Hello! It seems that you are using AdBlock - some functions may not be available. Please add us as exceptions. Thank you for understanding!
  • வணக்கம் 🙏🏻 இந்து நாவல்ஸ் தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்
  • இந்து நாவால்ஸ் தளத்தில் எழுத விரும்புவோர், indhunovel@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு செய்தி அனுப்பவும். கற்பனைகளை காவியமாக்குங்கள் ✍🏻💖

அத்தியாயம் 7

Administrator
Staff member
Messages
268
Reaction score
215
Points
63
அத்தியாயம் 7

"முன்னப் பின்ன யாருன்னே தெரியாத ஒரு பெண்ணுக்காக.. நீங்க ரெண்டு பேரும் எனக்கு பெரிய உதவி செஞ்சி இருக்கீங்க, பாட்டி.. இதுக்கு நான் உங்களுக்கு திருப்பி என்ன கைமாறு செஞ்சாலும் அது ஈடாகாது.. பாட்டி." அந்த பெண் கண் கலங்கி கூறியதை கேட்டு அவள் தலையை வாஞ்சயாக வருடியவர்,

"இதுக்கான கைமாறு உன்னால கண்டிப்பா பண்ண முடியும்மா", பாட்டி புதிர் போட,
அந்த பெண்ணும் சரி, அரவிந்தும் சரி பாட்டியை கேள்வியாக பார்த்தனர்..

அதை புரிந்து கொண்டவர்.. "சொல்றேம்மா ஆனா, அதை நான் இப்ப சொல்ல மாட்டேன், அரவிந்த் டிஸ்சார்ஜ் ஆனதும் நீ அவன் கூட நம்ம வீட்டுக்கு வா,, அப்ப சொல்றேன்", பாட்டி சொன்னதை கேட்டு விழித்து வைத்தாள்.

"பாட்டி நான் எப்டி, எதுக்கு உங்க வீட்டுக்கு",என்றாள் குழப்பமாக...
அரவிந்த், நடப்பதை வேடிக்கை மட்டுமே பார்த்துக் கொண்டு இருந்தான்..

"அதான் நம்ம வீட்டுக்கு வந்ததும் சொல்றேன்னு சொன்னேனே மா..அப்புறம் என்ன.." "நம்ம வீடு" என்றதில் பாட்டி அழுத்தம் கூட்டி சொல்ல..
அது அந்த நங்கைக்கு புரியவில்லை.. ஆனால், அவள் கழுத்தில் பொன் தாலி சூடிய அவளின் மனாலனுக்கு புரிந்து விட்டது..
ஆகையால், பாட்டியை அவன் முறைத்து பார்க்க.
அவன் முறைப்பை கண்டு கொள்ளாத பாட்டி,, "சரிம்மா அப்ப நான் கிளம்புறேன் நீ இங்க இருந்து, என் பேரன பத்திரமா பாத்துக்கோ" என்றதும் அதிர்ச்சியானவள்,

"எ.என்ன ப.பாட்டி சொல்றிங்க, நான் அவரை பாத்துக்கனுமா".. திணறி கேட்டாள் பாவை.

"ஆமாமா, உன்ன காப்பாத்த போய் தானே என் பேரனுக்கு இப்டி ஆச்சி, அதனால நீதான் கூட இருந்து பாக்கனும்".. ஒரே வாக்கியமாக முடித்தவராக அரவிந்தை பார்த்து.. "கண்ணா,, நான் நம்ம டிரைவர் சுந்தரத்துக்கு போன் பண்ணி அப்பவே வர்ற சொல்லிட்டேன், அவன் எப்ப வேனா வந்துடுவான், மழை கொஞ்சம் விட்டு இருக்கு நான் வீட்டுக்கு கெளம்புறேன்.. நீங்க இருக்க சாப்பாடை சாப்டுட்டு தூங்குங்க" என்றவர்

"கண்ணா,, பத்திரமா பாத்துக்கோ" அந்த பெண்ணை ஜாடையாக கண் காட்ட, அதே நேரம் அந்த பெண்ணும் அவரை நிமிர்ந்து பார்த்தாள்.

"உடம்ப பத்திரமா பாத்துக்கோ,, கண்ணா",, இரு அர்த்தங்களாக மொழிந்தார்..

அவர் வார்த்தையின் மொழியை அரவிந்த் சரியாக புரிந்து கொண்டான்.. அதே நேரம் டிரைவர் வந்து சேர, அந்த பெண்ணிடம் சில ரூபாய் தாள்களை கையில் பாட்டி திணித்தவராக, யார் பதிலும் எதிர்பாராமல் இரு வேறு உள்ளங்களும் ஒன்று சேர,, இந்த வாய்ப்பை பயன் படுத்திக் கொண்டு, தனிமையை அளித்து.. விடை பெற்று சென்றார்.. டிரைவரின் உதவியுடன்... மனோன்மணி பாட்டி...

ஏதோ பாட்டி இருந்தவரை, ஒரு தெம்பாக தைரியமாக இருந்தவள்.. இப்போது ஏதோ ஒன்று தன்னை விட்டு நீங்கி செல்வதை போல தவித்து போய், அவர் சென்ற திசையையே கண் இமைக்காமல் பார்த்து நின்றவளை கூர்ந்து பார்த்த அரவிந்த்..

"ஓய்,, என்ன இப்டியே வேடிக்க பாத்து நேரத்த ஓட்ட போறியா,, இல்ல எனக்கு சாப்பாடு கொடுக்க போறியா".. அரவிந்தின் கணீர் குரலில் தூக்கிவாரிப் போட்டு அவன் புறம் திரும்பினாள்.

"ஹான்.. இ. இதோ கொடுக்குறேன் சார்"..என்றவாரு, உணவு பொட்டலத்தை பிரித்து அவனிடம் நீட்ட, முதுகில் குத்து பட்ட காயத்தில் தையல் போட்டு உள்ளதில் நிமிர முடியாமல் ஒருக்களித்து படுத்து இருக்க, அவனின் வலக்கை அடி புறம் மெத்தை மீது இருப்பதில்.. அவனால் அந்த உணவை உண்ண முடியாது என நினைத்தவள்...
வேறு வழி இல்லாமல், இட்லியை பிய்த்து தானே அவன் வாய்க்கு அருகே தயங்கியபடி ஊட்டி விட கை நீட்ட..
அவனும் வேறு வழி இல்லாமல்.. அவள் கையில் உள்ள உணவை வாயில் வாங்கிக் கொண்டான்..

அது அவளுக்கு நிம்மதியளித்தாலும், ஆடவனின் கத்தி போன்ற கூர் பார்வை,, பெண்ணவளை துளைத்தெடுத்தது.

அதில் சங்கோஜமாக நெளிந்தவளாக, "சார் எ.என்னாச்சு ஏன் அப்டி பாக்குறீங்க",, ஏதோ ஒருவாரு அவள் மனதில் பட்டதை கேட்டு விட்டாள்.

"எதுக்கு அவனுங்க உன்ன துரத்தினானுங்க?..

நீ ரியாக்ட் பண்ணதை பாத்தா அவனுங்கள உனக்கு முன்னமே தெரிஞ்சி இருக்க வாய்ப்பு இருக்கு?

அவனுங்களுக்கும் உனக்கும் என்ன சம்மதம்?..

மொதல்ல உன் பேரு என்ன?.."

அரவிந்த் அடுக்கடுக்காக அவளிடம் கேள்வியை கேட்க,

"என் பேரு முல்லைமலர்"
அரவிந்த் கடைசியாக கேட்ட கேள்விக்கு மட்டும் மென் குரலால் பதில் கொடுத்து, அமைதியாக முல்லை தலை குனிந்துக்கொண்டாள்.

"அப்ப முதல்ல கேட்ட கேள்விக்கு எல்லாம் உங்க தாத்தா வந்து பதில் சொல்லுவாறா?" சற்றே எரிச்சல் மண்டி கேட்கவும் கண்கள் குளம் கட்டிவிட்டது.

"சார் இப்போதைக்கு என்னால எதுவும் சொல்ல முடியாது.. என்ன நம்பி என்கிட்ட ஒப்படைச்ச சில வேலைய நான் முடிச்சதும் இங்கருந்து போய்டுவேன்.. அது வரைக்கும் என்கிட்ட எதுவும் கேக்காதீங்க சார்".. முல்லை பாவமாக சொல்ல..

"மச். நீ எதாவது பன்னு உன்கிட்ட கேட்டது என் தப்புதான்" அரவிந்த் கடுப்பாக கூறி,, "சீக்கிரம் சாப்பாடு கொடுத்துட்டு நீயும் சாப்ட்டு போய் படு".. என்றவனின் முகம் கருத்து குரல் இறுகி தான் இருந்தது...

இத்தனை பெரிய துன்பத்தில் இருந்து, அவளை காப்பாற்றிய தன்னிடம் கூட சொல்ல முடியாத ஒன்றா..? அதுவும் தான் அவள் கழுத்தில் தாலி கட்டியதை, அவள் கருத்தில் எடுத்துக் கொள்ளாமல், இங்கிருந்து போய்டுவேன் என்றது வேறு அரவிந்துக்கு கடுப்பை கிளப்பி இருந்தது. அவன் ஏன் இப்படி நினைக்கிறான் என்று கூட அவனுக்கும் புரியாத புதிராக இருந்தது...

"சரி சார்" என்ற முல்லைக்கு அவன் கோவ முகத்தை பார்த்து வந்த பதட்டத்தில்,, அதிக மிளகாய் போட்டு அரைத்த காரசட்னியில் இட்லியை தொட்டு தெரியாமல் ஊட்டி விட்டுவிட..

அரவிந்தும் அது தெரியாமல் வாயில் வாங்கிக் மென்று விழுங்கியவனுக்கு.. இதுவரை காரம் உண்டு பழக்கமில்லாதவன் கண்ணெல்லாம் கலங்கி.. சட்டென உச்சந்தலை வரை புரை ஏறி தையல் போட்ட இடமெல்லாம் வின்வின்னென்ற வலி உயிர் போனது.
காயம் உள்ள காரணத்தில் இரும முடியாமல் திணறி, கண்கள் சிவந்து மூச்சி வாங்க திணறிப் போனவனை பார்த்து பயந்து போன முல்லை,

அருகில் உள்ள தண்ணீர் போத்திலை எடுத்து திறந்து அவன் வாய் அருகே கொண்டு செல்ல, ஒரு பக்கமாக படுத்து இருந்தவனால், பெரிய நீட்டு போத்திலில் உள்ள நீரை குடிக்க முடியாமல் போக,, மேலும் வலி பொருக்க முடியாமல் இரும்பிக் கொண்டு இருக்க, அங்கு வேறு தம்பலர் ஸ்பூன் ஏதுவும் இல்லாததில், ஆபத்துக்கு பாவம் இல்லை என நினைத்தாளோ!

மடமடவென தன் வாயில் நீரை நிறைத்துக் கொண்டு,, உப்பிய கன்னங்களுடன், அரவிந்த் புறம் தலை சாய்த்து,, அரவிந்த் வாய்க்குள் அவள் வாயில் இருந்த நீரை மெதுவாக செலுத்தினாள் மங்கை...

இச்செயலை, சற்றும் எதிர் பாராத அரவிந்த், அதிர்ச்சியில் விழி விரித்து முல்லையின் கண்களை கண்டவன் மூச்சி முட்டி திக்குமுக்காடிப் போனான், ஆடவன்..

மழை
 

Author: Indhu Novels
Article Title: அத்தியாயம் 7
Source URL: Indhu Novels-https://indhunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top