Hello! It seems that you are using AdBlock - some functions may not be available. Please add us as exceptions. Thank you for understanding!
  • வணக்கம் 🙏🏻 இந்து நாவல்ஸ் தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்
  • இந்து நாவால்ஸ் தளத்தில் எழுத விரும்புவோர், indhunovel@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு செய்தி அனுப்பவும். கற்பனைகளை காவியமாக்குங்கள் ✍🏻💖

அத்தியாயம் 24

Administrator
Staff member
Messages
300
Reaction score
215
Points
63
அத்தியாயம் 24

முல்லையின் மெல்லிய குரலில்.. ஆச்சிரியமாக திரும்பி பார்த்த அரவிந்த் மனைவியின் அழகில் மயங்கி தான் போனான்...

பட்டு புடவையில் தலை நிறைய மலர் சூடி, எளிதான ஒப்பனையில் வண்ண மயிலாய் முகத்தில் வெட்கம்கொண்டு என்றும் இல்லாத அதிசயமாய் அவளாக அவன் அறை தேடி வந்ததும் இல்லாமல், தங்க சிலையாய் நிற்பவளை இமை வெட்டாமல் அங்குல அங்குலமாக ரசித்து பார்த்தான் ஆடவன்.

"சார் ஏன் என்னை அப்டி பாக்குறீங்க", அவன் பார்வை வீச்சு தாலமுடியாமல், தலை குனிந்து கொண்டாள் பாவைமயில்.

சட்டென அவள் இடையில் கை விட்டு அவன் புறம் இழுத்த அரவிந்த், "இன்னைக்கு என்ன முல்ல கண்ணுக்கு குளிர்ச்சியா சும்மா நச்சின்னு ரெடியாகி என் முன்னாடி வந்து நிக்கிற".. கண்கள் பலபலக்க அவளின் வாசத்தை உள்ளிழுத்தவாறு வார்த்தைகள் குழைவாக கேட்க...

அரவிந்த் இழுத்த வேகத்தில் அவன் தோள்களை அரனாக பிடித்துக் கொண்டவள்.. "ஏன் சார், நான் உங்க முன்னாடி வரக்கூடாதா", கணவனின் நெருக்கத்தில் மூச்சடைக்க, அவள் பேசுவது சரியாக ஆடவனின் கழுத்தில் அவளின் சுவாசம் பட்டு தெறித்தது....

அதில் கிறங்கி போனவன்.. "உனக்கு இல்லாத உரிமையா, வரலாம் டி, அதான் இந்த நேரத்துல ஏன் வந்தன்னு கேட்டேன்".. ஜோசியர் சொன்ன அந்த மூன்று மாதம் முடிந்து விட்டது என்று அவளுக்கு முன் அவன் தானே நாட்களை எண்ணிக் கொண்டு இருந்தான்.. ஆனால் அந்த நாள் இன்று தான் என்பதை தான் அறிந்து கொள்ளாமல் விட்டிருந்தான்..

இப்போது முல்லையை பட்டு புடவையில் கண்டதும் சரியாக யூகித்து விட்டான் கள்வன்.. இருந்தும் மனைவியின் வாய் வார்த்தையால் அறிந்துக் கொள்ள ஆசை பட்டு வேண்டுமென்றே ஒன்றும் தெரியாதவனை போல் கேட்டாலும்.. ஆடவனின் கரங்கள் பாவையின் வெற்றிடையில் கோலம் போட்டு மென்மையாக கூச செய்ய...
"ஐயோ சார், கூசுது என்ன பண்றீங்க" நெளிந்து கூச்சமுற்றாள் வெண்ணிலா.

ஏய் என்ன டி, நான் இன்னும் ஒண்ணுமே பண்ணல அதுக்குள்ள கூசுதுன்னு இப்டி நெளியற.. கிரிப்பு மிஸ்ஸுவுது கொஞ்சம் நெளியாத நில்லு முல்ல, அப்புறம் வேற எங்கயாவது என் கை கிரிப்பா பிடிச்சிக்க போகுது" திருட்டு பையன் அவளின் கழுத்துக்கு கீழ் பார்வையை செலுத்தி ஒரு மார்க்கமாக சொல்ல, உடல் கூசி, விழி விரிய அவனை கண்டவளாக,

"அய்ய சீ.. நீங்க இவ்ளோ பேட் பாயா, இப்டி எல்லாம் பேசுறீங்க.." கணவனின் அந்தரங்க பேச்சி விரும்பியே கன்னம் சிவந்தது.

"மனசுக்கு பிடிச்ச மனைவிய பக்கத்துல வச்சிக்கிட்டு இத்தனை நாளா நான் குட் பாயா இருந்ததே பெரிய விஷயம், இப்பவும் என்ன அப்டியே இருக்க சொல்றீயே இது உனக்கே நியாயமா டி," அவன் பாவமாக கேட்க..

"ம்ம்.. இல்லனா மட்டும் நீங்க அப்டியே நல்ல பிள்ளையா இருந்தீங்களாக்கும், கொஞ்சம் கேப் கெடச்சிட கூடாதே அதுல நீங்க என்னென்ன வேலையெல்லாம் பாப்பீங்க, பாருங்க இப்ப கூட உங்க கை என்ன பண்ணிட்டு இருக்குன்னு.." அவள் நக்கலாக சொல்ல..
இடையில் ஊர்ந்த அவன் கைகளோ அவள் இடைக்கு மேல் எதையோ மும்புரமாக தேடி செல்லும் வேலையில் பட்டென ஆடவனின் கரங்களுக்கு பாவையின் கரங்கள் கெட்டியாக பிடித்து அதற்கு மேல் முன்னேற விடாமல் அணை போட்டு வைத்திருந்தது.

"இன்னும் என்ன டி.." என்றான் அலுப்பாக

"சார் எனக்கு ஒரு ஆசை".. அவள் எதையோ சொல்ல வரும் முன்...

"எனக்கும் தான் டி இப்ப உன்மேல ஆசையா இருக்கு." .என்றவன் பெண்ணவளின் நெற்றி, கண்கள், மூக்கு, கன்னம், தாடை என முத்த ஊர்வலம் நடத்தி கடைசியாக அவளின் போதை நிறைந்த தேன் இதழ்களை உறிஞ்ச வண்டாய் மாறி, தாபம் நிறைந்து வழியும் கண்களோடு ஆசையாக முற்றுகை இட்டான்.

தானாக அவளின் கைகள் அவன் கழுத்தை சுற்றி தலை கோத, கணவனின் எண்ணத்திற்கு ஏற்றார் போல் அதற்கு வழி வகுத்துக் கொடுத்தவள்.. கண்கள் மூடி இன்பமாய் அவளின் மென்னிதழை தலைவனின் வலிமையான இதழுக்கு விட்டு கொடுத்து, அவளும் அவனுக்கு சலைக்காமல் முத்தத்தை திருப்பி வழங்க.. தலைவியின் ஒத்தொழைப்பில் உள்ளம் நிறைந்தவன்..

மேலும் முன்னேறி அவளின் உதட்டில் சற்று வன்மை கூட்டி உறிந்து உதட்டை கடித்து உண்ண... பாவம் அவளால் வலியில் கத்தக் கூட முடியாதபடி அவன் தான் அவள் இதழை சிறை பிடித்து ராட்ச்சஸ வண்டாக உருவெடுத்து தெகுட்டாத தேன் சுளை உதட்டை உறிஞ்சி சாரு எடுத்துக் கொண்டு இருக்கிறானே...

அது போதாது என்று பெண்ணவளின் பால்மேனியில் சேலையை விளக்கி உடும்பு பிடியாக எக்கு தப்பாக கைகள் தடம் புரண்டு அங்க வேட்டை நடத்தியது.

கணவனின் சிறு வண்மை கலந்த தீண்டளில் மங்கையிண் தேகமோ சூடேறி தகிக்க செய்து கால்கள் நிற்க்க தடுமாற.. மற்றொரு கரத்தால் அவள் இடை வளைத்து தன்னோடு சேர்த்து அனைத்துக் கொண்டவன்.. அங்கத்தை தழுவியவன் இன்னொரு கரமோ அதன் பஞ்சி போன்ற மென்மையை உணர்ந்ததும் நரம்புகள் முருக்கேரி ரத்தனாங்கள் சீறி பாய சொக்கி போனான்.

மனைவியின் பன்னீர் ரோஜா இதழை விட்டு பிரிக்காமல், அவளை வேறு ஒரு உலகத்துக்கு கொண்டு சென்றவன்.. அவளுக்கே தெரியாமல் அவள் தேகம் சுற்றிய சேலையின் மீது கோவம் கொண்டு அதை மொத்தமாக உருவி இருக்க..
அது எதுவும் அறியாமல், கணவனின் முத்தபோரில் விரும்பியே தன்னை அம்பாக வளைந்து கொடுத்தவளின் வெற்றிடையில் சில்லென்ற காற்றின் ஸ்பரிசம் மோதியதில் மிரண்டு விழித்தவள் அப்போது தான், தான் இருக்கும் நிலை உணர்ந்தாள் போலும்.

ஐயோ என்றாகி போக, வலுகட்டாயமாக அரக்கனாக மாறி அவள் உதடை ரணகளம் செய்துக் கொண்டு இருந்தவனை பிரித்து தள்ளி, மார்புக்கு குருக்காக கைகளை வைத்துக் கொண்டு, மேல் மூச்சி கீழ் மூச்சி வாங்க கணவனை முறைத்து தள்ளினாள் முல்லை.

மனைவியின் திடீர் செயலில் மோகம் மட்டும் அரு படாமல், அவளை ஒரு மார்க்கமாக பார்த்து சிரித்து வைத்தான் குறும்பாக.

"சார் நான் உங்ககிட்ட பேச தானே செஞ்சேன், ஆனா நீங்க என்ன பன்னி வச்சிருக்கீங்க.." விரைப்பாக கேட்கிறேன் என்று வெட்கத்தில் திணறி விட்டது பேதை.

"ஏன் டி உனக்கு நான் என்ன செஞ்சேன்னு தெரியலையா..." அவளை நெருக்கியபடி கேட்க..

அதில் மேலும் சிவந்தவளாக, கணவனிடம் தன் வெட்கத்தை மறைக்க கீழ் உதட்டை தெரியாமல் கடித்து விட.. கள்வனின் இடை விடாது செய்த கடின உழைப்பில் பாவம் பாவையின் இயற்க்கையில் சிவந்த உதடுகள்.. இப்போது வீங்கி ரத்தம் கன்றி போய் வலித்த நிலையில், இவள் வேறு அதை மறந்து போய் கடித்து விட.. வலியில் ஸ்ஸ்.. என்று முனகி விடவும், கள்ளத்தனமாக சிரித்துக் கொண்டான்.

கண்கள் பெண்ணவளின் புடவை இல்லாத மேனியை உரிமையாக ரசித்துப் பார்க்க, கணவனின் சென்சார் அற்ற பார்வையில் எச்சில் விழுங்கியவள்.. "அச்சோ சார்.. என்ன நீங்க இப்டி எல்லாம் கண்ட இடத்துல பாத்து" அதற்கு மேல் வார்த்தை வராமல் தடுமாறி சிவந்த முகத்தை மறைக்க தலை குனிந்தாள்.

மனைவியின் ஒவ்வொரு செயலையும் ஒன்று விடாமல் ரசித்து பார்த்தவன், பாய்ந்து அவளை நெருங்கி, அவளின் சிறிய முகத்தை ஒற்றை விரல் கொண்டு நிமிர்த்தியவனாக, "சொல்லு டி முல்ல, உன் ஆசை என்ன", அவளின் விழிகளை பார்த்து ஆவலாக கேட்டான்.

இந்த நேரத்தில் இப்படி கேட்பான் என்று சற்றும் எதிர்ப் பார்த்திடாதவள்,.. விழிகள் ஆச்சிரித்தில் விரிய.. "அது இப்ப வேணாம் சார், நான் இன்னொரு நாள் என் ஆசைய சொல்றேன், நீங்க செய்ங்க" தன்னிடம் எத்தனை ஆசையாக நெருங்கி வருகிறான்.. இப்போது தன் ஆசையை சொல்லி கணவனின் மோன நிலையை கலைக்க விரும்ப முல்லைக்கு மனமில்லை.

"நீ என்ன நினைக்கிறேன்னு எனக்கு தெரியும் முல்ல, இப்ப நீ எனக்காக தானே வேண்டான்னு சொல்ற.. என் பொண்டாட்டியோட ஆசைய நிறைவேத்தி வைக்காம எனக்கு அதவிட என்ன டி பெரிய வேலை இருக்கு.. இப்ப சொல்லு உன் ஆசைய.." என்றான் விடாப்பிடியாக.

"அது மழை வருது சார்.." அவள் நிறுத்த...

"சரி, மழைக்கும் உன் ஆசைக்கும் என்ன டி சம்பந்தம்.."

"இருக்கு சார்.. உங்களுக்கு மழைனா ரொம்ப பிடிக்குமாமே, அதுவும் நைட் டைம்ல பைக்ல ரெய்டு போக.."

"ஆமான் டி.. ஆனா நான் அப்படியெல்லாம் போறதை விட்டு பல வருஷம் ஆச்சி முல்ல.." என்றான் முகம் இறுகிய நிலையில்.

"ஆனா எனக்கு இப்ப உங்ககூட, இந்த நைட் டைம்ல, கொட்ற மழைல நனைஞ்சிகிட்டே, உங்க வண்டில உங்கள பின்னாடி இறுக கட்டிப்பிடிச்சிட்டு உக்காந்து லாங் ட்ரைவ் போகணும்னு ஆசையா இருக்கே.. மச்.. ஆனா உங்களுக்கு விருப்பம் இல்லாதப்ப வேணாம் விடுங்க சார்.. " பாவமாக உதட்டை சுழித்தாள்.

அதுவரை மனைவியின் சொல்லில் இருவரும் ஒன்றாக மழையில் நனைந்து கட்டிபிடித்துக் கொண்டே வண்டியில் செல்வதை போல் கற்பனை செய்து பார்த்தற்கே ஆணவன் உடலெங்கும் ஜிவென்று இருக்க.. அவள் சட்டென வேண்டாம் என்றதும் பதறி போனவன்... "ஏய் நான் எப்ப டி எனக்கு விருப்பம் இல்லன்னு சொன்னேன்.. சும்மா இருந்தவனை சொறிஞ்சி விட்டு என்ன விளையாடுறியா.. எனக்கு தெரியாது, நீயே வேண்டான்னு சொன்னாலும்.. இப்பவே என்கூட மழைல ரெய்டு வந்தே ஆகணும் ஆஆ.. " என சிவகார்த்திகேயன் ஸ்டைலில் சொல்ல, சம்மதமாக புன்னகைத்துக் கொண்டால்..

"ஆனா சார் என்கிட்ட புடவைய தவிர வேற எந்த டிரஸ்சும் இல்லையே.". அவள் உதட்டை பிதுக்க... அவன் அதற்கு என்ன செய்யலாம் என்று யோசிக்கும் முன்னவே,

"சார் என உற்சாகமாக கத்தி, "அதான் உங்க டிரஸ் இருக்கே.. அதுல ஏதாவது குடுங்க நான் போட்டுகுறேன்" என்றதும் தலை சாய்த்து அவளை ஒரு மார்க்கமாக பார்த்தவன்.. குறும்பாக சிரித்து..

"போட்டுக்கோ போட்டுக்கோ ஆனா எல்லாத்துக்கும் சேத்து வச்சி உனக்கு எந்த சேதாரமும் ஆகாம இருந்தா சரிதான்.." அரவிந்த் நக்கலாக சொல்ல...

"அத நாங்க அப்புறம் பாத்துக்குறோம், நீங்க முதல்ல வெளிய போங்க சார்" அவனுக்கு சலைக்காமல் பதில் சொல்லி, வெளியில் போகமாட்டேன் என்று அடம் பிடித்தவனை விடப்பிடியாக வெளியில் தள்ளி விட்டு, அரவிந்தின் டிரௌசர் மற்றும் வெள்ளை நிற சட்டையில், கூந்தலை விரித்து விட்டு ஸ்டிலாக வெளி வந்தவலை கண்கள் மின்ன பார்த்தான்.

இப்போதே அவளை வாரி அனைத்துக் கொள்ள துடிக்கும் மனதை அடக்கும் பொருட்டாக, மனைவியின் இதழ் கவ்வி இதழ் முத்தம் மூலம் ஒரு சுற்றி வந்தவன்...
பின் மனமே இல்லாமல் அவளை கூட்டி சென்றான்.

மூடி வைத்திருந்த என்பீல்டை பல வருடம் கழித்து ஸ்ட்ராட் செய்ய, கணவனின் பின்னால் இரு தேகமும் உரச ஒட்டி அமர்ந்த முல்லை, அவன் வயிற்றை இறுக்கமாக கட்டிப்பிடித்து, முகத்தை அவன் தோள் மீது வைத்துக் கொள்ள... அரவிந்துக்கு இதை விட வேறு ஒரு இன்பம் இருக்குமா என்ன.. இருவர்குள்ளும் அப்படி ஒரு சுகமான மகிழ்ச்சி..

இருவரும் புன்னகைத்து.. ஒற்றை கரத்தை எடுத்து மனைவியின் கைகள் மேல் வைத்துக் கொண்டு, ஒற்றை கையால் என்பீல்டை இயக்கியபடி, தெருவிளக்குகள் ஒளியில் சில்லென்ற அருவி போல் கொட்டும் மழையில் இருவர் மட்டும் சாலையில் தனியாக பல கதைகள் பேசி, சிரித்து, சிறு சிறு அத்து மீறிய தீண்டல்கள், கொஞ்சல்கள், செல்ல சண்டைகள் என அவர்கள் பயணம் மழையில் தொடர்ந்து, பயணம் முடிவில் இனிமையான கூடலில் முடிந்தது...

மறுநாள் அவர்களுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி தெரியாமல், இரவெல்லாம் அவர்களின் உலகில் இன்பமாக இனிமையான நினைவுகளை கவி எழுதிக் கொண்டிருந்தனர்.....

மழை...
 

Author: Indhu Novels
Article Title: அத்தியாயம் 24
Source URL: Indhu Novels-https://indhunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top