அத்தியாயம் 26
மருத்துவமனை ஐ.சி.யூ-வின் வெளியே நின்றுகொண்டிருந்த ரதியின் கண்கள் கதவை விட்டு அகலவே இல்லை. உள்ளே நடந்துகொண்டிருக்கும் அவசரக் குரல்கள், இயந்திரங்களின் அலாரங்கள், மருத்துவர் குரல்கள் எல்லாமே அவளின் இருதயத்தை நொறுக்கிக் கொண்டிருந்தன.
“தேவ்… நீ போகக்கூடாது. உனக்காக நான் காத்துகிட்டு இருக்கேன், திரும்பி வா…” என மனதுக்குள் மந்திரம் போல கூறிக்கொண்டே இருந்தாள் ரதி.
அந்தக் கணத்தில், உள்ளே இருந்த ராகவன் அவசரமாக வெளியில் வந்து
“மருத்துவர் இன்னும் போராடிக்கொண்டிருக்கிறார். பிளீஸ் நீ அமைதியா இரு! ரதி ” அவள் கையை பிடித்து ஆறுதல் கூறினான்.
ஆனால் அமைதி? அது ரதிக்கு சாத்தியமா?
அவள் மார்பின் மீது தாலியை வலியாய் அழுத்திக்கொண்டு நின்றாள். வயிற்றில் இருந்த குழந்தை அசைந்தபடி தன் உயிர் இருப்பை உணர்த்தியது. அந்த உணர்வு தான் ரதிக்கு இன்னும் நம்பிக்கை கொடுத்தது.
---
ஐ.சி.யூ-விற்குள்…
மருத்துவர் குழுவினர் தேவின் மார்பில் மின்சாரம் குவித்துக் கொண்டிருந்தனர்.
“ஒன், டூ, த்ரி… கிளியர்!”
அவனது உடல் திடீரென மேலே எழுந்தது. கருவியின் பீப் ஒலி இன்னும் சீராகவில்லை.
“சற்று சற்றே உயிர்துடிப்பு இருக்கிறது. இன்னும் முயற்சி செய்யலாம்!” என்று பிரதம மருத்துவர் குரல் கொடுத்தார்.
---
வெளியே நின்ற ரதிக்கு ஒவ்வொரு நொடியும் ஒரு யுகமாக இருந்தது. கண்களில் இருந்து கண்ணீர் தாரை தாரை யாக வழிந்துகொண்டிருந்தது.
ராகவனோ அவள் கண்ணீரை துடைத்து விட்டு " அழாத ரதிமா, அவனுக்கு ஒன்னும் ஆகாது. சீக்கிரமே எழுந்து அம்மு, அப்படினு கூப்பிடுவான் பாரு " என பெண் அவளை அவன் தோளில் சாய்த்து ஆறுதல் கூறி கொண்டு இருந்தான்.
அப்போதே திடீரென கதவுகள் திறந்தன.
முதன்மை மருத்துவர் வெளியில் வந்தார். முகத்தில் வியர்வை சொட்டினாலும் கண்களில் ஒரு நம்பிக்கை ஒளி இருந்தது.
“ரதி… தேவ் உயிரோட இருக்கான். ஆனால் இன்னும் ஆபத்து குறையவில்லை. அவனுக்கு உன் குரல், உன் பாசம், உன் நம்பிக்கை தான் தேவை. நீ உள்ளே போய் பேசணும். உன் காதல் குரல் அவனுக்கு மருந்து.”
ரதியின் கண்கள் விரிந்தன.
“நான் உள்ளே போகலாமா டாக்டர்?” என்று கேட்டாள்.
“ஆம். ஆனால் மிக அமைதியா இரு. அவனுக்கு நீ பேசுற ஒவ்வொரு வார்த்தையும் முக்கியம்.”
---
மெதுவாக உள்ளே நுழைந்த ரதி, தேவின் படுக்கைக்கு அருகே வந்தாள். அவனின் முகம் இன்னும் பலவீனத்தோடு இருந்தாலும் கண் மூடுகளில் சிறிய அசைவு தெரிந்தது. அவள் அவனது கையை பிடித்து மெதுவாக பேசினாள்.
“தேவ்… நான் உன் அம்மு. நீ கேக்கறியா? உன் பொண்ணு உன் கையைத் தேடிக்கிட்டு என் வயிற்றுக்குள் உதைக்குது. நீ அவளோட அப்பா டா. நீ அவளை பாத்தே ஆகணும். நீ இல்லாம எங்களால வாழ முடியாது. என்னால முடியாது.” என
கண்ணீர் வழிந்தவாறு அவள் அவன் கையை தன் கன்னத்தில் அழுத்தினாள்.
“நான் ஒவ்வொரு நாளும் உன்னோட வருகைக்காக காத்திருந்தேன். நீ எப்பவும் எனக்கு வாக்குறுதி கொடுத்தியே—‘நான் உன்னை ஒருபோதும் தனியா விடமாட்டேன்’னு. அந்த வாக்குறுதியை மறந்துடாதே தேவ். என் கையை விடாதே.”
அந்தச் சொல்லின் மத்தியில் தேவின் விரல்கள் சிறிது அசைந்தன. ரதியின் உள்ளம் அதிர்ந்தது.
“டாக்டர்! அவன் கையை அசைக்கிறான்!” என்று அவள் மகிழ்ச்சியுடன் சொன்னாள்.
மருத்துவர் பார்த்து, “ஆம், இது நல்ல அறிகுறி. அவன் நம்ம குரலுக்கு பதில் தர ஆரம்பிச்சிருக்கான். சீக்கிரமே கண்ணு முழிச்சிடுவான் ” என்றார்.
---
அவள் இன்னும் அருகில் சென்று தேவ்வின் நெற்றியில் முத்தமிட்டாள்.
“தேவ்… நீ உன் அம்முவை விட்டுப் போக முடியாது. உனக்காக நாங்க வெயிட் பண்றோம், ப்ளீஸ் திரும்பிவா.” என கூற
சில நொடிகள் அமைதி நிலவியது. பின்னர் இயந்திரத்தின் பீப் ஒலி சீராகியது. தேவின் மூச்சு மெதுவாக வழக்கம்போலத் துடிக்க ஆரம்பித்தது.
மருத்துவர், “அவன் உயிர்க்குப் புதிய உயிர் வந்திருக்கிறது. நீ தான் காரணம், ரதி. நீ தொடர்ந்து பேசிக்கொண்டு இரு. அவன் திரும்ப வருவான்,” என்றார்.
ரதியின் கண்களில் மகிழ்ச்சிக் கண்ணீர் பொங்கியது.
---
அந்த இரவு முழுவதும், ரதி தேவின் அருகே இருந்தாள். அவள் அவனிடம் பழைய நினைவுகளைப் பகிர்ந்தாள்—அவர்கள் முதல் சந்திப்பு, முதல் சண்டை, முதல் காதல் வார்த்தை, அவர்கள் திருமண நாள். ஒவ்வொன்றையும் பேசிக்கொண்டே அவள் நம்பிக்கையுடன் அவனை வாழ வைக்க போராடினாள்.
வயிற்றில் இருந்த குழந்தை அவளுக்கு சக்தி தந்தது.
“பாரு தேவ்… உன் பொண்ணு இப்பவும் உதைக்கிறாள். அவளுக்கு தந்தை தேவை. நீங்க மூணு பேரும் சேர்ந்தது என் உலகம். நான் தனியா இருக்க முடியாது.” என அப்படியே தேவ்வின் அருகில் படுத்து கொண்டு அவன் நெஞ்சில் தலை சாய்த்து உறங்கினாள்.
---
காலை ஒளி மருத்துவமனையின் சாளரங்களில் ஊடுருவி வந்தபோது, தேவின் முகத்தில் சிறிய அமைதி தெரிந்தது. அவனது கண்ணிமைகள் மெதுவாக அசைந்தன.
ரதி அவன் கையை வலியாகப் பிடித்து, “தேவ்! நீ கேக்குறியா? நான் தான் உன் அம்மு …” என கண்ணீரோடு குரல் கொடுத்தாள்.
சில நொடிகள் கழித்து, தேவின் உதடுகள் மிகவும் மெதுவாக அசைந்தன.
“ அம்மு ” என்ற சத்தமற்ற சொல் அவள் காதில் விழுந்தது.
அந்த ஒரு வார்த்தை ரதிக்கு உலகையே மீண்டும் கொடுத்தது.
அவள் அவனை மார்போடு அணைத்துக்கொண்டு அழுதாள்.
“தேவ்… என் தேவ்! நீ திரும்பி வந்துட்டே!” என கூற
பின் அவனை விட்டு விலகி சென்று மருத்துவரை அழைத்து வந்தாள். மருத்துவரும் தேவ்வை பரிசோதனை செய்து விட்டு ரதியை நோக்கி புன்னகையுடன், “இது நான் எதிர்பாக்காத அதிசியம் ரதி, தேவ் உடல் நிலையில நல்ல முன்னேற்றம் இருக்கு . இதுக்கு உன் காதல் தான் காரணம் அது தான் அவனை உயிரோட திரும்பக் கொண்டுவந்தது, ரதி.” என்றார்.
ரதியின் உள்ளம் மகிழ்ச்சியால் நனைந்தது.
இப்போது அவள் நிச்சயம் அறிந்திருந்தாள்—
அவளின் காதல் தேவன் உயிரோடு அவளது பக்கத்தில் மீண்டும் நடப்பான் என்று.....
தொடரும்....
மருத்துவமனை ஐ.சி.யூ-வின் வெளியே நின்றுகொண்டிருந்த ரதியின் கண்கள் கதவை விட்டு அகலவே இல்லை. உள்ளே நடந்துகொண்டிருக்கும் அவசரக் குரல்கள், இயந்திரங்களின் அலாரங்கள், மருத்துவர் குரல்கள் எல்லாமே அவளின் இருதயத்தை நொறுக்கிக் கொண்டிருந்தன.
“தேவ்… நீ போகக்கூடாது. உனக்காக நான் காத்துகிட்டு இருக்கேன், திரும்பி வா…” என மனதுக்குள் மந்திரம் போல கூறிக்கொண்டே இருந்தாள் ரதி.
அந்தக் கணத்தில், உள்ளே இருந்த ராகவன் அவசரமாக வெளியில் வந்து
“மருத்துவர் இன்னும் போராடிக்கொண்டிருக்கிறார். பிளீஸ் நீ அமைதியா இரு! ரதி ” அவள் கையை பிடித்து ஆறுதல் கூறினான்.
ஆனால் அமைதி? அது ரதிக்கு சாத்தியமா?
அவள் மார்பின் மீது தாலியை வலியாய் அழுத்திக்கொண்டு நின்றாள். வயிற்றில் இருந்த குழந்தை அசைந்தபடி தன் உயிர் இருப்பை உணர்த்தியது. அந்த உணர்வு தான் ரதிக்கு இன்னும் நம்பிக்கை கொடுத்தது.
---
ஐ.சி.யூ-விற்குள்…
மருத்துவர் குழுவினர் தேவின் மார்பில் மின்சாரம் குவித்துக் கொண்டிருந்தனர்.
“ஒன், டூ, த்ரி… கிளியர்!”
அவனது உடல் திடீரென மேலே எழுந்தது. கருவியின் பீப் ஒலி இன்னும் சீராகவில்லை.
“சற்று சற்றே உயிர்துடிப்பு இருக்கிறது. இன்னும் முயற்சி செய்யலாம்!” என்று பிரதம மருத்துவர் குரல் கொடுத்தார்.
---
வெளியே நின்ற ரதிக்கு ஒவ்வொரு நொடியும் ஒரு யுகமாக இருந்தது. கண்களில் இருந்து கண்ணீர் தாரை தாரை யாக வழிந்துகொண்டிருந்தது.
ராகவனோ அவள் கண்ணீரை துடைத்து விட்டு " அழாத ரதிமா, அவனுக்கு ஒன்னும் ஆகாது. சீக்கிரமே எழுந்து அம்மு, அப்படினு கூப்பிடுவான் பாரு " என பெண் அவளை அவன் தோளில் சாய்த்து ஆறுதல் கூறி கொண்டு இருந்தான்.
அப்போதே திடீரென கதவுகள் திறந்தன.
முதன்மை மருத்துவர் வெளியில் வந்தார். முகத்தில் வியர்வை சொட்டினாலும் கண்களில் ஒரு நம்பிக்கை ஒளி இருந்தது.
“ரதி… தேவ் உயிரோட இருக்கான். ஆனால் இன்னும் ஆபத்து குறையவில்லை. அவனுக்கு உன் குரல், உன் பாசம், உன் நம்பிக்கை தான் தேவை. நீ உள்ளே போய் பேசணும். உன் காதல் குரல் அவனுக்கு மருந்து.”
ரதியின் கண்கள் விரிந்தன.
“நான் உள்ளே போகலாமா டாக்டர்?” என்று கேட்டாள்.
“ஆம். ஆனால் மிக அமைதியா இரு. அவனுக்கு நீ பேசுற ஒவ்வொரு வார்த்தையும் முக்கியம்.”
---
மெதுவாக உள்ளே நுழைந்த ரதி, தேவின் படுக்கைக்கு அருகே வந்தாள். அவனின் முகம் இன்னும் பலவீனத்தோடு இருந்தாலும் கண் மூடுகளில் சிறிய அசைவு தெரிந்தது. அவள் அவனது கையை பிடித்து மெதுவாக பேசினாள்.
“தேவ்… நான் உன் அம்மு. நீ கேக்கறியா? உன் பொண்ணு உன் கையைத் தேடிக்கிட்டு என் வயிற்றுக்குள் உதைக்குது. நீ அவளோட அப்பா டா. நீ அவளை பாத்தே ஆகணும். நீ இல்லாம எங்களால வாழ முடியாது. என்னால முடியாது.” என
கண்ணீர் வழிந்தவாறு அவள் அவன் கையை தன் கன்னத்தில் அழுத்தினாள்.
“நான் ஒவ்வொரு நாளும் உன்னோட வருகைக்காக காத்திருந்தேன். நீ எப்பவும் எனக்கு வாக்குறுதி கொடுத்தியே—‘நான் உன்னை ஒருபோதும் தனியா விடமாட்டேன்’னு. அந்த வாக்குறுதியை மறந்துடாதே தேவ். என் கையை விடாதே.”
அந்தச் சொல்லின் மத்தியில் தேவின் விரல்கள் சிறிது அசைந்தன. ரதியின் உள்ளம் அதிர்ந்தது.
“டாக்டர்! அவன் கையை அசைக்கிறான்!” என்று அவள் மகிழ்ச்சியுடன் சொன்னாள்.
மருத்துவர் பார்த்து, “ஆம், இது நல்ல அறிகுறி. அவன் நம்ம குரலுக்கு பதில் தர ஆரம்பிச்சிருக்கான். சீக்கிரமே கண்ணு முழிச்சிடுவான் ” என்றார்.
---
அவள் இன்னும் அருகில் சென்று தேவ்வின் நெற்றியில் முத்தமிட்டாள்.
“தேவ்… நீ உன் அம்முவை விட்டுப் போக முடியாது. உனக்காக நாங்க வெயிட் பண்றோம், ப்ளீஸ் திரும்பிவா.” என கூற
சில நொடிகள் அமைதி நிலவியது. பின்னர் இயந்திரத்தின் பீப் ஒலி சீராகியது. தேவின் மூச்சு மெதுவாக வழக்கம்போலத் துடிக்க ஆரம்பித்தது.
மருத்துவர், “அவன் உயிர்க்குப் புதிய உயிர் வந்திருக்கிறது. நீ தான் காரணம், ரதி. நீ தொடர்ந்து பேசிக்கொண்டு இரு. அவன் திரும்ப வருவான்,” என்றார்.
ரதியின் கண்களில் மகிழ்ச்சிக் கண்ணீர் பொங்கியது.
---
அந்த இரவு முழுவதும், ரதி தேவின் அருகே இருந்தாள். அவள் அவனிடம் பழைய நினைவுகளைப் பகிர்ந்தாள்—அவர்கள் முதல் சந்திப்பு, முதல் சண்டை, முதல் காதல் வார்த்தை, அவர்கள் திருமண நாள். ஒவ்வொன்றையும் பேசிக்கொண்டே அவள் நம்பிக்கையுடன் அவனை வாழ வைக்க போராடினாள்.
வயிற்றில் இருந்த குழந்தை அவளுக்கு சக்தி தந்தது.
“பாரு தேவ்… உன் பொண்ணு இப்பவும் உதைக்கிறாள். அவளுக்கு தந்தை தேவை. நீங்க மூணு பேரும் சேர்ந்தது என் உலகம். நான் தனியா இருக்க முடியாது.” என அப்படியே தேவ்வின் அருகில் படுத்து கொண்டு அவன் நெஞ்சில் தலை சாய்த்து உறங்கினாள்.
---
காலை ஒளி மருத்துவமனையின் சாளரங்களில் ஊடுருவி வந்தபோது, தேவின் முகத்தில் சிறிய அமைதி தெரிந்தது. அவனது கண்ணிமைகள் மெதுவாக அசைந்தன.
ரதி அவன் கையை வலியாகப் பிடித்து, “தேவ்! நீ கேக்குறியா? நான் தான் உன் அம்மு …” என கண்ணீரோடு குரல் கொடுத்தாள்.
சில நொடிகள் கழித்து, தேவின் உதடுகள் மிகவும் மெதுவாக அசைந்தன.
“ அம்மு ” என்ற சத்தமற்ற சொல் அவள் காதில் விழுந்தது.
அந்த ஒரு வார்த்தை ரதிக்கு உலகையே மீண்டும் கொடுத்தது.
அவள் அவனை மார்போடு அணைத்துக்கொண்டு அழுதாள்.
“தேவ்… என் தேவ்! நீ திரும்பி வந்துட்டே!” என கூற
பின் அவனை விட்டு விலகி சென்று மருத்துவரை அழைத்து வந்தாள். மருத்துவரும் தேவ்வை பரிசோதனை செய்து விட்டு ரதியை நோக்கி புன்னகையுடன், “இது நான் எதிர்பாக்காத அதிசியம் ரதி, தேவ் உடல் நிலையில நல்ல முன்னேற்றம் இருக்கு . இதுக்கு உன் காதல் தான் காரணம் அது தான் அவனை உயிரோட திரும்பக் கொண்டுவந்தது, ரதி.” என்றார்.
ரதியின் உள்ளம் மகிழ்ச்சியால் நனைந்தது.
இப்போது அவள் நிச்சயம் அறிந்திருந்தாள்—
அவளின் காதல் தேவன் உயிரோடு அவளது பக்கத்தில் மீண்டும் நடப்பான் என்று.....
தொடரும்....