளவாக காட்டாதிருக்க காரணம். இல்லை என்றால் அவள் நிலைமை மதுவை விட மிக மோசமானதாக இருந்திருக்கும். விசாலாட்சியும் வீட்டினரிடம் அதிகம் வம்பு வைத்துக் கொள்ள மாட்டாள், எங்கே அதிகமாக ஆட்டம் போட்டு, தன் குட்டை தானே உடைத்து தன் தலையில் தாமே மண்ணை அள்ளிக் கொட்டிக் கொள்ள போறோம் என்கிற பயத்தில் தான் அடக்கி வாசித்து வரிகிறாள்.

இத்தனை நாள் யாரிடமும் தன் அதிகாரத்தை காட்ட முடியாமல் பச்சை பிள்ளையை கொடுமை செய்துக் கொண்டிருந்தவள், இப்போது புதிதாக வந்த மதுவை தன் இஷ்டப்படி ஆட்டி படைக்க திட்டம் போட்டு அலைகிறாள்.

இந்த பாத்ரூமில் குளிப்பதற்கு திறந்த வெளியில் கூட குளித்து விடலாம் போலிருந்தது மதுக்கு. நொந்து போய் நின்றவளுக்கு யோசனை வந்தவளாக தன் பையில் இருந்த அவளின் பழைய புடவைகளை எடுத்து உள் பக்கமாக சுற்றிலும் மறைப்பாக கட்டியவள், கதவுக்கு பதிலாக தொங்கிய சேலை காற்றில் பறக்காத வன்னம் செங்கல் வைத்து அடுக்கினாள்.

அப்போதும் ஒரு வித பயத்தோடு குளித்து முடித்து வெளியே வந்த மது, அவள் எதிரே நின்றவனை கண்டு பயத்தில் இதயம் வேகமாக அடித்துக் கொண்டது.

தொடரும்.
 
Top