Hello! It seems that you are using AdBlock - some functions may not be available. Please add us as exceptions. Thank you for understanding!
  • வணக்கம் 🙏🏻 இந்து நாவல்ஸ் தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்
  • இந்து நாவால்ஸ் தளத்தில் எழுத விரும்புவோர், indhunovel@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு செய்தி அனுப்பவும். கற்பனைகளை காவியமாக்குங்கள் ✍🏻💖
Administrator
Staff member
Messages
226
Reaction score
211
Points
63
அத்தியாயம் - 6

காஷ்மீர் குளிரின் தாக்கத்தில், ஒற்றை போர்வையை மட்டும் தன் மீது போர்த்தியபடி, சிறு நடுக்கத்துடன் தரையில் சுருண்டு கிடந்த முக்தா, விடியலின் உணர்வு எட்டியதும், சட்டென எழுந்தவளாக மதன் இருக்கிறானா என்று தான் முதலில் பார்த்தாள்.

இரவு கதவை பூட்டி விட்டு சென்றவன் இன்னும் வரவில்லை என்பதை உணர்ந்தவள், குளியலறை சென்று வெளி வந்த முக்தாவின் முகம் அதீத சோர்வில் மூழ்கி, சொல்ல முடியாத தவிப்பில் தத்தளித்தது.

"அரே தேவா.. எனக்கு ஏன் இந்த வேதனை.." முளுக்கென கொட்டிய கண்ணீரோடு சுவரில் சாய்ந்து நின்ற பேதையின் கண்களில், அங்கு செல்ஃபில் வைத்திருந்த கவர் ஒன்று தென்படவும், வேகமாக அதனை எடுத்து பிரித்துப் பார்த்த முத்தப்பெண்ணின் முகத்தில் சிறு வியப்பு தோன்றி, சட்டென மறைந்தன.

தீயவளாக இருந்தாலும் பெண் தானே, உடை கிழிந்து அவதி படுவதை உணர்ந்து, கண்ணில் சிக்கிய ஒரு சுடிதார் செட்டை முந்தைய இரவே வாங்கி வைத்து சென்றிருந்தான் மதன்.

ஆனால் என்ன பயன்! மேல் மறைப்பு வாங்கத் தோன்றிய ஆணவனோ, பெண்ணுக்குள் உண்டாகும் உபாதை பற்றி யோசிக்க மறந்து போனானே!

"இது வேற இப்பன்னு பாத்து தான் கரெக்ட் டைமுக்கு வந்து உயிரை வாங்குமா.." புது உடை இருந்தும் அதனை அணிய முடியாத துயரத்தில், வயிற்றில் கை வைத்து தன் நிலையை நொந்த பாவை, செய்வதறியாது சுவற்றில் சாய்ந்து நின்றாள்.

நேரம் செல்ல செல்ல கால்கள் வலுவிழந்து, கிடுகிடுவென நடுங்க தொடங்கிட, சட்டென கதவு திறக்கும் சத்தத்தில், பொத்தென தரையில் விழுந்து கைகள் துலாவி, போர்வை கொண்டு தன்னை அவரசமாக மூடிக்கொண்ட செயல், அப்போதே உள்ளே வந்த மதன் கண்ணிலும் தப்பாமல் பட்டது.

"என்ன பண்றா இவ.." கண்கள் இடுங்க அவளை விசித்திரமாக கண்ட மதன்,

"இப்ப எதுக்கு ஓவர் ரியாக்ட் பண்ற.." என்றான் கடுப்பாக.

பதிலின்றி போர்வைக்குள் ஒளிந்த முக்தாவின் முகம் இருண்டிருப்பதை உணர்ந்து, அவளருகே தான் வாங்கி வைத்திருந்த உடை பாதி பிரித்த நிலையில், தரையில் இருப்பதையும் பார்த்த மதன்,

"நீ தீவிரவாதி கூட்டத்தை சேர்ந்தவன்னு தெரிஞ்சும், இந்த அளவுக்கு மெனக்கிட்டு போட்டுக்க துணி மொதக்கொண்டு வாங்கி தந்திருக்க காரணம், நீ ஒரு பொண்ணு..

ஆனா உனக்கு வெறும் போர்வை போதும் போலையே.. நான் தான் தேவை இல்லாம பணத்த செலவு பண்ணிட்டேனோ.." யோசனையாக தாடியை நீவ, தவிப்பாக அவனை பார்த்த முக்தா, ஏதோ சொல்ல வருவதும், முடியாமல் திணறுவதுமாய் இருப்பதை தாமதமாகவே உணர்ந்தான்.

"ஏய் என்ன.." சற்றே கரார் குரல் எழுப்பவும், அசோகர்யமாக நெளிந்த முக்தா,

"கிருபயா தோடம் பாஹேர் ஜா நா" தன்னை வெளி செல்ல சொல்லி சொன்னது புரியாமல், முறைத்து நின்றான்.

"நாக்கு புரியாம பேசியே அடி வாங்க போற.. என்னவோ பண்ணு.." எரிச்சலாக கத்தி, குளித்து முடித்து வந்த மதன் டபுள் சொக்கா வைத்த கரும்பச்சை சட்டை, பிளாக் பேண்ட்டினை அணிந்துகொண்டவனாக, காய்ந்து போன பம்பை முடியை விரலால் கோதி ஒழுங்கு படுத்தியவாறே, கண்கள் கலங்கி இருந்தவளை நோக்க,

"என்னவோ சரி இல்லையே.." அவள் அமர்ந்திருந்த கோலம், ஆண் மனதை பிசைய வைத்தது.

"ஏய் உன்னைத்தான், என்னாச்சி உனக்கு.." கடினக் குரல் சற்றே சாந்தமாக வருவதை உணர்ந்து, விழிகள் கலங்கி அவனை நிமிர்ந்த பார்த்த முக்தா,

"லேடிஸ் ப்ராப்லம்.." ஆங்கிலத்தில் சத்தம் வெளி வராமல் சொல்ல, தனிக்காட்டு ராஜாவாக வாழ்ந்து பழகியவன் மூளைக்கு, சட்டென உரைக்கவில்லை அதன் அர்த்தம்.

"அதான் தெலுசு, கூடவே உன்ன வச்சிக்கிட்டு ரொம்ப ப்ராப்லமா தான் இருக்கு.." அலுத்துக் கொண்டவனை, முக்தா முறைப்பாக பார்க்க,

"ஹைய் தோ பார்டா முறைப்ப.. அழுத்தமா மூடிட்டு இருக்க உன் வாய அடிச்சி உடைக்காம, சோறு போட்டு, துணி வாங்கி தந்து, கைய கால கட்டி வைக்காம உன்ன சுதந்திரமா விட்டு வச்சிருக்கேன் பாத்தியா, எனக்கு இது தேவைதான்.."

கடுப்பான மதன் வெண்சுருட்டை எடுத்து பற்ற வைத்து இழுக்க, புகையின் நெடியில் மூக்கை மூடியவளின் கரம் போர்வையினை விட்டிருக்க, தோளில் இருந்து நழுவி விழுந்த போர்வை வழியே, அவளது நிறம் மாறி சொதசொதத்த காலுடை தென்பட்டது.

மதனின் பார்வை தன் மீதுள்ளதை உணர்ந்து, குனிந்து பார்த்த முக்தா, விழிகள் கலங்கியவளாக அவசரமாக மீண்டும் போர்வையை இழுத்து தன்னை மூடிக்கொள்ள, தலைகோதிக்கொண்ட மதன் அமைதியாக வெளியேறிய பத்து நிமிடத்திற்குள், அவளுக்கானதை வாங்கி வந்து மெத்தை மேல் போட்டு விட்டு மீண்டும் வெளியேறிய அவன் செயல், முக்தாவை வியக்க வைத்தது.

ஹீட்டர் உபயத்தால் சூடான நீரில் குளித்து முடித்து வெளி வந்த முக்தா, அங்கிருந்த கண்ணாடியில் தன் உருவம் பார்க்க, மதன் வாங்கி கொடுத்த மரூன் நிற சுடிதார் பெண்ணின் வண்ண மேனிக்கு கட்சிதமாக பொருந்தி இருந்தது.

"இவ்வளவு கரெக்ட்டான அளவு எப்டி வாங்கி இருப்பான்.. ஒருவேளை கண்ணால பாத்தே என் அளவை ஸ்கேன் பண்ணிட்டானோ.." குழப்பமாக எண்ணியவளின் அளவான கூந்தலில் இருந்து சொட்டும் குளிர் நீரே, சில்லென்று நடுங்க வைத்தது.

"டவல் இருக்குமா.." விழிகள் உருட்டி தேட, ஆங்கரில் தொங்கிய துண்டினை எடுத்து தலை துவட்டியவளின் நாசியை தீண்டிய வாசத்தில், கரங்கள் செயலிழந்த நிலையில் மெல்ல அந்த துண்டினை பார்த்த பெண்ணின் நேத்திரங்கள், படபடப்பாக அடித்துக்கொள்ள,

"ச்சீ.. போயும் போயும் அவன் யூஸ் பண்ண டவலையா எடுப்பேன்.." அருவருப்பில் பதறிய முக்தா, அந்த துண்டினை தூக்கி அப்படியே அவன் மெத்தையில் போட்டவளாக, நெஞ்சி படபடப்போடு நின்றாள்.

சற்று முன்னர் தான் மதன் குளித்து வந்து இதே துவாயை பயன்படுத்தி விட்டு ஆங்கரில் மாட்டி சென்றிருந்தான்.

அந்நிய ஆண் பயன்படுத்திய ஈரம் காயத துவாயை யோசிக்காமல் எடுத்து தானும் உபயோகப்படுத்தி விட்டோமே என்ற எண்ணமே சங்கடத்தை கொடுக்க, அவனது நிக்கோடின் கலந்த வாசனை நாசிக்குள் புகுந்து உள்ளே என்னவோ பண்ணியது.

"இன்னும் எத்தனை நாளைக்கு இவனோட இங்க நான் மேனேஜ் பண்ண முடியும்.. தூக்கிட்டு வந்து ஒரு வாரமாச்சு, இதுவரைக்கும் வெளிய என்ன நடக்குது, என் தம்பியும் அம்மாவும் என்ன பண்றாங்க ஒன்னும் புரியல..

ந்.நி..நிரோஜ் என்ன தேடி வீட்டுக்கு போயிருப்பானா.." நிலைக்கண்ணாடி முன்னே தீவிர யோசனையில் நின்றிருந்த முக்தா, கதவு திறக்கும் சத்தம் கேட்டு திடுகிட்டு திரும்ப, மதனின் இடுங்கிய பார்வை அவளை கூர்மையாக நோட்டமிட்டது.

"தப்பிச்சி போக தீவிர பிளானோ.." கேலியாக உதடு வளைத்து, கொண்டு வந்த உணவை பிரித்து உண்ணத் தொடங்க, சோர்ந்த முகத்துடன் அமைதியாக தலை குனிந்த முக்தாவின் தேகம் விரைத்தது குளிரில்.

துப்பட்டா கொண்டு தன்னை போர்த்தியபடி தன் இடத்தில் வந்து அமர்ந்தவளுக்கு, பசியேதும் தோன்றவில்லை வயிற்று வலியினை தாண்டி.

நீர் சொட்டும் தலை முடியே உடலை நடுங்க செய்ய, பற்கள் டைப் அடிக்கும் சத்தம் மதனுக்கும் கேட்க தான் செய்தது.

"டவல் தான் இருக்கே யூஸ் பண்றது.." லெக்பீஸை கடித்து இழுக்கும் சத்தத்தோடு, கள்ளனின் குரலும் எதிரொலிக்க,

"எது நீ யூஸ் பண்ணதா.." கடுப்பாக மனதில் எண்ணிய முக்தா, வாய் திறக்கவில்லை.

"இந்த அழுத்தம் தான் டி, நீ இன்னும் இங்க இருக்க காரணம்.." பற்களை கடித்த மதன், விரைவாக உண்டு முடித்து தட்டில் கை கழுவ, அலைபேசி அதிர்ந்தது.

"மதனு எக்கட உன்னாவு.." ருத்தரனின் குரல் அதிர்ந்தது, முக்தாவின் செவியை கூட எட்டிட,

"வீட்ல தான் அண்ணய்யா.." பதில் கொடுத்தவன் குரலும் தழைவதை கவனிக்கவே செய்தாள்.

"என்னடா இப்போல்லாம் அடிக்கடி வீட்ல தான் இருக்க, என்ன விசயம்.." சந்தேகக் கேள்வியில் எச்சில் விழுங்கிய மதன்,

"என்ன அண்ணய்யா.." என்றான் புரியாதவன் போல.

"ப்ச், போடா.. குயிலு அம்மா போன் போட்டா எடுக்க மாட்டேங்குறியாம், எனக்கு போன போட்டு நச நசன்னு பேசி தலை வலி வந்தது தான் மிச்சம்.." ருத்ரன் காட்டமாக கத்தியும், இப்பக்கம் அமைதி.

"ரெண்டு நாளுல தஞ்சாவூர் போறது நெனவிருக்கா.."

"இருக்கு அண்ணய்யா.." என்றான் மெதுவாக.

"சொன்னது என்னாச்சி.."

"என்ன அண்ணய்யா நீயும் அவங்கள போல புரியாம பேசுற.. திடீர்னு ஒரு அம்மாயி கண்டுபுடிச்சி, அவள என் மனசுக்கு புடிச்சி, உன் முன்னாடி கூட்டிட்டு வந்து, எப்டி அண்ணய்யா கட்டிக்கிறது.. கொஞ்சமாவது கால அவகாசம் வேணாமா.." உரிமையாக கடிந்து கொண்ட மதனை எண்ணி, இப்போது அப்பக்கம் ருத்ரன் இதழில் சிறுநகை கொண்டது.

"அதையேத்தான் டா நானும் சொல்றேன்.. இத்தனை வருஷமா கண்டுபுடிக்காத பொண்ண இனிமே நீ கண்டு புடிச்சி, உன் மனசுக்கு புடிச்சி, எங்கிட்ட கூட்டிட்டு வந்து கட்டிக்கிறது எல்லாம் நடக்காத காரியம்..

என்னவோ நீ ஒண்டிக்கட்டையா சுத்த நானு தான் காரணம்ன்ற மாறி, உன் வதினா வேற என்ன முறைக்கிறா, கோணல் மானலா முகத்தை சுளிக்கிறா..

ஒழுங்கா மாமி பாத்த கயலையே கட்டிக்க..

அதுக்கு முன்னாடி, மாமி போன் பண்ணா எடுத்து தொலை.." நாக்கை மடித்து கடித்து திட்டி போனை வைக்க, புயலடித்து ஓய்ந்த உணர்வானது.

"தஞ்சாவூர் போனா கண்டிப்பா எதையாவது பேசி, பரிமளாம்மா கல்யாணத்துக்கு ஏற்பாடு பண்ணிடுவாங்களே, இப்ப என்ன பண்றது.." மனம் விரும்பாத பெண்ணை மணம் முடிக்க ஒப்பாமல், தலையினை பிடித்துக்கொண்டவனை ஆரம்பம் முதல் பார்த்த முக்தா,

"பாக்க தான் புலி, அவன் அண்ணாகிட்ட எலியா பம்புறானே.." என்று நினைக்கையில் சிரிப்பு வந்து விட்டது.

சத்தம் வெளிகேட்காது உடல் மட்டும் லேசாக குலுங்கி தனியாக சிரித்துக்கொள்ளும் போதே, பரிமளம் மாமியின் அழைப்பு வந்திட, அதனை ஏற்று காதில் வைத்தது தான் தாமதம்.

"ஏன்டா அம்பி நோக்கு எத்தனை முறை போன் செய்றது, உன்னை என்ன மலைய வெட்டியா என் கையில கொண்டாந்து கொடுக்க சொன்னேன், ஒரு கல்யாணம் தானே கட்டிக்க சொல்றேன்.. ஏன்டா வீம்பு பண்ற.." பட்டாசாய் வெடித்த மாமிக்கு, மதனை ரொம்பவும் பிடிக்கும்.

இவனையும் தங்கள் குடும்பத்தில் ஒருவனாக, மற்றொரு மகனாக எண்ணுவதால் தானே, இத்தனை உரிமை கண்டிப்பு பேச்சி எல்லாம்.

"இப்ப கல்யாணத்துக்கு என்ன ம்மா அவசரம்.." உரிமையாக அம்மா என்பவனும், பரிமளத்தின் அதட்டல் மிரட்டலை யாவும் விரும்பியே தானே கேட்டுக்கொள்கிறான்.

"என்ன அவசரமா, அரை கிழவனுக்கு பேச்சை பாரு. ஒழுங்கா ஊர் வந்து சேரு டா.." வெடுக்கென பரிமளம் போனை வைத்திருக்க, அவரின் அரை கிழவன் என்ற சொல்லை கேட்டு, களுக்கென வாய் விட்டே சிரித்து விட்டாள் முக்தா.


தொடரும்.
 

Author: Indhu Novels
Article Title: அத்தியாயம் 6
Source URL: Indhu Novels-https://indhunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
New member
Messages
7
Reaction score
6
Points
3
அத்தியாயம் - 6

காஷ்மீர் குளிரின் தாக்கத்தில், ஒற்றை போர்வையை மட்டும் தன் மீது போர்த்தியபடி, சிறு நடுக்கத்துடன் தரையில் சுருண்டு கிடந்த முக்தா, விடியலின் உணர்வு எட்டியதும், சட்டென எழுந்தவளாக மதன் இருக்கிறானா என்று தான் முதலில் பார்த்தாள்.

இரவு கதவை பூட்டி விட்டு சென்றவன் இன்னும் வரவில்லை என்பதை உணர்ந்தவள், குளியலறை சென்று வெளி வந்த முக்தாவின் முகம் அதீத சோர்வில் மூழ்கி, சொல்ல முடியாத தவிப்பில் தத்தளித்தது.

"அரே தேவா.. எனக்கு ஏன் இந்த வேதனை.." முளுக்கென கொட்டிய கண்ணீரோடு சுவரில் சாய்ந்து நின்ற பேதையின் கண்களில், அங்கு செல்ஃபில் வைத்திருந்த கவர் ஒன்று தென்படவும், வேகமாக அதனை எடுத்து பிரித்துப் பார்த்த முத்தப்பெண்ணின் முகத்தில் சிறு வியப்பு தோன்றி, சட்டென மறைந்தன.

தீயவளாக இருந்தாலும் பெண் தானே, உடை கிழிந்து அவதி படுவதை உணர்ந்து, கண்ணில் சிக்கிய ஒரு சுடிதார் செட்டை முந்தைய இரவே வாங்கி வைத்து சென்றிருந்தான் மதன்.

ஆனால் என்ன பயன்! மேல் மறைப்பு வாங்கத் தோன்றிய ஆணவனோ, பெண்ணுக்குள் உண்டாகும் உபாதை பற்றி யோசிக்க மறந்து போனானே!

"இது வேற இப்பன்னு பாத்து தான் கரெக்ட் டைமுக்கு வந்து உயிரை வாங்குமா.." புது உடை இருந்தும் அதனை அணிய முடியாத துயரத்தில், வயிற்றில் கை வைத்து தன் நிலையை நொந்த பாவை, செய்வதறியாது சுவற்றில் சாய்ந்து நின்றாள்.

நேரம் செல்ல செல்ல கால்கள் வலுவிழந்து, கிடுகிடுவென நடுங்க தொடங்கிட, சட்டென கதவு திறக்கும் சத்தத்தில், பொத்தென தரையில் விழுந்து கைகள் துலாவி, போர்வை கொண்டு தன்னை அவரசமாக மூடிக்கொண்ட செயல், அப்போதே உள்ளே வந்த மதன் கண்ணிலும் தப்பாமல் பட்டது.

"என்ன பண்றா இவ.." கண்கள் இடுங்க அவளை விசித்திரமாக கண்ட மதன்,

"இப்ப எதுக்கு ஓவர் ரியாக்ட் பண்ற.." என்றான் கடுப்பாக.

பதிலின்றி போர்வைக்குள் ஒளிந்த முக்தாவின் முகம் இருண்டிருப்பதை உணர்ந்து, அவளருகே தான் வாங்கி வைத்திருந்த உடை பாதி பிரித்த நிலையில், தரையில் இருப்பதையும் பார்த்த மதன்,

"நீ தீவிரவாதி கூட்டத்தை சேர்ந்தவன்னு தெரிஞ்சும், இந்த அளவுக்கு மெனக்கிட்டு போட்டுக்க துணி மொதக்கொண்டு வாங்கி தந்திருக்க காரணம், நீ ஒரு பொண்ணு..

ஆனா உனக்கு வெறும் போர்வை போதும் போலையே.. நான் தான் தேவை இல்லாம பணத்த செலவு பண்ணிட்டேனோ.." யோசனையாக தாடியை நீவ, தவிப்பாக அவனை பார்த்த முக்தா, ஏதோ சொல்ல வருவதும், முடியாமல் திணறுவதுமாய் இருப்பதை தாமதமாகவே உணர்ந்தான்.

"ஏய் என்ன.." சற்றே கரார் குரல் எழுப்பவும், அசோகர்யமாக நெளிந்த முக்தா,

"கிருபயா தோடம் பாஹேர் ஜா நா" தன்னை வெளி செல்ல சொல்லி சொன்னது புரியாமல், முறைத்து நின்றான்.

"நாக்கு புரியாம பேசியே அடி வாங்க போற.. என்னவோ பண்ணு.." எரிச்சலாக கத்தி, குளித்து முடித்து வந்த மதன் டபுள் சொக்கா வைத்த கரும்பச்சை சட்டை, பிளாக் பேண்ட்டினை அணிந்துகொண்டவனாக, காய்ந்து போன பம்பை முடியை விரலால் கோதி ஒழுங்கு படுத்தியவாறே, கண்கள் கலங்கி இருந்தவளை நோக்க,

"என்னவோ சரி இல்லையே.." அவள் அமர்ந்திருந்த கோலம், ஆண் மனதை பிசைய வைத்தது.

"ஏய் உன்னைத்தான், என்னாச்சி உனக்கு.." கடினக் குரல் சற்றே சாந்தமாக வருவதை உணர்ந்து, விழிகள் கலங்கி அவனை நிமிர்ந்த பார்த்த முக்தா,

"லேடிஸ் ப்ராப்லம்.." ஆங்கிலத்தில் சத்தம் வெளி வராமல் சொல்ல, தனிக்காட்டு ராஜாவாக வாழ்ந்து பழகியவன் மூளைக்கு, சட்டென உரைக்கவில்லை அதன் அர்த்தம்.

"அதான் தெலுசு, கூடவே உன்ன வச்சிக்கிட்டு ரொம்ப ப்ராப்லமா தான் இருக்கு.." அலுத்துக் கொண்டவனை, முக்தா முறைப்பாக பார்க்க,

"ஹைய் தோ பார்டா முறைப்ப.. அழுத்தமா மூடிட்டு இருக்க உன் வாய அடிச்சி உடைக்காம, சோறு போட்டு, துணி வாங்கி தந்து, கைய கால கட்டி வைக்காம உன்ன சுதந்திரமா விட்டு வச்சிருக்கேன் பாத்தியா, எனக்கு இது தேவைதான்.."

கடுப்பான மதன் வெண்சுருட்டை எடுத்து பற்ற வைத்து இழுக்க, புகையின் நெடியில் மூக்கை மூடியவளின் கரம் போர்வையினை விட்டிருக்க, தோளில் இருந்து நழுவி விழுந்த போர்வை வழியே, அவளது நிறம் மாறி சொதசொதத்த காலுடை தென்பட்டது.

மதனின் பார்வை தன் மீதுள்ளதை உணர்ந்து, குனிந்து பார்த்த முக்தா, விழிகள் கலங்கியவளாக அவசரமாக மீண்டும் போர்வையை இழுத்து தன்னை மூடிக்கொள்ள, தலைகோதிக்கொண்ட மதன் அமைதியாக வெளியேறிய பத்து நிமிடத்திற்குள், அவளுக்கானதை வாங்கி வந்து மெத்தை மேல் போட்டு விட்டு மீண்டும் வெளியேறிய அவன் செயல், முக்தாவை வியக்க வைத்தது.

ஹீட்டர் உபயத்தால் சூடான நீரில் குளித்து முடித்து வெளி வந்த முக்தா, அங்கிருந்த கண்ணாடியில் தன் உருவம் பார்க்க, மதன் வாங்கி கொடுத்த மரூன் நிற சுடிதார் பெண்ணின் வண்ண மேனிக்கு கட்சிதமாக பொருந்தி இருந்தது.

"இவ்வளவு கரெக்ட்டான அளவு எப்டி வாங்கி இருப்பான்.. ஒருவேளை கண்ணால பாத்தே என் அளவை ஸ்கேன் பண்ணிட்டானோ.." குழப்பமாக எண்ணியவளின் அளவான கூந்தலில் இருந்து சொட்டும் குளிர் நீரே, சில்லென்று நடுங்க வைத்தது.

"டவல் இருக்குமா.." விழிகள் உருட்டி தேட, ஆங்கரில் தொங்கிய துண்டினை எடுத்து தலை துவட்டியவளின் நாசியை தீண்டிய வாசத்தில், கரங்கள் செயலிழந்த நிலையில் மெல்ல அந்த துண்டினை பார்த்த பெண்ணின் நேத்திரங்கள், படபடப்பாக அடித்துக்கொள்ள,

"ச்சீ.. போயும் போயும் அவன் யூஸ் பண்ண டவலையா எடுப்பேன்.." அருவருப்பில் பதறிய முக்தா, அந்த துண்டினை தூக்கி அப்படியே அவன் மெத்தையில் போட்டவளாக, நெஞ்சி படபடப்போடு நின்றாள்.

சற்று முன்னர் தான் மதன் குளித்து வந்து இதே துவாயை பயன்படுத்தி விட்டு ஆங்கரில் மாட்டி சென்றிருந்தான்.

அந்நிய ஆண் பயன்படுத்திய ஈரம் காயத துவாயை யோசிக்காமல் எடுத்து தானும் உபயோகப்படுத்தி விட்டோமே என்ற எண்ணமே சங்கடத்தை கொடுக்க, அவனது நிக்கோடின் கலந்த வாசனை நாசிக்குள் புகுந்து உள்ளே என்னவோ பண்ணியது.

"இன்னும் எத்தனை நாளைக்கு இவனோட இங்க நான் மேனேஜ் பண்ண முடியும்.. தூக்கிட்டு வந்து ஒரு வாரமாச்சு, இதுவரைக்கும் வெளிய என்ன நடக்குது, என் தம்பியும் அம்மாவும் என்ன பண்றாங்க ஒன்னும் புரியல..

ந்.நி..நிரோஜ் என்ன தேடி வீட்டுக்கு போயிருப்பானா.." நிலைக்கண்ணாடி முன்னே தீவிர யோசனையில் நின்றிருந்த முக்தா, கதவு திறக்கும் சத்தம் கேட்டு திடுகிட்டு திரும்ப, மதனின் இடுங்கிய பார்வை அவளை கூர்மையாக நோட்டமிட்டது.

"தப்பிச்சி போக தீவிர பிளானோ.." கேலியாக உதடு வளைத்து, கொண்டு வந்த உணவை பிரித்து உண்ணத் தொடங்க, சோர்ந்த முகத்துடன் அமைதியாக தலை குனிந்த முக்தாவின் தேகம் விரைத்தது குளிரில்.

துப்பட்டா கொண்டு தன்னை போர்த்தியபடி தன் இடத்தில் வந்து அமர்ந்தவளுக்கு, பசியேதும் தோன்றவில்லை வயிற்று வலியினை தாண்டி.

நீர் சொட்டும் தலை முடியே உடலை நடுங்க செய்ய, பற்கள் டைப் அடிக்கும் சத்தம் மதனுக்கும் கேட்க தான் செய்தது.

"டவல் தான் இருக்கே யூஸ் பண்றது.." லெக்பீஸை கடித்து இழுக்கும் சத்தத்தோடு, கள்ளனின் குரலும் எதிரொலிக்க,

"எது நீ யூஸ் பண்ணதா.." கடுப்பாக மனதில் எண்ணிய முக்தா, வாய் திறக்கவில்லை.

"இந்த அழுத்தம் தான் டி, நீ இன்னும் இங்க இருக்க காரணம்.." பற்களை கடித்த மதன், விரைவாக உண்டு முடித்து தட்டில் கை கழுவ, அலைபேசி அதிர்ந்தது.

"மதனு எக்கட உன்னாவு.." ருத்தரனின் குரல் அதிர்ந்தது, முக்தாவின் செவியை கூட எட்டிட,

"வீட்ல தான் அண்ணய்யா.." பதில் கொடுத்தவன் குரலும் தழைவதை கவனிக்கவே செய்தாள்.

"என்னடா இப்போல்லாம் அடிக்கடி வீட்ல தான் இருக்க, என்ன விசயம்.." சந்தேகக் கேள்வியில் எச்சில் விழுங்கிய மதன்,

"என்ன அண்ணய்யா.." என்றான் புரியாதவன் போல.

"ப்ச், போடா.. குயிலு அம்மா போன் போட்டா எடுக்க மாட்டேங்குறியாம், எனக்கு போன போட்டு நச நசன்னு பேசி தலை வலி வந்தது தான் மிச்சம்.." ருத்ரன் காட்டமாக கத்தியும், இப்பக்கம் அமைதி.

"ரெண்டு நாளுல தஞ்சாவூர் போறது நெனவிருக்கா.."

"இருக்கு அண்ணய்யா.." என்றான் மெதுவாக.

"சொன்னது என்னாச்சி.."

"என்ன அண்ணய்யா நீயும் அவங்கள போல புரியாம பேசுற.. திடீர்னு ஒரு அம்மாயி கண்டுபுடிச்சி, அவள என் மனசுக்கு புடிச்சி, உன் முன்னாடி கூட்டிட்டு வந்து, எப்டி அண்ணய்யா கட்டிக்கிறது.. கொஞ்சமாவது கால அவகாசம் வேணாமா.." உரிமையாக கடிந்து கொண்ட மதனை எண்ணி, இப்போது அப்பக்கம் ருத்ரன் இதழில் சிறுநகை கொண்டது.

"அதையேத்தான் டா நானும் சொல்றேன்.. இத்தனை வருஷமா கண்டுபுடிக்காத பொண்ண இனிமே நீ கண்டு புடிச்சி, உன் மனசுக்கு புடிச்சி, எங்கிட்ட கூட்டிட்டு வந்து கட்டிக்கிறது எல்லாம் நடக்காத காரியம்..

என்னவோ நீ ஒண்டிக்கட்டையா சுத்த நானு தான் காரணம்ன்ற மாறி, உன் வதினா வேற என்ன முறைக்கிறா, கோணல் மானலா முகத்தை சுளிக்கிறா..

ஒழுங்கா மாமி பாத்த கயலையே கட்டிக்க..

அதுக்கு முன்னாடி, மாமி போன் பண்ணா எடுத்து தொலை.." நாக்கை மடித்து கடித்து திட்டி போனை வைக்க, புயலடித்து ஓய்ந்த உணர்வானது.

"தஞ்சாவூர் போனா கண்டிப்பா எதையாவது பேசி, பரிமளாம்மா கல்யாணத்துக்கு ஏற்பாடு பண்ணிடுவாங்களே, இப்ப என்ன பண்றது.." மனம் விரும்பாத பெண்ணை மணம் முடிக்க ஒப்பாமல், தலையினை பிடித்துக்கொண்டவனை ஆரம்பம் முதல் பார்த்த முக்தா,

"பாக்க தான் புலி, அவன் அண்ணாகிட்ட எலியா பம்புறானே.." என்று நினைக்கையில் சிரிப்பு வந்து விட்டது.

சத்தம் வெளிகேட்காது உடல் மட்டும் லேசாக குலுங்கி தனியாக சிரித்துக்கொள்ளும் போதே, பரிமளம் மாமியின் அழைப்பு வந்திட, அதனை ஏற்று காதில் வைத்தது தான் தாமதம்.

"ஏன்டா அம்பி நோக்கு எத்தனை முறை போன் செய்றது, உன்னை என்ன மலைய வெட்டியா என் கையில கொண்டாந்து கொடுக்க சொன்னேன், ஒரு கல்யாணம் தானே கட்டிக்க சொல்றேன்.. ஏன்டா வீம்பு பண்ற.." பட்டாசாய் வெடித்த மாமிக்கு, மதனை ரொம்பவும் பிடிக்கும்.

இவனையும் தங்கள் குடும்பத்தில் ஒருவனாக, மற்றொரு மகனாக எண்ணுவதால் தானே, இத்தனை உரிமை கண்டிப்பு பேச்சி எல்லாம்.

"இப்ப கல்யாணத்துக்கு என்ன ம்மா அவசரம்.." உரிமையாக அம்மா என்பவனும், பரிமளத்தின் அதட்டல் மிரட்டலை யாவும் விரும்பியே தானே கேட்டுக்கொள்கிறான்.

"என்ன அவசரமா, அரை கிழவனுக்கு பேச்சை பாரு. ஒழுங்கா ஊர் வந்து சேரு டா.." வெடுக்கென பரிமளம் போனை வைத்திருக்க, அவரின் அரை கிழவன் என்ற சொல்லை கேட்டு, களுக்கென வாய் விட்டே சிரித்து விட்டாள் முக்தா.


தொடரும்.
So sweet mami
 
Top