Hello! It seems that you are using AdBlock - some functions may not be available. Please add us as exceptions. Thank you for understanding!
  • வணக்கம் 🙏🏻 இந்து நாவல்ஸ் தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்
  • இந்து நாவால்ஸ் தளத்தில் எழுத விரும்புவோர், indhunovel@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு செய்தி அனுப்பவும். கற்பனைகளை காவியமாக்குங்கள் ✍🏻💖
Messages
32
Reaction score
4
Points
8
இதழ் மழை💋🌧️31

"ஏய் அது என்னோட பிராப்பர்டி விடுடி...

'ஏ எது இதழினி பதறி முழுக்க...

"லிப்ஸ் தான்"!!

ஓஓ இவள் புதிதாய் வெட்டிய மின்னல் வெக்கத்தில் நெளிய...

"போய் சாப்பிடுடி.. பசிக்குதுனு பறந்தா...

'அ து.. நா தரனு சொல்லவே இல்லையே..

"அதான் பயப்படுறீயேடி..

'நீங்களும் வாங்களேன் சேர்ந்து சாப்பிடலாம்'..

"பரவாயில்லையே கேடி என்னை மாதிரி பேச்சை மாத்த கத்துக்கிட்ட..

இஇஇ "வருவீங்களா மாமு?..

'வேலை இருக்குடி..

"வயித்தை காயப்போடாதீங்க மொத சாப்பிட்டு வேலைய பாருங்க நா போய் பிரியாணி சாப்பிடுறேன்..

'ஆமா இந்த ரெண்டு வாரம் சாப்டியானு மேடம் கேக்கவே இல்ல இப்போ மட்டும் என்ன அக்கரையாம்..

"அது கேட்க வாய் வரைக்கும் வரும் நீங்க தப்பா பேசிடுவிங்கனு பயம் மாமு அதான்..

'சரி வந்ததும் தந்ததும் தரேன்..

"என்னது"?!...

'போனை வைடி சும்மா வேலை நேரத்துல டிஸ்டர்ப் பண்ணிக்கிட்டு....

'ம்க்கும்...இவள் நொடித்துக்கொண்டு போனை வைத்தாள்..

பிரியாணி வாசத்திற்கு இதழினிக்கு முன்பவே வந்து உக்கார்ந்து விட்டான் வேடன் பிறகென்ன... வராண்டாவில். மூன்று பேரும் சுற்றி அமர்ந்து பிரியாணிய வெளுத்து கட்ட....

சிசிவிடியில் மூவரையும் பார்த்து புன்னகைத்தவனுக்கு முதல் முறை தானாக பசியெடுத்தது.. ஜாக்கை அழைத்து தனக்கும் பிரியாணி கொண்டு வர சொல்லி இருந்தான் இதில் அதிசயம் என்னவென்றால் அவனையும் கூட அமர்ந்து சாப்பிட சொன்னது தான்...

சாப்பிடுக்கொண்டே கதையளந்து நேரத்தை கடத்தி விட்டு அறைக்கு வந்தவளுக்கு தூக்கம் கண்ணை சொக்க ஒரு தூக்கமும் தூங்கியெழுந்தவளுக்கு வானம் கருத்து கீழ்வானம் தென்றல் வீச பறவைகளின் கிச்சு சத்ததில் ரம்யமான பொழுதை கண்டவளுக்கு இது சாயங்காலமா?.. மறுநாள் விடிற்காலையா? என சந்தேகம் வர போனை எடுத்து அரக்கனுக்கு போன் போட்டாள்...

"ஏன் மாமு நைட்டு வீட்டுக்கு வர்ல பாருங்க விடியற்காலை மணி அஞ்சாகுது...வீட்டுல பொண்டாட்டினு நான் ஒருத்தி இருக்குறது நியாபகம் இருக்காக இல்லையா.. எப்போ பாரு அந்த வேலைய கட்டிக்கிட்டு அழறீங்க..நார்மல் இல்லத்தரசியாக இவள் கத்த..

"தூங்குனீயாடி"?!...

'அது ஆமா மாமு முதுகு வலிச்சாதா பிரியாணி வேற டேஸ்ட்டா இருந்திச்சா அதான் நல்லா சாப்பிட்டேன் அப்புறம் ஓரே தூக்க தூக்கமா வந்துசா மதியம் படுத்தேனா பாருங்க ஒரு நைட்டு முழுக்க தூங்கிட்டேன்..

பேபி கிளாஸ் பாப்பா கூட உன்னைவிட முதிர்ச்சியா பேசும்டி அதுவும் இவ சொல்ற காரணம் இருக்கே இதுகெல்லாம் எப்போடா நா ஃபேன்னானேன்..

அப்போதுதான் அவன் ரொம்ப நேரமாக சிரிப்பது புத்திக்கு உரைத்தது இதழுக்கு..

"ஏதுக்கு சிரிக்கிறீங்க மாமு...தூங்குனியாடி என்ற கேள்வி பின்னோடு உரைக்க...

'அப்போ அப்போ இது.. பால்கனியில் நின்று தன்னை சூழ்ந்த வானுலகை விழிகளை உருட்டி பார்த்தாள்..கருப்பு வெள்ளை லைட் மஞ்சல் ஆரஞ்சு என கலந்துகட்டிய மேக கூட்டங்கள்..

தங்கள் கூடுகளை நோக்கி பறக்கும் பாறைகளின் கூட்டம் இப்போ கூட அவளை குழப்பி தான் விட்டது...

சிரிப்பை அடக்க முடியாது உடல் லேசாக குலுங்க அரக்கன் சிரிப்பது... மீட்டிங் ஹாலில் இருந்த அத்தனை பேரும் வாயை பிளந்துதான் பார்த்தனர்.. இவன் சிரிப்பானா?!.. இவன் பேய் தனமாய் சிரித்து தானே பழக்கம்..

இதென்ன வசீகர சிரிப்பு அதுவும் மனம் விட்டு சிரிக்கின்றனே... என்னவா இருக்கும்?? பக்கத்தில் திரும்பி சந்தேகம் கேட்டு பேசினால் கூட ஆண் பெண் பாரபட்சம் இல்லாமல் மண்டை உடையும்...

அங்கே அத்தனை பேர் மனதில்தான் இதை நினைக்க முடிந்தது...யார் பேச்சில் இப்படி சிரிக்கின்றான் என சைடில் நின்ற ஜாக்குக்கு மட்டும் தான் தெரியும்..

"வந்து சொல்றேன்டி..மீட்டிங்ல இருக்கேன் போனை வைடி...உதட்டை மடித்து ஈரமாக்கிக்கொண்டு எழுந்தவன் யாரையும் கண்டுக்கொள்ளது கிளம்பி விட்டான்...

'ஐயோ இதழு.. தூக்குனா விடியற்காலைக்கும் சாயங்காலத்துக்கும் உனக்கு வித்தியாசம் தெரியாம போயிடுச்சா.. இப்ப கூட உண்மைய சொல்லாம போனை வெச்சு புட்டாரே..

சரி அவரு வரத்துக்குள்ள குளிப்போம்...குளித்துவிட்டு உடை மாற்றும் போதுதான் கவனித்தாள் அவன் பெல்டில் அடித்து கிழிந்து போன சட்டையை..

முகம் வாடிப்போனது.. கொஞ்சம் நிதானமா யோசிக்க மாட்டீயா வருண்... அவன் சட்டைகளில் ஒன்றை எடுத்து போட்டவள்..

கிழிந்த சட்டையை தைக்கலாமென எடுத்து வந்து பால்கனி தாழ்வரத்து படிக்கட்டிலமர்ந்து தூணில் சாய்ந்தாள்...

ஜில்லு ஜில்லுனு வீசும் ஈர காற்று கனமழைக்கு அடிப்போட மேற்கு வானில் கீழிறங்கி இருந்தது...வேகமாக பரவிய கருப்பு புகை மண்டலம் வெண்நிற மேகங்களை கலத்தது..மெல்ல மெல்ல இருள் பரவ..

அட கடவுளே அப்போ இப்போ தான் நைட்டாகுதா... ப்ச் இதழு இந்த மனிஷங்கிட்ட இப்படி மொக்க வாங்கிட்டீயே இதை வெச்சியே ஓட்டி தள்ளப் போகுது...

தலையிலடித்து சிரித்தாள் இதழினி... இதமாக தழுவி தேகத்தை சிலிர்ப்பூட்டும் தென்றல் காற்று அவள் முடிகளை கலைத்து விளையாட கிளந்தெழும் மண்வாசத்தை பின்னுக்கு தள்ளி..

அனுமதியில்லாமல் அவள் நாசிக்குள் நுழைந்தது...ம்ம்ம்...அவள் உடுத்திருந்த கணவன் சட்டை காலரை இழுத்து அவன் வாசத்தை ஆழ்ந்து நுகர்ந்தாள் தன்னை மறந்து மனதை ஏதோ ஒன்று லேசாக்கி.. இதயத்தை மென்மையாக வருடுவதில் ஆழ்ந்து அதில் கரைந்து கண்மூடி தூணில் தலை சாய்த்தவள்...

செவிகளை தீண்டியது தூரத்தில் கருப்பன் தாத்தா ரவுண்ஸ்க்கு போவதற்கு முன் ஆன் பண்ணி வைத்துவிட்டு போனா எப்எம் ரேடியோவில் ஓலித்த பாடல்...


ஊரெங்கும் மழையும் இல்லை வேறெங்கும் புயலும் இல்லை என்றாலும் நெஞ்சில் இடி இடிக்குதே கண்ணாளன் நிலமை என்ன கடலோடு பார்த்துச் சொல்ல கொக்கும் நாரைக்கும் கண் அலையுதே..

மனது படபடக்க ஏனோ இதழினி விழிகள் வருணை தேடியது..

நீரின் மகன் எந்தன் காதலன் நீரின் கருணையில் வாழுவான் இன்று நாளைக்குள் மீளுவான் எனது பெண்மையை ஆளுவான் மீண்டும் தீண்டும் போது காதல் தேவன் இரு முறை முதல் இரவுகள் பெறுவான்..

இதழினி இதழ்கள் வெட்கமும் வலியும் சேர்ந்து புன்னகைக்க...

பற பற பற பறவை ஒன்று கர கரகர கரையில் நின்று கண்ணீரில் கடல் நீரை நனைக்குதே ..

கட கட கட கடலுக்குள்ளே பட பட பட இதயம் தேடி கண்ணெல்லாம் தீ வளர்த்து துடிக்குதே என் தேவன் போன திசையிலே ஜீவன் சேர்த்து அனுப்பினேன் என் ஜீவன் வந்து சேருமா தேகம் மீண்டும் வாழுமா இதோ எந்தன் கண்ணீர் அந்த அலை சேரும் அலை மறுபடி உன்னிடம் வருமா..

இதுவரை கேட்டிடாத பாடல்தான் அடிநெஞ்ச ஆழம் வரை காதல் வலி கடத்திட அப்பாடல் நாயகி போல நாயகனை தேடி நின்றாள் இதழினி... முழுதாக இருட்டி விட்டது உள்ளே...இருண்டு கிடந்த உள்ளறைக்குள் போனை எடுக்க ஓடி வர பாறை மீது மோதி நின்றாள் எதிரே அவன் தான் அவனே தான்..

பொங்கிய காதல் அலைகளை கட்டுப்படுத்த முடியாது தாவி அணைக்க வந்தவளை தடுத்துவிட்டு ரெஸ்ட்ரூமுக்குள் நுழைந்தான் அரக்கன்...

இருட்டிலும் அவன் சட்டையில் தெறித்திருந்த ரத்த துளிகள் வாடையை அறிந்தவள் உடல் நடுங்க...மீண்டும்... பால்கனியில் அதே இடத்திற்கு வந்தமர்ந்தாள்....

பற பற பற பறவை ஒன்று கர கர கர கர கரையில் நின்று கண்ணீரில் கடல் நீரை நனைக்குதே ...

விழிநீர் கலங்கி பொங்கி பெருகி விம்மி வெடித்த அழுகை இங்கே இதழினி நெஞ்சை நனைத்தது...

கட கட கட கடலுள்ளே பட பட பட இதயம் தேடி கண்ணெல்லாம் தீ வளர்த்து துடிக்குதே.

என் இரவு மட்டும் விடியவில்லை காயம் செய்த ஊருக்கு என் நியாயம் மட்டும் தெரியாது

மன்னித்தாயே யென்னைக் கொல்ல மாட்டாயா...

ரத்தக் கண்ணீர் முடியவில்லை என் ராத்திரி மட்டும் விடியவில்லை..


அதற்கு மேல் தாங்க மாட்டாது கதறி அழுதவளை இழுத்து தூக்கி மடியில் வைத்ததை உணராது அவனை கட்டிக்கொண்டு அழுத்தாள்..

எதுக்கு அழற? என அவனும் கேக்கல கேட்டாலும் ஏன் அழுகிறோம் என அவளுக்கே...பதில் சொல்ல தெரியாது

சிலர் எப்போதும் அமைதியாகவே இருப்பார்கள்... ஏதேனும் பாடலையோ அல்லது கதைகளிலேயோ.. வரும் ஆழமான காட்சிகள் தங்கள் வாழ்க்கையோடு பொருத்தி பார்த்து..
ஒற்றிப்போய் காரணமே இல்லாமல் நிறுத்தாம அழுவார்கள்... அழ நினைத்து வெறுமனே கடந்து வந்த அத்தனை நினைவுகளையும் மொத்தமாக சேர்த்து வைத்து அழுவார்கள் காரணம் கேட்டால் அவர்களுக்கு சொல்ல தெரியாது ..(நானும் அந்த கேஸ் தான்😉)

அந்த மனநிலையில் தான் இதழினி இருந்தாள்.. அது புரிந்ததால் தான் அரக்கனும் அமைதியாக அவளை பார்த்தான் வரும்போது பால்கனி விளக்கை உயிர்ப்பித்து விட்டுதான் வந்தான்...

அழுது தீர்த்துவிட்டு மூக்கை ஊறிஞ்சி இழுத்து விசும்பி அவன் முகம் பார்க்க...

அவள் முகத்தில் ஓட்டி இருந்த முடிகளை காது பக்கம் ஒதுக்கி விட்டு...என்ன என்றான் புருவம் உயர்த்தி...

"ஒன்னுமில்லை"...

இழுத்து நெஞ்சோடு மோத விட்டதில் சில கணங்கள் அப்படியே சாய்ந்து இருந்தவள்...

தலை நிமிர்த்தி "உங்களுக்கு நிறையா எதிரிங்க இருக்காங்களா? மாமு..

"ம்"...

'சண்டை போடும்போது எங்கேயாவது அடிபட்டுடுச்சா?...

"நீயே பாரு...

லேசாக விலகி... பார்வை சுழல விட்டாள்..

குளித்துவிட்டு ட்ராக் பேண்ட் மட்டும் அணிந்திருந்தான்.. இவன் தான் பன்னீர் ரோஜாவுக்கே டாப் கொடுக்கும் ஆணழகனாயிற்றே.. துடைத்து வைத்த வைரம் போல மின்னிய தேகக்கட்டுகள் ஒரு சின்ன கீறில் கூட இல்லை..கம்பீர கட்டழகனை பார்க்க பார்க்க கூச்சமாகி இதழ் கடித்து முகத்தை மறைத்தாள்...

அவள் கையை விளக்கி முகத்தை நிமிர்த்த... மூடி இருந்த இதழினி இமைகுடைகள் மேல் ஒற்றை மழை துளி பட்டு நனைக்க...

அடுத்த மழை துளி இதழை நனைக்கும் முன்... அரக்கன் இதழ் கொண்டு நனைத்திருந்தான்...

இதழ் மழையில் நனைந்திடுமா❣️...
 

Author: vinnarasi novels
Article Title: இதழ் மழை💋🌧️31
Source URL: Indhu Novels-https://indhunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top