Hello! It seems that you are using AdBlock - some functions may not be available. Please add us as exceptions. Thank you for understanding!
  • வணக்கம் 🙏🏻 இந்து நாவல்ஸ் தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்
  • இந்து நாவால்ஸ் தளத்தில் எழுத விரும்புவோர், indhunovel@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு செய்தி அனுப்பவும். கற்பனைகளை காவியமாக்குங்கள் ✍🏻💖
Administrator
Staff member
Messages
300
Reaction score
215
Points
63
அத்தியாயம் - 72

வீடு வருவதற்குள் அவன் செய்த அலம்பலில் உறங்கி விழுந்தவளை அலுங்காமல் குலுங்காமல் தனதறைக்கு தூக்கி வந்த ஆத்விக்கோ, வாங்கிய டைரிமில்க் சாக்லேட்டுக்கு வேலை இல்லாமல் போனதே என்ற பெரும் கவலை இருந்தாலும், அசதியாக உறங்கும் மனைவியை தொல்லை செய்ய நினைக்காதவனுக்கு, அவள் பொன்தேகம் சுற்றி இருந்த பட்டு சேலையின் மீது ஏக போக பொறாமை கொண்டது மனம்.

அதிலும் இம்முறை, தன் கணவனை பற்றி நன்கு அறிந்தவளாக நல்ல யோசனை செய்து, சின்னதாக கூட தேகம் தெரியாதவாறு தன் அத்தையிடம் கூறி சேலையைக் கட்டி இருந்த விதம், சுத்தமாக பிடிக்கவில்லை அவனுக்கு.

நாள் ஒன்றிற்கே கணக்கின்றி தன் மனைவியின் அங்க அழகுகளை கண்டு ரசித்து கண்கள் மோட்சம் பெற்று பளபளத்து போகும். இன்றோ அவன் எதிர்பார்த்த எதுவும் நடக்காமல் போக, என்னவோ அவளை ஒன்றுமே செய்யாத அப்பாவி பிள்ளை போல முகம் வாடிப் போனவன், திருட்டு பயலாக திட்டம் போட்டு வேலையை தொடங்க ஆயுத்தமானான் கள்ளன்.

தன் ஆடையை கலைத்து விட்டு ஷாட்ஸ் ஒன்றை அணிந்துகொண்ட ஆத்வி, மெல்ல மனைவியின் அருகில் அமர்ந்தவனாக, குழந்தை முகம் கொண்டவளின் நெற்றியில் முத்தமிட்டு கன்னம் தாவிட, உப்பிய கன்னங்கள் ஆணவனின் நாவினில் பனிக்கூழாக கரைந்தது.

சிவந்த நுனிமூக்கை வலிக்காமல் கடித்து, பிளந்த கீழ் இதழில் தேன் பருகி மேல் இதழினில் லேசாக கடிக்கவும், மனைவி உறக்கத்தில் சிணுங்கியதை கண்டு வாயை சற்று கடினப்பட்டு அடக்க முயன்றான்.

விரைப்பாக போர்த்தி இருந்த பாவையின் சேலையை அகட்டும் விதமாக தோளில் இருந்த பின்னூசியை மெதுவாக எடுத்து, மேடிட்ட வயிற்றின் கீழ் சொருகி இருந்த கொசுவத்தை விரல்கள் கொண்டு மெல்ல இழுத்தவன் கரமோ,

பெண்ணவளின் அடிவயிற்றை வருடி, நாபிக் குழியில் வட்டமடித்து பல்லாங்குழி விளையாடி, பிள்ளைக்கும் மீசை உரச முத்தமிட்டு கொண்டாடி, பலவித சேட்டைகள் நடத்தி சேலைக்கும் நோகாமல் எப்படி அவன் மனைவியின் பனிக்கட்டி தேகத்தில் இருந்து சேலையை பிரித்து வீசினானோ!

கழுத்து வரை ஒட்டிய போட் நெக் டிசைன் ப்ளவுஸ் வேறு பாவையின் அழகை மொத்தமாக மூடி மறைத்துக் கொள்ள,
"ச்ச.. என்ன ட்ரெஸ் வியர் பண்றா இவ, அதுவும் புருஷன் முன்னாடி போட வேண்டிய ட்ரெஸா இது.. லோ நெக் ஜாக்கெட் எல்லாம் எங்கே போச்சி, ஆயா காலத்து ஜாக்கெட்ட போட்டுட்டு இருக்கா.." என்ற சலிப்போடு முதுகு புறம் இருந்த ஹூக்கை கழட்டி, தனக்கு இடைஞ்சலாக இருந்த அந்த பிளவுஸை தூர வீசிய பிறகு தான், நிம்மதியான மூச்சே விட முடிந்தது.

அவள் இறுக்கமாக அணிந்து இருக்கும் உடை என்னவோ, அவன் நெஞ்சை இறுக்கிப் பிடித்து மூச்சி முட்ட வைப்பது போல் இருந்தது போலும்.

"அப்பப்பா.. என்னா டைட்டா ஜாக்கெட் போட்டு இருக்கா, எப்டி இருந்தா காலைல இருந்து இத போட்டுகிட்டு.." என்ற யோசனையோடே மேலும் அவள் அணிந்திருந்த மார்புக்கச்சையில் கை வைக்கப் போக,
"டேய்.. அதையும் கழட்டி போட்டு உன் கேடி வேலைய பாக்க போறியா படவா.." உள்ளிருந்து மனசாட்சியின் குரல் சத்தமாக வெளிவந்தது.

"எப்பப்பாரு அதே நினைப்பு, டைட்டா இருக்கே என் ரெண்டு பேபியும் கஷ்டப்படுவாங்களேன்ற அக்கறைல செய்றதை எல்லாம் தப்பா புரிஞ்சிகிட்டா நான் என்ன பண்றது.." திடமாக பதில் உரைத்தவனுக்கும், அவன் பார்க்கும் திருட்டுப் பார்வைக்கும் தான் எத்தனை வித்தியாசம்.

"யாரு நீ.. அக்கறைல செய்ற.. அதை நான் நம்பனும், போடா டேய்.. மனசாட்சிக்கே அல்வாவா.. உன்ன உன் பொண்டாட்டியே நம்பமாட்டா நான் நம்பிடுவேன்னு உன் கனவுலையும் நினைக்காதே.." என்ற மனசாட்சியோ அடுத்து அவன் செய்யப் போகும் காரியம் உணர்ந்து, வெட்கம் கொண்டு அவனுள் அடங்கி விட்டது.

ஏசியின் குளிர் வண்ணக்கிளியின் தேகம் துளைக்க, மார்பினில் சுமை கூடி கழுத்தினில் பிடரிமயிர்கள் கூசி, வயிற்றினில் இதம் உணர்ந்து உறக்கத்திலே வெட்கம் கொண்டு சிலிர்த்த பாவைக்கோ, கணவனின் சித்து விளையாட்டில் உமிழ்நீர் வழியுமிடமெங்கும் குளிரெடுக்கத் தொடங்கியது.

"டாய்.. கேடி மாமா என்ன டா பண்ற என்ன.." தன் கழுத்தை முட்டிய அவன் கேசத்தை கொத்தாக பற்றி இழுத்த வேகத்தில், ஜவ்வாக அவன் வாயில் கரைந்த கூரிய ஜவ்வுமிட்டாய் பரிப்போன நிலையில், ஏமாற்றமாக மனைவியின் முகம் கண்டான்.

"கேடி ராஸ்கல் தூங்கும் போது பாக்குற வேலையா இது.." சிணுங்கலாக விழி உருட்டி வெட்கம் கொண்டவளை மோகப் பார்வையால் தவிக்க விட்டவன்,

"நீ ஏன் டி தூக்கத்துல இருந்து அதுக்குள்ள எழுந்த, உன்ன டிஸ்டர்ப் பண்ணாம தானே என் வேலைய பாக்குறேன்.." என்றவன் கரமோ பாவையின் செழுமையை வட்டமடித்து, ரணம் கொடுக்காத பூவின் முட்களை விரல் கொண்டு வருடியது.

"ம்ச்.. மாமா.. சும்மா இருங்க.." மேலும் சிணுங்கி அவனை மெத்தையில் சரித்தவள், ஆடை மூடா தேகத்தை தன்னவன் மீது புகுத்தி ஆடவனுக்குள் இதமாக தன்னை மறைத்துக் கொள்ள,

"அட...அட.. பஞ்சி மெத்தையே மெத்து மெத்துனு வந்து மேல விழுதே.. ஆஆ..இன்னும் நல்லா அழுத்தி மறச்சிக்கோ பேபி.." குறும்பாக கூறி கிறங்கினான் ஆத்வி.

"ஐயோ.. ச்சீ.. எவ்ளோ குடுத்தாலும் உங்களுக்கு மட்டும் பத்தவே பத்தாதே.. ஏன் மாமா.. என்ன எழுப்பி இருக்கலாம்ல அதை விட்டு ஏன் இந்த திருட்டுத்தனம்.." அவன் மார்பில் உள்ள ரோமங்களில் விரல் நுழைத்து சுருட்டி, ஆடவனின் ஆண்மையை மறைமுகமாக தூண்டியது பாவையின் மென்கரம்.

"என்ன தான் பொண்டாட்டிக்கு தெரிஞ்சி அவளை ருசிச்சாலும், அவளை அவளுக்கே தெரியாம ருசிக்கிறதும் ஒரு தனி ருசி பேபிஇ.. அதெல்லாம் சொன்னா உனக்கு புரியாது, திருட்டு மாங்காய்ல தான் டி ருசி அதிகம்.. உன்ன எத்தனை முறை இப்டி திருட்டுத்தனமா ருசிச்சு இருப்பேன் தெரியுமா. ப்பா.. செம்ம கிக்கா இருக்கும்.." என்றவனுக்கு உடல் முறுக்கி, மனைவியின் மென்மையில் இதழ் கொண்டு உறுஞ்சி எடுக்க, தேகம் சிலிர்த்த கவி,

"அடப்பாவி கேடி.." வாய் பிளந்தவளின் உதட்டில் விரல் கொண்டு நசுக்கி கசக்களாக வருடியவன், அவளையும் சூடேற்றி வாங்கி வந்த சாக்லேட்டுக்கு வேலை வந்து விட்ட மகிழ்ச்சியில், மனைவியின் பளபளக்கும் வெற்று மேனியெங்கும் பிரவுன் நிற சாக்லேட்டை தடவி, ஒரு இடம் பாக்கி இல்லாமல் நாவினால் சுவைத்து, அவளையும் தன் மேனியெங்கும் சுவைக்க விட்டு சுகத்தில் கண் சொக்கிய கள்ளன்,

மென்மையில் நறுக்கென கடித்து அவளை சுக வலியில் துடிக்க விட்டு, இனிப்பு இதழில் கரைந்தவன், அடங்காமல் முறுக்கி நிற்கும் தென்னை கொண்டு பாவையின் கூர் முனையில் இதம் கொடுத்து வருடி, கழுத்து வளைவில் கூச வைக்க இதழ் கடித்து போர்வையை இறுக்கிக் கொண்டவளுக்கு சுக போதையில் தேகம் தகித்தது.

தானாக கரம் உயர்த்தி கணவனை திருப்தி கொள்ள வைக்கும் நோக்கில், வெட்கம் விளக்கிய நங்கை, அவன் இடையின் கீழ் சேவை செய்ய,

"ஹாஆ..பேபிஇஇ.. ஹையோஓஓ.. கொல்ற டி..." ஆணுடல் குலுங்க வாய் விட்டே அலறியதில், வெட்கம் பிடுங்கி தன்னவன் முகம் பார்க்க முடியாமல் கூச்சம் கொண்ட பாவை, சேவை நிறுத்தம் செய்து முகத்தை மூடிக் கொண்டாள்.

மனைவி கொடுத்த சுகத்தில் ராஜ போதை கொண்டவன் அவளுக்கு முத்ததால் பரிசு வழங்கி, இனிப்பான மென்மையில் கரைந்து, நாவினால் குளிரூட்டி, உள்ளிருக்கும் தனது குழந்தைக்கும் பலநூறு முத்தங்கள் வழங்கிய ஆத்வி,

தன்னில் உருகி தன்னவளின் பெண்மையை மீண்டும் மீண்டும் களவாடி, ஆனந்த கடலில் அலை அடிக்க, "நடு சாமத்தில சாமந்திப்பூ ஆள அசத்துது.. என் நெஞ்ச உசுப்புது.." மனைவி கண்ணை கண்டு பாடி அவள் நெஞ்சில் முட்ட,

"நல்ல ராத்திரியில் பூத்திரிதான் பாத்து ரசிக்கிது.. கட்டில் பாடம் ருசிக்கிது.." இதழ் கடித்து அவள் நாணம் கொள்ள,

அவள் நாணம் ரசித்து இதழ் தேன் பருகியவன், "இந்த மாலை மயக்கம்தான்.. அதி கால வரைக்கும்தான்.."

அவன் கழுத்தைக் கட்டிக் கொண்டவள், "அன்பு கூட்டல் கணக்குத்தான்.. சொல்லி காட்டு எனக்குதான்.."
இன்பத்தில் திலைத்தவன் குதூகலமாகி "முதன் முதலா.. வித விதமா சுகமோ ஓ..ஓ.. ஓ.." கண் சொக்கி மயக்கம் கொண்டவனாக,
"நடு சாமத்தில சாமந்திப்பூ ஆள அசத்துது.. என் நெஞ்ச உசுப்புது.." பல்வேறு இன்பங்கள் பெற்று, நெஞ்சமெனும் மஞ்சத்தில் தன்னவளை கிடத்தி, மென்மையாக அவள் தலை வருடி நெற்றியில் முத்தமிட்ட ஆத்வி, அவள் முகம் முழுக்க இச் வைத்து இதழ் முற்றுகை இட்டான்.

இருவருக்குமே மூச்சி முட்டும் அளவிற்கு முத்தத்தில் திளைத்து, தங்களின் உச்சம் பெற்ற மகிழ்ச்சியை பகிர்ந்து, மூச்சி வாங்க பிரிந்து இருவரும் முகம் பார்க்க, அத்தனை கலைப்பிலும் இருவரது முகமும் மகிழ்ச்சியில் புதிய மலராக பூத்து கிடந்தது.

"கவிஇ.. நான் இப்ப எவ்ளோ ஹாப்பியா இருக்கேன்னு தெரியுமா, எல்லாம் உன்னால தான் டி.. ஒவ்வொரு நாளும் புது புது சுகத்தை கொடுத்து, புதுசு புதுசா என்ன திணறடிக்கிற டி.." என்றவனுக்கு மூச்சி வாங்கியது.

கணவனின் பேச்சில் பூரித்து போய் நாணம் கொண்ட கவி, சிறு சிறு அரும்புகளாக முளைக்கும் தாடி முடியை வருடி, "மாமா.." என்றாள் ஆசையாக.

"ம்ம்.."

"என்ன உங்களுக்கு புடிக்குமா?" ஏதோ ஒரு எதிர்பார்ப்பு அவள் குரலில்.

"இப்ப ஏன் டி இந்த கேள்வி.."

"ம்ச்.. சொல்லுங்க மாமா.."

"உண்மைய சொல்லவா? பொய் சொல்லவா?"

"முதல்ல பொய் அப்புறம் உண்மை.."

"பொய் சொல்லப் போனா உன்ன எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும் டி. நீ தான் என் ஆதி அந்தம் எல்லாம்.. பிகாஸ் ஐ டூ டூ டூ லவ் யூ பேபிஇ.." அவள் இதழ் கொய்ய, வெட்கம் கொண்டு தன் இதழை மீட்டுக் கொண்ட கவி,

"அப்போ உண்மை.." என்றாள் அவன் தேகத்தில் விரல் கோலமிட்டு.

"ஹ்ம்.. உண்மைய சொல்லப் போனா உன்ன எனக்கு கொஞ்சம் கூட பிடிக்காது டி, ஐ ஹேட் யூ வெறி வெறி மச்.." என்ற ஆத்வி அவள் முகம் சுணங்குவாள் என்று பார்த்தால், அப்போதும் நாணம் குறையாமல் சிரித்து மயக்கி,

"ஏன் என்ன பிடிக்காது.." என்றாள் கிசுகிசுப்பாக.

"ஏன் பிடிக்காதுனா என்ன டி அர்த்தம், உன்ன எனக்கு பிடிக்காது, இப்போ இல்ல சின்ன வயசுல இருந்தே உன்ன எனக்கு பிடிக்காது.." என்றவன் முகம் உர்ரென ஆகி விட்டது.

"அதான் ஏன்னு கேக்குறேன், ஒழுங்கா சொல்லுங்க, அப்டி என்னை பிடிக்காத அளவுக்கு நான் என்ன பண்ணேன்.." கணவன் முகத்தை தன்புறம் திருப்ப, அவள் கரத்தை தட்டி விட்டு படுக்கையில் இருந்து எழுந்தவன், நேராக சென்று கப்போர்டை திறப்பதை போர்வையை தன் மீது போர்த்தியபடி யோசனையாக கண்டாள் கவி.

சிறு அட்டை பெட்டி ஒன்றை எடுத்து வந்து மெத்தையில் வைத்து பிரிக்கவும், அதில் இருந்த உடைந்த பொருட்களை கண்டு புரியாமல் விழித்த கவி, "என்ன மாமா இதெல்லாம், குப்பைய பேக் பண்ணி வச்சிருக்கீங்க.." என்றவளை வெறியாக முறைத்த ஆத்வி,

"இது ஒன்னும் குப்பை இல்ல டி, நான் முதல் முதலா உருவாக்கின டாய் பைக்.. இதை நீயும் அந்த யாதவ் பயலும் சேந்து விளையாடுறேன்ற பேர்ல, மாடில இருந்து தூக்கிப் போட்டு உடைச்சி, என் மனசையும் சேத்தே உடைச்சிட்டிங்க..

அதுல இருந்து தான் உன்னை மட்டும் இல்ல, அந்த யாதவ் பயலையும் எனக்கு பிடிக்காம போச்சி.. அதிலும் நீ என்ன மாமான்னு கூப்பிடுறேன்னு, வாய்க்கு வந்ததையெல்லாம் சொல்லி வெறுப்பு ஏத்திடுவ..

ஏதோ இப்போ கொஞ்சம் அழகா ஆசையா ஒருவித சிலிர்ப்போட கூப்பிடும் போது, தானா பிடிச்சி அந்த வார்த்தை எனக்கு போதைய கொடுக்குது.." ஆத்வி சீரியஸாக சொல்லிக் கொண்டிருக்க, ஆரம்பத்தில் சுவாரிசியமாக கேட்க தொடங்கிய கவி, வந்த சிரிப்பை அடக்க முடியாமல் குப்பென சிரித்தவளை கண்டு கோவம் தான் வந்தது அவனுக்கு.

ஆசை ஆசையாக பார்த்து பார்த்து உருவாக்கிய பொம்மை பைக்கை, சிறுவயதில் விளையாடுகிறேன் என்ற பெயரில், ஆத்வி இல்லாத போது அவன் அறையில் நுழைந்து அதை எடுத்து விளையாடி உடைத்து விட்டனர் இருவரும். அதிலிருந்தே அவர்களை துளியும் பிடிக்காது அவனுக்கு, எந்நேரமும் இருவரையும் முறைத்தும், சான்ஸ் கிடைக்கும் போது நன்றாக அடித்துக் கொட்டிக் கொண்டும் இருப்பான்.

இப்போது அந்த பிளாஷ்பேக்கை சொல்லவும் தன்னவனின் சிறுபிள்ளை தனமான கோபம் கண்டு சிரிப்பு தான் வந்தது அவளுக்கு.

"அச்சோ மாமா, உங்களோட இந்த சின்னப் பிள்ளைத்தனமான கோவத்தை பாத்து எனக்கு அப்டியே உங்கள கடிச்சி திங்கனும் போல இருக்கு.. இப்டி ஒரு பின்பக்கத்துக்காக தான் நீங்க என்மேல முன்னல்லாம் கோவமா இருந்து இருக்கீங்கனு தெரிஞ்சி இருந்தா, உங்கள பாத்து கொஞ்சம் கூட பயந்து இருக்க மாட்டேன்..

அதுக்கு பதிலா கோவமா பாக்குற இந்த ஷார்ப் ஐஸ்க்கு, இப்டி மாறி மாறி முத்தம் குடுத்து கொஞ்சியே கோவத்தை தனிச்சி இருப்பேனே.." சொன்னதோடு நிறுத்தாமல் மாறி மாறி அவன் கண்களில் முத்தமிட, தன்னை மீறியும் விரிந்த இதழ் புன்னகையோடு தன்னவள் தரும் இச்சிகலை இன்பமாகப் பெற்றுக் கொண்ட ஆத்வி, அவள் கன்னம் பற்றி கன்னம் தேத்தவனாக,

"அப்போ பிடிக்கலைன்னு சொன்னா கிஸ் கிடைக்குமா பேபிஇ.." கண்கள் குளிர்ச்சி பெற்று பளிச்சென்று மின்னியது தன்னவளின் குளிர்ச்சியான முத்தத்தில்.

"ஹ்ம்.. கிடைக்குமே.. ஏன்னா உங்க பாணில பிடிக்கலைன்னு சொன்னா தான் நிறைய நிறைய பிடிச்சி இருக்குனு அர்த்தமாச்சே.. அது கூட தெரியாம பழி வாங்குராறாம், நீங்க தான் ஆன்ட்டி ஹீரோன்னு வெளிய சொல்லிடாதீங்க என் மானம் தான் காத்துல போகும்.." தலையில் அடித்துக் கொண்டவளை முறைக்க முயன்று தோற்றவன்,

"ஏன் டி என்ன இப்டி அநியாயத்துக்கும் டேமேஜ் பண்ற, நானும் ஆன்ட்டிஹீரோ தான் டி.." பச்சை பிள்ளையாக சொன்ன அழகனை அள்ளி அணைத்துக் கொண்டாடித் தீர்த்த அவன் மனைவியோ,

"நம்புறேன் நம்புறேன்.. ஏன்னா ஒவ்வொரு அடியும் இடியா இறங்கும் போதும், கோவத்துல இந்த முகம் சிவக்கும் போதும் பாக்கவே எனக்கு கால் கையெல்லாம் நடுங்கிப் போகுமே.." கன்னத்தில் கை வைத்து பாவமாக சொல்லவும், தன்னை மீறி சிரித்தவனை ரசித்துப் பார்த்தள் அவன் மனையால்.

மகிழ்ச்சியாக நாட்கள் செல்ல, உத்திரபிரதேசத்தில் நடக்கும் ரைடுக்கு பரபரப்பாக கிளம்பிக் கொண்டிருந்த கணவனை கண்கலங்கிய நிலையில் பார்த்திருந்த மனைவியை காண கஷ்டமாக இருந்தாலும், தன் ஆசையை யாருக்காகவும் விட்டுக் கொடுக்க விரும்பவில்லை அவன்.

"என்ன விடவும், பிறக்கப் போற நம்ம குழந்தையை விடவும் அவ்ளோ முக்கியமா மாமா இந்த ரெய்டு உங்களுக்கு.." பல நாள் ஆதங்கம் கண்ணீரோடு வெளிவந்தது.

"ஏய்.. இப்ப எதுக்கு டி குழந்தைய வச்சி எமோஷ்னலா பேசுற, நான் எப்ப சொன்னேன் எனக்கு நீயும் நம்ம குழந்தையும் முக்கியம் இல்லைன்னு.. அதே நேரம் ரெய்டும் எனக்கு முக்கியம் தான்..

உன்கிட்ட மறுபடியும் சொல்றேன், இந்த ஒரு விஷயத்துல மட்டும் நீ தலையிடாம இரு, அதுதான் உனக்கு நல்லது.. இல்ல திரும்ப திரும்ப அழுது சிம்பத்தி கிரியேட் பண்ண நினச்ச, பழைய ஆத்விய தான் நீ பார்க்க வேண்டி வரும்.." சற்று கடிமை கூட்டி மனைவியிடம் கர்ஜித்த ஆத்வி, தன் வேலையில் முனைப்பாக இருந்தான், அவள் புறம் திரும்பியும் பாராமல்.

ஒரு வார கால பயணம் மேற்கொள்ள எப்போதும் போல் மனைவி மற்றும் தந்தையை தவிக்க விட்டவன், பைக்கை உத்திரபிரதேசத்திற்கு பார்சல் செய்து விட்டு காரை எடுத்துக் கொண்டு சீறிப்பாய்ந்த ஆத்வியின் மனமோ மனைவியிடம் சிக்கி தவித்து, அவள் அழுத முகம் நினைவில் வந்து இதயம் ரணப்பட்டு போனது.

தனிமையில் அழுது கரைந்த மருமகளை காண வந்த ஆதி, மென்மையாக அவள் தலை வருடிட, ஆறுதலாக அவன் நெஞ்சில் சாய்ந்து அழுத கவி,

"ரெயிடு விஷயத்துல என்ன பேசவே கூடாதுனு ஒரே முடிவா சொல்லிட்டு போய்ட்டார் மாமா, எனக்கு பயமா இருக்கு..
கண்ணுக்கு தெரிஞ்ச எதிரிய விட தெரியாத எதிரிங்க தான் அதிகம் இருக்காங்க, அவர்க்கு ஏதாவது ஒன்னு ஆச்சின்னா நான் என்ன ஆவேன்னு அவர் கொஞ்சம் கூட நினைச்சி பாக்கல மாமா..

உயிருக்கு உத்தரவாதம் இல்லாத இந்த விளையாட்டுல அப்டி என்ன இருக்குனு என்னை இப்டி தவிக்க விட்டு போயிருக்காரு.." தேம்பிய கவிக்கு என்ன ஆறுதல் சொல்வதென்று புரியாமல் மௌனம் காத்த ஆதி,

"இந்த ஒரு விஷயத்தால மட்டும் தான் நானும் ஒன்னும் செய்ய முடியாத நிலையில தவிச்சு போயிருக்கேன் கவி.. எந்த அளவுக்கு ஆத்வி பாசத்தை காட்டுவானோ, அதே அளவுக்கு அவன் பிடிவாதத்தையும் விட்டுக் கொடுக்க மாட்டான்..

எப்டி போனானோ அதே மாதிரி திரும்பி வருவான், நீ அவனை நினைச்சி கவலை படாம இரு, அந்த ராஸ்கல் வந்ததும் திரும்பவும் உனக்காக நான் அவன்ட்ட பேசுறேன்.."

இங்கு ஆதி, கவிக்கு தைரியம் சொல்லிக் கொண்டிருக்க,
அங்கு அவன் மகன் நெஞ்சை பதற வைக்கும் மோட்டோகிராஸ் ஸ்டன்ட்ஸ் சாகசம் புரிந்து, பைக்கை பறக்க விட்டுக்கொண்டிருந்தான்.

நெருக்க நெருக்கமாக பல மோட்டார் வாகனங்கள் ஆத்வியை சுற்றி வளைத்து உர்.. உர்ரென உருமி, அவனை மொத்தமாக நசுக்கி தூக்குவதில் முனைப்பாக வருவதையெல்லாம் ஹெல்மெட்டின் வழியே கூரிய விழிகளால் கண்டு, பைக்கை வளைத்து வளைத்து ஒவ்வொரு வாகனத்தையும் தரையில் சிதற விட்டவன்,

ஒற்றை மோட்டார் வாகனம் மட்டும் ஆத்விக்கே போக்கு காட்டி, அவனை வெறி கொண்டு இடித்து மோதியதில் வானை தொடும் தூரம் வரை பைக்கும் அவனும் தனி தனியாக பறந்து, மீண்டும் காற்றில் பல்ட்டி அடித்து கீழே தரையில் விழுந்து சுக்கலாக மாறப் போன பைக்கை காப்பாற்றி, கம்பீரமான ராஜா குதிரையில் பறந்து சவாரி செல்வதை போல, காற்றில் புயல் வேகத்தில் சீறி வட்டமடித்து ஒற்றை கால் ஊனி பைக்கை நிறுத்தி, ஹெல்மெட்டை கழட்டி தலையை சிலுப்பி முடியை கோதி விட்ட ஸ்டைலே தனி தான்.

அவனை பின் தொடர்ந்து வந்தவனும் பலத்த சத்தத்தோடு பைக்கை உருமி புகை விட்டு நிறுத்தியவன், தானும் ஹெல்மெட்டை கழட்டி ஆத்வியை கண்டவனது பார்வையில், அவனை கொன்றே ஆக வேண்டும் என்ற வெறி அப்பட்டமாக தெரிந்தது.

அவனை யாரென அறியாத ஆத்வி, குழப்ப ரேகையில் புருவம் உயர்த்தி பார்க்க,

"அடேய்.. உன்ன இன்னைக்கு கொல்லாம விட மாட்டேன் டா.. என் அக்கா காதலிச்சவன உன் அப்பங்காரன் கொன்னான்.. நீ அவன் புள்ளைய அநியாயமா கொன்னுட்டியே டா.."

கத்தியபடியே வெறி பொங்க தடதடவென ஓடி வந்து, ஆத்வியின் கழுத்தை பிடித்ததில் இருவருமாக அந்திரத்தில் பறக்க, அவன் கையை பிடித்து ஒரு நொடி தடுமாறிய ஆத்வி, உடனே சுதாரித்து ஷூ காலை அழுத்தமாக தரையில் பதித்து விழாமல் நின்றவன், அவன் கையை தட்டி விட்டு அவன் கழுத்தை மின்னல் வேகத்தில் ஓங்கிப் பிடித்திருந்தான்.

"யாரு டா நீ, புதுசா வந்து புது புது கதைய சொல்லி உளறிட்டு இருக்க.." பற்களை கடித்து அவன் கழுத்தை இருக்கினான் ஆத்வி.

"நான் ஒன்னும் புதுசா உளறல ஆத்வி, தீபக் மகேந்திரன் நியாபகம் இருக்கா.." என்றதும் ஆத்வியின் முகம் சுருங்க அவனை பார்த்தவன் கரம் சற்றே இளகியது.

"அவனை அநியாயமா கொன்னியே அவனோட மாமா டா நான்.. அவனுக்காக தான் நானும் என் அக்காவும் வாழ்ந்துட்டு இருந்தோம், ஆனா நீ அவனை என்ன பண்ண.." அவன் ஆவேசமாக சிலுப்பிக் கொண்டு கத்த,

நிதானமாக அவனை கண்ட ஆத்வி, "நியாயமா பாத்தா அவனை இந்த அளவுக்கு பழி வெறியோட வளத்த உன்னையும், உன் அக்காளையும் தான் முதல்ல கொன்னு இருக்கனும்.. ஆனா என்ன பண்ண பலியாடு தானா வந்து சிக்கிருச்சி..

ஏற்கனவே என் பாதி குடும்பத்தை தலைமுழுகிட்டு உக்காந்து இருக்கேன், உன் சொக்கா மவன் மீதி இருக்க என் குடும்பத்தை கொல்ல வரும் போது கைகட்டி தலை குனிஞ்சி நின்னு, பாத்து பத்திரமா என் குடும்பத்துல உள்ள எல்லாரையும் துடிக்க துடிக்க கொன்னுட்டு, என்னையும் சேத்து கொன்னுட்டு போ ராசான்னு, வழி விட்டு ஒதுங்கி நிப்பேன்னு நெனச்சியா.." கண்கள் சிவக்க கர்ஜனை செய்தவனுக்கு இன்னும் கூட தீபக்கை கொன்ற வெறி அடங்கவில்லை போலும்.

கவி வீட்டை விட்டு சென்றதில் இருந்து எந்த வேலையிலும் கவனம் செலுத்த முடியாமல் உடலும் உள்ளமும் சோர்ந்து போன ஆத்வி, அன்னை மடி தேடி ஓடி வந்தவனை ஆதரவாக அரவணைத்துக் கொண்ட மித்ராக்கும், மகனின் நிலை கண்டு வருத்தமாகிப் போனது.

ஆதி, விக்ரம் இருவருக்கும் கூட சோர்ந்து வாடி கிடந்த அவன் முகம் கண்டு வருத்தமாகி போயிட,

"ஏங்க, நம்ம பையன இப்டி பாக்க எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு, கவியும் எங்கே போனா என்ன ஆனான்னு ஒரு தகவலும் கிடைக்கல.. யாரு கண்ணு பட்டுச்சோ நல்லா இருந்த பசங்க வாழ்க்கைல இப்டி ஒரு சோதனை வந்து, அவங்க வாழ்க்கைய அலைக்கழைக்குது.. பேசாம நம்ம குடும்பமா சேந்து குலதெய்வக் கோவிலுக்கு போயிட்டு வந்தா என்ன..

யாதவ் கல்யாணத்துக்கு முன்னாடி கூட நம்ம குலதெய்வக் கோவிலுக்கு போயிட்டு வந்த போது, அத்தனை வருஷம் கோமால இருந்த மாமா கூட கண் விழிச்சிட்டாரே.. இப்போ திரும்ப போயிட்டு வரும் போது கவி திரும்ப வந்திடுவான்னு தோணுது, போயிட்டு வருவோமா.."

மித்ராவின் கண்ணீர் கண்டு, அவளது திருப்திக்காக ஒற்றுக்கொண்டான் ஆதி.

வேலையாட்களிடம் ஸ்வாமிக்கு அலங்கரிக்க பூக்கள் கொண்டு வர கூறி இருக்க, பூக்கூடையில் பூவோடு பூவாக மறைத்து வைத்து கொடுத்து சென்றதோ, உயிரையும் உடலையும் தடம் தெரியாமல் சிதறடிக்கும் டைம் பாம்.
 

Author: Indhu Novels
Article Title: அத்தியாயம் 72
Source URL: Indhu Novels-https://indhunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top