Hello! It seems that you are using AdBlock - some functions may not be available. Please add us as exceptions. Thank you for understanding!
  • வணக்கம் 🙏🏻 இந்து நாவல்ஸ் தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்
  • இந்து நாவால்ஸ் தளத்தில் எழுத விரும்புவோர், indhunovel@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு செய்தி அனுப்பவும். கற்பனைகளை காவியமாக்குங்கள் ✍🏻💖
Member
Messages
55
Reaction score
8
Points
8
முரடனின் மகிழம் பூ அவள் 🌼

எபி 6

அரை மணி நேரம் கழித்து உள்ளே வந்த ஆடவனோ " ஏய்!! பூனை குட்டி எழுந்திரி போ போய் குளிடி.. " என்றான்

அவளோ தலையணை உரை, மெத்தை விரிப்பு எல்லாம் கையில் எடுக்க..

அதை கண்ட அவனோ " ஏய்!! உன்ன நான் போக மட்டும் தான் சொன்னேன்.. கொடு அத.. " என அவளின் கையில் இருந்து அனைத்தையும் பிடுங்கி கொள்ள..

அதில் பயந்த அவளோ " இல்ல அது தீட்டு துணி நீங்க தொடாதீங்க... " என்றாள் அவளுக்கே கேக்காத குரலில்

சொன்னால் கேக்கும் ரகமா அவன் மெத்தை விரிப்புகள் உரைகள் என அனைத்தையும் எடுத்து கொண்டு பெண் அவளையும் கையில் ஏந்தி சென்றான்..

அவளோ அதிர்ந்து " என்ன பண்றிங்க... " என்றாள் எச்சில் விழுங்கிய படி

அவனோ பதில் கூறாமல் அவளை குளியல் அறை முன் இறக்கி விட்டு " வெந்நீர் விளவி வச்சி இருக்கேன்.. அப்பறம் உனக்கு தேவையானதும் இருக்கு துணிய நினைச்சி மட்டும் வச்சிட்டு வா... " என்றான் கட்டளையாக

அவளும் சாவி கொடுத்த பொம்மை போல தலை அசைக்க.. அவனோ அவள் செயலில் உதட்டிற்கே தெரியாமல் சிரித்த படி... கையில் இருந்த துணிகளை எல்லாம் பக்கெட்யில் உற வைத்தான்..

மகிழினியோ உடல் வலிக்கு இதமாக அந்த வெண்ணீரில் குளித்து முடித்து அங்கே இருந்த உடையை கண்டவளோ அதிர்ச்சியில் உறைந்து போனாள்.. காரணம் அவள் முரடனோ உள் ஆடை முதல் புடவை வரை எல்லாம் புதியதாக வாங்கி வைத்து இருந்தான்.. அது அத்தனையும் அவள் அளவிற்கே கட்சித்தமாக பொருந்தி இருந்தது... இது எல்லாம் என்ன பிரமாதம் ஸ்பெஷல் ஐட்டம் ஒன்னு இருக்கு என்பது போல அவள் பயன்படுத்த நாப்கினை உள் ஆடையில் சரியாக பொருத்தி வேறு வைத்து இருந்தான்...

ஏற்கனவே அவன் அவளின் அளவு உடைகளை வாங்கியத்தில் முகம் சிவக்க நின்று இருந்தவளோ இந்த செயலில் வெக்கம் பிடுங்கி திங்க குளியல் அறைக்குள்ளேயே நெஞ்சை பிடித்து கொண்டு நின்று விட்டாள்...

அவள் சென்று ஒரு மணி நேரத்துக்கு மேல் ஆகியத்தில் அவன் கதவை தட்ட... அதில் வேறு வழி இல்லாமல் தலையை குனிந்த படியே ஈர உடைகளை கையில் கொண்டு வர அதை கண்ட ஆடவனோ " என்னடி உள்ள தூங்கிட்டியா... " என நக்கல் குரலில் கேட்ட படி அவளின் கையில் இருந்த உடையை வாங்கி கொண்டு இல்லை.. இல்லை.. பிடுங்கி கொண்டு சென்றான்..

அதில் அவனை கண்ட மகிழினியோ " ஏன் இப்படி எல்லாம் பண்றிங்க... எனக்கு ஒரு மாதிரி இருக்கு முதல துணிய கொடுங்க துவைக்கணும்... " என்றாள் உள்ளே போன குரலில்

இப்போது திரும்பி அவளை ஆழ்ந்து பார்த்த அவனோ " என்ன பண்ணேன் என் பொண்டாட்டி புடவையா துவைக்க போறேன்... ஜெயில்ல எவன் எவனுக்கோ செய்ஞ்சு இருக்கேன்.. என் பொண்டாட்டி நீ உனக்கு செய்ய மாட்டேனாடி... போ அப்படி உக்காரு.. " என அவளை விரட்டி விட்டு துணிகளை துவைத்து கொண்டு இருந்தான்...

பெண் அவளோ அவள் முரடனின் திரண்ட புஜங்களையும் அதில் பன்னீர் துளி போல உருளும் வேர்வையையும் ரசித்த படி காண...

இதை எல்லாம் பக்கத்து வீட்டு மொட்டை மாடியில் இருந்து கண்ட தேவகியோ " என்ன ஆம்பள இவன் இப்படி பொண்டாட்டிய உக்கார வைச்சி வேலை செஞ்சிகிட்டு இருக்கான்... " என புலம்பிய படி உள்ளே சென்று விட்டார்..

ராவணனோ அனைத்தையும் துவைத்து அலசி கொடியில் காய வைத்து திரும்ப அவன் மனையாலோ எதோ ஒரு வேகத்தில் சேலை முந்தியை கொண்டு அவன் வேர்வை எல்லாம் துடைத்து விட...

அதில் அவளை ஆழ்ந்து பார்த்த அவனோ " ஏய்!!... " என்றான் அதில் தவறு செய்து மாட்டி கொண்ட குழந்தை போல திரு திருவென அவள் விழிக்க...

அதை ரசனையோடு கண்ட ஆடவனோ " ஏய்!!... பூனை குட்டி என்ன பண்ற... முகத்துல தண்ணி சொட்டுது பாரு போ போய் தலைய காய வைடி... " என உடலில் எக்குதாப்பாக சுரக்கும் ஹோர்மோன்களை கட்டு படுத்த அவளை விலக்கி வேகமாக உள்ளே சென்று விட்டான்..

---

அவனும் சென்று குளித்து முடித்து தலையை துவட்டிய படி உள்ளே வர... அங்கு மகிழினியோ சமையல் கட்டில் எதோ சமைத்து கொண்டு இருந்தாள்... அதில் கோபமான அவனோ " ஏய்!!... இங்க என்னடி பண்ற நான் உன்ன இங்க போக சொன்னேனா... சொல்லுடி... " என காட்டு குரலில் கத்த

பெண் அவளோ அவன் கோபத்தை கண்டு கன்னத்தையும் கண்களையும் மூடி கொண்டு " மன்னிச்சிடுங்க தெரியாம வந்துட்டேன்.. இனிமே இப்படி பண்ண மாட்டேன்... அடிக்காதிங்க... " என புலம்பிய படி.. ரொம்ப நேரமாக அமைதியாக இருப்பதை உணர்ந்து கண்களை திறக்க...

அங்கு அவளை கண்ட படி மிக நெருக்கத்தில் நின்று கொண்டு இருந்தான் ராவணன்... அதில் அவளோ அதிர்ந்து பார்க்க...

ஆடவனோ பேசி முடிச்சிட்டியா என்பது போல அவளை ஒரு பார்வை பார்த்து இடையில் கை வைத்து அங்கே இருந்த சமையல் மேடையில் அமர வைத்தான் : " ஏய்!!... பூனை குட்டி இங்கே இருக்கனும்... " என ஈர துண்டை பெண் அவளின் தோளில் போட்டு விட்டு சமைக்க ஆரம்பித்தான்...

ஆண் அவன் லாவகமாக கத்தியில் காய்கறிகளை வெட்டுவதும்... கரண்டியை பிடித்து சமைப்பதையும் எதோ உலக அதிசயம் போல பார்த்து கொண்டு இருந்தாள் முரடனின் பூனை குட்டி...

எங்கோ தூரத்தில் அவள் மன நிலைக்கு ஏற்ப பாடல் இசைக்க... அதன் வரிகளோ அவள் நெஞ்சதை கட்டி இழுத்தது..

🎶🎶கட்டுக்குள்ள
நிற்காது திரிந்த காளையாய்
கட்டி விட்டு கண் சிரிக்கும்
சுந்தரியே அக்கறையும்
இக்கரையும் கடந்த வெள்ளத்தை
கட்டி அணைகட்டி வைத்த
பைங்கிளியே

என்னில் நீயடி
உன்னில் நானடி என்னில்
நீயடி உன்னில் நானடி
ஓ பைங்கிளி....🎶🎶

ஒரு கையால் கன்னத்தை பிடித்து கொண்டு ஆடவனையே வைத்த கண் வாங்காமல் பார்த்து கொண்டு இருந்தவளின் நினைவோ இது வரை அவள் கண்ட சில ஆண்கள் அவள் பெரியப்பா என அனைவரோடு ஒப்பிட்டு பார்த்தது... அவர்கள் எல்லாம் இந்த மாதிரி நேரங்களில் முகத்தை கூட பார்க்காமல் வீட்டின் கொள்ளை புறத்தில் தங்க சொல்லி விடுவார்கள்...

அவர்களோ எதோ திண்டாதாகத விசியம் போல ஒரு நாப்கின் கூட வாங்கி கொடுத்தது இல்லை...

மேலும் அவள் எந்த கணவனும் இது வரை மனைவியின் துணியை துவைத்து காய வைத்ததையும் கண்டது இல்லை... இப்படி அமர வைத்து பணி விடை செய்ததையும் கண்டது இல்லை...

ராவணனோ உணவை தட்டில் போட்டு கொண்டு அவள் முன் வர... உணவின் வாசனை பசியை கிளர... அவனை நிமிர்ந்து பார்த்தாள்.. அவனோ இட்லியை பியித்து சாம்பாரில் முக்கி அவள் வாய் அருகே நிட்ட...

அதில் அவனை மிரட்சியாக பார்க்க... அவனோ " என்னடி பசிக்கலையா சாப்பிடு... " என ஐந்து இட்லிகளை ஊட்டி விட அவளும் கண்ணில் நீரோடு அதை உண்டு கொண்டு இருந்தாள்...

ராவணனோ " என்னடி இப்ப உனக்கு பிரச்சனை.. எதுக்கு இப்படி ஆ.. ஊன்னா.. வாட்டர் பால்ஸ் ஹா திறந்து விடுக்குற... என்றான் காட்டு குரல் அதிர

அதில் மேலும் அழுக ஆரம்பித்தவளோ " இந்த மாதிரி எல்லாம் யாரும் என்ன பார்த்துகிட்டது இல்ல அதான் கண்ணுல தண்ணி வந்துடுச்சு... " என்றாள் அழுகையோடு

அவனோ " சாப்பிட்டல போய் எனக்கு சாப்பாடு கொண்டு வாடி நான் சாப்டு வெளியே போகணும்... " என்றான் கடுமையாக முகத்தோடு

அவனோ சென்று முகத்தை கழுவி விட்டு கூடத்தில் அமர.. மகிழினியும் உணவை பரிமாறினாள்.. அவனும் அமைதியாக உண்டு விட்டு வெளியே சென்று விட்டான்..

---

அன்று என்ன அதிசியமோ மதியம் போலவே வீட்டிற்குள் நுழைந்தான் ராவணன்... அவன் கண்டதோ கூடத்தில் அமர்ந்து காய்ந்த துணிகளை எல்லாம் மடித்து கொண்டு இருக்கும் மகிழினியை தான்...

ஆடவனின் வேர்வை வாசத்திலே அவன் வந்ததை அறிந்து கொண்ட பேதை அவளோ அவசரமாக எழுந்து நிற்க... அதை கண்ட அவனோ " சாப்பாடு எடுத்து வைடி... " என உள்ளே சென்று விட்டான்..

அவளும் சென்று உணவை கொண்டு வந்து கூடத்தில் வைக்க... கைகளை கழுவிய படி அங்கு வந்து அமர்ந்தான்.. அவள் தட்டில் உணவை பரிமாற.. அவனோ " ஒய்!! பூனை குட்டி ஊட்டி விடு... " என்றான் உரிமையாக

அதில் பெண் அவளோ புரியாத பாஷை கேட்டது போல விழிக்க... அவனோ பெண் அவளை தூக்கி அவன் மடியில் பொம்மை போல அமர வைத்து கொண்டு " இப்ப ஊட்டி விடுடி... " என்றான்

அவளும் அவன் நெருக்கத்தில் நெளிந்த படி.. உணவை பிசைந்து அவன் வாய் அருகே நிட்ட... சாதத்தோடு அவள் விரலையும் சுவைத்து உறிஞ்சி கடிக்க...

அவளோ " ஆஹா... " என கத்த

அவனோ " என்னாச்சி பூனை குட்டி... " என்றான் எதுவும் நடக்காதது போல

அவளோ கண்களை சுருக்கி " ஏன் கைய கடிச்சீங்க... " என்றாள்

அவனோ " ஓ.. அது உன் விரலா நான் கூட முருங்கைக்காய்ன்னு நினைச்சேன்.. சரி ஊட்டி விடு டி... " என உணவை அவள் ஊட்டி விட வயிறு நிறைய உண்டவனோ திருப்பி நீ சாப்டியா... என ஒரு பேச்சுக்கு கூட கேக்காமல் உள்ளே சென்று விட்டான்...

இரவு அவன் செய்த அலப்பறையில் மயங்கி விழும் மகிழினி அப்படி என்ன பண்ணி இருப்பான்?? 😂😂

தொடரும்...
 

Author: Nithya
Article Title: முரடன் 🌼 6
Source URL: Indhu Novels-https://indhunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top