முரடனின் மகிழம் பூ அவள் 🌼
எபி 7
மதிய உணவை உண்டு விட்டு அறைக்குள் சென்று அடைந்து கொண்டவனோ மாலை போல தான் வெளியே வந்தான்.. ஆடவனின் கண்களோ அவன் மனையாளை வலை வீசி தேட...
பெண் அவளோ கிணற்று அடியில் அமர்ந்து கொண்டு எச்சில் பத்திரம் எல்லாம் தேய்த்து கொண்டு இருந்தாள்... அவளை கண்ட பின் தான் நிதானமாக " ஒய்!.. பூனை குட்டி இங்க என்ன பண்ணிக்கிட்டு இருக்க... உன்ன யாரு இது எல்லாம் பண்ண சொன்னது... " என்றான் காட்டு குரல் காதை கிழிக்க..
திடீரென பின்னால் கேட்ட குரலில் அதிர்ந்து கையில் இருந்த கின்னத்தை கீழே போட்ட மகிழினியோ அங்கே நிற்கும் ராவணனை கண்டு தான் நிம்மதியாக மூச்சை இழுத்து விட்டாள்..
அவள் செயலை கண்ட படி அங்கே இருந்த கல்லில் அமர்ந்த ராவணனோ " எதுக்கு இப்படி பயந்து சாகுற.. நான் இருக்கும் போது இங்க வர எவனுக்கும் தைரியம் இல்ல புரிஞ்சிதா... ஆமா உன்ன யாரு இங்க வர சொன்னது இந்த வேலை எல்லாம் செய்ய கூடாதுனு உனக்கு தெரியாத " என கோபமாக கத்த
அதில் அவள் மனமோ காலை தான் தீட்டு எல்லாம் இல்லை என்றான் ஆனால் இப்போது எதோ தவறு செய்த குழந்தையை நிற்க வைத்து கேள்வி கேப்பது போல திட்டுகிறான் என எண்ணிய படி " அது தெரியாம பாத்திரம் நிறைய இருக்குனு கழுவ வந்தேன்... " என ஒரு வழியாக திக்காமல் அவள் கூறி முடிக்க
அவனோ " அதுக்கு இனிமே இப்படி ஒவ்வொரு முறையும் சொல்ல மாட்டேன் இன்னும் நாலு நாளைக்கு கொடுக்குறத சாப்பிட்டுக்கிட்டு அமைதியா இருக்க முடிஞ்சா இரு... இல்ல எங்க இருந்து வந்தியோ அங்கேயே திரும்ப ஓடி போய்ட்டு... " என வார்த்தைகள் கடுமையாக விழ
அவளோ கண்ணில் வழியும் நீரை துடைத்து கொண்டு " இத மட்டும் உள்ள வச்சிடட்டுமா ??... " என்றாள் கேள்வியாக
அவனோ " சரி போ... " என கூற அடுத்த நொடி வேக வேகமாக அனைத்து பாத்திரத்தையும் சுத்தம் செய்து உள்ளே கொண்டு சென்றாள்..
மறுபடியும் ஆடவனிடம் திட்டு வாங்க முடியாது என கூடத்தில் அமைதியாக அமர்ந்து கொள்ள... ஆவி பறக்க நெய் தோசையும் கார சட்னியும் தட்டில் வைத்து கொண்டு வந்தான் ராவணன்..
உணவின் வாசனையே பெண் அவளை கட்டி இழுக்க அவனோ கூடத்தில் அனைத்தையும் கொண்டு வந்து வைத்து " ஏய்!!... என்ன கனவா சாப்பிடு டி... " என தட்டில் தோசையை வைத்து அவளிடம் கொடுத்தான்..
அவளும் இரண்டு தோசையோடு எழுந்து கொள்ள பார்க்க... அவனோ தட்டில் மேலும் இரண்டு தோசையை வைக்க...
அதில் பதறிய பெண் அவளோ " எனக்கு வேணாம் போதும்... " என்றாள்
அவனோ நீ சொன்ன நான் கேட்கணுமா என்பது போல... " இப்ப ஒழுங்கா அத நீ சாப்டு முடிக்கல... அப்பறம் இருக்க மொத்த தோசையையும் நீ தான் சாப்பிடணும்.. " என அழுத்தமாக கூற
அவன் சொன்னால் நிச்சயம் செய்வான் என அறிந்த பெண் அவளோ பொறுமையாக அந்த தோசையை உண்ண ஆரம்பித்தாள்...
---
இரவு நேரம்...
ராவணன் அறையில் வெறும் தரையில் படுத்து இருந்த மகிழினியோ அவன் மன்னவனின் செயல்களில் யோசனையோடு இருக்க... அப்போது அறைக்குள் நுழைந்த ராவணனின் " ஏய்ய்ய்... " என்ற கர்ஜனையில் அடித்து பிடித்து எழுந்து நிற்க..
அதை கண்ட அவனோ " அங்க என்ன பண்ற ??... " என்றான் கேள்வியாக
அவளோ " அ..து.. இ..ந்த.. நேரத்துல தனியா கீழே தான் படுப்பாங்க... " என கூற
அவனோ " சரி... " என கூற
பெண் அவளோ என்ன அமைதியா பேசுறாரு என மீண்டும் கீழே படுக்க செல்ல... அதற்குள் அவளை கையில் ஏந்தி கொண்ட ஆடவனோ மெத்தையில் படுக்க வைத்து அவளின் இடுப்பு சேலையை விளக்க...
அதில் பதறிய அவளோ அவன் கையை பிடித்து கொண்டு " என்ன பண்றிங்க... " என்றாள் கண்ணில் நீர் கோர்க்க
அவனோ பதில் கூறாமல் அவளை ஒரு கோப பார்வை தான் பார்த்தான்.. அதில் பெண் அவள் வாயோ கம் போட்டத்தை போல ஒட்டி கொள்ள...
அவனின் கை மேல் இருந்து அவளின் கையை விலக்கி விட்டு சேலையை சற்று கீழே இறக்கி அடி வயிற்றில் மெதுவாக நல்லெண்ணெய் வைத்து தேய்த்து விட... மயங்கி விழாத குறையாக அவனையே பார்த்து கொண்டு இருந்தாள் மகிழினி..
அவனோ எண்ணையை தேய்த்து முடித்து அவள் அருகிலேயே அணைத்த படி படுத்து கொண்டான்.. வயிற்று வலி குறைந்ததில் ஆடவனின் கையை இருக்கி கொண்டு உறங்கி விட்டாள் மகிழினி..
அடுத்து வந்த நான்கு நாட்களும் இதே போல கவனிப்புகள் தொடர பெண் அவளோ ஆடவனின் இந்த திடீர் மற்றத்தை அதிசியமாக பார்த்து கொண்டு இருந்தாள்..
தன்னையே உற்று பார்த்து கொண்டு இருக்கும் மனைவியை கண்டு " என்னடி... " என்றான் ஒற்றை புருவத்தை வில்லாக வளைத்து..
அவளோ " ஒன்னும் இல்ல... " என்றாள் தலையை அசைத்த படி...
அவனோ " அப்ப ராத்திரிக்கு தயாரா இரு.. உன்ன முழுசா நான் எடுத்துக்குறேன்.. " என கூறி வெளியே சென்று விட்டான்..
அவன் கூறியதின் அர்த்தம் தாமதமாகவே மூளையில் உரைக்க... அதிர்ச்சியில் அப்போதே நெஞ்சிற்கும் வயிறுக்கும் இடையில் பய பந்து ஊருல ஆரம்பித்தது மகிழினிக்கு...
---
இரவு அவளின் மன்னவனின் வரவிற்காக வழி மேல் விழி வைத்து காத்து கொண்டு இருக்க... அப்பத்தாவோ அப்போது தான் வீட்டிற்குள் நுழைந்தார்... பேத்தியை கண்ட அவரோ " என்ன தாயீ எப்படி இருக்க... " என்றார்
அவளோ " நான் நல்லா இருக்கேன் அப்பத்தா... நீங்க எப்படி இருக்கீங்க பயணம் எல்லாம் எப்படி போச்சி... " என்றாள்
அவரோ " நல்லா இருந்தது தாயீ.. சரி அசதியா இருக்கு நான் போய் தூங்குறேன்.. இந்தா இதுல கோவில் பிரசாதம் இருக்கு.. " என பிரசாத பையை கொடுக்க
அதை வாங்கி கொண்ட மகிழினியோ " சாப்பாடு எடுத்து வைக்குறேன் சாப்பிட்டு போய் படுங்க அப்பத்தா... " என்றாள்
அவரோ " வரும் போது தான் தாயீ சாப்டேன்... நீ சாப்பிட்டு படுமா... " என அவர் அறைக்கு சென்று விட்டார்..
பெண் அவளோ அவள் முரடனின் கூற்றில் பயந்த மன நிலையோடு கூடத்திலேயே அமர்ந்த படி உறங்கி போனாள்.. உறங்கி சிறிது நேரம் கூட இருக்காது அதற்குள் அந்தரத்தில் மிதப்பது போல தோன்ற அதிர்ந்து கண்களை விழித்தவள் கண்டதோ தன்னை தூக்கி கொண்டு செல்லும் அவள் முரட்டு கள்வனை தான்...
குடித்து இருப்பான் போல தள்ளாடிய படியே பெண் அவளை தூக்கி சென்று பொத்!!.... என மெத்தையின் மேல் போட அதில் ஆஆ... வென்று அலறிய அவளோ " ஏன் இப்படி பண்றிங்க... " என்றாள்
அவனோ பதில் கூறாமல் சட்டையை கழட்டி வீசி விட்டு பெண் அவளின் மேல் படர்ந்து அவளின் முன் அழகில் முகம் புதைத்து கொள்ள அதில் மேலும் அதிர்ந்த அவளோ " என்..ன பண்..றிங்..க.. " என்றாள் வார்த்தைகள் தந்தி அடிக்க
அதில் முகத்தை தூக்கி அவளை கண்ட ராவணனோ " என்னடி உன் பிரச்சனை.. சும்மா சும்மா என்ன பன்றிங்கனு கத்திட்டு இருக்க... " என்றான் அறை அதிர ஆனால் அவனின் கைகளோ அவள் உடலில் ஊர்வலம் போக
அவளோ தைரியத்தை வர வளைத்து கொண்டு " இப்..படி பண்..ணா..தீங்..க எ.. என..க்கு... " என அவள் முடிப்பதற்குள் அவனோ " என்ன இப்படி எல்லாம் பண்றது பிடிக்கலையா ??... " என்றான் அவள் கண்களை ஆழ்ந்து பார்த்து
அவளோ பதில் கூற முடியாமல் இட வலமாக தலையை நாலாபுறமும் அசைக்க...
" ஏய்!!.... பிடிக்காதவ என்ன ம****கு டி என் கையில தாலி வாங்கிகிட்ட... அன்னைக்கே எனக்கு வாழ விருப்பம் இல்லைனு சொல்ல வேண்டியதான டி... " என்றான் காட்டு குரல் அதிர
அதில் என்ன நினைத்தாளோ வேகமாக " இல்ல.. நான் அப்படி சொல்லல " என்றாள்
அவனோ " அப்பறம் வேற எப்படி ??.. என்ன என்னைய பார்த்த உனக்கு உடம்புக்கு அலையுறவன் மாதிரி இருக்கா... சொல்லு டி... " என்றான்
அவளோ " இல்ல... அது உங்களுக்கு நான் வேணாம் நீங்க நான் இதுவரை பார்த்த வங்க மாதிரி இல்ல ரொம்ப நல்லவரு அதனால உங்களுக்கு ஏத்த மாதிரி வேற பொண்ண பார்த்து கல்யாணம் பண்ணிக்கோங்க... நான் உங்க வாழ்க்கையில குறுக்கே வர மாட்டேன்... " என கூற
அவனோ எதோ புரியாத மொழியை கேட்பது போல " என்ன சொல்ற நான் நல்லவனா... " என ஏளனமாக சிரித்து " நான் ராவணன் டி யாருகும் நல்லவன் கிடையாது.. இப்ப என்ன உனக்கு பதிலா நான் வேற பொண்ண கல்யாணம் பண்ணிக்கணுமா சரி... அப்ப நீ என்ன பண்ண போற... " என்றான்
அவளோ பின் விளைவை யோசிக்காமல் வார்த்தைகளை அம்பு போல ஆடவனின் மேல் தொடுக்க... அதில் கோபமான ராவணனோ " இனிமே உனக்கும் எனக்கும் எந்த சம்மந்தமும் இல்ல இந்த பொண்டாட்டி... போண்டா... டீன்னு கிட்ட வந்த மவளே உன்ன நானே கொன்னுடுவேன்... " என கர்ஜித்து விட்டு வெளியே சென்று விட்டான்..
அவளும் அழுத படி அப்படியே உறங்கி போனாள்..
தொடரும்....
எபி 7
மதிய உணவை உண்டு விட்டு அறைக்குள் சென்று அடைந்து கொண்டவனோ மாலை போல தான் வெளியே வந்தான்.. ஆடவனின் கண்களோ அவன் மனையாளை வலை வீசி தேட...
பெண் அவளோ கிணற்று அடியில் அமர்ந்து கொண்டு எச்சில் பத்திரம் எல்லாம் தேய்த்து கொண்டு இருந்தாள்... அவளை கண்ட பின் தான் நிதானமாக " ஒய்!.. பூனை குட்டி இங்க என்ன பண்ணிக்கிட்டு இருக்க... உன்ன யாரு இது எல்லாம் பண்ண சொன்னது... " என்றான் காட்டு குரல் காதை கிழிக்க..
திடீரென பின்னால் கேட்ட குரலில் அதிர்ந்து கையில் இருந்த கின்னத்தை கீழே போட்ட மகிழினியோ அங்கே நிற்கும் ராவணனை கண்டு தான் நிம்மதியாக மூச்சை இழுத்து விட்டாள்..
அவள் செயலை கண்ட படி அங்கே இருந்த கல்லில் அமர்ந்த ராவணனோ " எதுக்கு இப்படி பயந்து சாகுற.. நான் இருக்கும் போது இங்க வர எவனுக்கும் தைரியம் இல்ல புரிஞ்சிதா... ஆமா உன்ன யாரு இங்க வர சொன்னது இந்த வேலை எல்லாம் செய்ய கூடாதுனு உனக்கு தெரியாத " என கோபமாக கத்த
அதில் அவள் மனமோ காலை தான் தீட்டு எல்லாம் இல்லை என்றான் ஆனால் இப்போது எதோ தவறு செய்த குழந்தையை நிற்க வைத்து கேள்வி கேப்பது போல திட்டுகிறான் என எண்ணிய படி " அது தெரியாம பாத்திரம் நிறைய இருக்குனு கழுவ வந்தேன்... " என ஒரு வழியாக திக்காமல் அவள் கூறி முடிக்க
அவனோ " அதுக்கு இனிமே இப்படி ஒவ்வொரு முறையும் சொல்ல மாட்டேன் இன்னும் நாலு நாளைக்கு கொடுக்குறத சாப்பிட்டுக்கிட்டு அமைதியா இருக்க முடிஞ்சா இரு... இல்ல எங்க இருந்து வந்தியோ அங்கேயே திரும்ப ஓடி போய்ட்டு... " என வார்த்தைகள் கடுமையாக விழ
அவளோ கண்ணில் வழியும் நீரை துடைத்து கொண்டு " இத மட்டும் உள்ள வச்சிடட்டுமா ??... " என்றாள் கேள்வியாக
அவனோ " சரி போ... " என கூற அடுத்த நொடி வேக வேகமாக அனைத்து பாத்திரத்தையும் சுத்தம் செய்து உள்ளே கொண்டு சென்றாள்..
மறுபடியும் ஆடவனிடம் திட்டு வாங்க முடியாது என கூடத்தில் அமைதியாக அமர்ந்து கொள்ள... ஆவி பறக்க நெய் தோசையும் கார சட்னியும் தட்டில் வைத்து கொண்டு வந்தான் ராவணன்..
உணவின் வாசனையே பெண் அவளை கட்டி இழுக்க அவனோ கூடத்தில் அனைத்தையும் கொண்டு வந்து வைத்து " ஏய்!!... என்ன கனவா சாப்பிடு டி... " என தட்டில் தோசையை வைத்து அவளிடம் கொடுத்தான்..
அவளும் இரண்டு தோசையோடு எழுந்து கொள்ள பார்க்க... அவனோ தட்டில் மேலும் இரண்டு தோசையை வைக்க...
அதில் பதறிய பெண் அவளோ " எனக்கு வேணாம் போதும்... " என்றாள்
அவனோ நீ சொன்ன நான் கேட்கணுமா என்பது போல... " இப்ப ஒழுங்கா அத நீ சாப்டு முடிக்கல... அப்பறம் இருக்க மொத்த தோசையையும் நீ தான் சாப்பிடணும்.. " என அழுத்தமாக கூற
அவன் சொன்னால் நிச்சயம் செய்வான் என அறிந்த பெண் அவளோ பொறுமையாக அந்த தோசையை உண்ண ஆரம்பித்தாள்...
---
இரவு நேரம்...
ராவணன் அறையில் வெறும் தரையில் படுத்து இருந்த மகிழினியோ அவன் மன்னவனின் செயல்களில் யோசனையோடு இருக்க... அப்போது அறைக்குள் நுழைந்த ராவணனின் " ஏய்ய்ய்... " என்ற கர்ஜனையில் அடித்து பிடித்து எழுந்து நிற்க..
அதை கண்ட அவனோ " அங்க என்ன பண்ற ??... " என்றான் கேள்வியாக
அவளோ " அ..து.. இ..ந்த.. நேரத்துல தனியா கீழே தான் படுப்பாங்க... " என கூற
அவனோ " சரி... " என கூற
பெண் அவளோ என்ன அமைதியா பேசுறாரு என மீண்டும் கீழே படுக்க செல்ல... அதற்குள் அவளை கையில் ஏந்தி கொண்ட ஆடவனோ மெத்தையில் படுக்க வைத்து அவளின் இடுப்பு சேலையை விளக்க...
அதில் பதறிய அவளோ அவன் கையை பிடித்து கொண்டு " என்ன பண்றிங்க... " என்றாள் கண்ணில் நீர் கோர்க்க
அவனோ பதில் கூறாமல் அவளை ஒரு கோப பார்வை தான் பார்த்தான்.. அதில் பெண் அவள் வாயோ கம் போட்டத்தை போல ஒட்டி கொள்ள...
அவனின் கை மேல் இருந்து அவளின் கையை விலக்கி விட்டு சேலையை சற்று கீழே இறக்கி அடி வயிற்றில் மெதுவாக நல்லெண்ணெய் வைத்து தேய்த்து விட... மயங்கி விழாத குறையாக அவனையே பார்த்து கொண்டு இருந்தாள் மகிழினி..
அவனோ எண்ணையை தேய்த்து முடித்து அவள் அருகிலேயே அணைத்த படி படுத்து கொண்டான்.. வயிற்று வலி குறைந்ததில் ஆடவனின் கையை இருக்கி கொண்டு உறங்கி விட்டாள் மகிழினி..
அடுத்து வந்த நான்கு நாட்களும் இதே போல கவனிப்புகள் தொடர பெண் அவளோ ஆடவனின் இந்த திடீர் மற்றத்தை அதிசியமாக பார்த்து கொண்டு இருந்தாள்..
தன்னையே உற்று பார்த்து கொண்டு இருக்கும் மனைவியை கண்டு " என்னடி... " என்றான் ஒற்றை புருவத்தை வில்லாக வளைத்து..
அவளோ " ஒன்னும் இல்ல... " என்றாள் தலையை அசைத்த படி...
அவனோ " அப்ப ராத்திரிக்கு தயாரா இரு.. உன்ன முழுசா நான் எடுத்துக்குறேன்.. " என கூறி வெளியே சென்று விட்டான்..
அவன் கூறியதின் அர்த்தம் தாமதமாகவே மூளையில் உரைக்க... அதிர்ச்சியில் அப்போதே நெஞ்சிற்கும் வயிறுக்கும் இடையில் பய பந்து ஊருல ஆரம்பித்தது மகிழினிக்கு...
---
இரவு அவளின் மன்னவனின் வரவிற்காக வழி மேல் விழி வைத்து காத்து கொண்டு இருக்க... அப்பத்தாவோ அப்போது தான் வீட்டிற்குள் நுழைந்தார்... பேத்தியை கண்ட அவரோ " என்ன தாயீ எப்படி இருக்க... " என்றார்
அவளோ " நான் நல்லா இருக்கேன் அப்பத்தா... நீங்க எப்படி இருக்கீங்க பயணம் எல்லாம் எப்படி போச்சி... " என்றாள்
அவரோ " நல்லா இருந்தது தாயீ.. சரி அசதியா இருக்கு நான் போய் தூங்குறேன்.. இந்தா இதுல கோவில் பிரசாதம் இருக்கு.. " என பிரசாத பையை கொடுக்க
அதை வாங்கி கொண்ட மகிழினியோ " சாப்பாடு எடுத்து வைக்குறேன் சாப்பிட்டு போய் படுங்க அப்பத்தா... " என்றாள்
அவரோ " வரும் போது தான் தாயீ சாப்டேன்... நீ சாப்பிட்டு படுமா... " என அவர் அறைக்கு சென்று விட்டார்..
பெண் அவளோ அவள் முரடனின் கூற்றில் பயந்த மன நிலையோடு கூடத்திலேயே அமர்ந்த படி உறங்கி போனாள்.. உறங்கி சிறிது நேரம் கூட இருக்காது அதற்குள் அந்தரத்தில் மிதப்பது போல தோன்ற அதிர்ந்து கண்களை விழித்தவள் கண்டதோ தன்னை தூக்கி கொண்டு செல்லும் அவள் முரட்டு கள்வனை தான்...
குடித்து இருப்பான் போல தள்ளாடிய படியே பெண் அவளை தூக்கி சென்று பொத்!!.... என மெத்தையின் மேல் போட அதில் ஆஆ... வென்று அலறிய அவளோ " ஏன் இப்படி பண்றிங்க... " என்றாள்
அவனோ பதில் கூறாமல் சட்டையை கழட்டி வீசி விட்டு பெண் அவளின் மேல் படர்ந்து அவளின் முன் அழகில் முகம் புதைத்து கொள்ள அதில் மேலும் அதிர்ந்த அவளோ " என்..ன பண்..றிங்..க.. " என்றாள் வார்த்தைகள் தந்தி அடிக்க
அதில் முகத்தை தூக்கி அவளை கண்ட ராவணனோ " என்னடி உன் பிரச்சனை.. சும்மா சும்மா என்ன பன்றிங்கனு கத்திட்டு இருக்க... " என்றான் அறை அதிர ஆனால் அவனின் கைகளோ அவள் உடலில் ஊர்வலம் போக
அவளோ தைரியத்தை வர வளைத்து கொண்டு " இப்..படி பண்..ணா..தீங்..க எ.. என..க்கு... " என அவள் முடிப்பதற்குள் அவனோ " என்ன இப்படி எல்லாம் பண்றது பிடிக்கலையா ??... " என்றான் அவள் கண்களை ஆழ்ந்து பார்த்து
அவளோ பதில் கூற முடியாமல் இட வலமாக தலையை நாலாபுறமும் அசைக்க...
" ஏய்!!.... பிடிக்காதவ என்ன ம****கு டி என் கையில தாலி வாங்கிகிட்ட... அன்னைக்கே எனக்கு வாழ விருப்பம் இல்லைனு சொல்ல வேண்டியதான டி... " என்றான் காட்டு குரல் அதிர
அதில் என்ன நினைத்தாளோ வேகமாக " இல்ல.. நான் அப்படி சொல்லல " என்றாள்
அவனோ " அப்பறம் வேற எப்படி ??.. என்ன என்னைய பார்த்த உனக்கு உடம்புக்கு அலையுறவன் மாதிரி இருக்கா... சொல்லு டி... " என்றான்
அவளோ " இல்ல... அது உங்களுக்கு நான் வேணாம் நீங்க நான் இதுவரை பார்த்த வங்க மாதிரி இல்ல ரொம்ப நல்லவரு அதனால உங்களுக்கு ஏத்த மாதிரி வேற பொண்ண பார்த்து கல்யாணம் பண்ணிக்கோங்க... நான் உங்க வாழ்க்கையில குறுக்கே வர மாட்டேன்... " என கூற
அவனோ எதோ புரியாத மொழியை கேட்பது போல " என்ன சொல்ற நான் நல்லவனா... " என ஏளனமாக சிரித்து " நான் ராவணன் டி யாருகும் நல்லவன் கிடையாது.. இப்ப என்ன உனக்கு பதிலா நான் வேற பொண்ண கல்யாணம் பண்ணிக்கணுமா சரி... அப்ப நீ என்ன பண்ண போற... " என்றான்
அவளோ பின் விளைவை யோசிக்காமல் வார்த்தைகளை அம்பு போல ஆடவனின் மேல் தொடுக்க... அதில் கோபமான ராவணனோ " இனிமே உனக்கும் எனக்கும் எந்த சம்மந்தமும் இல்ல இந்த பொண்டாட்டி... போண்டா... டீன்னு கிட்ட வந்த மவளே உன்ன நானே கொன்னுடுவேன்... " என கர்ஜித்து விட்டு வெளியே சென்று விட்டான்..
அவளும் அழுத படி அப்படியே உறங்கி போனாள்..
தொடரும்....
Author: Nithya
Article Title: முரடன் 🌼 7
Source URL: Indhu Novels-https://indhunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Article Title: முரடன் 🌼 7
Source URL: Indhu Novels-https://indhunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.