Hello! It seems that you are using AdBlock - some functions may not be available. Please add us as exceptions. Thank you for understanding!
  • வணக்கம் 🙏🏻 இந்து நாவல்ஸ் தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்
  • இந்து நாவால்ஸ் தளத்தில் எழுத விரும்புவோர், indhunovel@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு செய்தி அனுப்பவும். கற்பனைகளை காவியமாக்குங்கள் ✍🏻💖
Administrator
Staff member
Messages
226
Reaction score
211
Points
63
அத்தியாயம் - 20

கவி பேசியதை கேட்டு கொதித்துப் போனான் ஆத்வி. கிட்டதட்ட அவள் பேசியதன் அர்த்தம் தன்னை ஒரு உமனைஸர் அளவுக்கு சித்தரிப்பதை போல் அல்லவா இருக்கிறது என்று நினைக்க நினைக்க மனம் ஆறாமல், கவி மீது அதிகரித்துக் கொண்டதே போனது கோவம்.

கன்னத்தில் கை வைத்து மயக்கம் வராத குறையாக, உதட்டில் தேங்கி இருந்த குருதியை புருங்கையால் துடைத்த கவி, தன்னை கொல்லும் வெறியோடு ருத்ர விழிகளால் குத்திக் கிழித்தவனின் பார்வையினை சந்திக்க முடியாமல், கண்ணீரோடு எச்சிலை விழுங்கிய பாவையோ, இன்னும் சுவற்றோடு ஒன்றி தப்பிக்க வழி தேட, கண்ணிமைக்கும் நொடியில் அவள் கழுத்தை பிடித்திருந்தான் ஆத்வி.

மூச்சி விட முடியாமல் கண்கள் மேலே சொருக பீதியாக அவனை காண, "என்ன சொன்ன பப்ளிக் பிளேஸ்ல பொண்ணுங்க கிட்ட கேவலமா நடந்துக்குறவனா.. ஆமா எத்தனை பொண்ணுங்ககிட்ட நான் கேவலமா நடந்தத நீ பாத்த" என்றவன் குரல் இடியாக முழங்க, செவிடான கவியின் காதுகளே கொயிங்.. என்றது.

"சொல்லு டி.. எத்தனை பொண்ணுங்ககிட்ட நான் கேவலமா நடந்துகிட்டத நீ பாத்த" மேலும் அவன் பிடியை இருக்கவும்,

"வ்..விடு..விடு.." பேசுமுடியாமல் அவன் கரத்தின் மீது தனது பிஞ்சி கைகள் கொண்டு அடித்து, கழுத்தில் இருந்து வன்கரத்தை பிரித்தெடுக்க முயல, சில நொடிகளில் தானாக அவன் கை எடுத்துவிட்டு, தொண்டையை நீவி விட்டு இருமியவளை கனியா முகத்துடன் கண்டான்.

"நீ எனக்கு கொடுத்த அவமானத்தை விட இப்ப நீ சொன்ன இந்த வார்த்தைய நெனச்சி நெனச்சி ஒவ்வொரு நிமிஷமும் நீ கதறி துடிக்கணும், துடிக்க வைப்பேன் டி.." வெறியாக சொன்ன ஆத்வி,
"ஹ்ம்..பொண்ணுங்ககிட்ட கேவலமா நடந்துகிறவன்" என எல்லளாக மொழிந்து, "இந்த வார்த்தைய நான் மறந்தாலும், நீ மறக்கவே கூடாது"

கோரவிழிகளால் அவளை கூறு போட்டவன், சட்டென அவள் பின்னங்கழுத்தில் கை விட்டு முரட்டுத்தனமாக அவள் கூந்தலைப் பற்றிய ஆத்வி, தன் முகத்துக்கு நேராக மிரலும் பாவையின் முகத்தை இழுத்தவன், கண்ணாடிக்குள் நீர் தேங்க உருளும் அவளின் பயந்த விழிகளை கண்டுகொண்டே, வன்மையாக கவியின் கனி இதழை கொய்து கொண்டான்.

படபடக்கு இமைகளில் இருந்து சாரலாய் தெறிக்கும் நீர் துளிகளோடு, அதிர்ச்சியில் அகல விரிந்த கண்களை, அவன் நெருப்பு விழிகள் சுட்டெரிக்க, மென்னிதழ் கவ்வி ருசித்தவனுக்கு நிச்சயம் புதுவிதமான தெகுட்டா அனுபவமாக தான் இருந்தது, இதழ் வன்முத்தம்.

அவன் பற்களுக்கிடையில் சிக்கி சிதறிய பாவம் கொண்ட ரோஸ் நிற இதழ்கள், ஆடவனின் முதல் பயிற்சி முத்தத்தில் ரத்தம் கன்றி சிவந்து போனது. முதல் முத்தம் அதுவும் கோபத்தில் தொடங்கிய முத்தமாக இருப்பினும், அனுபவமின்றி மென்னிதழை கையாளத் தெரியமால், அவள் மென்மையில் கிறங்கி கொதரிக் கொண்டிருந்தான் ஆத்வி.

கவியோ மொத்தமாக முத்தத்தையே வெறுக்கும் நிலைக்கு சென்றிருந்தாள், அவன் முரட்டுத்தனமாக பிச்சி தின்னும் விதத்தில்.

வலி தாங்க இயலாது அவன் திண்ணிய மார்பில் பூக்கரத்தால் கவி அடித்தும், சொரணையின்றி அவள் இதழில் கரைந்தான் ஆத்வி.

ஒரு நிலைக்கு மேல் சோர்ந்து போனவளின் கரங்கள் கண்ணீர் பெறுக தளர்ந்து விழ, நான்கு இதழிலும் கரைந்து உள் சென்ற அவளின் கண்ணீரின் உப்பு சுவை உணர்ந்து, மூச்சி வாங்க அவளை பிரிந்து நின்று நக்கலாக பார்த்தான்.

அழுத விழிகள் சிவந்து அந்த இருட்டான இடத்திலும் சிவப்பு விளக்கைப் போல மின்னியது. அதிலும் மூக்கு நுனி மட்டும் பண்ணீர் ரோஜா நிறத்தில் சிவந்து தனித்துவமாக எடுத்துக் காட்டிய அழகை அவன் அனல் விழிகள் அழகாக படம் பிடித்து வைத்துக் கொள்ள, ரோஸ் இதழ்கள் இரண்டும் ரத்த சிவப்பாகி, அதில் இருந்து கசியும் ரத்தத்துளிகள் அவள் அழகை மேலும் அலங்கரிக்கும் விதமாக இருந்தது.

ஆத்வியின் செயலில் உடலும் உள்ளமும் நடுங்கி, அதிவேகத்தில் பயத்தினால் துடிக்கும் இதயத்தை அடக்க வழியறியாமல், கலங்கி தவித்து நின்றவளின் மனமோ, உள்ளுக்குள் வாய் விட்டு கதறிய போதும், அவனை கோவம் கக்கும் விழிகளால் கண்ட கவி,

"திரும்ப திரும்ப உன் பொறுக்கி புத்திய காட்டிட்டேள்ள.. உன்ன நான் இந்த முறை சும்மா விடுவேன்னு மட்டும் நினைக்காத,. உன் அம்மா அப்பாகிட்ட இப்பவே உன் வண்டவாளத்தை எல்லாம் ஒன்னு விடாம சொல்லி, உன் முகத்திரைய கிழிக்கிறேன்.." ஆவேசமாக கூறி முன்னால் அடியெடுத்து வைக்க,

"தாராலமா போய் சொல்லு, யாராலும் இந்த ஆத்விய ஒன்னும் பண்ண முடியாது.." இகழ்ச்சியாக அதரம் துடைத்தபடி கூறிய ஆத்வி,

"அப்புறம் இன்னொரு முக்கியமான விஷயம், உன் பிரண்ட் அந்த பொண்ணு பேர் என்ன.." என நெற்றி தட்டி யோசித்தவன், "ஹான்.. ஸ்வாதி, அவ யாதவ் கம்பனில தான் வேலை செய்றான்னு கேள்வி பட்டேன்" என்றதும் முன்னேற சென்ற கால்கள் நகர மறுத்து, கலவரமாக அவனை திரும்பிப் பார்த்தாள்.

மர்மப் புன்னகை சிந்தி அவளை ஆழ்ந்து பார்த்த ஆத்வி, "நீ என்ன எதிர்க்க நினச்சா, அங்க இருக்க பிரண்டும் சேர்த்து பாதிக்கப்படுவா.. எப்டினு கேக்குறியா, எம்மேல நீ சுமத்தின பொறுக்கி பழிய உன் பிரண்ட் மேல ஈஸியா சுமத்தி எல்லார் முன்னாடியும் அசிங்கப்பட வைப்பேன்..

ஏன்னா உனக்கு இருக்க ஒரே சொந்தம், பிரண்ட், கசின், எல்லாம் அவதான்னு ஈஸியா கண்டு பிடிச்சிட்டேன், அவளுக்கு ஒண்ணுன்னா நீ துடிச்சி போவியாமே மெய்யாலுமா.." இதழ் வளைத்து கேலியாக கேட்டவனை அதிர்ச்சி மாறாமல் பார்த்தாள் கவி.

"நினைச்சி பாரேன், உன் பிரண்ட் அவகூட வேலை பாக்குற சக பணியால் கிட்ட வலுக்கட்டாயமா அசிங்கமா நடந்துகிட்டானு நியூஸ் வந்தா, அவ அவமானப்பட்டு கூனிக்குறுகி போறத பாத்து நீ ஒவ்வொரு நாளும் துடிச்சி போக மாட்ட..

ஒருக்கட்டத்துல அவமானம் தாங்காம தூக்குல தொங்கியோ, பாய்சன் சாப்டோ, இல்ல எந்த விதத்துலயாவது அவ தற்கொலை பண்ணிக்கிட்டானு வச்சிக்க, அதுக்கு முழு பொறுப்பு நீ தான்.." ஆள்காட்டி விரலை அவன் கண்களுக்கு நேராக காட்டி அழுத்தமான சொன்னவன் வார்த்தைகளை கேட்டு, அதிர்ச்சியின் உச்சத்திற்கே சென்றாள் கவி.

இயலாமையுடன் வேதனை விழிகளால் தன்னை பார்த்தவளின் முகத்தை திருப்தியாக கண்டு கலித்தவன், "இதுக்கே ஷாக்கானா எப்டி பேபி.. இனிமே அடிக்கடி இப்டி உனக்கு ஷாக் ட்ரீட்மென்ட் கிடைச்சிட்டே இருக்கும், ஒரே ஷாக்ல செத்து என் வேலைய ஈஸியாக்கிடாத" என கண்ணீர் வழியும் அவள் கன்னத்தை தட்டி விட்டு,

"நீ உத்தரவிட்டால் முத்தம் தருவேன் உதடுகள் வேர்க்கும்வரை..
உண்மையில் நானும் யோக்கியன்தானடி உன்னைப் பார்க்கும்வரை.." என்ற பாடலை விசிலடித்து இரு பாக்கெட்டிலும் கை விட்டபடி, ஸ்டைலாக நடந்து சென்றவனை உயிர் வெறுத்து பார்த்து நின்றாள் கவி.

தன் அறைக்கு வந்து மெத்தையில் விழுந்தவன் கண்ணில் நின்றது என்னவோ கவியின் அழுது சிவந்த முகம் தான். அதிலும் அந்த ரோஸ் நிற மூக்கை கடித்து வைக்க தூண்டியது.

ச்ச.. என தலையை உளுக்கிக் கொண்டவன், "அவ என்ன அசிங்கப் படுத்தினதுக்கு தான் நானும் அவளை பழி வாங்க நினைக்கிறேன், ஆனா நடுவுல என்ன அவளை கண்ட இடத்துல கடிக்க நினைக்கிறது" கோவமாக மனதில் நினைத்தாலும், அவளை முத்தமிட்ட இதழை நாவினால் ருசித்து ஈரப்படுத்திக் கொண்டவன்,

"டேய் ஆத்வி இனிமே அவளை பழி வாங்கும் போது, கொஞ்சம் டிஸ்டன்ஸ் மெய்ன்டெய்ன் செஞ்சி பழி வாங்கு, ஏடாகூடமா ஏதாவது நடந்துட்டா அப்புறம் என் வருங்கால பொண்டாட்டிக்கு துரோகம் செஞ்ச மாதிரி ஆகிடும் சொல்லிட்டேன்" தன்னை தானே கடுமையாக எச்சரித்துக் கொண்டு குப்புற படுத்தான்.

*****

"என்னபா இந்த முறை வந்துட்டு பத்து நாள் கூட முழுசா ஆகாம கிளம்பிப் போற, உன்ன பாக்காம அடுத்த மூணு மாசம் நான் எப்டி இருப்பேன் யாதவ்.." முந்தானையால் கண் துடைத்துக் கொண்ட மித்ராவை ஆதி முறைக்க, தோளோடு தாயை அணைத்துக் கொண்ட யாதவ்,

"ம்ம்மா..ஜஸ்ட் த்ரீ மந்த்ஸ் தான், இப்டிங்றதுக்குள்ள ஓடிரும்.. அடுத்த முறை வந்தா கண்டிப்பா ஒரு ஒன் மந்த் ஆவது உங்களோட ஸ்டே பண்ற மாறி லீவ்ல வரேன்.. இப்போ அழாதீங்க ம்மா.. பாருங்க ஆதிப்பா உங்கள தான் முறைச்சிட்டு இருக்கார்.." என்றதை மட்டும் அவள் காதில் கிசுகிசுக்கவும், சட்டென கணவனை நிமிர்ந்து பார்த்து அவன் முறைப்பின் சீற்றத்தில் தலை குனிந்துக் கொண்டவளாக, யாதவ்க்கு தேவையானதை எடுத்து வைத்தாள்.

"அக்கா தன்யா எங்கே" என்றபடி லக்கேஜை கொண்டு வந்து ஹாலில் வைத்தான் யாதவ்.

"இன்னைக்கு என்னனு தெரியல யாது சீக்கிரமே அவ தூங்கிட்டா, நான் வேணா எழுப்பி தூக்கிட்டு வரவா" அறைக்கு செல்லப் போன ஆருவை தடுத்து நிறுத்தியவன்,

"அதெல்லாம் வேணாக்கா.. அவ நல்லா தூங்கட்டும், நான் வீடியோ கால்ல பேசிக்கிறேன்" என்றவன் அனைவரிடமும் சொல்லிவிட்டு, ஆதியிடமும் சொன்னவனாக, "மாமா போலாமா என்று அஜயை அழைக்க,

"போலாம் யாதவ்" என்ற அஜயும் மேஜை மீதுருந்த கார் சாவியை கையில் எடுக்கப் போக, அவனுக்கு முன் ஆத்வி அதை கையில் எடுத்திருந்தான்.

அனைவரும் அவனை குழப்பமாக பார்க்க, "மாமா நீங்க இருங்க, நான் இவன ட்ராப் பண்ணிட்டு வரேன்" விரைப்பாக சொல்லி யாரின் அழைப்பையும் காதில் வாங்காமல், மிரள் விழிகளால் தன்னை பார்த்து நின்ற கவியை மட்டும் ஓரக்கண்ணால் பார்த்தபடி சென்றான்.

மித்ரா ஒன்றும் புரியாமல் ஆதியைப் பார்க்க, அவனுக்கே பெரும் குழப்பம் தான் இந்த ஆத்வி யாதவ் இருவருக்குள்ளும் அப்படி என்னதான் பெரிய பிரச்சனை நடந்தது என தெரியாததில். இதில் மித்ராக்கு எங்கே தனியா விளக்க.

"டேய்.. யாதவ் அவன்கிட்ட எதுவும் பேச்சி வச்சிக்காத, அவனா ஏதாவது பேசினா மட்டும் பதில் சொல்லு கண்ணா.. அவன் போற வேகத்தை பாத்தா எனக்கே பயமா இருக்கு, எங்கயாவது போற வழில வேணும்னு இறக்கி விட்டாலும் சொல்றதுக்கில்ல.. எதுக்கு கவனமா போயிட்டு வா கண்ணா.." படபடப்பாக மித்ரா சொல்ல,

"ஏய்ய்.. கொஞ்ச நேரம் உன் வாய மூடிட்டு இரு டி, அதெல்லாம் யாதவ் பாத்துப்பான், டேய் நீ கிளம்பு.. அங்க போய் கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுத்துட்டு பிளைட்ல உக்காரு" ஆதியின் கடினமான குரலில் வெளிவரும் அன்பை உணர்ந்த யாதவ், மெலிதாய் சிரித்து தலையாட்டியவனாக,

"கவி போலாமா" என்றதும் தயக்கமாக அவனை பார்த்த கவியின் முகம் பேயரைந்ததை போலிருந்தது. ஆத்வி தான் கார் ஓட்ட போகிறான் என்று தெரிந்த பிறகு.

"சார் நீங்க கிளம்புங்களேன் நான் அப்டியே ஆட்டோ பிடிச்சி போய்டுறேன்.." என்றாள் தயக்கமாக.

"மச்.. உன்கிட்ட சாஃப்டா பேசிட்டு இருந்தா வேலைக்காகாது, என்கூட வா" உரிமையாக அவள் கை பிடித்து செல்வதை அனைவரும் வாய் பிளந்து பார்க்கவும், சங்கடமாக உணர்ந்தாள் கவி.

மேலும் காரில் டிரைவர் சீட்டில் அமர்ந்து அக்காட்சியை பார்த்த ஆத்வியின் உள்ளம் எரிமலையாய் குமைந்துக் கொண்டிருந்தது. என்ன சொல்லியும் கேளாமல் யாதவுடன் ஜோடி போட்டு சுற்றும் கவியை பார்க்கையில்.

"கவி ஏறு" என்றதும் ஏறாமல் கையை பிசைந்து தயங்கி நிற்கும் அவளை பார்த்த யாதவ், இது வேலைக்கு ஆகாது என நினைத்து, அவள் முதுகில் கை வைத்து தள்ளி பின் சீட்டில் அமர வைத்தவனாக, காரை சுற்றி வந்து அவள் அருகில் அமர்ந்துக் கொண்டது தான் தாமதம், கார் புயல் வேகத்தில் சீறிப் பாய்ந்தது, ஏர்போர்ட் நோக்கி.
 

Author: Indhu Novels
Article Title: அத்தியாயம் 20
Source URL: Indhu Novels-https://indhunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top