- Messages
- 169
- Reaction score
- 144
- Points
- 43
அத்தியாயம் -37
ஓட ஓட துரத்தி அந்த ஆளை வெட்டிய மதனை பார்த்த ருத்ரன், ச்.. ச்.. ச்.. உச்சிக் கொட்டி நெருங்கி வந்தான் அவனிடம்.
"ஏன்டா கெலுப்பு.. அத்தன வருஷம் ஆர்மில இருந்தும் என்ன நீ ட்ரைனிங் எடுத்த. நேனு வரற்துகுள்ள முடிச்சிருப்பேன்னு பாத்தா, அந்த ஓட்டம் ஓடுறான் நின்ன இடத்துல இருந்து குறி பாத்து சுட்டு தள்ளுறத உட்டுட்டு, மூச்சிறைக்க ஓடி சாகசம் பண்றேன்னு நேரத்த வீணடிச்சிட்டு இருக்க"
குழலியை வீட்டில் விட்டுவிட்டு அப்போதே வந்த ருத்ரன், காரமாக கேட்டிட, முகத்தில் வழிந்த ரத்தத்தை துடைத்துக் கொண்டான் மதன்.
"அது எமி காது (அது ஒன்னும் இல்ல) அண்ணையா.. கொஞ்ச நாளா நேரத்துக்கு வர்க்கவுட் பண்ண முடியல. சிக்ஸ்பேக் கரைஞ்சி தொப்பை போட்ட பீலிங். அதான் ஜாகிங்லயே பீஸ் போட்டேன். அடுத்த பீஸ் உனக்காக தான் காத்திருக்கு அண்ணையா, கத்தியா? துப்பாக்கியா?"
மதன் தலை சாய்த்து கேட்கும் போதே, டப்..டப்.. டப்.. தொடர்ந்து ஒளித்த துப்பாக்கி சத்தத்தில் பின்னால் இருந்த பீஸ் புஸ்ஸென பீஸ் போய் இருந்தது.
"இந்த ரென்னிங்கு சேசிங்குலாம் (எனக்கு) நாக்கு சுத்தமா இஸ்டம் லேதுடா. போர் அடிச்சா பாப்போம்"
"அப்புறம் நம்மளப் பத்தின டீடெய்லிஸ் என் போலீஸ் மச்சான் கைக்கு கிடைச்சிருக்கும் தானே?"
கிடைத்திருக்கும் என நன்றாக தெரியும். ஆனாலும் இது சும்மா வம்பு.
"அதெல்லாம் பக்காவா கிடைச்சிடுச்சி அண்ணையா.. ஆனா அது வெறும் என்னை பத்தின விபரமா மட்டும் இருந்தா பரவால்ல. உன்ன பற்றின விபரங்களும் அடங்கி இருக்கே.. அதை நினச்சா தான்.."
அவன் இழுக்க,
"என்ன டா பயமா.. நேனு செத்து போய்டுவேன்னு"
"அண்ணையாஆ.. விளையாட்டுக்கு கூட அப்டி மாட்லாடக்கு (பேசாதே). உனக்காக உயிரை கொடுக்க நாங்க இத்தனை பேர் இருக்கோம். ஆனா நீ ஒரு ஆள் இல்லைனா நாங்க யாருமே ஒன்னும் இல்ல அண்ணையா.." எதையும் தாங்கும் இதயமாய் பயிற்சி பெற்ற ராணுவ வீரன் தன் அண்ணையாக்காக கலங்கிப் போனான்.
"இந்த செண்டிமெண்ட் சீனெல்லாம் இங்க வேணா. மீறி பண்ண யோசிக்காம சுட்டு தூக்கிப் போட்றுவேன் பாத்துக்கோ" சிடுசிடுத்த ருத்ரன்
"அங்க தான் ஒருத்தி அப்பப்ப செண்டிமெண்ட் பெர்ஃபார்மென்ஸ் நிமிஷத்துக்கு நிமிஷம் பண்றான்னா, இங்க இவன் அதுக்கு மேல பண்றான்" கடுப்பாக மனதில் நினைத்துக்கொண்டவனாய்,
"நாய் வேஷம் போட்ட பிறகு குறைச்சி தான்டா ஆகனும் மதனுஊ.. நேனு உயிரோட இருந்தாலும் செத்தாலும், நீ எதுக்காக இந்த பாதைய தேர்வு செஞ்சியோ அதோட இலக்கை அடைஞ்சே தீரணும். அதுதான் நீ எனக்காக செய்ற நல்லது.
இப்போதைக்கு என் உயிருக்கு எந்த பாதகமும் இல்ல. என் போலீஸ் மச்சான் தான் மண்டைய பிச்சிகிட்டு கிடைப்பான், வந்து வண்டிய எடு"
என்றதும் தான் நிம்மதியாக பெருமூச்சு விட்டு ஜீப்பை இயக்கினான்.
ருத்ரன் சொன்னது போல், ஃபைலின் மறுபக்கத்தை ஆர்வமாக திருப்பிய வெங்கட்டின் கண்கள் தெறித்து விழாதக் குறைதான்.
ஏனென்றால் மறுபக்கத்தில் இருந்த பக்கங்கள் யாவும் அன்று போலவே இன்றும் எரிந்து சாம்பலாகி இருந்தது. அதை கண்டு முதலில் திகைத்தாலும் கை முஷ்டியை மடக்கி ஆத்திரத்துடன் தொடையில்க் குத்திக் கொண்டான் வெங்கட்.
"ச்ச.. பக்கா கிரிமினல்ஸ் நம்ம கைக்கு ஆதாரம் கிடைக்கும்னு தெரிஞ்சி வேணும்னே அழிச்சி இருக்காங்க.
எது எப்டியோ, நாட்டை காப்பாத்துற கடைமைல இருந்து தவறி, சட்டவிரோதமா பல உயிர்களை கொல்ற கூட்டத்தோட சேர்ந்து நாட்டுக்கே துரோகம் செய்ற உன்ன விட மாட்டேன் டா மதன்.
இவ்ளோ தூரம் உன்ன கண்டு பிடிச்ச என்னால, உன் தலைவனை கண்டு பிடிக்கிறது ஒன்னும் அவ்வளவு கஷ்டம் இல்ல. கூடிய சீக்கிரம் கூண்டோட தூக்குறேன்டா"
உறுதியாக சூலூரைத்துக்கொண்டவன், அதற்கான வேலையில் தீவிரமாக இறங்கினான் வெங்கட்.
நாளுமொரு அதிர்வுகளை தாங்கிக் கொண்டு நேரங்கள் வேகமாக நகர, யார் மனதிலும் எவ்வொரு மாற்றங்களுமின்றி கடைமைக்கே என வாழ்க்கை பயணமும் தொடர்ந்தன.
அன்றிரவு இரவு உணவினை சமைத்து வைத்து வெகுநேரமாக கணவனுக்காய் காத்திருந்தாள் குழலி.
காத்திருந்து காத்திருந்து கண்கள் சொருக உணவு மேஜையில் தலைவைத்து உறங்கியும் போயிருக்க, நள்ளிரவு தாண்டி குருதிவெறியன் போல் அழுத்தமான காலடி எடுத்து வைத்து உள்ளே வந்தவன் சத்தத்தில் உறக்கம் கலைந்து கண் விழித்த குழலி, அவன் வந்து நின்ற தோற்றத்தைக் கண்டு இதயமே கலங்கிப் போனாள்.
"இன்னும் தூங்காம இங்க உக்காந்து என்ன பண்ணிட்டு இருக்க" குறுதியான சட்டையை கழட்டிப் போட்டான்.
"உங்களுக்காக தான் சாப்பாடு செஞ்சி வச்சி காத்திருந்தேன். ஆனா ஏன்டா காத்திருந்தோம்னு நினைக்க வச்சிட்டேள். அர்த்த ராத்திரில கொலைய செஞ்சிட்டு தைரியமா ஆத்துக்குள்ள வரேளே, இதெல்லாம் பாக்கணும்னு என் தலையெழுத்து"
அவன் முகம் பாராது கலங்கிய விழிகளில் நீர் திரண்டு கன்னத்தில் உருண்டோட சொன்னவள், சமைத்த உணவினை அப்படியே விட்டு அறைக்குள் சென்று படுத்துவிட்டாள்.
ருத்ரனும் அவளை கண்டுகொள்ளாமல் குளித்து வந்தவன் பயங்கர பசியில் இருந்திருப்பான் போலும், நேராக வந்து அவள் செய்த உணவினை திறந்து பார்த்தவனுக்கு இன்ப அதிர்ச்சி.
இளம் ஆட்டுக்குழம்பும் ரத்தப் பொரியலும் மணமாக செய்து வைத்திருந்தாள் குழலி.
"எப்படி சாத்தியம்?" யோசனையாக அவற்றை பார்த்தவனுக்கு ஒருநாள் குழலி அவனுக்கு பரிமாரும் போது பேசிய வார்த்தைகள் யாவும் நினைவில் வந்து போனது.
"ஏண்ணா உங்களுக்கு என்ன பிடிக்கும்?" கடலை குழம்பை அவன் தட்டில் ஊற்றிய குழலி, அவனுக்கு அறிகிலேயே நெருக்கமாக நின்றிருந்தாள்.
"எனக்கு என்ன பிடிக்கப் போகுது, உன்னைத் தவிர" காதலை கூட காரசாரமாக வெளிப்படுத்த இவன் ஒருத்தனால் தான் முடியும்.
"மச்.. அதை கேக்கலை. சாப்பிட என்ன பிடிக்கும்?" காரத்திலும் வெட்கத்தை காட்டும் இவளும் அவனுக்கு சலைத்தவள் இல்லை.
"ஓஹ்.. அதை கேட்டியா.." வெண்ணிடை தெரிய தூக்கி சொருகிய சேலையில் பக்கத்தில் இருந்த மனைவியை இழுத்து ஒரு சுற்று சுற்றி மடியில் அமர்த்திக்கொள்ள, முதலில் மிரள பார்த்த குயில்பெண் பின் லேசான முறைப்புடன் அவன் கழுத்தைக் கட்டிக் கொண்டாள்.
"பச்.. இடுப்பை அப்றம் ஆராய்ச்சி பண்ணலாம். இப்போ கேட்டதுக்கு பதில் சொல்லுங்கோ" ஒரு கை உண்ணும் வேலையை சரியாக பார்த்தாலும், மற்றுமொரு கை பெண்மேனியின் அம்சங்களை சீண்டி சிவக்க வைப்பதில் முறைப்பாக இருக்க, மிருதுவான கன்னங்கள் மருதாணி பூசியது அழகாக.
"இப்டி ஆராய்ச்சியோட சொல்றது தான் நாக்கு வசதி. காரசாரமா பச்சைமிளகாய் நறுக்கிப் போட்ட ரத்தப் பொரியல். குடல் கறி, ஆட்டு மூளை. நல்லி எலும்பு ரசம், ஆட்டுக்கால் சூப், கோழிக் குழம்பு, மீன் நண்டு இப்டி எல்லாமே பிடிக்கும்"
அசால்ட்டாக சொல்லிக்கொண்டே உணவை கை முழுக்க பிசைந்து வாயில் போட்டு மென்றான்.
"வுவாக்.. இதெல்லாம் மனுஷன் சாப்பிடுவானா" குழலிக்கு குமட்டிக்கொண்டு வந்தது.
"நான் சாப்பிடுவேன்"
"ஆமா நீங்க தான் மனுஷனே இல்லையாச்சே.." முகத்தை அஷ்டகோணல் ஆக்கி அவன் மடியில் இருந்து எழ முயற்ச்சித்தவளை, விட்டான் இல்லை.
"ஆனா இப்போ சாப்பிடறது இல்ல" உண்டு முடித்து தட்டிலே கையை கழுவி நகர்த்தி வைத்தவனை புரியாமல் பார்த்தாள்.
"ஏனாம்.. யாராவது உங்க கையப் பிடிச்சி கட்டிப்போட்டுட்டாளா, நான்வெஜ் சாப்பிட கூடாதுன்னு"
"இந்த ருத்ரன் கைய கட்டிப் போடற அளவுக்கு எவனுக்காவது தைரியம் இருக்கா என்ன?" நக்கல் நகைப்பு அவனிடம்.
"ஆமா அப்டியே இருந்துட்டாலும், நீங்க அவாள உயிரோட விட்டுதான் மறுவேலை பாப்பேள் பாரு. சரி சொல்லுங்கோ எதுனால சாப்பிடறது இல்ல" ஆர்வமாக அவனது முகத்தையே அளந்தாள் அவள்.
"உனக்காக தான்" என்றவன் சொல்லில் அகல விரித்தாள் கண்களை.
"உன்ன தூக்கிட்டு வந்து வச்சிருந்த புதுசுல, ஒருநாள் நல்லா வயிறுமுட்ட முழு கோழி ஒன்ன முழுங்கிட்டு உன் பக்கத்துல வந்தேன், ஆனா உனக்கு அந்த வாடை ஒத்துக்காம வாந்தி மயக்கம்னு உடம்புக்கு முடியாம போச்சே நியாபகம் இருக்கா..? அதுல இருந்தே நான்வெஜ் சாப்பிடறத விட்டாச்சு"
"நிஜமாவே எனக்காகவாண்ணா" தனக்காக பிடித்த உணவுகளை விட்டுக்கொடுத்து மறந்து போன கணவன் மீது ஆசையும் அக்கறையும் கூடியது பெண் நெஞ்சில்.
"நிஜமா உனக்காக தான் டி குயிலுஊ.. முத்தம் கொடுக்கும் போது நீ வாந்தி எடுத்தா நாக்கு மூடவுட் ஆகும். நம்ம ரொமான்ஸ் வீணா போகும். இது நமக்கு தேவையா சொல்லு. எதுல வேணாலும் காம்ப்ரமைஸ் பண்ணிக்கலாம் ஆனா முத்தத்துல முடியவே முடியாது டி" தலையை உளுக்கிக்கொண்டு தீவிரமாக சொன்னவனை மூக்கு விடைக்க முறைத்தாள்.
தன்னை ஆசையோடு முறைக்கும் மனைவியின் கண்களை ரசனையாக முத்தமிட்டவனின் கரங்கள் எல்லை மீறி, இடம் பொருள் பாராது சேலை விளக்கி கடலைக் குழம்பின் காரத்தை பெண்ணழகின் மலர்ந்த அங்கங்களில் தேன்பருகி போக்க முயன்றவனின் அடர்ந்த கேசத்தை இறுகப்பற்றி, தாராளமாக அள்ளித் திணித்தாள் தேன்குழலி.
கட்டி இருந்த சேலையில் இருந்து மேலங்கம் வரை ஒவ்வொன்றும் ஒவ்வொரு மூலைக்கு பறந்து விழ, பளிச்சிடும் ஒளியில் நட்டநடு ஹாலில் கணவனின் கண்களுக்கு விருந்தாகி, அவன் உதட்டின் வேகத்தை சமாளிக்க முடியாமல் கூச்சத்தில் நெளிந்தாள்.
"எ.ஏண்ணா ரூம்க்கு போய்டலாம்" ஆவேச முத்தத்தில் திணறினாள் பாவை.
"ஆராமிச்சாச்சி இனிமே முடியாது டி. இன்னைக்கு இங்கேயே முடிச்சிடலாம்" மோகக் கொதிப்பில் முத்தங்கள் அவள் கழுத்தில் பாய்ந்தது.
"ஸ்.. அதில்ல ண்ணா.. காத்தால எழும்ப நாழி ஆச்சுதுன்னா சரி வராது. துணியில்லாம் அங்கங்க சிதறிக்கிடக்குது, அசதில எடுக்க மறந்து யாராவது வந்துட்டா நேக்குதான் அசிங்கமா போகும்.." அவனது செல்லக்கடிகளில் தேகம் துடித்தாள்.
"என்னை மீறி யார் டி வருவா. நீ கவலை படாதே உனக்கு சிரமம் இல்லாம சிதறிக் கிடக்குற துணிகளை நானே எடுத்து வச்சிடறேன்"
உதட்டை ஜவ்வாக கடித்துக் கொண்டவனின் ஆண்மையின் அடங்காத தீவிரம், பெண்ணவளின் மிருதுவான பின்னழகில் முட்டிநின்று குத்துசண்டை போட அழைப்பு விடுக்க, பெண்மையின் அதர்காடு பூபூத்து குலுங்க, ஆணும் பெண்ணும் குத்துசண்டையில் சலைக்காது தீவிரம் கூட்டி, ஜீவன் இனிக்கும் வெள்ளோட்டம் காண்பித்தாள் கணவனுக்கு.
இல்லறத்தின் உச்சத்தை இருவரும் ஒருசேர பெற்று, வெற்றுதரையில் போர்வை இல்லாது தன்னை அணைத்து உறங்கிய மனைவியை இமைக்காமல் பார்த்தவன், விடியலில் அலுங்காமல் தூக்கி சென்று மெத்தையில் கிடத்தி விட்டு, மறக்காமல் சிதறிய உடைகளை பொறுக்கி எடுத்து வந்து கூடையில் போட்டவனாய் உறக்கத்தை தழுவினான்.
அன்றைய நாளின் அழகிய நினைவினை நினைத்து தனியாக சிரித்துக் கொண்ட ருத்ரன், மனைவி தனக்காக செய்த அசைவ குழம்பை நீண்ட நாட்கள் கழித்து சாப்பிட்டில் போட்டு ருசித்துப் பார்த்தான்.
முதல் முறையாக பிடிக்காத வாசத்தை நுகர்ந்தபடியே செய்வதற்கு எந்த அளவிற்கு குழலி சகித்துக் கொண்டிருப்பாள் என்று நன்றாக உணர முடிந்தது அவனால்.
பெரிதாக குழம்பில் ருசி இல்லை. மற்ற பதார்த்தங்களை உப்புக் காரம் ருசி பார்த்து சமைக்கும் அவளால், அசைவதை ருசி பார்க்க முடியாமல், நன்றாக இருக்குமோ இருக்காதோ என்ற சந்தேகத்துடனே பதட்டமாக செய்துவிட்டாளே தவிர்த்து, அசைவத்தின் வாசனையில் நிற்க முடியாமல் குமட்டி குமட்டி செய்து முடிப்பதற்குள் வியர்த்து விருவிருத்து தேகம் நனைந்து போனாள்.
தனக்காக இத்தனை தூரம் மெனக்கிட்டு ஆசையாக செய்த மனைவியின் கைப் பக்குவத்தில் உப்பு காரமின்றி சப்பென இருந்த உணவு கூட அமிர்தமாய் எண்ணி மிச்சம் வைக்காமல் உண்டு ஏப்பம் விட்ட ருத்ரன், மறக்காமல் வாய் கொப்பலித்து எதற்கும் ஒருமுறை பற்களை தேய்த்துக்கொண்டு மனைவியின் அருகில் ஆசையோடு வந்தவனை, கோபத்தில் எட்டி நிறுத்தினாள் குழலி.
தொடரும்.
ஓட ஓட துரத்தி அந்த ஆளை வெட்டிய மதனை பார்த்த ருத்ரன், ச்.. ச்.. ச்.. உச்சிக் கொட்டி நெருங்கி வந்தான் அவனிடம்.
"ஏன்டா கெலுப்பு.. அத்தன வருஷம் ஆர்மில இருந்தும் என்ன நீ ட்ரைனிங் எடுத்த. நேனு வரற்துகுள்ள முடிச்சிருப்பேன்னு பாத்தா, அந்த ஓட்டம் ஓடுறான் நின்ன இடத்துல இருந்து குறி பாத்து சுட்டு தள்ளுறத உட்டுட்டு, மூச்சிறைக்க ஓடி சாகசம் பண்றேன்னு நேரத்த வீணடிச்சிட்டு இருக்க"
குழலியை வீட்டில் விட்டுவிட்டு அப்போதே வந்த ருத்ரன், காரமாக கேட்டிட, முகத்தில் வழிந்த ரத்தத்தை துடைத்துக் கொண்டான் மதன்.
"அது எமி காது (அது ஒன்னும் இல்ல) அண்ணையா.. கொஞ்ச நாளா நேரத்துக்கு வர்க்கவுட் பண்ண முடியல. சிக்ஸ்பேக் கரைஞ்சி தொப்பை போட்ட பீலிங். அதான் ஜாகிங்லயே பீஸ் போட்டேன். அடுத்த பீஸ் உனக்காக தான் காத்திருக்கு அண்ணையா, கத்தியா? துப்பாக்கியா?"
மதன் தலை சாய்த்து கேட்கும் போதே, டப்..டப்.. டப்.. தொடர்ந்து ஒளித்த துப்பாக்கி சத்தத்தில் பின்னால் இருந்த பீஸ் புஸ்ஸென பீஸ் போய் இருந்தது.
"இந்த ரென்னிங்கு சேசிங்குலாம் (எனக்கு) நாக்கு சுத்தமா இஸ்டம் லேதுடா. போர் அடிச்சா பாப்போம்"
"அப்புறம் நம்மளப் பத்தின டீடெய்லிஸ் என் போலீஸ் மச்சான் கைக்கு கிடைச்சிருக்கும் தானே?"
கிடைத்திருக்கும் என நன்றாக தெரியும். ஆனாலும் இது சும்மா வம்பு.
"அதெல்லாம் பக்காவா கிடைச்சிடுச்சி அண்ணையா.. ஆனா அது வெறும் என்னை பத்தின விபரமா மட்டும் இருந்தா பரவால்ல. உன்ன பற்றின விபரங்களும் அடங்கி இருக்கே.. அதை நினச்சா தான்.."
அவன் இழுக்க,
"என்ன டா பயமா.. நேனு செத்து போய்டுவேன்னு"
"அண்ணையாஆ.. விளையாட்டுக்கு கூட அப்டி மாட்லாடக்கு (பேசாதே). உனக்காக உயிரை கொடுக்க நாங்க இத்தனை பேர் இருக்கோம். ஆனா நீ ஒரு ஆள் இல்லைனா நாங்க யாருமே ஒன்னும் இல்ல அண்ணையா.." எதையும் தாங்கும் இதயமாய் பயிற்சி பெற்ற ராணுவ வீரன் தன் அண்ணையாக்காக கலங்கிப் போனான்.
"இந்த செண்டிமெண்ட் சீனெல்லாம் இங்க வேணா. மீறி பண்ண யோசிக்காம சுட்டு தூக்கிப் போட்றுவேன் பாத்துக்கோ" சிடுசிடுத்த ருத்ரன்
"அங்க தான் ஒருத்தி அப்பப்ப செண்டிமெண்ட் பெர்ஃபார்மென்ஸ் நிமிஷத்துக்கு நிமிஷம் பண்றான்னா, இங்க இவன் அதுக்கு மேல பண்றான்" கடுப்பாக மனதில் நினைத்துக்கொண்டவனாய்,
"நாய் வேஷம் போட்ட பிறகு குறைச்சி தான்டா ஆகனும் மதனுஊ.. நேனு உயிரோட இருந்தாலும் செத்தாலும், நீ எதுக்காக இந்த பாதைய தேர்வு செஞ்சியோ அதோட இலக்கை அடைஞ்சே தீரணும். அதுதான் நீ எனக்காக செய்ற நல்லது.
இப்போதைக்கு என் உயிருக்கு எந்த பாதகமும் இல்ல. என் போலீஸ் மச்சான் தான் மண்டைய பிச்சிகிட்டு கிடைப்பான், வந்து வண்டிய எடு"
என்றதும் தான் நிம்மதியாக பெருமூச்சு விட்டு ஜீப்பை இயக்கினான்.
ருத்ரன் சொன்னது போல், ஃபைலின் மறுபக்கத்தை ஆர்வமாக திருப்பிய வெங்கட்டின் கண்கள் தெறித்து விழாதக் குறைதான்.
ஏனென்றால் மறுபக்கத்தில் இருந்த பக்கங்கள் யாவும் அன்று போலவே இன்றும் எரிந்து சாம்பலாகி இருந்தது. அதை கண்டு முதலில் திகைத்தாலும் கை முஷ்டியை மடக்கி ஆத்திரத்துடன் தொடையில்க் குத்திக் கொண்டான் வெங்கட்.
"ச்ச.. பக்கா கிரிமினல்ஸ் நம்ம கைக்கு ஆதாரம் கிடைக்கும்னு தெரிஞ்சி வேணும்னே அழிச்சி இருக்காங்க.
எது எப்டியோ, நாட்டை காப்பாத்துற கடைமைல இருந்து தவறி, சட்டவிரோதமா பல உயிர்களை கொல்ற கூட்டத்தோட சேர்ந்து நாட்டுக்கே துரோகம் செய்ற உன்ன விட மாட்டேன் டா மதன்.
இவ்ளோ தூரம் உன்ன கண்டு பிடிச்ச என்னால, உன் தலைவனை கண்டு பிடிக்கிறது ஒன்னும் அவ்வளவு கஷ்டம் இல்ல. கூடிய சீக்கிரம் கூண்டோட தூக்குறேன்டா"
உறுதியாக சூலூரைத்துக்கொண்டவன், அதற்கான வேலையில் தீவிரமாக இறங்கினான் வெங்கட்.
நாளுமொரு அதிர்வுகளை தாங்கிக் கொண்டு நேரங்கள் வேகமாக நகர, யார் மனதிலும் எவ்வொரு மாற்றங்களுமின்றி கடைமைக்கே என வாழ்க்கை பயணமும் தொடர்ந்தன.
அன்றிரவு இரவு உணவினை சமைத்து வைத்து வெகுநேரமாக கணவனுக்காய் காத்திருந்தாள் குழலி.
காத்திருந்து காத்திருந்து கண்கள் சொருக உணவு மேஜையில் தலைவைத்து உறங்கியும் போயிருக்க, நள்ளிரவு தாண்டி குருதிவெறியன் போல் அழுத்தமான காலடி எடுத்து வைத்து உள்ளே வந்தவன் சத்தத்தில் உறக்கம் கலைந்து கண் விழித்த குழலி, அவன் வந்து நின்ற தோற்றத்தைக் கண்டு இதயமே கலங்கிப் போனாள்.
"இன்னும் தூங்காம இங்க உக்காந்து என்ன பண்ணிட்டு இருக்க" குறுதியான சட்டையை கழட்டிப் போட்டான்.
"உங்களுக்காக தான் சாப்பாடு செஞ்சி வச்சி காத்திருந்தேன். ஆனா ஏன்டா காத்திருந்தோம்னு நினைக்க வச்சிட்டேள். அர்த்த ராத்திரில கொலைய செஞ்சிட்டு தைரியமா ஆத்துக்குள்ள வரேளே, இதெல்லாம் பாக்கணும்னு என் தலையெழுத்து"
அவன் முகம் பாராது கலங்கிய விழிகளில் நீர் திரண்டு கன்னத்தில் உருண்டோட சொன்னவள், சமைத்த உணவினை அப்படியே விட்டு அறைக்குள் சென்று படுத்துவிட்டாள்.
ருத்ரனும் அவளை கண்டுகொள்ளாமல் குளித்து வந்தவன் பயங்கர பசியில் இருந்திருப்பான் போலும், நேராக வந்து அவள் செய்த உணவினை திறந்து பார்த்தவனுக்கு இன்ப அதிர்ச்சி.
இளம் ஆட்டுக்குழம்பும் ரத்தப் பொரியலும் மணமாக செய்து வைத்திருந்தாள் குழலி.
"எப்படி சாத்தியம்?" யோசனையாக அவற்றை பார்த்தவனுக்கு ஒருநாள் குழலி அவனுக்கு பரிமாரும் போது பேசிய வார்த்தைகள் யாவும் நினைவில் வந்து போனது.
"ஏண்ணா உங்களுக்கு என்ன பிடிக்கும்?" கடலை குழம்பை அவன் தட்டில் ஊற்றிய குழலி, அவனுக்கு அறிகிலேயே நெருக்கமாக நின்றிருந்தாள்.
"எனக்கு என்ன பிடிக்கப் போகுது, உன்னைத் தவிர" காதலை கூட காரசாரமாக வெளிப்படுத்த இவன் ஒருத்தனால் தான் முடியும்.
"மச்.. அதை கேக்கலை. சாப்பிட என்ன பிடிக்கும்?" காரத்திலும் வெட்கத்தை காட்டும் இவளும் அவனுக்கு சலைத்தவள் இல்லை.
"ஓஹ்.. அதை கேட்டியா.." வெண்ணிடை தெரிய தூக்கி சொருகிய சேலையில் பக்கத்தில் இருந்த மனைவியை இழுத்து ஒரு சுற்று சுற்றி மடியில் அமர்த்திக்கொள்ள, முதலில் மிரள பார்த்த குயில்பெண் பின் லேசான முறைப்புடன் அவன் கழுத்தைக் கட்டிக் கொண்டாள்.
"பச்.. இடுப்பை அப்றம் ஆராய்ச்சி பண்ணலாம். இப்போ கேட்டதுக்கு பதில் சொல்லுங்கோ" ஒரு கை உண்ணும் வேலையை சரியாக பார்த்தாலும், மற்றுமொரு கை பெண்மேனியின் அம்சங்களை சீண்டி சிவக்க வைப்பதில் முறைப்பாக இருக்க, மிருதுவான கன்னங்கள் மருதாணி பூசியது அழகாக.
"இப்டி ஆராய்ச்சியோட சொல்றது தான் நாக்கு வசதி. காரசாரமா பச்சைமிளகாய் நறுக்கிப் போட்ட ரத்தப் பொரியல். குடல் கறி, ஆட்டு மூளை. நல்லி எலும்பு ரசம், ஆட்டுக்கால் சூப், கோழிக் குழம்பு, மீன் நண்டு இப்டி எல்லாமே பிடிக்கும்"
அசால்ட்டாக சொல்லிக்கொண்டே உணவை கை முழுக்க பிசைந்து வாயில் போட்டு மென்றான்.
"வுவாக்.. இதெல்லாம் மனுஷன் சாப்பிடுவானா" குழலிக்கு குமட்டிக்கொண்டு வந்தது.
"நான் சாப்பிடுவேன்"
"ஆமா நீங்க தான் மனுஷனே இல்லையாச்சே.." முகத்தை அஷ்டகோணல் ஆக்கி அவன் மடியில் இருந்து எழ முயற்ச்சித்தவளை, விட்டான் இல்லை.
"ஆனா இப்போ சாப்பிடறது இல்ல" உண்டு முடித்து தட்டிலே கையை கழுவி நகர்த்தி வைத்தவனை புரியாமல் பார்த்தாள்.
"ஏனாம்.. யாராவது உங்க கையப் பிடிச்சி கட்டிப்போட்டுட்டாளா, நான்வெஜ் சாப்பிட கூடாதுன்னு"
"இந்த ருத்ரன் கைய கட்டிப் போடற அளவுக்கு எவனுக்காவது தைரியம் இருக்கா என்ன?" நக்கல் நகைப்பு அவனிடம்.
"ஆமா அப்டியே இருந்துட்டாலும், நீங்க அவாள உயிரோட விட்டுதான் மறுவேலை பாப்பேள் பாரு. சரி சொல்லுங்கோ எதுனால சாப்பிடறது இல்ல" ஆர்வமாக அவனது முகத்தையே அளந்தாள் அவள்.
"உனக்காக தான்" என்றவன் சொல்லில் அகல விரித்தாள் கண்களை.
"உன்ன தூக்கிட்டு வந்து வச்சிருந்த புதுசுல, ஒருநாள் நல்லா வயிறுமுட்ட முழு கோழி ஒன்ன முழுங்கிட்டு உன் பக்கத்துல வந்தேன், ஆனா உனக்கு அந்த வாடை ஒத்துக்காம வாந்தி மயக்கம்னு உடம்புக்கு முடியாம போச்சே நியாபகம் இருக்கா..? அதுல இருந்தே நான்வெஜ் சாப்பிடறத விட்டாச்சு"
"நிஜமாவே எனக்காகவாண்ணா" தனக்காக பிடித்த உணவுகளை விட்டுக்கொடுத்து மறந்து போன கணவன் மீது ஆசையும் அக்கறையும் கூடியது பெண் நெஞ்சில்.
"நிஜமா உனக்காக தான் டி குயிலுஊ.. முத்தம் கொடுக்கும் போது நீ வாந்தி எடுத்தா நாக்கு மூடவுட் ஆகும். நம்ம ரொமான்ஸ் வீணா போகும். இது நமக்கு தேவையா சொல்லு. எதுல வேணாலும் காம்ப்ரமைஸ் பண்ணிக்கலாம் ஆனா முத்தத்துல முடியவே முடியாது டி" தலையை உளுக்கிக்கொண்டு தீவிரமாக சொன்னவனை மூக்கு விடைக்க முறைத்தாள்.
தன்னை ஆசையோடு முறைக்கும் மனைவியின் கண்களை ரசனையாக முத்தமிட்டவனின் கரங்கள் எல்லை மீறி, இடம் பொருள் பாராது சேலை விளக்கி கடலைக் குழம்பின் காரத்தை பெண்ணழகின் மலர்ந்த அங்கங்களில் தேன்பருகி போக்க முயன்றவனின் அடர்ந்த கேசத்தை இறுகப்பற்றி, தாராளமாக அள்ளித் திணித்தாள் தேன்குழலி.
கட்டி இருந்த சேலையில் இருந்து மேலங்கம் வரை ஒவ்வொன்றும் ஒவ்வொரு மூலைக்கு பறந்து விழ, பளிச்சிடும் ஒளியில் நட்டநடு ஹாலில் கணவனின் கண்களுக்கு விருந்தாகி, அவன் உதட்டின் வேகத்தை சமாளிக்க முடியாமல் கூச்சத்தில் நெளிந்தாள்.
"எ.ஏண்ணா ரூம்க்கு போய்டலாம்" ஆவேச முத்தத்தில் திணறினாள் பாவை.
"ஆராமிச்சாச்சி இனிமே முடியாது டி. இன்னைக்கு இங்கேயே முடிச்சிடலாம்" மோகக் கொதிப்பில் முத்தங்கள் அவள் கழுத்தில் பாய்ந்தது.
"ஸ்.. அதில்ல ண்ணா.. காத்தால எழும்ப நாழி ஆச்சுதுன்னா சரி வராது. துணியில்லாம் அங்கங்க சிதறிக்கிடக்குது, அசதில எடுக்க மறந்து யாராவது வந்துட்டா நேக்குதான் அசிங்கமா போகும்.." அவனது செல்லக்கடிகளில் தேகம் துடித்தாள்.
"என்னை மீறி யார் டி வருவா. நீ கவலை படாதே உனக்கு சிரமம் இல்லாம சிதறிக் கிடக்குற துணிகளை நானே எடுத்து வச்சிடறேன்"
உதட்டை ஜவ்வாக கடித்துக் கொண்டவனின் ஆண்மையின் அடங்காத தீவிரம், பெண்ணவளின் மிருதுவான பின்னழகில் முட்டிநின்று குத்துசண்டை போட அழைப்பு விடுக்க, பெண்மையின் அதர்காடு பூபூத்து குலுங்க, ஆணும் பெண்ணும் குத்துசண்டையில் சலைக்காது தீவிரம் கூட்டி, ஜீவன் இனிக்கும் வெள்ளோட்டம் காண்பித்தாள் கணவனுக்கு.
இல்லறத்தின் உச்சத்தை இருவரும் ஒருசேர பெற்று, வெற்றுதரையில் போர்வை இல்லாது தன்னை அணைத்து உறங்கிய மனைவியை இமைக்காமல் பார்த்தவன், விடியலில் அலுங்காமல் தூக்கி சென்று மெத்தையில் கிடத்தி விட்டு, மறக்காமல் சிதறிய உடைகளை பொறுக்கி எடுத்து வந்து கூடையில் போட்டவனாய் உறக்கத்தை தழுவினான்.
அன்றைய நாளின் அழகிய நினைவினை நினைத்து தனியாக சிரித்துக் கொண்ட ருத்ரன், மனைவி தனக்காக செய்த அசைவ குழம்பை நீண்ட நாட்கள் கழித்து சாப்பிட்டில் போட்டு ருசித்துப் பார்த்தான்.
முதல் முறையாக பிடிக்காத வாசத்தை நுகர்ந்தபடியே செய்வதற்கு எந்த அளவிற்கு குழலி சகித்துக் கொண்டிருப்பாள் என்று நன்றாக உணர முடிந்தது அவனால்.
பெரிதாக குழம்பில் ருசி இல்லை. மற்ற பதார்த்தங்களை உப்புக் காரம் ருசி பார்த்து சமைக்கும் அவளால், அசைவதை ருசி பார்க்க முடியாமல், நன்றாக இருக்குமோ இருக்காதோ என்ற சந்தேகத்துடனே பதட்டமாக செய்துவிட்டாளே தவிர்த்து, அசைவத்தின் வாசனையில் நிற்க முடியாமல் குமட்டி குமட்டி செய்து முடிப்பதற்குள் வியர்த்து விருவிருத்து தேகம் நனைந்து போனாள்.
தனக்காக இத்தனை தூரம் மெனக்கிட்டு ஆசையாக செய்த மனைவியின் கைப் பக்குவத்தில் உப்பு காரமின்றி சப்பென இருந்த உணவு கூட அமிர்தமாய் எண்ணி மிச்சம் வைக்காமல் உண்டு ஏப்பம் விட்ட ருத்ரன், மறக்காமல் வாய் கொப்பலித்து எதற்கும் ஒருமுறை பற்களை தேய்த்துக்கொண்டு மனைவியின் அருகில் ஆசையோடு வந்தவனை, கோபத்தில் எட்டி நிறுத்தினாள் குழலி.
தொடரும்.
Author: Indhu Novels
Article Title: அத்தியாயம் 37
Source URL: Indhu Novels-https://indhunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Article Title: அத்தியாயம் 37
Source URL: Indhu Novels-https://indhunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.