Hello! It seems that you are using AdBlock - some functions may not be available. Please add us as exceptions. Thank you for understanding!
  • வணக்கம் 🙏🏻 இந்து நாவல்ஸ் தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்
  • இந்து நாவால்ஸ் தளத்தில் எழுத விரும்புவோர், indhunovel@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு செய்தி அனுப்பவும். கற்பனைகளை காவியமாக்குங்கள் ✍🏻💖
Member
Messages
62
Reaction score
8
Points
8
முரடனின் மகிழம் பூ அவள் 🌼

எபி 13

அவனோ சிவந்த அவள் கன்னத்தில் முத்தமிட்டு " என்ன சாப்பிடவா... " என்றான் மோகத்தில் கூட அவன் முகத்தில் எந்த உணர்ச்சியும் இல்லை... கற்பாறை போலவே உணர்ச்சியில்லாத முகம் தான் இருந்தாலும் அவன் கண்களோ ஆயிரம் கதை பேசியது..

மெதுவாக அவள் பால் வதனத்தை கையில் ஏந்தி இதழோடு இதழ் சேர்த்து கொள்ள... அவளும் ஆடவனின் அடர்ந்த சிகையில் விரல் நுழைத்து இருக்கி கொண்டாள்... அவனோ கீழ் உதடு மேல் உதடு என பாரபட்சம் இன்றி சப்பு கொட்டி ருசித்து கொண்டு இருந்தான்... ஆடவனின் கரங்களோ இடையில் இசை மீட்டி கொண்டு இருக்க.. அவன் கொடுக்கும் சுக வேதனை தாங்காது ஆண் அவன் இதழை பல் தடம் பதிய கடித்து வைக்க... அவனோ மென்மையை விட்டு வன்மையாக சுவைக்க ஆரம்பித்தான்...

இருவரும் ஒரு வித மோன நிலையில் இருக்க... இதழ்கள் நான்கும் வலியில் கதறி கொண்டு இருந்தது... இவர்களின் நிலையை கெடுக்கவே கரடியாக ஆண் அவன் போன் அடிக்க... மனமே இல்லாமல் மனைவியை விட்டு பிரித்தான்.. அவளோ பலமாக மூச்சை இழுத்து விட.. ராவணனோ " இங்கயே இரு... " என வேகமாக உள்ளே இருந்த மற்றோரு அறைக்கு சென்றான்..

அழைப்பை ஏற்று பேசிய ராவணனோ மறுபுறம் என்ன செய்தி கூற பட்டதோ மகிழ்ச்சியாக " சரி, நான் பார்த்துக்குறேன்.. " என அழைப்பை தூண்டித்தான்...

அவன் மனையாளோ அவன் கொடுத்த உணர்வில் சிக்கி தவிக்க... மறுபுறம் குளிரில் உடல் நடுங்க நின்று இருந்தாள்... ஆடவனோ உள்ளே இருந்து " ஒய்!! பூனை குட்டி உள்ள வா... " என அழைக்க அவளோ அவசரமாக உள்ளே சென்றாள்..

உள்ளே நுழைந்த பெண் அவள் கண்டதோ தரையில் விரிக்கப்பட்ட பஞ்சு மெத்தை... இரண்டு பெரிய இரும்பு அலமாரிகள்... சுவற்றில் அழகாக வரையப்பட்ட ஓவியங்கள் பின் எழுதுவதற்காக இருந்த மேசை மற்றும் நாற்காலி... அப்பறம் புதிதாக ஒரு ஸ்மார்ட் போன்... எப்போதோ ஒரு முறை வாணி அவள் தாயிடம் வாங்கி தர சொல்லி கேக்கும் போது பார்த்து இருந்த நினைவு...

எதோ ஒரு வேகத்தில் அதை தொட போக பின் என்ன நினைத்தாளோ சட்டென கையை பின்னுக்கு இழுத்து கொண்டு திரும்பி ராவணனை கண்டு ' மன்னிச்சிடுங்க அது எதோ தெரியாம ஆசை பட்டு தொட... பார்த்தேன் இனிமே பண்ண மாட்டேன்... ' என கூற

அதில் எதோ புரிந்தவனாக " ஏய்!!... பூனை குட்டி உன்ன இப்ப நான் திட்டுனேனா இல்ல நீ எதாவது தப்பு பண்ணியா அப்பறம் என் மன்னிப்பு கேட்டு கிட்டு இருக்க... உனக்கு அத பாக்க தான ஆசை போய் எடுத்து பாருடி... இங்க இருக்க எல்லாமே உன் புருஷன் நான் உனக்காக வாங்குனது.. அதனால யாரும் எதுவும் சொல்ல மாட்டாங்க...

அதனால புடவையா மாத்திகிட்டு போய் என்ன தோணுதோ பண்ணு இப்ப வாங்கிக்கோ... " என கூற

அவளோ கண்ணில் நீர் கோர்க்க அவனை பாய்ந்து சென்று அணைத்து கொண்டாள்.. ராவணனோ " ஏய்... ஒழுங்கா போய் துணிய மாத்து டி.. இல்ல அப்பறம் நடக்குற விசயத்துக்கு நான் பொறுப்பு இல்ல... " என்றான்

அவளோ " நீங்க இருக்கும் போது எனக்கு எந்த கவலையும் இல்ல... நான் இப்ப சந்தோசமா இருக்கேன்.. " என்றாள் அவன் கன்னத்தில் முத்தமிட்டு

ராவணனோ " என்னடி ஆச்சு உனக்கு இன்னக்கி.. என்ன கண்டாலே பயந்து ஓடுவ இப்ப என்னடான்னா மேல குரங்கு குட்டி மாதிரி ஒட்டிகிட்டு கீழ இறங்க மாற்ற... ஏய்.. தலை எல்லாம் ஈரமா இருக்கு போடி... " என்றான்

அவளோ இன்னும் அவனை இருக்கி அணைத்து கொள்ள ஆடவனின் நிலையோ அய்யோ கொல்றலே ராட்சசி இத்தனை நாள் உளுக்குள் அமைதியாக இருந்தவன் தலையை தூக்கி எட்டி பார்க்க... தாபமும் மோகமும் போட்டி போட மேல அவள் காது அருகே சென்று " இறங்கு டி அப்பறம் என்ன குத்தம் சொல்ல கூடாது... " என்றான்

அவளோ அமைதியாக " நான் ஒன்னும் சொல்ல மாட்டேன்.. உங்க விருப்பம் " என்றாள்

அவனோ " எனக்கு வேணும்னா நானே எடுத்துப்பேன் டி... போ போய் தலையை துவட்டி காய வை... " என கீழே இறக்கி விட்டு அவளுக்கான உடையை அவள் கையில் கொடுத்து விட்டு அவன் உடை மாற்ற ஆரம்பிக்க... அதில் நாணம் கொண்டு ஆடவனுக்கு முதுகு காட்டி நின்றவளோ " ஏன் இப்படி பண்றிங்க.. " என்றாள் அவன் நின்ற கோலத்தை காண முடியாமல்

அவனோ " ஏன் இப்ப தான் என் விருப்பம்ன்னு சொன்ன... அதுக்குள்ள என்ன வந்துச்சு டி... என் இஷ்டம் நான் எப்படி வேணும்னாலும் இருப்பேன்... " என உடையை மாற்றி விட்டு அவள் தலையை உடைக்க ஆரம்பித்தான்..

அவளோ அதிர்ச்சியாக மூட்டை கண்களை விரித்து அவனை பார்க்க... அவனோ " சும்மா சும்மா இப்படி கண்ண விரிச்சி பாக்காத டி... உள்ள என்னவோ பண்ணுது.. சீக்கிரம் வா சாப்பிடணும்... " என வெளியே சென்று விட்டான்..

---

ராவணன் அந்த மெத்தையில் அமர்ந்து இருக்க அவன் மடியில் அமர்ந்து இருந்த அவன் மனையாலோ ஆர்வமாக அந்த போனை பார்த்து கொண்டு இருந்தாள்... அவனோ பொறுமையாக எப்படி அதை உபயோகம் செய்ய வேண்டும் என் கூறி கொண்டே யூடியூப் ஓபன் செய்து கொடுக்க...

அவளோ " இதுல என்ன பார்ப்பாங்க??... " என்றாள் கேள்வியாக

அவனோ " இதுல படம் பாக்கலாம், பாட்டு கேக்கலாம்... அப்பறம் நமக்கு தெரியாத விசியம் எல்லாம் பார்த்து கத்துக்கலாம்... " என்றான்

அவளோ " அப்ப இதுல சின்றெல்லா வருமா??.. " என்றாள் கண்ணில் ஆர்வம் மின்ன

" என்னது சின்றெல்லா வா அது குழந்தைங்க பாக்குற பொம்மை படம் டி... ஆமா, உனக்கு அது பிடிக்குமா... " என கேக்க அவன் விரல்களோ பெண் அவள் கேட்டதை சர்ச் செய்து கொண்டு இருந்தது..

மகிழினியோ " பிடிக்கும்.. சின்ன வயசுல அப்பா கதை சொல்லுவாரு... ஒரு ஊர்ல சின்றெல்லான்னு ஒரு இளவரசி சித்தி கொடுமையாள அவ சொந்த வீட்லயே அடிமையா இருந்தா.. அப்ப அவளுக்கு ஒரு மந்திரக்காரி உதவியாள ஒரு நாள் மட்டும் நிஜ இளவரசியா வாழ வாய்ப்பு கிடைச்சது.. அப்படி அவ ஒரு மாளிகைக்கு போகும் போது அவளோட அழகையும் எளிமையும் பார்த்து பிடிச்சுப்போன ஒரு ராஜகுமாரன் அவள கல்யாணம் பண்ணி அந்த கொடுமையான வீட்ல இருந்து காப்பாத்தி உண்மையாவே அவள இளவரசிய மாத்துவாரு.. " என கார்ட்டூன் கதை கூற

பெண் அவள் விழி அசைவும்... நிகழ்வுகளுக்கு ஏற்ப மாறும் அவள் முக பாவனையையும் ரசித்து பார்த்து கொண்டு இருந்தான் ராவணன்.. அவளோ கதை கூறும் ஆர்வத்தில் உணராத அவள் முரடனின் துளைக்கும் பார்வையை இப்போது தான் உணர்ந்து திரும்பி அவன் முகம் காண அவனோ வைத்த கண் வாங்காமல் பெண் அவளை தான் பார்த்து கொண்டு இருந்தான்..

என்னாச்சி ஏன் அப்படி பாக்குறீங்க... என வினவ

அவனோ " ஒன்னும் இல்ல... சரி தொப்ப சுத்தி பாக்க போலாம்... " என அவளை அழைத்து கொண்டு வெளியே சென்றான்... சுற்றி இருந்த 20 ஏக்கர் நிலத்தில் வாழை, மா, தென்னை மரங்கள் கூடவே கடலை, எள், கத்திரி, வெண்டை, மிளகாய், அவரை, பூசணிக்காய் போன்ற காய்கறிகளும் பயிர் செய்ய பட்டு இருந்தது...

மாலை நேர தென்றல் காற்று மேனியை இதமாக வருடி செல்ல...
காற்றில் அலை பாயும் அவள் தொகை கூந்தலும்...
அதை கடிக்கடி இழுத்து காதுக்கு பின்னால் வெண்டை பிஞ்சு விரல்களும்...
ஒப்பணையே இல்லாத அவள் பௌர்ணமி முகமும்...
பெண் அவளை அந்த ஷிப்பான் சேலையிலும் பேரழகியாக காட்ட...

ராவணனோ இயற்கையோடு சேர்த்து அவன் பூனை குட்டியையும் ரசித்து கொண்டே நடந்து கொண்டு இருந்தான்...

மரத்தில் கொத்து கொத்தாக தொங்கும் மாங்காய்களை கண்ட மகிழினியோ குழந்தையாக மாறி " மாமூ எனக்கு மாங்கா வேணும் பறிச்சி கொடுங்க... " என்றாள் உரிமையாக அவன் மதயானை போன்ற புஜங்களை பிடித்து இழுத்த படி

அவனோ அமைதியாக அவளின் பின்னே அந்த மரத்தின் அருகே செல்ல... கைக்கு எட்டும் வகையில் தான் மாங்காய்கள் தொங்கி கொண்டு இருக்க.. பெண் அவளோ எக்கி எக்கி பறிக்க முயன்றாள்..

அவனோ சட்டென அவள் இடையில் கரம் கொடுத்து தூக்கி கொள்ள... அவளோ மகிழ்ச்சியாக இரண்டு மாங்காய்களை பறித்து கொண்டாள்...

---

இருட்டும் வரை அந்த தோப்பை சுற்றி திறந்த இருவரும் நன்றாக இருட்டியா பின்பு தான் வீட்டிற்கு கிளம்பினர்... ராவணன் அவன் புல்லட் வண்டியை ஒட்டி கொண்டு இருக்க பயத்தில் அவன் இடையை இருக்கி கொண்டு முதுகில் பல்லி போல ஒட்டி கொண்டு அமர்ந்து இருந்தாள் மகிழினி...

அப்போது தூரத்தில் இருந்து கேட்ட ஊர் மக்கள் அனைவருக்கும் முக்கிய அறிவுப்பு.. என்ற சத்தத்தில் ராவணனின் முகம் சட்டென இருகியது... அதன் காரணம் என்னவோ?? அப்படி என்ன செய்தி கூற பட்டது??...

தொடரும்...
 

Author: Nithya
Article Title: முரடன் 🌼 13
Source URL: Indhu Novels-https://indhunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top