Hello! It seems that you are using AdBlock - some functions may not be available. Please add us as exceptions. Thank you for understanding!
  • வணக்கம் 🙏🏻 இந்து நாவல்ஸ் தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்
  • இந்து நாவால்ஸ் தளத்தில் எழுத விரும்புவோர், indhunovel@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு செய்தி அனுப்பவும். கற்பனைகளை காவியமாக்குங்கள் ✍🏻💖

அத்தியாயம் 8

Administrator
Staff member
Messages
268
Reaction score
215
Points
63
அத்தியாயம் 8

தன் வாயில் இருந்த தண்ணீரை மொத்தமாக அவன் வாய்க்குள், முல்லை செலுத்திக் கொண்டு இருக்க, அரவிந்த் அவளை என்னமாதிரியான உணர்வில் ஆட்கொண்டு பார்க்கிறான் என்றே புரியாமல், அதிர்ந்து அவள் கொடுக்கும் நீரை மெதுவாக உள் வாங்கி பருகிக் கொண்டு இருந்தான்..

அவள் வாய்க்குள் இருந்த நீரை அரவிந்த் பருகி முடித்ததும், அவனிடம் இருந்து மெதுவாக பிரிந்த முல்லை, அவன் முகம் கான சங்கடமாக உணர்ந்தவளாக "அ.அது உ.உங்களுக்கு திடிர்னு புரை ஏறுனதும், எ.என்ன பண்றதுன்னு தெரியாம தா".. அவள் ஒவ்வொரு வார்த்தையாக கோர்வையாக இழுத்து, குனிந்த தலை நிமிறாமல் தடுமாறி போனாள்.

அரவிந்த் எதுவும் சொல்லாமல், முகத்தில் எந்த உணர்வுகளும் காட்டாமல்,, அவளையே பார்த்துக் கொண்டு இருக்கவும் இன்னும் அவன் கோவமாக தான் உள்ளான் என நினைத்தவளோ,

"ச.சார்.. ப்ளீஸ் என்ன மன்னிச்சிடுங்க.. நான் பாக்காம ஏதோ நினைப்புல காரம் இருக்குறது தெரியாம இட்லிய கொடுத்துட்டேன்.. சத்தியமா நான் வேணுன்னு பண்ணல சார்" முல்லை பயத்துடன் படபடப்பாக கெஞ்சிட,
அவளின் பயந்து போன முகத்தை பார்த்து.. லேசாக அரவிந்தின் இதழ் புன்னகையில் விரிந்ததோ!

அவன் புன்னகை கண்டவளோ "அப்பாடா சிரிச்சிட்டீங்களா" சிறு பெண்ணை போல் கை தட்டி தானும் புன்னகைத்தவள் "சார்.. அப்போ என் மேல உங்களுக்கு கோவம் இல்லையே" என்றாள் குஷியாக.

முல்லை அப்படி கேட்டதும் சட்டென புன்னகையை மறைத்தவன்.. "இப்ப அத தெரிஞ்சிகிட்டு என்ன பண்ண போற".. அரவிந்தின் இறுகிய குரலில் மீண்டும் பால் முகம் சோகமாக மாறியது.

"இ.இல்ல அது சும்மாதான் கேட்டேன்,. இந்தாங்க இதையும் சாப்ட்டு மாத்திரை போட்டுடுங்க".. என்று மீண்டும் மீதம் இருந்த இட்லியை காரச்சட்னியில் தொடாமல் பார்த்து ஊட்டி முடித்தாள்.

அதன் பிறகு அரவிந்தும் அவளிடம் எதுவும் பேசவில்லை, முல்லையும் அவனிடம் வாய் திறக்கவில்லை... மருந்தை அவனுக்கு கொடுத்து, அவளும் உண்டு முடித்தவளாக, ஓரமாக இருந்த இருக்கையில் அமர்ந்து சுவரில் தலை சாய்த்துக் கொண்டே சிறிது நேரத்தில் உறங்கி போனாள்.

அதுவரை அவள் செய்வதை எல்லாம் அமைதியாக பார்த்து கொண்டு இருந்த அரவிந்த், "முல்லைமலர்" என அவள் பெயரை ஒரு முறை சொல்லிப் பார்த்தவனாக எதையோ நினைத்து விரக்தியாக சிரித்து விட்டு அவளை பார்த்தபடியே உறக்கத்தை தழுவினான்.

மேலும் இரண்டு நாட்கள் கடந்த நிலையில், முல்லை அவனுடன் இருந்து நன்றாக பார்த்துக் கொண்டால்..அரவிந்துக்கு உணவு மற்றும் மருந்து கொடுப்பது, பாத்ரூம் மெதுவாக அழைத்து செல்வது என இந்த வேலையை முல்லையே பார்த்துக் கொண்டால்.. அவனுக்கு மேலுக்கு துடைத்து சட்டை போட்டு செல்வது அங்கிருக்கும் வார்டு பாய் பார்த்துக் கொள்ள, நிம்மதியாக இருந்தது முல்லைக்கு..

பாட்டி வீட்டுக்கு சென்று வேலையாட்களிடம், அரவிந்த் முல்லைக்கு தேவையான, துணிகள், வேளா வேளைக்கு உணவு, என அனுப்பு வைத்து கொண்டு இருந்தார்..

மருத்துவர் அரவிந்தை பரிசோதித்து, மருத்துந்தை மட்டும் சரியாக எடுக்க சொல்லி, காயம் ஆறும் வரை தண்ணீர் படாமல் பார்த்துக் கொள்ளுமாறு கூறி..டிஸ்சார்ஜ் செய்து விட,
பாட்டி கண்டிப்புடன், முல்லையை அவனுடன் வீட்டுக்கு வந்தாக வேண்டும் என்றதில், அவர் பேச்சை தட்ட முடியாத நிலையில் வேறு வழி இல்லாமல்.. பாட்டி கார் அனுப்பி இருக்க.. அதில் அரவிந்தை அமரவைத்தவளாக, தானும் அவன் அருகில் அமர்ந்துக் கொள்ள.. டிரைவர் காரை கிளப்பினார், அரவிந்த் வீடு நோக்கி..

அரவிந்த் ஒரு வார்த்தைக் கூட அவளை, "வா" என்றும் அழைக்கவில்லை, அதே சமயம் "வராதே" என்றும் சொல்லவில்லை..
பெரிய கேட்டை காவலாலி திறந்து விட.. ஓரளவு சிறிய மளிகை போன்ற வீட்டின் முன் கார் நின்றது..

வீல் சேரில் அமர்ந்திருந்த பாட்டி வாயிலில் காத்திருக்க, அவர் அருகில் பணிப்பெண் ஒருத்தி கையில் ஆரத்தி தட்டுடன் நின்றிருந்தால்.

காரில் இருந்து இருங்கி, அரவிந்த் முல்லை இருவரும் வர... அவர்களை பாட்டி சேர்ந்து நிற்க சொன்னதும்,
"பாட்டி,, நான் எதுக்கு, இவருக்கு மட்டும் ஆரத்தி சுத்துங்களேம்", முல்லை தயங்கியவாறு சொல்ல,
"பாட்டி சொன்னா கேக்கணும், ஷு.. அமைதியா என் பேரன் பக்கத்துல நில்லு".. பாட்டி வாயில் விரல் வைத்து அதட்டிட,
சரி என அரவிந்த் அருகில் அவள் நிற்கவும், இருவருக்குமாக ஆரத்தி எடுத்து உள்ளே அனுப்பி வைத்தனர்..

அரவிந்த் உள்ளே வந்தது தான் தாமதம்,, "டாடிஇஇ".. என மூன்று வயது குட்டி வாண்டு வந்து அவன் கால்களை கட்டிக் கொள்ளவும், மென்னகை புரிந்தவன்.

"ஓஹ்.. மை ஸ்வீட் பேபி,, எப்டி இருக்கீங்க, பாட்டிய, டிஸ்டர்ப் பண்ணாம சமத்து பொண்ணா இருந்திங்களா"... அரவிந்த் அந்த குழந்தையின் தலை வருடி அன்பாக கேட்டான்.

"ஹ்ம்.. டாதி.. ஆனா நா உன்ன தா தொம்ப (ரொம்ப) மிச் பண்ண.." மழலை மொழியில் கொஞ்சியது குழந்தை.

"அப்டியா ஸ்வீட்டி, டாடிக்கு அர்ஜென்ட் ஒர்க் சோ அதான் போக வேண்டியதா போச்சி.. இனி எந்த ஒர்க்கும் இல்ல, என் ஸ்வீட்டி கூட தான் ஜாலியா என்ஜாய் பன்ன போறேன் ஓகேயா" அரவிந்த் குழந்தையை கொஞ்சி சமாதானம் செய்வதில்.. அவனுடன் ஒருத்தி வந்ததையே மறந்து போனான்..

இதை எல்லாம் கண்ட முல்லையோ, அரவிந்தை "டாடி" என்று அழைத்த குழந்தையும், அந்த குழந்தையை புன்னகை முகமாக கொஞ்சிக் கொண்டு இருக்கும் அவனையும்.. மாறி மாறி கண்கள் விரிய அதிர்ச்சியாக பார்த்துக் கொண்டு இருக்க,

அவள் அதிர்ச்சியை கலக்கமாக பார்த்துக் கொண்டு இருந்த பாட்டி நகர்ந்து அவளிடம் வந்தவராக, அவள் கை தொட்டதும், அதிர்ச்சி மாறாமல் அவரிடம் திரும்பியவள் கண்ணில் வலியை அப்பட்டமாக காட்டி.. "ஏன் பாட்டி,," என்பது போல் பார்த்தாள்.

"அம்மாடி, நான் உனக்கு எல்லாத்தையும் தெளிவா சொல்றேன்மா,, நீயா எதுவும் தப்பா புரிஞ்சிக்காதமா"

"இல்ல பாட்டி, நீங்க எனக்கு புரிய வைக்கிற அளவுக்கு, எனக்கு தெரிஞ்சிக்க எந்த உரிமையும் கிடையாது.. அதனால நீங்க எனக்கு எதுவும் சொல்ல வேணாம் பாட்டி..
நீங்களும் அவரும் எனக்கு ரொம்ப பெரிய உதவி செஞ்சி இருக்கீங்க.... ஏதோ சந்தர்ப்ப சூழ்நிலையால அவரு என் கழுத்துல தாலி கட்ற மாதிரி ஆகி போச்சி.. அதை நானும் பெருசா எடுத்துக்கல,, நீங்களும் அங்க நடந்தத அப்டியே மறந்துடுங்க பாட்டி, அதுதான் எல்லாருக்கும் நல்லது.. நீங்க கூப்பிட்டீங்களேன்னு உங்க பேச்சை என்னால மீற முடியாம இங்க வந்தேன், அவளோ தான் பாட்டி,, நான் கெளம்புறேன்".. என்றவளாக முல்லை வெளியேறப் போக,

"அப்ப நாங்க உனக்கு பண்ண உதவிக்கு,, இதுதான் நீ பண்றனு சொன்ன கைமாறா".. பாட்டியின் குரல் தொய்வாக ஒலித்தது.

அப்படியே ஆணி அடித்ததை போல் நின்று பாட்டியை முல்லை திரும்பிப் பார்க்க,
இத்தனை நேரம் முல்லை பேசியதை எல்லாம் குழந்தையை மடியில் அமர்த்திக் கொண்டே கேட்ட அரவிந்த்,, எதையோ நினைத்து இதழ் வளைத்து எல்லாளாக சிரித்துக் கொண்டான்..

மழை..
 

Author: Indhu Novels
Article Title: அத்தியாயம் 8
Source URL: Indhu Novels-https://indhunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top