Hello! It seems that you are using AdBlock - some functions may not be available. Please add us as exceptions. Thank you for understanding!
  • வணக்கம் 🙏🏻 இந்து நாவல்ஸ் தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்
  • இந்து நாவால்ஸ் தளத்தில் எழுத விரும்புவோர், indhunovel@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு செய்தி அனுப்பவும். கற்பனைகளை காவியமாக்குங்கள் ✍🏻💖
Member
Messages
37
Reaction score
8
Points
8
அத்தியாயம் 29


காலையில் ராகவனும் பல்லவியும் கையில் சூர்யாவை தூக்கி கொண்டு வெளியில் செல்ல அவர்கள் பின்னால் தேவ்வும் ரதி மற்றும் பிள்ளைகளோடு ஆர். எம். ஹாஸ்பிடல் நோக்கி சென்றனர். அங்கே ஹாஸ்பிடல் நுழைவு வாயிலில் அனைவரும் கூடி நிற்க இரண்டு ஜோடிகளும் குடும்பமாக வந்து நின்றனர். ஹாஸ்பிடல் முதன்மை ஆய்வாளர் பூங்கோத்து கொடுத்து ராகபல்லவியை வர வேர்க்க ராகவன் அவளை அழைத்து கொண்டு மீட்டிங் ஹால் சென்றான்.


அனைவரும் அங்கே கூடி இருந்தனர். அனைவரையும் பார்த்து ராகவன் அவன் கம்பிர குரலில் " குட் மார்னிங் ஆல். ஐ கிளாட் டு இன்வைட் யூ ஆல் போர் தி வார்மிங் செரெமோனி அண்ட் பிரேம் நொவ் ஒன்வர்ட்ஸ் ஐ ஆம் ஹாப்பி டு மிஸ்ட்ரெஸ் ராகபல்லவி இஸ் யுவர் நியூ சி இ ஒ " என கூற அங்கே பலத்த கரகோசம் எழுந்தது. பின் அவனே முக்கிய ஆட்கள் அனைவரையும் பல்லவிக்கு அறிமுகம் செய்து விட்டு சி இ ஒ அறைக்கு அழைத்து சென்றான்.

இவர்கள் பின்னால் குழந்தைகள் மூவரோடு தேவ், ரதி வர ராகவனோ அவளை நாற்காலியில் அமர வைத்து " காங்கிரஸ் பேபி, உனக்காக பிரஸ்ட் ஸ்டேப் நாங்க எடுத்து வச்சிட்டோம், இனிமே நீ தான் இந்த ஹாஸ்பிடல கவனிச்சுக்கணும் " என கூற

அவளோ " தேங்க்ஸ் அத்து அப்பறம் அண்ணா உங்களுக்கு முன்னாடியே இது தெரியுமா " என தேவ் வை பார்த்து கேக்க

அவனோ ' ம்ம். தெரியும் நேத்து தான் மச்சான் சொன்னான் இப்படி ஒரு பிளான் இருக்குனு அப்பறம் என் தங்கச்சி சி இ ஒ ஆனதுக்கு இந்த அண்ணனோட கிபிட் என அவளுக்கு சிறிய பரிசை கொடுத்தான். '

பின் ராகவனை பார்த்து ' மச்சான் அப்படியே கொஞ்சம் வந்திங்க னா வீட்டுக்கு போய் என் பொண்ணுக்கு பேர் வைக்குற விழா இருக்கு அதையும் முடிச்சிடலாம் ' என கூற

ராகவனோ ' என் மச்சான் கேட்டு இல்லாமையை போகலாமே ' என அனைவரும் வீட்டிற்கு சென்றனர். அவர்கள் செல்லும் போது இருந்ததை விட வீடு இப்போது மலர் அலங்காரங்களோடு அழகாக காட்சி அளித்தது. ரதி மகளை பல்லவியிடம் கொடுத்து விட்டு வேகமாக உள்ளே சென்று விட்டாள். தேவ்வோ ' மச்சான் உன் தங்கச்சி கோச்சிக்கிட்டு போற எதாவது ஐடியா கொடுத்து என்ன காப்பாத்து ' என ராகவனிடம் கேக்க

அவனோ " நீ தான் கட்டுனா அவளை தான் கட்டுவேன் அப்படினு அடம் பிடிச்சு கல்யாணம் பண்ண, போய் அனுபவி ராசா பேபி நீ வா நாம போய் என் மருமகளுக்கு புது டிரஸ் போட்டு கூட்டிட்டு வரலாம் " என கூறி வீர் மற்றும் சூர்யாவை இரு கைகளிலும் தூக்கி கொண்டு உள்ளே சென்றான். பல்லவி தேவ் அருகில் வந்து " ஆல் தி பெஸ்ட் அண்ணா " என கூறி சிரித்து விட்டு சென்றாள்.

தேவ்வோ வேகமாக அவன் அறைக்கு சென்றான். அங்கே அவன் கண்டதோ முகத்தை திருப்பி கொண்டு நிற்கும் ரதியை தான் அவனோ சென்று பெண் அவளை பின் இருந்து அணைத்து கொண்டு ' அம்மு ' என அழைக்க

அவளோ ' ஏன் என்கிட்ட சொல்லல அதுக்கு தான் காலையில வெளிய போலாம்னு சொன்னியா தேவ் ' என்றாள்

அவனோ ' சொல்ல கூடாதுனு எல்லாம் இல்ல டி உனக்கு கொஞ்சம் சர்பிரைஸ் ஹா சொல்லலானும்னு நினைச்சேன் அதான் இப்படி இருக்கு ஏற்பாடு எல்லாம் நல்லா இருக்க டி அம்மு ' என கேக்க

அவளோ " பச்! நல்லா தான் இருக்கு. ஆனா நீ முன்னாடியே சொல்லி இருந்தா கொஞ்சம் நல்லா இருக்கும் " என்றாள்

' சரி விடு அதான் இப்ப தெரிஞ்சிகிட்டியே ' என அவள் கன்னம் உரசி கழுத்தில் சூடான மூச்சு காத்து பட மீசை மூடி குத்த முத்தம் வைக்க
பெண் அவளின் தேகமோ சிலிர்த்து அடங்கியது.

அவளோ அவன் கொடுத்த ஒற்றை முத்தத்தில் அவனிடம் இருந்து விடு பட்டு விலகி நிற்க அவனோ சோகமாக முகத்தை வைத்து கொண்டு ' என் பிடிக்கலையா ? ' என்றான்.

அவளோ " பச்! தாடி குத்துது தேவ் பையா முதல போய் சேவ் பண்ணு " என கன்னம் சிவக்க கூற

அவனோ அவன் அம்மு மனம் மாறியதில் " என் அது என்ன பண்ணுச்சு ' என கேட்டு மீண்டும் இழுத்து அணைத்து கொள்ள

அவளோ " அது ஒரு மாதிரி கூசுது இனிமே தாடியோட முத்தம் கொடுக்காத " என கூற

அவனோ சிரித்து கொண்டே ' சரி நாளைக்கி பண்ணி குறேன் இப்ப போய் டிரஸ் மாத்திட்டு வா கீழ எல்லாரும் வெயிட் பண்ணுவாங்க ' என கூறி கப் போர்டுயில் இருந்து நில நிற சாப்ட் சில்க் புடவையை அவளிடம் கொடுத்தான்.

அவளோ புடவையை வாங்கி சென்று கட்டி முடித்து வெளியே வர தேவ் வும் அதே நிற சட்டையும் வேட்டியும் அணைத்து தலை வாரி கொண்டு இருந்தான். ஒரு நிமிடம் அவன் அழகில் சொக்கி போன ரதியோ தன்னை மறந்து " தேவ் இந்த டிரஸ் ல ரொம்ப அழகா இருக்க " என அவன் கன்னத்தில் முத்தம் வைத்தாள்.

---

கீழே இருவரும் ஜோடியாக செல்ல மீனாட்சியோ வீராவிடம் ' மாமா இவங்க ஜோடி பொருத்தம் பார்த்து என் கண்ணே பற்றும் போல நைட் நியாபக படுத்துங்க மாமா ' என கூற

அவரும் சிரித்து கொண்டே ' கண்டிப்பா சொல்றேன் தாயீ ' என்றார்

அனைவரும் வந்து விட அந்த அலங்காரிக்க பட்ட மலர் தொட்டிலில் ராகவன் குழந்தையை படுக்க வைத்தான். தேவ்வோ வீராவின் காதில் எதோ கூற அவரும் தேனை தொட்டு தன் கொள்ளு பேத்தியின் நாக்கில் வைத்து விட்டு அந்த தேவதையின் காதில் மூன்று முறை " தூரிகை நிலா - தூரிகை நிலா - தூரிகை நிலா " என தேவ் கூறிய பெயரை வைத்தார்.

பின் மீனாட்சி பாட்டி தேன் வைத்து விட்டு குட்டி நிலாவின் கையில் தங்க வளையல்களை மாட்டி விட்டார். ராகவனும் பல்லவியும் சேர்ந்து நிலாவின் பிஞ்சு பாதத்திற்கு தங்க கொலுசுகளை மாட்டி விட்டனர். அனைவரும் ஒன்றாக நின்று புகைப்படம் எடுத்து கொள்ள விழா இனிதாக நிறைவு பெற்றது.

---

அன்று மாலையே தேவ், ரதி, வீர், நிலா நால்வரும் தேவ் வீட்டிற்கு சென்று விட்டனர்.
இரவு தேவ் மகளை தோளில் போட்டு நடந்து கொண்டு இருக்க ரதியோ வீர் குட்டிக்கு கதை சொல்லி உறங்க வைத்து கொண்டு இருந்தாள். தேவ் குழந்தையை தொட்டிலில் போட்டு விட்டு ரதி அருகில் படுத்து கொண்டு " அப்பறம் அம்மு என்னக்கி ஆபீஸ் போக போற " என கேக்க

அவளோ ' இன்னும் ஒரு ஆறு மாசம் முடியட்டும் தேவ் அப்பறமா போறேன் ' என்றாள்

அவனும் ' சரி ' என கூறி ஒரு பக்கம் மனைவியையும் மறு பக்கம் மகனையும் நெஞ்சின் மீது சாய்த்து கொண்டு பல நாட்கள் கழித்து நிம்மதியாக உறங்கினான். போன மாதம் வரை பெண் அவளின் கண்ணீரை மட்டும் கண்ட அறை இப்போது அவளின் காதலியும் கண்டு கொண்டு உள்ளது.

ஐந்து வருடங்கள் கழித்து....


' வீர் அம்மா வந்துட்டாங்க ' என கத்தி கொண்டே வந்தாள் அவள்.

அவள் சத்தம் கேட்டதும் வீரோ ' சூர்யா அம்மா வந்துட்டாங்களாம் ' என கத்த

சூர்யாவோ ' எல்லாரும் வாங்க ' என கூறி கொண்டே வேகமாக கீழே இறங்க போக அங்கே நின்று இருந்தவளை கண்டு திரு திரு வென நால்வரும் முழித்து கொண்டு நின்றனர்.

யார் அவள்? அடுத்த பாகத்தில்...

தொடரும்....
 
Top