Hello! It seems that you are using AdBlock - some functions may not be available. Please add us as exceptions. Thank you for understanding!
  • வணக்கம் 🙏🏻 இந்து நாவல்ஸ் தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்
  • இந்து நாவால்ஸ் தளத்தில் எழுத விரும்புவோர், indhunovel@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு செய்தி அனுப்பவும். கற்பனைகளை காவியமாக்குங்கள் ✍🏻💖
Member
Messages
60
Reaction score
8
Points
8
முரடனின் மகிழம் பூ அவள் 🌼

எபி 10

காலை சூரியனின் கதிர்கள் முகத்தில் விழ மெதுவாக கண்களை திறந்தான் ராவணன்.. அவன் கண்டதோ அவனுடைய அகன்ற மார்பில் முகத்தை புதைத்து கொண்டு குழந்தை போல உறங்கும் மகிழினியை தான்...

குருவி போல சின்னதாக பிளந்து கொண்டு இருக்கும் அவள் செம்மாதுளை கண்டு மயக்கம் கொண்ட ஆடவனோ அவள் இதழில் ஆழமாக முத்தம் வைத்து கீழ் உதடு மேல் உதடு என கடித்து முத்தம் வைக்க... அதில் வேகமாக விழிகளை திறந்த மகிழினியோ அதிர்ந்து அவள் முரடனை கண்டு கொண்டு இருந்தாள்...

பெண் அவள் மூச்சுக்கு எங்குவதை உணர்ந்து அவள் இதழை விடுவித்தவனோ " செம போதை பூனை குட்டி ஒரு பானை கள்ளு குடிச்சா கூட இப்படி ஏறாது டி... " என கிறக்கமாக கூறி அவள் சிவந்த இதழை பெரு விரலால் துடைத்து விட...

அவளோ இன்னும் அதிர்ச்சியாக அவனையே பார்த்து கொண்டு இருந்தாள்... அதில் மீண்டும் பெண் அவளின் இதழில் முத்தமிட்டு கடிக்க... அவளோ ஸ்ஸ்... என்ற சத்ததோடு சுயம் வந்தவளோ " ஏன் இப்படி கடிச்சி வைக்குறிங்க... " என்றாள்

ஆடவனோ " ஏய்... என்னடி எழுந்துக்குற ஐடியா இல்லையா... இல்ல முதல் பகல் கொண்டாடலாமா ??... " என்றான் அவளின் கழுத்தில் முகம் புதைத்த படி...

அவளோ " அப்படி எல்லாம் இல்ல... கொஞ்சம் நகருங்க நான் போய் குளிச்சிட்டு சமைக்கணும்... " என அவனை விளக்க பார்க்க..

அவனோ இன்னும் பெண் அவளோடு ஒன்றி கொண்டு " நான் கேட்டதுக்கு இன்னும் பதில் வரல... " என்றான் காட்டு குரலில்

அவளோ தயங்கிய படி " இப்ப வேணாமே இன்னக்கி நைட் வேணும்னா நீங்க சொன்ன மாதிரி... " அதற்கு மேல் வார்த்தை வராமல் அவள் தவிக்க

அவனோ " அப்ப ராத்திரிக்கு பண்ணா உனக்கு சம்மதமா... என்னவோ தெரியல டி இது வரை எந்த பொண்ணையும் இப்படி நினைச்சத்தில ஆனா உன்ன பார்த்தா மட்டும் அப்படியே சுருட்டி எனக்குள்ள போதைச்சுக்கணும்னு தோணுது... என்ன டி பண்ண இந்த ராவணன... " என காதல் போதையில் புலம்பிய படி திரும்பி படுக்க...

அவளோ இதுதான் சந்தர்ப்பம் என எழுந்து வெளியே சென்று விட்டாள்...

அன்றும் மதியம் போலவே தோப்பு வீட்டிற்கு சென்று விட்டார் அப்பத்தா... மாலை வேலை செடியில் இருந்த முல்லை பூக்களை எல்லாம் பறித்து கொண்டு இருந்த மகிழினி இடையை இரண்டு வழிய இரும்பு கரம் அணைத்து கொள்ள... அதில் பயந்த மகிழினியோ " ஆஆ... " என அலறிய படி பூக்களை கீழே சிதற விட்டு திரும்பி பார்க்க...

அங்கு ராவணனோ பெண் அவளை முறைத்து கொண்டு இருந்தான்... அவளோ நெஞ்சில் கை வைத்து மூச்சு வாங்கிய படி " ஏன் இப்படி எப்ப பார்த்தாலும் என்ன பயம்புறுத்திகிட்டே இருக்கீங்க... " என்றாள் இன்னும் பட படப்பு குறையாமல்

அவனோ பதில் கூறாமல் அவளை கையில் ஏந்தி கொண்டு வீட்டிற்குள்ளே செல்ல... அவளோ அவனை கழுத்தை கட்டி கொண்டு " கோபமா ஏன் என்கிட்ட பேச மாட்டிங்களா ??... " என்றாள் கேள்வியாக

ஆடவனோ அவளை சமையல் திண்டில் அமர வைத்து விட்டு அங்கே இருந்த ஒரு பெட்டியை திறந்து அவளிடம் கொடுக்க..

அவளோ கேள்வியாக " இத ஏன் என்கிட்ட தரிங்க... அதுல என்ன இருக்கு... " என்றாள்

அதை கேட்டு அவளை முறைத்த ராவணனோ " உனக்கு வாங்கிட்டு வந்தா உன்கிட்ட தராம பக்கத்து வீட்டு கிழவி கிட்டவா கொடுப்பாங்க.. பிடி அத... " என அவன் இரும்பு குரலில் அறை அதிர கத்த

அதில் பயந்த மகிழினியோ கண்ணில் நீர் கோர்க்க அதை வாங்கி பார்த்தாள் அதில் பெண் அவளுக்கு பிடித்த குலாப் ஜாமுன்னை கண்டு அதை அங்கே மேடை மேல் வைத்து விட்டு... குரங்கு குட்டி போல தாவி சென்று ஆடவனை அணைத்து கொள்ள...

அதில் அதிர்ந்த ராவணனோ அவள் இடையை இருக்கி கொண்டு " என்னாச்சு டி... சாப்பிடாம என் மேல குரங்கு மாதிரி தொங்கி கிட்டு இருக்க... " என்றான்

அவளோ " உண்மையாவே எனக்காக வா வாங்கிகிட்டு வந்திங்க... " என்றாள் இன்னும் அதிர்ச்சி குறையாமல்

ஆடவனோ " பின்ன பக்கத்து வீட்டு கிழவிக்கா வாங்கிட்டு வருவாங்க... " என நக்கலாக கேக்க

அவளோ " நன்றிங்க... " என அவன் கன்னத்தில் முத்தமிட செல்ல அவனோ பெண் அவளின் இதழை சிறை செய்து கொண்டு அவள் இதழின் ரேகைகளை ஆராய்ச்சி செய்து கொண்டு இருந்தான்..

இப்படியே சின்ன சின்ன முத்தங்கள் அணைப்புகள் என அன்றைய தினம் செல்ல.. மறுநாள் மதிய வேலை வீட்டிற்குள் நுழைந்த ராவணனோ " மகிழினிஇஇஇஇஇ.... " என வீடு அதிரும் அளவு கத்த..

அந்த சத்தத்தில் கொள்ளை புறத்தில் இருந்து வேகமாக ஓடி வந்த மகிழினியோ முகத்தில் வேர்வை வழிய " என்னாச்சுங்க... " என்றாள் பதட்டமான குரலில்

அவனோ அவன் அருகே இருந்த நடுத்தர வயது பெண்ணையை பார்த்த படி " காலையில ஒரு வாசுகின்னு பொண்ணு வந்து உன்கிட்ட பணம் வாங்கிட்டு போனாளா... " என்றான் காட்டு குரல் அதிர

அவளோ பயத்தில் உடல் எல்லாம் வேர்க்க " அது... நான் கொடுத்தேன்... " என்றாள்

அதை கேட்ட அந்த பெண்மணியோ ' பார்த்தியா நான் சொன்னேன்ல உன் பொண்டாட்டி தான் என் பொண்ணுக்கு இல்லாதையும் சொல்லி கொடுத்து வீட்ட விட்டு ஓடி போக சொல்லி இருக்கா... ' என ஏற்கனவே எரிந்து கொண்டு இருந்த நெருப்பில் நெய்யை உற்ற

ராவணனோ பெண் அவள் " நான் அப்படி இல்ல... " என கூறி முடிக்கும் முன் அவன் இடுப்பில் இருந்த பெல்ட்டை உருவி அடி விலாச...

பெண் அவளோ வலியில் கதறி கொண்டே " ஆஆ.. வலி.. குது.. மாமூ.. அடி.. க்கா.. திங்க... ம்மா... " என காட்டு கத்து கத்த ராவணனோ அதை எல்லாம் கேட்காமல் பெண் அவளின் உடலில் அந்த பெல்ட் மூலம் வரி வரியாக தழும்பு வரும் வரை அடித்து கொண்டு இருந்தான்..

பெண் அவளின் அலறல் கேட்டு வீட்டிற்குள் வேகமாக நுழைந்த அப்பத்தாவோ " டேய்!!... நிறுத்துட்டா அந்த புள்ளைய போட்டு எதுக்கு இப்படி மாட்ட அடிக்குற மாதிரி அடிக்குற... " என கத்த

ஆண் அவனோ திரும்பி கண்கள் சிவக்க அவரை கண்டு " நீ இதுல குறுக்க வராத அப்பத்தா... " என கர்ஜிக்க ஆடவனின் இந்த கோப குரலில் அப்பத்தாவே ஒரு நிமிடம் ஆடி தான் போனார்..

மகிழினியின் கதறலை கேட்ட அந்த பெண்ணின் அம்மாவே " போதும் விடுங்க அதான் என் பொண்ணு திரும்ப வந்துட்டாலே... இனிமே இப்படி நடக்காம பார்த்துக்கோங்க... " என கூறி வெளியே சென்று விட்டார்..

ராவணனோ மீண்டும் கையை ஓங்கி அடிக்க வர.. மகிழினியோ அவன் அடித்த அடியில் வலி தாங்க முடியாமல் மயங்கி இருந்தாள்.. அப்பத்தாவோ அவளை மெதுவாக தூக்கி சென்று உள்ளே படுக்க வைத்து அவள் காயங்களில் எல்லாம் மருந்து போட்டு விட்டார்...

ராவணனோ இன்னும் கோபம் குறையாமல் குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டு இருக்க.. அவன் அருகே வந்த அப்பத்தாவோ " எதுக்கு இப்ப அந்த புள்ளய அந்த அடி அடிச்ச சொல்லு டா... எப்ப இருந்து நீ இப்படி ஒரு மிருகமா மாறி போன... " கோபமாக கத்த

அவனோ " பச்! என்ன இப்ப உனக்கு தெரியணும்.. அவ அந்த வாசுகி பொண்ணு கேட்டுச்சுன்னு காச கொடுத்து இருக்கா... அந்த புள்ளையோட அம்மா என்கிட்ட வந்து நீ தான் இப்படி வேசி வீடே கதின்னு இருக்க ஆனா உன் பொண்டாட்டி உனக்கும் மேல ஊர்ல இருக்க பொண்ணுங்க மனசை எல்லாம் கலைச்சி பணம் கொடுத்து வீட்டை விட்டு ஓடி போக சொல்லிட்டு இருக்கான்னு... அசிங்கமா கேக்குறா.... " என கோபமும் எரிச்சலும் சேர்ந்து கத்த

அப்பத்தாவோ " அதுக்கு இப்படி தான் அடிப்பியா சொல்லு டா... உன்ன அப்படியா நான் வளர்த்தேன்... " என கேக்க

ராவணனோ " நான் அடிக்கலைன்னா அந்த பொம்பள அவ மேல கை வச்சி இருப்பா... அவ மேல என் தவிர யாரும் கை வைக்க கூடாது... " என கோபமாக கூறி விட்டு வெளியே சென்று விட்டான்..

அப்பத்தாவோ " என்ன தான் டா உன் பிரச்சனை இப்படி காயத்தையும் நானே தருவேன் மருந்தும் நான் தான் போடுவேன்னு சொன்ன எந்த பொண்ணு டா உன் கூட வாழ சம்மதம் சொல்லு வா... " என புலம்பிய படி அவர் வேலையை பார்க்க சென்று விட்டார்..

தொடரும்...
 

Author: Nithya
Article Title: முரடன் 🌼 10
Source URL: Indhu Novels-https://indhunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top