Hello! It seems that you are using AdBlock - some functions may not be available. Please add us as exceptions. Thank you for understanding!
  • வணக்கம் 🙏🏻 இந்து நாவல்ஸ் தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்
  • இந்து நாவால்ஸ் தளத்தில் எழுத விரும்புவோர், indhunovel@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு செய்தி அனுப்பவும். கற்பனைகளை காவியமாக்குங்கள் ✍🏻💖
New member
Messages
22
Reaction score
1
Points
3
அத்தியாயம் 11

வரிசையாக ஒவ்வொரு வேலையாட்களும் மனோகரனிடம் வந்து சொல்ல... அவருக்கோ கையும் ஓடவில்லை. காலும் ஓடவில்லை. நெஞ்சே வழி எடுக்க... மெல்லியதாக தையிரியத்தை வரவழைத்து கொண்டார். மேலே உள்ள தனது மகன் ரிஷியை பார்ப்போம் என நினைத்து அங்கு போய் பார்க்க... அவனோ மூச்சு பேச்சு இல்லாமல் படுத்து கிடந்தான். உடனடியாக அவனை மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். அவனுக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. வெகு நேர காத்திருப்புக்கு பிறகு டாக்டர் வெளியே வர... சார் என் மகனுக்கு என்ன ஆச்சு என கேட்டார்.

சார் உங்க பையன் நிறைய தூக்க மாத்திரை எடுத்துருக்காரு. அதோட வீரியம் உங்க பையனோட உடம்பை ரொம்பவுமே எபெக்ட் கொடுத்துருக்கு. இப்ப எதுவும் உறுதியா சொல்ல முடியாது. இருபத்திநாலு மணி நேரம் கழித்துதான் எது இருந்தாலும். என்னால சொல்ல முடியும். என சொல்லி விட்டு சென்று விட்டார்.

நேற்று இரவு நடந்தது. சில பல யோசனைகளுக்கு பிறகு குழலி ஒரு முடிவெடுத்தாள். மனதை கல்லாக்கி கொண்டாள். நடப்பது நடக்கட்டும் நமக்கு கொடுத்த வேலையை மட்டும் செய்வோம் என நினைத்தாள். ஆனால் மனசாட்சியோ கேட்ட கேள்விக்கு பதில் சொல்ல முடியவில்லை அவளால். ஏற்கனவே அவள் வைத்திருந்த மாத்திரைகளை கையில் எடுத்தாள். மாத்திரைகளை அவள் கையில் வைத்து எண்ண கூடவில்லை. மாறாக பாட்டிலில் வைத்திருக்கும் அனைத்து மாத்திரைகளையும் எடுத்து பாலில் கலந்தாள். அவனுக்கு கொடுத்து விட்டு அவன் உறங்கிய பிறகு விதுரணை அழைத்துக் கொண்டு யாருக்கும் தெரியாமல். கிளம்பி இருந்தனர்.

இதோ டெல்லி என சொன்னவள் ஒரு குக் கிராமத்திற்கு அழைத்து வந்திருந்தாள். தூத்துக்குடி பக்கம் உள்ள அழகாபுரி என்னும் கிராமத்திற்கு வந்தார்கள். எப்படியும் நம்மை தேடி விதுரனின் குடும்பத்திருந்து ஆள் அனுப்பி தேட சொல்வார்கள். அதற்க்கு நாம் சிட்டிக்கு போகாமல் இப்படி கிராமத்திற்கு வந்தால் மட்டுமே நாம் தப்பிக்க முடியும் என கணக்கு போட்டு விதுரனை இங்கு அழைத்து வந்தாள்.

கிராமத்திற்கு வந்து முழுதாக மூன்று நாட்கள் முடிவடைந்து விட்டது. வாடகைக்கு ஒரு சிறு வீட்டை எடுத்தனர். ஒரு சமையல அறை, ஹால், ஒரு சிறிய பெட் ரூம், வீட்டின் வெளியே அழகான பூந்தோட்டம் அமைக்கலாம் அவ்வளவு இடம் இருந்தது. பார்த்தவுடனே... குலழிக்கு பிடித்து போக அட்வான்ஸ் பணத்தை கொடுத்துவிட்டு வீட்டிற்கு வந்து விட்டனர்.

அன்று சமைப்பதற்க்காக அவள் வேலைகளை செய்து கொண்டிருக்க... அவளோ அவனை பார்த்தும் பார்க்காமல் அவளது வேலைகளை தொடர்ந்தாள். விதுரனுக்கோ சந்தேகம் வலுப்பட்டு கொண்டே இருந்தது. குழலி என்று அழைத்தான்.

சொல்லுடா...

வினோ எங்க?

அது வினோவுக்கு... வினோ...

ம்... சொல்லு வினோவுக்கு...

இதற்கு மேல் அவளால் உண்மையை மறைத்து வைக்க முடியவில்லை. என்னை மன்னிச்சுரு விதுரா...

எதுக்கு மன்னிக்கணும்.

வினோ இப்ப உயிரோட இல்ல.

இப்ப நீ என்ன சொன்ன?

ஆமாடா அவ உயிரோட இல்லடா.... என்றால் முகத்தை தொங்க போட்டு கொண்டு.

இல்ல அப்படி இருக்காது. இருக்கவும் கூடாது. அன்னைக்கு ரெஜிஸ்டர் ஆபிஸ்ல கல்யாணம் நடந்தது. அவள் அவ்ளோ சந்தோசமா இருந்தாள் அதை நான் மறக்கலை.

சரிடா மறக்கலை அதுக்கு பிறகு என்ன ஆச்சு?

அதுக்கப்புறமா... அதுக்கு... அ... ஐயோ... என தலையை பிடித்து கொண்டான்.

நான் சொல்லட்டுமா? என இருக்கைகளை மார்பின் குறுக்கே கட்டி கொண்டு கேட்டாள்.

சொல்லு குழலி... சொல்லு அவளுக்கு என்ன ஆச்சு என் வினிக்கு என்ன ஆச்சு? எப்படி அவள் செத்தால் அவளை உலுக்கி கேட்டான்.

அன்னைக்கு....

விதுரன் பனிரெண்டாவது படித்துவிட்டு மேல் படிப்பிற்காக சென்னையில் உள்ள மிக பிரசித்தி பெற்ற மருத்துவ கல்லூரியில் அவனை சேர்த்தனர். படிப்பில் விதுரன் மிகவும் கெட்டிக்கார பையன். தான் ஒரு பணக்கார வீட்டு பையன் என்று எப்பொழுதும் தன் நண்பர்களின் வட்டாரத்தில் காமித்து கொள்ள மாட்டான். அவனது அப்பா பைக், கார் போன்றதை கொடுத்தார். ஆனால் அவனோ இதெல்லாம் வேண்டாம் நான் பஸ்லயே போயிட்டு வந்துக்குறேன் என சொல்லிவிட்டான். மாதங்கள், வருடங்கள் பல கடக்க அவனும் இறுதி ஆண்டுக்கு வந்திருந்தான்.

ஐயோ... என பெரும் சத்தம் அங்கே கேட்க... வண்டியிலிருந்து கீழே இறங்கினாள் குழலி.

ஐயோ... என்னாச்சு? அடி எதுவும் படலையே... சாரிங்க நான் தெரியாம உங்க மேல வண்டியை விட்டுட்டேன். மன்னிச்சுருங்க... என்றாள் குழலி.

ஆம் நம் குலழிதான் அவளது ஸ்கூட்டியை ஓட்டி வரும் போது... விதுரனின் மீது பட்டது. காலில் அடி... அவன் வலியால் துடிக்க... குலழியோ சாரி சாரி என பலமுறை கேட்டு விட்டாள்.

பரவாயில்லை விடுங்க. எனக்கு ஒரு ஹெல்ப் பண்றிங்களா?

ஐயோ என்னங்க இப்படி கேட்டுட்டீங்க? கண்டிப்பா பண்றேன்.

ரொம்ப தேங்க்ஸ்ங்க... என்னைய ***** காலேஜில் ட்ராப் பண்ண முடியுமா? எக்ஸாம் இருக்கு என்னால எந்திரிச்சு நடக்க கூட முடியல... லேட் ஆச்சுன்னா நான் எக்ஸாம் எழுத முடியாது என்றான்.

இந்த காலத்துல இப்படி ஒரு ஆம்பள பையனா? இவ்ளோ பொறுமை, எதார்த்தம் நான் பார்த்ததே இல்லையே... என நினைத்தாள். சரி வாங்க ட்ராப் பண்றேன் என சொல்லியவள் அவனை அழைத்து கொண்டு காலேஜில் இறக்கி விட்டாள். அந்த காலேஜை பார்த்ததும் அட... நீங்களும் இதே காலேஜ்தானா... என் தங்கையும் இதே காலேஜ்தான். நான் இங்க தினமும் வருவேனே... என்னைய பாக்கலையா நீங்க?

இல்லைங்களே... ஆமா உங்க தங்கச்சி என்ன இயர்?

போர்த் இயர்.... பேரு வினோதினி என்றாள் புன்னகையுடன்.

சரி நான் வரேன் என சொல்லிவிட்டு பறந்தே விட்டாள்.

நாட்கள் இப்படியே செல்ல... சில இடங்களில் எதார்த்தமாக விதுரனும், குழலியும் சந்தித்து கொள்ள... அவர்களது நட்பு தொடர்ந்தது. குழலி விதுரனை வீட்டுக்கு அழைத்தாள். அவனும் வர அங்கே வினோதினியும் இருக்க... பார்த்தவுடன் காதல் மேஜிக் இருவருக்கும் உருவாக ஒரு கட்டத்தில் இருவரும் காதலை பரிமாறி கொண்டனர். பொருட்களை பரிமாறி கொண்டனர். கடைசியாக உடலையும் பறிமாறி கொண்டனர். அதன் பிறகு வினோ கன்சிவ் ஆக யாருக்கும் சொல்லாமல் இருவரும் ரெஜிஸ்டர் மேரேஜ் செய்தனர். சாட்சி கையெழுத்து போடுவதற்கு கூட ஆட்களை தயார் செய்து பணம் கொடுத்து செட் பண்ணான் விதுரன். ஆன மட்டும் சொல்லி பார்த்தான். குலழிக்கு மட்டுமாவது சொல்லலாம் என்று... வேண்டாம் விதுரா... என் அக்காதான் எங்க வீட்டுக்கே தூண் போல இருப்பவள். இதை மட்டும் நான் சொன்னால் அவள் உடைந்தே போய்விடுவாள். நமக்கு திருமணம் ஆகட்டும். நீ இங்கேயே இரு. எனக்கு ஹைதிராபாத்திலிருந்து மேல் படிப்பு படிக்க... அழைப்பு வந்துருக்கு. அவங்களே எல்லாம் பணத்தையும் செலுத்தி படிக்க வைக்கிறாங்க வர ஒரு வருடம் ஆகும்னு சொல்வோம். கடைசியில குழந்தையோட போய் நின்னா ஒன்னும். சொல்ல மாட்டாங்க என்றாள். அவன் வேண்டாம் என மறுக்க... அவளோ விடாபிடியாக அவளின் திட்டத்திற்க்கு ஒத்துக் கொண்டான்.

சொல்லி இருக்கலாம் வினோதினி... அநியாயமாக இறந்து போயிருக்க மாட்டாள்.

கள்வன் தொடர்வான்.
 

Author: shakthinadhi
Article Title: கள்வன் 11
Source URL: Indhu Novels-https://indhunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top