• வணக்கம் 🙏🏻 இந்து நாவல்ஸ் தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்
Administrator
Staff member
Messages
173
Reaction score
152
Points
43
அத்தியாயம் 5


குளித்து முடித்து கையோடு கொண்டு வந்த புடவையும், ஈரம் பட்டு விடாமல் நேக்காக கட்டி முடித்தவள் ஒரு பெருமூச்சு விட்டுக் கொண்டு, வேளி மேல் அவள் போட்டிருந்த துண்டை எடுத்து தலையை துவட்டி சுற்றிக் கொண்டே வெளியே வந்தவள் எதிரில் கணேசன் நின்று மொத்த பற்களும் தெரியும்படி இளித்து நிற்பதை கண்டு, இவன் எப்போது வந்தான் என்ற யோசனையில் பயந்து போய் அவனை பார்த்தாள்.

குளித்து முடித்து புத்தம் புதிய மலராக இருந்த பூவையவள் மேனியில் இருந்து வரும் சோப்பின் நறுமணம் அவன் நாசியை துலைக்க, அதில் கிறங்கி கண் மூடி ஆழ சுவாசித்தவன்.
"அதுக்குள்ள குளிச்சி முடிச்சிட்டியா மதுகண்ணு, ஆமா என்ன சோப்பு போட்டு குளிச்ச வாசனையே ஆளை மயக்குது. நேத்து வரை கண்ட நாத்தம் பிடிச்சவளை எல்லாம் ஒண்ணுகொன்னா கட்டிபுடிச்சி புரண்டு கிடந்தவனுக்கு இன்னைக்கு இப்படி ஓரு பிரெஷான பொண்டாட்டி, ம்ம். கொடுத்து வச்சவன், ராத்திரிக்கு நல்ல வேட்டை தான் இல்லை மது"

சிறுதும் வெட்கமின்றி கண்ணடிக்க. தம்பி மனைவியை தனக்கு அவள் ஒரு தங்கை என்று நினைக்காமல், அவளின் பால் வண்ண மேனியை கண்களால் துளைத்துக் கொண்டு, அசிங்கமாக பேசவும், சொல்லவா வேண்டும் அவள் மனம் அடையும் வேதனையை. கணேசன் பேசிய வார்த்தைகள் அவள் செவிகளில் அமிலத்தை கரைத்து ஊற்றியது போல் பற்றிக் கொண்டு வந்தது.

அவனை ஒரு அருவருப்பு பார்வை பார்த்தவள், எதுவும் சொல்லாமல் கண்ணீர் கோடுகளுடன் அவனை தாண்டி ஓடிய மதுக்கு, இப்போது வீராவின் அறைக்கு செல்லவே உடலெல்லாம் உதறியது. அறையில் சுவர்கள் முழுக்க அரைகுறையான பல பெண்களின் புகைப்படங்கள் சிலது நிர்வாணமாகவும் ஒட்டபட்டு, தரையில் ஆங்காங்கே உபயோகப் படுத்திய ஆணுறைகள் கிழிந்த நிலையில் சிதறிக்கிடக்க, மதுபோத்தில்கள் எக்கச்சக்கமாக குவிந்து கிடந்தது. இதை எல்லாம் எப்படி சகித்துக் கொண்டு உள்ளே செல்ல முடியும், அசிங்கமாகவும் அருவருப்பாகவும் இருந்தது கன்னிகைக்கு.

இப்படியே அறை வாசலில் நின்றுக் கொண்டிருந்தவள் தோளில் அழுத்தமாக யாரோ தொடவும், திடுக்கிட்டு திரும்பினாள் மது. ராசம்மாள் தான் அவளை மேலிருந்து கீழாக நோக்கியபடி நின்றிருந்தாள்.

"உள்ள என்ன ரெக்காடு டான்ஸா அவுத்து போட்டு ஆட்றாளுங்க, இங்கனவே நின்னு பராக்கு பாக்குற. ஆம்பளைங்க இப்படியும் அப்டியும் தான் இருப்பானுங்க, பொம்பள நீ தான் அதை எல்லாம் சகிச்சிட்டு போவணும். உன்கிட்ட சந்தோசம் கிடைகளனா எவளையாவது கூட்டியாந்து படுப்பான், அப்ப நீ வெளிய வந்தா போதும். இப்படியே அழுது வடிஞ்சி நிக்காம போயி உன் மொகரைல கொஞ்சம் அலங்காரம் பண்ணி தயாரா இரு.
ஆஹா. அப்பறம் இந்த மாதிரி முழுசா இழுத்து மூடிட்டு இருந்தா எப்டி அவனுக்கு உன்மேல ஆசை வரும்" என்ற ராசம்மா,

ஒரு இடை கூட வெளியே தெரியாத வன்னம் நேர்த்தியாக மடிப்பெடுத்து புடவை கட்டி இருந்தவளை, வேண்டாம் என்று கெஞ்சியும் விடாது. இடுப்பு சேலையை தொப்புளுக்கு கீழ் இறக்கி விட்டு, மார்பு சேலையை சுருட்டி மார்பின் நடுவே அவளின் செழித்த அங்கங்கள் வெளியே தெரியும்படி போட்டு விட, அவமானமாக கைகளை கொண்டு மறைத்து நின்று அழுதாள்.

"ஏய் ச்சீ. சும்மா கண்ணுல குழாய தொறந்து உட்டு நிக்காத, இப்ப உன்ன பாத்தா எவனுக்கா இருந்தாலும் உன்கூட இருக்க ஆசை வரும்", கொஞ்சம் கூட வெட்கமேயின்றி ஒரு மருமகளை பார்த்து சொல்லவும் அழுகை வெடித்தது ராசம்மா சொன்ன வார்த்தையை கேட்டு.

குலுங்கி அழுத்தவளின் முகவாயை வெடுக்கென பற்றி,
"சும்மா அவன்கிட்ட இப்டி நீலிக் கண்ணீர் வடிச்சிட்டே நிக்காத, அவனுக்கு கோவம் வரும், கோவம் வந்து அடிச்சே கொன்னா கூட பரவால்ல, உன்கூட சந்தோசமா இருக்காம போய்ட்டான்னா காரியமே கெட்டுப்போய்டும். அதனால எப்படியாவது அவனை உன் வழிக்கு கொண்டாந்து அடுத்த பத்து மாசத்துல ஆம்பள புள்ளைய பெத்து போடற வழிய பாரு. அதுக்கு நீ அவன்கூட எப்படியாவது ஒன்னாயிருந்தே ஆவணும் புரிஞ்சிதா வெரசா போ, இன்னும் செத்த நேரத்துல அந்த வெட்டிபய வந்துடுவான்" என்று ஈவிரக்கமின்றி பெண் இனத்திற்கே சாபமாக உருவெடுத்த ராசம்மாள், மதுவை அறைக்குள் தள்ளி விட்டு கதவை சாத்திக் கொண்டு சென்று விட்டாள்.

ராசம்மாள் பேசியது ஈயத்தை காய்ச்சி ஊற்றியது போன்று உடலெல்லாம் திபுதிபுவென எரிந்துக் கொண்டிருக்க, இதில் அந்த அறையில் இருப்பது வேறு நெருப்பின் மேல் நிற்பதை போல இருந்தது. கதவின் ஓரமாக துடைப்பம் இருப்பதை கண்டவள் தாமதிக்காமல் அந்த அறையை கூட்டி சுத்தம் செய்து, சுவற்றில் ஒட்டப்பட்டிருந்த ஆபாச படங்களை எல்லாம் ஒன்று விடாமல் கிழித்தெடுத்து குப்பையில் வீசியவள், யாருடனோ ஒன்றாக இருந்த உடலுறவின் போது கரைகள் படிந்திருந்த கட்டில் மேல் உள்ள மெத்தை விரிப்பை எடுத்து தூர எறிந்து, வேறு விரிப்பை அழகாக போட்டு மூச்சி விடும் நேரம் படாரென கதவை திறந்துக் கொண்டு முழுபோதையில் தள்ளாடி உள்ளே வந்தான், வீர்புத்திரன்.

ஏதோ ஒரு அசட்டு தைரியத்தில், முக சுளிப்புடன் அங்கிருந்த அசிங்கத்தை எல்லாம்காண சகிக்காது சுத்தம் செய்து முடித்தவளுக்கு, உள்ளே வந்த வீரை பார்த்ததும் அவன் தோற்றம் கண்டு இதயம் படபடவென அடித்துக் கொள்ள மிரட்சியோடு அவனை கண்டவள் தன்னை கவனிக்க தவறிப் போனவளாய், இனி என்ன நடக்குமோ என்ற பயத்தில் மிரண்டு போய் அப்படியே நின்றளை நெருங்கி அவன் வர வர, கடவுளே என்ன இதெல்லாம் என்று அஞ்சி பின்னால் அடி எடுத்து வைத்தாள்.

"ஆமா உன்னய தான் இந்த வீனா குடும்பத்துல இருக்கவங்க அஞ்சி லட்சம் குடுத்து வாங்கிட்டு வந்தாய்ங்களா" என்று அவன் கேட்ட கேள்வியில் துடிதுடித்து போனவள் கண்ணில் நீர்த்திரையிட தலை குனிந்தபோது தான் அவன் முன் அவள் இருக்கும் நிலை என்ன என்பது புரிய அதிர்ந்து போனவள், வேகமாக தன் சேலையை சரி செய்ய, சட்டென அவள் கையை அவன் பிடிக்கவும், மொத்தமாக பயந்து போன மது, செய்வதரியாது நெஞ்சி துடிக்க கால்கள் துவண்டு போய் அவனை கண்டாள்.

"அஞ்சி லச்சரூவா கொடுத்து உன்னைய வாங்குற அளவுக்கு அப்டி உன்கிட்ட என்ன டி இருக்க போவுது, நான் ஐநூறு ரூபா கொடுத்து, தினமும் வகை வகையா போயிட்டு வரேனே, அவளுங்ககிட்ட இல்லாதது"

குலரியபடி வார்த்தைகள் வந்தாலும் ஏளனம் அப்பிகிடக்க. இப்படி ஒரு அசிங்கமான பேச்சுகளை கேட்பதற்கு பதிலாக செத்து விடலாம் போல இருந்தது பெண்மானுக்கு.

"சரி உடு அப்டி அஞ்சி லட்சரூவாய்க்கு அப்டி உன்னாண்ட என்னதே இருக்குன்னு இப்பவே பாத்து அனுபவிச்சு ஒவ்வொரு இடமா பாத்து தெரிஞ்சிக்கிற" என்றவன் பார்வை அவள் பூமேனியை துளைத்துக் கொண்டே அவள் தோளில் அவன் கரம் பதிக்க, நடுங்கி போனது பெண்தேகம்.

அவளின் நடுக்கம் உணராதவனோ, சேலையை பிடித்து இழுக்க, கதறி அழுதவள் இருக்கைகளாலும் தன்னை மறைத்துக் கொண்டு கட்டிலுக்கு பின்னால் தன்னை குறுக்கிக் கொண்டு அமர்ந்து குலுங்கி அழ,

"ஏய்ய். என்ன டி லட்சரூவா பணம் வாங்கிட்டு, என்கூட இருக்காம போக்கு காற்ற, வாடி" என்று அவள் தலை முடியை பற்றி இழுக்க,

"ஐயோ ப்ளீஸ் என்னை விட்ருங்க, நான் உங்க பணத்தை வாங்கள, என் சித்தி தான் வாங்கினாங்க, எதுவா இருந்தாலும் நீங்க அவங்ககிட்ட பேசிக்கோங்க, என்னை மட்டும் விட்ருங்க ப்ளீஸ்" கைகூப்பிக் கதறினாள்.

"என்ன டி கதை விட்ற, யார் பணம் வாங்கினா எனக்கு என்ன, உன்னைய வித்து தானே உன் சித்திகாரி கை நீட்டி பணம் வாங்குனா, அவ வாங்குனா என்ன நீ வாங்குனா என்ன எல்லாமே ஒன்னு தானே. ஆமா எனக்கொறு சந்தேகம், என் குடும்பத்துக்கிட்ட பணம் வாங்கி என்னைய கட்டிட்டு வந்த மாதிரி, இதுக்கு முன்னாடி எவன் எவன்கிட்டலாம் பணம் வாங்கி இந்த வேலைய பாத்த. நான் உனக்கு எத்தனாவது"
அவன் கேட்ட கேள்வியில் காதுகளை பொத்தி கூனிக் குறுகிப்போனவள் "ஐயோஓஓ. போதும்" என்று கதறி அழ,

"என்னடி போதும், இன்னும் நான் தொடங்கவே இல்ல, அதுக்குள்ள போதுன்னா, கை நிறைய பணம் வாங்கிட்டு வந்தல்ல அதுக்கு என்ன டி அர்த்தம், ராத்திரி எட்டுமணிக்கெல்லாம் நான் சாப்பிடுறேனோ இல்லையோ, எனக்கு எவளோடயாவது இருந்தே ஆவணும். இப்ப மணி என்ன?" தட்டு தடுமாறி அவன் கையில் கட்டி இருந்த கைகடிகாரத்தை கண்கள் சுருக்கி பார்த்து, "எட்டு அஞ்சாச்சி, ம்ம். சீக்கிரம் வா" என்று அவளை பிடித்து இழுக்க, வரமாட்டேன் என்று அடம் செய்தவளை ஓங்கி ஒரு அறை கன்னத்தில் விட்டான் அவன்.

ஒரே நாளில் எத்தனை அவமானங்கள், ஏமாற்றங்கள், அசிங்கங்கள், பசி பட்டினி, தகாத வார்த்தைகள் என்று எத்தனை தாங்குவாள். ஏற்கனவே மனதாலும் உடலாலும் சோர்ந்து இருந்தவள், அவன் விட்ட அறையில் மயக்கமடைந்து போனாள் மது.

தொடரும்.
 
Top