- Messages
- 266
- Reaction score
- 215
- Points
- 63
அத்தியாயம் - 5
அரவிந்தை காரின் முன் இருக்கையில் அமரவைத்து, காரில் ஏறி அமர்ந்த அந்த பெண் அந்த மழை வெள்ளத்திலும் காரை லாவகமாக இயக்கிக் கொண்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு வந்து சேர்ந்தாள்.
அதிமழையால் காரை ஷெட் இருக்கும் நட்ட நடு வழியில் நிறுத்திவள், வேகமாக இறங்கி ஓடி அங்கிருக்கும் வார்டு பாயை அழைத்த கையோடு ஸ்ட்டக்சரையும் தள்ளிக் கொண்டு ஓடி வந்தவளாக, காரில் மயக்கமாக கண் மூடிய நிலையில் இருந்த அரவிந்தை இருவருமாக சேர்ந்து தூக்கி அதில் படுக்க வைத்ததும், அந்த வார்டு பாய் உள்ளே தள்ளி சென்றதும், காரின் பின் சீட்டில் கண்ணீருடன் தவிப்பாக இருந்த பாட்டியிடம் வந்தாள்.
"பாட்டி வெளிய வாங்க உள்ள போகலாம்" உள்ளே போன குரலில் கதவை திறந்து பார்த்த மாத்திரம் பதறியவளாக, "அச்சோ.. சாரி பாட்டி தெரியாம அப்டி கூப்டுட்டேன்.. என்ன மன்னிச்சிடுங்க" என்றாள் படபடப்பாக.
"பரவாயில்ல விடுமா.. தெரியாம தானே சொன்ன ஒன்னும் பிரச்சனை இல்ல.. என் பக்கத்துல வீல் சேர் இருக்கு பாரு, அத எடுத்து தரையில விரிச்சி விட்டு என்ன ஒரு கை புடிமா.. நான் அதுல உக்காந்துப்றேன் " என்றார்.
"சரி பாட்டி" என்றவளுக்கு மனது பாரம் கூடிட விருவிருவென வீல் சேரை தரையில் விரித்தவள், மெல்ல பாட்டியை பிடித்து காரில் இருந்து இறக்கி அமர வைத்ததும், ஒரு ஓரமாக வீல் சேரோடு அவரை தள்ளி நிறுத்தியவளாக,
"பாட்டி நான் போய் காரை பார்க்கிங்ல நிறுத்திட்டு உடனே வந்திட்றேன் ", என்றவள் அவரின் பதிலை கூட எதிர்ப் பார்க்காமல், காரில் ஏறினாள்.
பறந்து விரிந்த பார்க்கிங் மைதானத்தில் மழை கருணையே காட்டாமல் பொழிந்து தள்ள அதில் பார்க் செய்தவள், காரை விட்டு இறங்கி, அவள் மேல் அணிந்து இருந்த அரவிந்தின் சட்டையை இறுக பிடித்துக் கொண்டு மழையில் நனைத்து கொண்டே பாட்டியிடம் மூச்சிறைக்க ஓடி வந்தாள்..
"பாட்டி போலாமா" என்றிட, அவளின் நிலைக் கண்ட பாட்டிக்கு பாவமாக போனது. வெறும் உள் பாவாடையுடன் அரவிந்தை முதுகில் கத்தியால் குத்தும் போதே, கத்தி பட்டு சட்டை கிழிந்து இருக்க, அதே சட்டையை அந்த பெண் அணிந்து இருந்தாலும் அவளின் சங்கோஜமான நிலையை பாட்டியால் உணர முடிந்தது.
உடனே தன் மேல் போர்த்தி இருந்த சால்வையை எடுத்தவர் அவளிடம் நீட்டி "இந்தாமா இத மேல போட்டுக்கோ" என கொடுக்க.
"அச்சோ வேணாம் பாட்டி, மழை வேற அதிகமா வருது, உங்களுக்கு குளிர் ஒத்துக்காது, நீங்க போத்திக்கோங்க" பதட்டமாக சொல்லி அதனை வாங்க மறுத்தாள்.
"அதெல்லாம் எனக்கு ஒன்னும் குளிராதுமா முதல்ல இத உன் மேல போடு, சட்டை பின்னால கிழிஞ்சி இருக்கு" என்றதும் தயக்கமாக அவர் கையில் இருந்த சால்வையை தன் மேல் போர்த்திய பிறகு தான் அவளுக்கும் அதுவரை இருந்த சங்கோஜம் சிறிது குறைந்து மூச்சி விட்டாள்..
பாட்டியும் கவனித்தவராக "சரி வாம்மா உள்ள போகலாம்" என்றிட..
"ஹ்ம்ம்.. சரி பாட்டி,," என தலையாட்டி அவரை மருத்துவமனை உள்ளே தள்ளிக்கொண்டு, அரவிந்தை அட்மிட் செய்த வார்டு எங்குள்ளது என ரிசப்ஷனில் கேட்டு விசாரித்தவளாக வேகமாக அங்கு சென்றாள்.
அங்கு மருத்துவர் அரவிந்தை பார்த்து விட்டு வெளியே வந்து என்ன நடந்தது என விசாரிக்க, என்ன சொல்வது என தெரியாமல் விழித்த பெண்ணோ, சால்வையை இறுக பிடித்து அமைதியாக இருக்கவும்,
"இங்க பாருங்க டாக்டர் சீக்கிரம் போய் என் பேரனுக்கு ட்ரீட்மெண்ட் பண்ணுங்க மத்ததெல்லாம் என் பேரன் கண் முழிச்சதும் உங்களுக்கு தெளிவா சொல்லுவான்" பாட்டி தழுதழுக்க சொல்ல,
"இல்ல அவர் பின்னாடி இருக்க காயத்தை பாத்தா கத்தி குத்து போல இருக்கு, நீங்க போலீஸ் கம்பளைண்ட் கொடுத்தா தான் நாங்க ட்ரீட்மெண்ட் கொடுக்க ஆரமிப்போம்.. இல்லனா எங்களுக்கு தான் பிரச்சனை ஆகும்" மருத்துவர் கண்டிப்புடன் கையை விரித்தார்.
அவர் சொன்னதை கேட்டு பாட்டி நிலைக்குலைந்து போய் கண் கலங்க, பட்டென மருத்துவர் காலில் விழுந்து விட்டாள் அவள்.
அதில் பதறிய அந்த மருத்துவர், "என்னம்மா பண்ற நீ" என பின்னால் போக,
"சார் சார்.. ப்ளீஸ் அவரை எப்டியாவது ட்ரீட்மெண்ட் கொடுத்து காப்பாத்துங்க.. என்னால தான் அவருக்கு இப்படி ஒரு நிலை வந்துச்சி" என்றவள் என்ன நடந்தது என கண்ணீருடன் மேலோட்டமாக சொன்னதை கேட்ட மருத்துவருக்கே, அவள் மீது பரிதாபம் தோன்ற, எதுவா இருந்தாலும் பிறகு பார்த்துக் கொள்ளலாம் என நினைத்து.. அதற்க்கு மேலும் தாமதிக்காமல் உடனே அரவிந்திர்க்கு சிகிச்சை மேற்கொள்ள சென்றார்.
அரவிந்திற்க்கு சிகிச்சை செய்ய அவன் உடல் அதிக ரத்தப்போக்கினால் ஒத்தொழைக்க மறுக்க வெளியே வந்த மருத்துவர், "எங்க ஹாஸ்பிடல்ல அவரோட பிளட் ஸ்டாக் இல்லை என்றும், உடனடியாக அரவிந்த்க்கு A நெகடிவ் பிளட் இருந்தாதான் அவருக்கு மேற்க் கொண்டு சிகிழ்ச்சை அளிக்க முடியும்" என தெளிவாக உரைத்து விட்டார்.
என்ன செய்வது என தெரியாமல் அந்த பெண் தவித்து போக.. பாட்டியோ அரவிந்தை நினைத்து அழுகையாக வந்தது.
தாமதிக்காமல் அந்த பெண் மருத்துவமனைக்கு வருவோர் போவோர் காலில் எல்லாம் விழுந்து, அரவிந்த் உயிருக்கு போராடுவதை சொல்லி "A நெகடிவ் பிளட் உங்களுக்கு இருந்தா கொஞ்சம் கொடுத்து உதவி பண்ணுங்களேன்" என கண்ணீர் விட்டு கெஞ்சி கேட்க,
ஒரு சிலர் தனக்கு அந்த குரூப் பிளட் இல்லை என்றும், சிலர் "நானே இங்க என் பிரச்சனைய தீர்க்கவே முடியாம அல்லோல் பட்டு தவிக்கிறேன், இதுல நீ வேற ஏம்மா இப்டி எங்க உயிர வாங்குற, போ இங்கருந்து" என விரட்டி விட.. அந்த பெண்ணை பார்த்து அங்கிருக்கும் அனைவருக்கும் பாவமாக போனது..
அதில் ஒரு நடுதர வயது ஆண் முன் வந்து, நான் ரத்தம் தரேமா என்றதும் முகம் பிரகாசமானவள், சட்டென அவர் கைகளை பிடித்து, "ரொம்ப நன்றி சார்.. வாங்க" என நன்றி கூறி, ரத்தம் எடுக்கும் அறைக்கு அவரை அனுப்பி வைத்தாள்..
அதுவரை அந்த பெண் செய்ததை எல்லாம் கண் அகல பார்த்துக் கொண்டிருந்த பாட்டி, என்ன தான் அரவிந்த்க்கு அவளை காப்பாற்ற போய் கத்தி குத்து ஏற்பட்டாலும்... பாரபட்சம் பாராமல் எப்படியாவது அவன் உயிர் காக்க வேண்டி, அனைவர் காலிலும் விழுந்து ரத்தம் வேண்டி மடிப் பிச்சை கேட்டது..
எல்லாம் பெரிய விடயம் தானே!
இந்தனை நாள் பாட்டியின் மனம் சுமந்து இருந்த பெரிய பாரம் நீங்கி அந்த பெண்ணை பரிவுடன் கண்டார்.
இவள் இருண்டு போன தன் பேரனின் வாழ்வை சிறக்க வைத்து ஒளி ஏற்ற வந்தவள் என நினைத்து, மனப் பூரிப்புடன், தன் பேரனுக்கு இனி இவள் ஒருத்தி இருக்கும் வரை ஒன்றும் ஆகாது என திருப்தியுடன் தெம்பாக அமர்ந்து இருந்தார்..
மழை..
அரவிந்தை காரின் முன் இருக்கையில் அமரவைத்து, காரில் ஏறி அமர்ந்த அந்த பெண் அந்த மழை வெள்ளத்திலும் காரை லாவகமாக இயக்கிக் கொண்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு வந்து சேர்ந்தாள்.
அதிமழையால் காரை ஷெட் இருக்கும் நட்ட நடு வழியில் நிறுத்திவள், வேகமாக இறங்கி ஓடி அங்கிருக்கும் வார்டு பாயை அழைத்த கையோடு ஸ்ட்டக்சரையும் தள்ளிக் கொண்டு ஓடி வந்தவளாக, காரில் மயக்கமாக கண் மூடிய நிலையில் இருந்த அரவிந்தை இருவருமாக சேர்ந்து தூக்கி அதில் படுக்க வைத்ததும், அந்த வார்டு பாய் உள்ளே தள்ளி சென்றதும், காரின் பின் சீட்டில் கண்ணீருடன் தவிப்பாக இருந்த பாட்டியிடம் வந்தாள்.
"பாட்டி வெளிய வாங்க உள்ள போகலாம்" உள்ளே போன குரலில் கதவை திறந்து பார்த்த மாத்திரம் பதறியவளாக, "அச்சோ.. சாரி பாட்டி தெரியாம அப்டி கூப்டுட்டேன்.. என்ன மன்னிச்சிடுங்க" என்றாள் படபடப்பாக.
"பரவாயில்ல விடுமா.. தெரியாம தானே சொன்ன ஒன்னும் பிரச்சனை இல்ல.. என் பக்கத்துல வீல் சேர் இருக்கு பாரு, அத எடுத்து தரையில விரிச்சி விட்டு என்ன ஒரு கை புடிமா.. நான் அதுல உக்காந்துப்றேன் " என்றார்.
"சரி பாட்டி" என்றவளுக்கு மனது பாரம் கூடிட விருவிருவென வீல் சேரை தரையில் விரித்தவள், மெல்ல பாட்டியை பிடித்து காரில் இருந்து இறக்கி அமர வைத்ததும், ஒரு ஓரமாக வீல் சேரோடு அவரை தள்ளி நிறுத்தியவளாக,
"பாட்டி நான் போய் காரை பார்க்கிங்ல நிறுத்திட்டு உடனே வந்திட்றேன் ", என்றவள் அவரின் பதிலை கூட எதிர்ப் பார்க்காமல், காரில் ஏறினாள்.
பறந்து விரிந்த பார்க்கிங் மைதானத்தில் மழை கருணையே காட்டாமல் பொழிந்து தள்ள அதில் பார்க் செய்தவள், காரை விட்டு இறங்கி, அவள் மேல் அணிந்து இருந்த அரவிந்தின் சட்டையை இறுக பிடித்துக் கொண்டு மழையில் நனைத்து கொண்டே பாட்டியிடம் மூச்சிறைக்க ஓடி வந்தாள்..
"பாட்டி போலாமா" என்றிட, அவளின் நிலைக் கண்ட பாட்டிக்கு பாவமாக போனது. வெறும் உள் பாவாடையுடன் அரவிந்தை முதுகில் கத்தியால் குத்தும் போதே, கத்தி பட்டு சட்டை கிழிந்து இருக்க, அதே சட்டையை அந்த பெண் அணிந்து இருந்தாலும் அவளின் சங்கோஜமான நிலையை பாட்டியால் உணர முடிந்தது.
உடனே தன் மேல் போர்த்தி இருந்த சால்வையை எடுத்தவர் அவளிடம் நீட்டி "இந்தாமா இத மேல போட்டுக்கோ" என கொடுக்க.
"அச்சோ வேணாம் பாட்டி, மழை வேற அதிகமா வருது, உங்களுக்கு குளிர் ஒத்துக்காது, நீங்க போத்திக்கோங்க" பதட்டமாக சொல்லி அதனை வாங்க மறுத்தாள்.
"அதெல்லாம் எனக்கு ஒன்னும் குளிராதுமா முதல்ல இத உன் மேல போடு, சட்டை பின்னால கிழிஞ்சி இருக்கு" என்றதும் தயக்கமாக அவர் கையில் இருந்த சால்வையை தன் மேல் போர்த்திய பிறகு தான் அவளுக்கும் அதுவரை இருந்த சங்கோஜம் சிறிது குறைந்து மூச்சி விட்டாள்..
பாட்டியும் கவனித்தவராக "சரி வாம்மா உள்ள போகலாம்" என்றிட..
"ஹ்ம்ம்.. சரி பாட்டி,," என தலையாட்டி அவரை மருத்துவமனை உள்ளே தள்ளிக்கொண்டு, அரவிந்தை அட்மிட் செய்த வார்டு எங்குள்ளது என ரிசப்ஷனில் கேட்டு விசாரித்தவளாக வேகமாக அங்கு சென்றாள்.
அங்கு மருத்துவர் அரவிந்தை பார்த்து விட்டு வெளியே வந்து என்ன நடந்தது என விசாரிக்க, என்ன சொல்வது என தெரியாமல் விழித்த பெண்ணோ, சால்வையை இறுக பிடித்து அமைதியாக இருக்கவும்,
"இங்க பாருங்க டாக்டர் சீக்கிரம் போய் என் பேரனுக்கு ட்ரீட்மெண்ட் பண்ணுங்க மத்ததெல்லாம் என் பேரன் கண் முழிச்சதும் உங்களுக்கு தெளிவா சொல்லுவான்" பாட்டி தழுதழுக்க சொல்ல,
"இல்ல அவர் பின்னாடி இருக்க காயத்தை பாத்தா கத்தி குத்து போல இருக்கு, நீங்க போலீஸ் கம்பளைண்ட் கொடுத்தா தான் நாங்க ட்ரீட்மெண்ட் கொடுக்க ஆரமிப்போம்.. இல்லனா எங்களுக்கு தான் பிரச்சனை ஆகும்" மருத்துவர் கண்டிப்புடன் கையை விரித்தார்.
அவர் சொன்னதை கேட்டு பாட்டி நிலைக்குலைந்து போய் கண் கலங்க, பட்டென மருத்துவர் காலில் விழுந்து விட்டாள் அவள்.
அதில் பதறிய அந்த மருத்துவர், "என்னம்மா பண்ற நீ" என பின்னால் போக,
"சார் சார்.. ப்ளீஸ் அவரை எப்டியாவது ட்ரீட்மெண்ட் கொடுத்து காப்பாத்துங்க.. என்னால தான் அவருக்கு இப்படி ஒரு நிலை வந்துச்சி" என்றவள் என்ன நடந்தது என கண்ணீருடன் மேலோட்டமாக சொன்னதை கேட்ட மருத்துவருக்கே, அவள் மீது பரிதாபம் தோன்ற, எதுவா இருந்தாலும் பிறகு பார்த்துக் கொள்ளலாம் என நினைத்து.. அதற்க்கு மேலும் தாமதிக்காமல் உடனே அரவிந்திர்க்கு சிகிச்சை மேற்கொள்ள சென்றார்.
அரவிந்திற்க்கு சிகிச்சை செய்ய அவன் உடல் அதிக ரத்தப்போக்கினால் ஒத்தொழைக்க மறுக்க வெளியே வந்த மருத்துவர், "எங்க ஹாஸ்பிடல்ல அவரோட பிளட் ஸ்டாக் இல்லை என்றும், உடனடியாக அரவிந்த்க்கு A நெகடிவ் பிளட் இருந்தாதான் அவருக்கு மேற்க் கொண்டு சிகிழ்ச்சை அளிக்க முடியும்" என தெளிவாக உரைத்து விட்டார்.
என்ன செய்வது என தெரியாமல் அந்த பெண் தவித்து போக.. பாட்டியோ அரவிந்தை நினைத்து அழுகையாக வந்தது.
தாமதிக்காமல் அந்த பெண் மருத்துவமனைக்கு வருவோர் போவோர் காலில் எல்லாம் விழுந்து, அரவிந்த் உயிருக்கு போராடுவதை சொல்லி "A நெகடிவ் பிளட் உங்களுக்கு இருந்தா கொஞ்சம் கொடுத்து உதவி பண்ணுங்களேன்" என கண்ணீர் விட்டு கெஞ்சி கேட்க,
ஒரு சிலர் தனக்கு அந்த குரூப் பிளட் இல்லை என்றும், சிலர் "நானே இங்க என் பிரச்சனைய தீர்க்கவே முடியாம அல்லோல் பட்டு தவிக்கிறேன், இதுல நீ வேற ஏம்மா இப்டி எங்க உயிர வாங்குற, போ இங்கருந்து" என விரட்டி விட.. அந்த பெண்ணை பார்த்து அங்கிருக்கும் அனைவருக்கும் பாவமாக போனது..
அதில் ஒரு நடுதர வயது ஆண் முன் வந்து, நான் ரத்தம் தரேமா என்றதும் முகம் பிரகாசமானவள், சட்டென அவர் கைகளை பிடித்து, "ரொம்ப நன்றி சார்.. வாங்க" என நன்றி கூறி, ரத்தம் எடுக்கும் அறைக்கு அவரை அனுப்பி வைத்தாள்..
அதுவரை அந்த பெண் செய்ததை எல்லாம் கண் அகல பார்த்துக் கொண்டிருந்த பாட்டி, என்ன தான் அரவிந்த்க்கு அவளை காப்பாற்ற போய் கத்தி குத்து ஏற்பட்டாலும்... பாரபட்சம் பாராமல் எப்படியாவது அவன் உயிர் காக்க வேண்டி, அனைவர் காலிலும் விழுந்து ரத்தம் வேண்டி மடிப் பிச்சை கேட்டது..
எல்லாம் பெரிய விடயம் தானே!
இந்தனை நாள் பாட்டியின் மனம் சுமந்து இருந்த பெரிய பாரம் நீங்கி அந்த பெண்ணை பரிவுடன் கண்டார்.
இவள் இருண்டு போன தன் பேரனின் வாழ்வை சிறக்க வைத்து ஒளி ஏற்ற வந்தவள் என நினைத்து, மனப் பூரிப்புடன், தன் பேரனுக்கு இனி இவள் ஒருத்தி இருக்கும் வரை ஒன்றும் ஆகாது என திருப்தியுடன் தெம்பாக அமர்ந்து இருந்தார்..
மழை..
Author: Indhu Novels
Article Title: அத்தியாயம் 5
Source URL: Indhu Novels-https://indhunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Article Title: அத்தியாயம் 5
Source URL: Indhu Novels-https://indhunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.