Hello! It seems that you are using AdBlock - some functions may not be available. Please add us as exceptions. Thank you for understanding!
  • வணக்கம் 🙏🏻 இந்து நாவல்ஸ் தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்
  • இந்து நாவால்ஸ் தளத்தில் எழுத விரும்புவோர், indhunovel@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு செய்தி அனுப்பவும். கற்பனைகளை காவியமாக்குங்கள் ✍🏻💖
New member
Messages
24
Reaction score
1
Points
3
அத்தியாயம் 13

விதுரனின் ஊருக்கு போக போகிறோம். ரிஷியை பார்க்க போகிறோம். தன் காதலை சொல்ல போகிறோம் என கனவில் மிதந்தாள். சொல்ல போனால் அது அவளுக்கும் சொந்த ஊர்தான். குழலியின் அம்மாவின் சொந்த ஊர். வருடத்திற்கு ஒரு முறை அங்கு போவார்கள். அத்தோடு சரி மாதம் ஒரு முறை போகும் அளவுக்கெல்லாம் இல்லை. குழலியின் தாய் பெயர் கண்ணம்மா... தந்தை இப்போது அவர்களுடன் இல்லை. வேலை செய்யும் இடத்தில் ஒரு பெண்ணுடன் நெருக்கமாக பழக்கம் ஏற்பட்டு அவளுடன் ஓடியே விட்டார். இதுவரை அவர் எங்கே உள்ளார் என கூட தெரியாது கண்ணம்மாவிற்கு தனக்கு துரோகம் செய்த கணவர் இனி வந்தாலும் ஏற்று கொள்ள கூடாது என நினைத்து... சுயமாக மாவுகடை போட்டாள். அதில் நல்ல காசு பார்க்கவும் இன்று பெரிய என்னும் அளவிற்கு இல்லை என்றாலும் நான்கு பெண்களை வைத்து மாவு பிஸ்னஸ் செய்கிறார். குழலி பட்டப்படிப்பை முடித்து விட்டு ஒரு தனியார் கம்பெனியில் மாத சம்பளத்திற்கு வேலை செய்தாள். இசை கருவிகள் வாசிப்பதில் அளாதி ஆர்வம் கொண்ட படியால்... அவளுக்கு வீணையை வாங்கி பரிசாக கொடுத்தால் கண்ணம்மா... எங்க கத்து கொடுப்பாங்கன்னு எனக்கு தெரியாதுடா நீ போய் கத்துக்கோ என அனுப்பியும் வைத்தாள். அவளும் கற்று கொடுக்கும் இடத்திற்கு சென்று நன்முறையில் வீணையை மீட்ட கற்று கொண்டாள்.

தன் மனம் கவர்ந்தவளா அவள். ச்சே எல்லோரும் ஒரே மாதியான பெண்கள்தான் போல... அவன் அவ்வளவு அசிங்கமா பிகேவ் பண்றான். ஆனால் இவள் கொஞ்சம் கூட இங்கிதமே இல்லாமல்... ச்சே என அறையின் கதவை பூட்டிக் கொண்டு கண்டபடி திட்டி கொண்டிருந்தான் ரிஷி. அன்று தியேட்டரில் குழலியுடன் சேர்த்து ஒரு வாலிபன் இருக்கவும் ஆரம்பத்தில் உடைந்தே போனான். அவன் அவளின் காதலனாக இருக்குமோ என்னும் எண்ணமே அவனை பாதி கொன்று விட்டிருந்தது. உறுதியாக அவர்களின் சில்மிஷங்கள் முகம் சுழிக்கும் அளவுக்கு இருக்க.. அவளை அடியோடு வெறுத்தான். ஆனால் இன்னும் கூர்மையாக கவனித்து இருக்கலாம். அவன் யாரை தொட்டான் என்று.... இவ்வறாக நினைவுகளில் உலன்று கொண்டிருந்தவன் அறையை தட்டும் சத்தம் கேட்டு கதவை திறந்தான். ரிஷியின் நண்பன்தான் கதவை தட்டினான்.

என்னடா இந்த நேரத்துல வந்துருக்க?

உன்கிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேசணும் ரிஷி என்றான்.

என்ன விஷயம் சொல்லுடா? ஏதாவது பிரச்சனையா? என ஆதூரமாக நண்பனின் கையை பிடித்தான்.

எனக்கு இல்லடா... என் தங்கச்சிக்குதான்...

தங்கச்சிக்கா அவளுக்கு என்னடா அவளுக்கு இன்னும் மூணு நாள்ல கல்யாணம் ஆக போகுதே அப்புறம் என்ன?

ரிஷி தன் நண்பன் கேட்டு கொண்டான் என்பதற்கு அவனின் தங்கையின் திருமணத்திற்கு வந்திருந்தான். அதே நேரம் தன் தம்பியை பார்த்துவிட்டு போலாம் என்னும் எண்ணத்தில் இருந்தான்.

அதாண்டா இப்பபிரச்சனையே....

அவன் சோர்ந்த முகமும்... குரல் பேச்சுமே சொல்லிவிட்டது அவனுக்கு ஏதோ பிரச்சனை இருகிறது என்று... தனக்குள் யுகீத்து கொண்டவன்... என்னன்னாலும் சொல்லு உனக்கு நான் இருக்கேன் என்றான். அதன் பிறகு தன் நண்பனை கட்டி பிடித்து கொண்டான்.

டேய் ரிஷி... என் தங்கச்சி படிக்கும் போது ஒருத்தனை லவ் பண்ணா.... அப்புறம் அவன் கேரக்ட்டர் சரியில்லன்னு அவனை பிரேக்அப் பண்ணிட்டா...

ஓகேடா இந்த காலத்துல இதெல்லாம் சகஜம்தான...

என்னைய முழுசா சொல்ல விடுடா...

சரிடா சொல்லு

என் தங்கச்சியை அந்த நாயி லவ் பண்ணது மட்டுமில்லாம... அவளுடன் நெருக்கமா இருக்குற மாதிரி வீடியோ எடுத்து வச்சுட்டு அவளை மிரட்டுறான். அவனுடன்... அவனுடன்... என சொன்னவன் ஓங்கி காலை தரையில் தட்டினான். அவனுடன் ஒரு நாள் இருக்கணுமாம். இல்லைன்னா அவள் கட்டிக்க போற புருஷன்கிட்ட சொல்லுவானாம்... பொறுக்கி நாயி அவனை... வர கோபத்துக்கு கண்டம் துண்டமா வெட்டி போடலாம்னு கோபமா வருது. ஆனா என்னால அது முடியலடா... எனக்கும் ஒரு குடும்பம் இருக்கு. நான் ஏதாவது பண்னணப் போய் அது என் குடும்பத்தை பாதிச்சுருச்சுன்னா என்ன பண்ணுவேன். என் பொண்டாட்டி இப்பதான் மாசமா இருக்கா.. எனக்கு ரொம்ப பயமா இருக்குடா ஏதாவது ஹெல்ப் பண்ணுடா... என அழுதே விட்டான்.

நீ தையிரியமா போடா நான் பார்த்துக்கறேன். அவன் போட்டா இருந்தா கொடுத்துட்டு போ... என சொல்லி அனுப்பி வைத்தான்.

ம்... சரிடா அவன் போட்டோ இருக்கு... அதை உனக்கு வாட்சப்ள சென்ட் பண்றேன் என சொன்னவன் அவனுக்கு அனுப்ப... அதை பார்த்தவன்... ஒரு நிமிடம் அதிர்ந்தே போனான். தியேட்டரில் குழலியுடன் பார்த்தோமே... அப்போ... இவன் ஒரு பொம்பளை பொறுக்கி என்பது அவளுக்கு தெரியுமா? என மனதில் குழப்பம் சூழ... சரி பார்ப்போம் என விட்டு விட்டான்.

திருவிழாவுக்காக எல்லா பொருட்களையும் பாக் செய்து கொண்டிருந்தாள் குழலி. வீடே ஒரே சந்தோஷமாக இருந்தது.

ஏய் குழலி நீ இன்னும் ரெண்டு நாள்ள பீரியட் ஆகியிருவல்ல பீரியட் ஆகாம இருக்குறதுக்கு மாத்திரை வாங்கணும்னு சொன்ன வாங்கினியா என கேட்டாள் வினோதினி.

ஐயோ மறந்தே போய்ட்டேண்டி நல்ல வேலை ஞாபகம் படுத்துன இரு நான் போய் வாங்கிட்டு வரேன் என்றாள்.

இந்நேரமா போவ...

ஆமா வேற என்ன பண்றது வண்டி இருக்குல்ல நான் சீக்கிரமா போயிட்டு வந்தறேன் என சொல்லிவிட்டு வெளியேறினாள்.

ஒழுக்க மரியாதையா அந்த போன்ல இருக்குறத எல்லாம் டெலிட் பண்ணுடா என அந்த பொம்பளை பொருக்கியை அடித்து துவம்சம் செய்து கொண்டிருந்தான் ரிஷிவேந்தன். அவனால் இதற்க்கு மேல் அடி தாங்க முடியாது என நினைத்தவன் சார் சார் எல்லாம் டெலிட் பண்ணிறேன் என போனை கையில் எடுக்க...

இங்க குடுடா நானே டெலிட் பண்றேன். வேற எதுளையாவது சேவ் பண்ணி வச்சுருக்கியா என கேட்டான்.

இல்ல சார் இதுல மட்டும்தான். வேற எதுலயும் இல்ல என்றான் அடி வாங்கிய இடத்தை பிடித்து கொண்டே...

பையிலை திறந்து ஒவ்வொரு வீடியோவை பார்க்க... அதில் குழலி துணி கடையில் இருக்கும் அறையில் உடை மாத்தும் வீடியோவும் இருக்க... அவனுக்கு கோபம் பற்றிக் கொண்டு வந்தது. மீண்டும் ஒரு அறை விட்டான். இன்னும் என்னடா என்று அவன் பார்க்க...

பொறுக்கி நாயே... ஒருத்தரையும் விட்டு வைக்க மாட்டியாடா? உன்னை காதலிக்கிற பொண்ணுங்களை இப்படித்தான் பண்ணுவியா? குழலியையும் விட்டு வைக்க மாட்டியா?

சார் அவள் என் பிரெண்ட் சார். லவர் கிடையாது என்றான்.

பிரண்ட்டா... 😲 பிரண்டா இருந்தாலும் இப்படி பண்ணுவியா? நீ இந்த பூமில்ல உயிர் வாழவே கூடாது. தே... கே... என அசிங்கமாக திட்டியவன் ஆத்திரம் தீரும் மட்டும் அடித்தான்.

குழலி மாத்திரை வாங்கிவிட்டு வர... வரும் வழியில் டிரான்ஸ்ப்போர்ட் கம்பம் கீழே விழுந்த படியால் சுத்தி போகும்படி ஆட்கள் சொல்ல... அவளும் வேறு வழியில் வந்தாள். அப்போது அவள் பார்த்த காட்சியில் அவள் உடலே நடுங்கி போனது. வயிற்றில் ரத்தம் கொப்பளிக்க... அந்த பொம்பளை பொருக்கியான திபேஷ் அம்மா என அலறி வலியில் துடித்துக் கொண்டிருந்தான்.

வண்டியை கீழே போட்டுவிட்டு அவனை பார்க்க போனாள். கையில் ஏந்தினாள். குழலி... என கத்தியவன் அவளை பார்த்தான். குழலி என பேரை மட்டுமே அவனால் சொல்ல முடிந்தது. குழலி என்னை... அவ்வளவுதான் அவன் சொல்ல முடிந்தது. மன்னிப்பு கேட்க அவனால் முடியவில்லை.

என்ன சொல்லுடா உன்னை யாரு குத்தினா? என அழுது கொண்டே கேட்டாள்.

அவன் கையை காட்ட... அந்த திசையில் ரிஷி மட்டுமே நின்றான். அவனுடைய வண்டியை ஸ்ட்ரார்ட் செய்தபடியே திபேஷ் கை காட்டிய இடத்தில் அவனும் திபேஷை பார்க்க... குழலியும் பார்த்தாள்.

ரிஷிஇஇ.... என கத்தினாள். ஆனால் மழையின் தாக்கத்தால் அவள் பெயர் சொல்லி அழைத்தது அவனுக்கு கேட்காமல் போய்விட்டது. திபேஷின் உயிரும் பிரிந்து போய் இருந்தது.

கள்வன் தொடர்வான்.
 

Author: shakthinadhi
Article Title: கள்வன் 13
Source URL: Indhu Novels-https://indhunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top