- Messages
- 276
- Reaction score
- 215
- Points
- 63
அத்தியாயம் 12
"டேய், அரவிந்த் என்னடா இன்னும் கெளம்பாம இருக்க, சீக்கிரம் வாடா, இந்நேரம் அந்த தண்டாயுதபாணி வந்து கிளாஸ் நடத்திட்டு இருப்பாரு, எப்படியாவது நாம அந்த தண்டத்து கண்ணுல படாம கிளாஸ்க்கு போயிரணும்" அரவிந்தின் உயிர்த் தோழன் விக்னேஷ், கை கடிகாரத்தை பார்த்தபடியே கத்த,
"மச்.. என்னடா காலங்காத்தால வந்து சும்மா நெய்யி வெண்ணன்னு, போடா எனக்கு தூக்கம் வருது" என்று பெட்ஷீட்டை தலைக்கு மேல் போர்த்திக் கொண்டு விட்ட தூக்கத்தை தொடர்ந்தான் அரவிந்த்.
"டேய், மதியம் பன்னண்டு மணியாகுது டா, இதுவே உனக்கு காலங்காத்தாலயா, காலக்கொடுமடா" தலையில் அடித்துக் கொண்ட விக்கி.. இவனை இப்டி எழுப்பினா சரிவராது என நினைத்தவன்.. வெளியே சென்று இன்னொரு நபரை அழைத்து வந்தவனாக, "இனிமே நீங்களாவது, அவனாவது" சொல்லியன் அங்குள்ள குஷனில் ஆயாசமாக அமர்ந்து கொண்டான்..
வந்த நபரோ, கையில் ஒரு கம்பை வைத்துக் கொண்டு, குப்பற படுத்து போர்வையை முழுதாக இழுத்து மூடி தூங்கிக் கொண்டு இருங்கும் அரவிந்தை உக்கிரமாக முறைத்து பார்த்து. மூச்சி வாங்க கட்டிலை நெருங்கி, அவன் டிக்கியில் ஒரு அடி பட்டென வைக்கவும்,
"ஐயோ அம்மா கொலை, என்ன தூக்கத்துலே கொலை பன்றாங்க காப்பாத்துங்க." துள்ளி குதித்து கத்தி பின்னால் தேய்த்தபடியே எழுந்து பார்த்தவன்.. "அ.அம்மா நீயா... நீயாம்மா பத்து மாசம் சுமந்து பெத்த உன் பையனை கொல்ல பாத்தது.. ஏம்மாஆ ஏன்",, சிவாஜி போல் நடித்து காட்டினான் தாயிடம்.
"நைட் எப்படா எனக்கே தெரியாம வந்த" தேவகி கோவமாக கேட்க,
திருத்திருவென முழித்தவன்,
"இப்ப அதெல்லாம் ஏன் தேவிகுட்டி, கோவப்படாம போய் எனக்கு பால் கொண்டு வா" தேவகி கன்னம் கிள்ளி கொஞ்ச, அவன் கையை தட்டி விட்டவர்,
"பால் ஒன்னு தா உனக்கு குறைச்சல்.. டேய், டேய் நீ யாருனு எனக்கு தெரியும் நான் யாருனு உனக்கும் தெரியும், ஒழுங்கா உண்மைய சொல்லு.. நான் நைட்டெல்லாம் உனக்காக ஹால்லயே தான் உக்காந்து காத்துட்டு இருந்தேன்.. நடு நேரமாகியும் நீ வரவே இல்லையே.. இப்ப எப்டி உன் ரூம்ல படுத்து தூங்குற"
"ஹான்.. அப்டி கேளுங்கம்மா, நைட்டெல்லாம், என்ன மட்டும் தனியா விட்டு, எங்க போய் ஊர் சுத்திட்டு வந்தான்னு" விக்கி சொல்ல,
தலையை சாய்த்து அவன் புறம் பார்த்த அரவிந்த்.. "எல்லாம் இந்த பக்கி வேல தானா இருடி உனக்கு இருக்கு" என கருவியவன்.. "அது வந்து அம்மா நான், வெளிய ஊர் சுத்த போகல, ஊர் சுத்தி பாக்க வந்தவங்கள பாக்க போனேன்" என்றான்.
"டேய், நீ எதுக்கு சம்மந்தமே இல்லாம அவங்கள பாக்க போன, உனக்கு அவங்க யாரு சொந்தமா பந்தமா அப்டின்னு, கேளுங்கம்மா.." விக்கி எடுத்து கொடுக்க..
"அதானே நீ எதுக்கு யாரையோ பாக்க போன, அதுவும் நைட் நேரத்துல..." அரவிந்த் விக்கியை முறைத்து பார்க்க.. "உன் முறைப்புக்கு எல்லாம் நான் பயப்பட மாட்டேன் தம்பி" எனும் வகையாக, வரும் போதே கையோடு கொண்டு வந்த டைரி மில்க்கை பிரித்து சுவைக்க ஆரம்பித்தான்.
"அங்க என்னடா அவன முறைச்சிட்டு இருக்க, எனக்கு இங்க பதில் சொல்லு.." தேவகி கத்த...
"ம்மா, அது ஒன்னு இல்ல அவங்களுக்கு ஒரு சின்ன ஆக்சிடென்ட் அதான் ஹாஸ்பிடல் போய்ட்டு, நானே அவங்கள அவங்க வீட்ல ட்ராப் பண்ணிட்டு வந்தேன் போதுமா.." என்றவன் அங்கு இறு க்காமல், டைரிமில்க்கை கண் மூடி சுவைத்துக் கொண்டு இருந்தவன் தலையில் "நங்"கென்று ஒரு கொட்டு வைத்து குளியல் அறைக்கு ஓடி விட்டான்...
தலையை தேய்த்துக் கொண்டே, மீதம் கையில் உள்ளதையும் விக்கி சுவைக்க,..
தேவகி தலையில் அடித்துக் கொண்டு சென்று விட்டார்..
ஏழு ஆண்டுகளுக்கு முன்..
அரவிந்த் கடைசி வருட கல்லூரி படிப்பை முடிக்க போகும் நேரம் அது..
அதுவரை அவன் வாழ்வில் அம்மா அப்பா, பாட்டி, நண்பன் விக்கி என்று நிறைவான மகிழ்ச்சியாக இருந்தவன் தான்..
குறும்புக்காரன்.. ஆணழகன், பல பெண்களின் மனதில் காதல் மன்னன்.. அரவிந்த் அனைத்து பெண்களையும் பேதம் இல்லாமல் விதவிதமாக சைட் அடிப்பதில் குறும்புக் கண்ணன்.. படிப்புக்கும் அவனுக்கும் ஏணி வைத்தாலும் எட்டாத ஒன்று,, வீட்டிற்கு ஒரே பிள்ளை.. செல்லப் பிள்ளை.. பாட்டிக்கு சொல்லவே வேண்டாம்.. பேரனை யாரும் ஒரு வார்த்தை சொல்ல விட மாட்டார்..
அதனாலே, பாட்டிக்கும் தேவகிக்கும் அடிக்கடி சண்டை வரும்.. அரவிந்துக்கு ஒரு கெட்ட பழக்கம், அவன் எப்போதெல்லாம் இரவில் மழை வருமோ அப்போதெல்லாம் எல்லார் கண்ணிலும் மண்ணை தூவி விட்டு, என்பீல்டை எடுத்துக் கொண்டு மழையில் நனைத்தபடி நீண்டதொரு ரெய்டு போவது மிகவும் பிடித்தமான ஒன்று...
அதை கண்டு பிடித்து தேவகி கேட்கும் போது எல்லாம், மாமியார் மருமகள் சண்டை அங்கு அரங்கேறும்.. அதில் பாவம் அம்மாவுக்கும் மனைவிக்கும் நடுவில் மாட்டிக் கொண்டு மாணிக்கம் முழிக்க... அரவிந்த் கூலாக காலை ஆட்டியபடி படுத்து, கடலை சாப்பிட்டுக் கொண்டே, அம்மா பாட்டி சண்டையை சுவாரிசியமாக பார்த்துக் கொண்டு இருப்பான்..
தந்தை மாணிக்கம்.. குணத்திலும் மாணிக்கம் தான்.. அவர் சிறிதாக இன்டீரியர் பிசினஸ் செய்துக் கொண்டு, அளவான வருமாதித்தில் வீட்டையும் கவனமாக பார்த்துக் கொண்டு இருக்கிறார்.. அன்னை தேவகி, தங்கமானவர்,..
பாட்டி ஒரு இடத்தில் இருக்கமாட்டார், நன்றாக ஆடி ஓடி சுற்றி திரிந்தவர்..
அரவிந்த் கல்லூரிக்கு படிக்க போனதை விட, அங்கு வரும் பெண்களை சைட் அடித்ததே அதிகம்.. பல பெண் தோழிகள், எல்லாம் ஒரு எல்லையுடன் நிறுத்திக் கொள்வான்.. சுருக்கமாக சொன்னால் அடக்கமான பிலே பாய்..பாவம் விக்கி அவன் ஒரு புத்தகப் புழு,, கல்லூரி முதல் நாள் பார்த்ததில், அரவிந்தின் பால் வடியும் முகத்தை பார்த்து படிப்பாளி என நினைத்து, ஏமாந்து நண்பனாக அவனுக்கு வாக்கப்பட்டு போனவன்.. அன்றிலிருந்து புத்தக புழுவையும் எங்கு போனாலும் இழுத்துக் கொண்டே தான் ஊர் சுற்றுவான்..
இப்படியே அவன் வாழ்க்கை எந்த ஒரு கவலையும் கஷ்டமும் இல்லாமல் ஜாலியாக சென்று கொண்டு இருக்க..
அப்போது தான் அவன் வாழ்க்கையே புரட்டிப் போடும் விதமாக, அந்த நாள் வந்தது..
கார்கால மாதம் அது.. காலை வேலையில் வானமெங்கும் கருமேகங்கள் சூழ்ந்து நன்றாக இருட்டி, அங்குமிங்கும் பலத்த மழை வரப்போகும் அறிகுறியாக தூறல் போட்டுக் கொண்டு இருக்க.. அரவிந்த் படிக்கும் இல்லை இல்லை சைட் அடிக்கும் கல்லூரி என்று சொன்னால் தான் சரியாக இருக்கும்....
அவன் கல்லூரியில் அடியெடுத்து வைத்து வந்தால் அவள்.. அதுவரை தூரளாக போட்டுக் கொண்டு இருந்த மழைத் துளிகள், அவள் கல்லூரி நோக்கி நடந்துக் கொண்டு இருக்கும் போதே இடியுடன் மின்னல் வெட்ட,, வேகமாக மண்ணில் இறங்கியது மழையாக...
மழையில் நனைந்து வந்தவளை தேவதை என நினைத்து மனதை பறிகொடுக்க போகிறவனுக்கு, பாவம் அன்று தெரியவில்லை, அது தேவதை உருவில் இருக்கும் அரக்கி என்று..
மழை...
"டேய், அரவிந்த் என்னடா இன்னும் கெளம்பாம இருக்க, சீக்கிரம் வாடா, இந்நேரம் அந்த தண்டாயுதபாணி வந்து கிளாஸ் நடத்திட்டு இருப்பாரு, எப்படியாவது நாம அந்த தண்டத்து கண்ணுல படாம கிளாஸ்க்கு போயிரணும்" அரவிந்தின் உயிர்த் தோழன் விக்னேஷ், கை கடிகாரத்தை பார்த்தபடியே கத்த,
"மச்.. என்னடா காலங்காத்தால வந்து சும்மா நெய்யி வெண்ணன்னு, போடா எனக்கு தூக்கம் வருது" என்று பெட்ஷீட்டை தலைக்கு மேல் போர்த்திக் கொண்டு விட்ட தூக்கத்தை தொடர்ந்தான் அரவிந்த்.
"டேய், மதியம் பன்னண்டு மணியாகுது டா, இதுவே உனக்கு காலங்காத்தாலயா, காலக்கொடுமடா" தலையில் அடித்துக் கொண்ட விக்கி.. இவனை இப்டி எழுப்பினா சரிவராது என நினைத்தவன்.. வெளியே சென்று இன்னொரு நபரை அழைத்து வந்தவனாக, "இனிமே நீங்களாவது, அவனாவது" சொல்லியன் அங்குள்ள குஷனில் ஆயாசமாக அமர்ந்து கொண்டான்..
வந்த நபரோ, கையில் ஒரு கம்பை வைத்துக் கொண்டு, குப்பற படுத்து போர்வையை முழுதாக இழுத்து மூடி தூங்கிக் கொண்டு இருங்கும் அரவிந்தை உக்கிரமாக முறைத்து பார்த்து. மூச்சி வாங்க கட்டிலை நெருங்கி, அவன் டிக்கியில் ஒரு அடி பட்டென வைக்கவும்,
"ஐயோ அம்மா கொலை, என்ன தூக்கத்துலே கொலை பன்றாங்க காப்பாத்துங்க." துள்ளி குதித்து கத்தி பின்னால் தேய்த்தபடியே எழுந்து பார்த்தவன்.. "அ.அம்மா நீயா... நீயாம்மா பத்து மாசம் சுமந்து பெத்த உன் பையனை கொல்ல பாத்தது.. ஏம்மாஆ ஏன்",, சிவாஜி போல் நடித்து காட்டினான் தாயிடம்.
"நைட் எப்படா எனக்கே தெரியாம வந்த" தேவகி கோவமாக கேட்க,
திருத்திருவென முழித்தவன்,
"இப்ப அதெல்லாம் ஏன் தேவிகுட்டி, கோவப்படாம போய் எனக்கு பால் கொண்டு வா" தேவகி கன்னம் கிள்ளி கொஞ்ச, அவன் கையை தட்டி விட்டவர்,
"பால் ஒன்னு தா உனக்கு குறைச்சல்.. டேய், டேய் நீ யாருனு எனக்கு தெரியும் நான் யாருனு உனக்கும் தெரியும், ஒழுங்கா உண்மைய சொல்லு.. நான் நைட்டெல்லாம் உனக்காக ஹால்லயே தான் உக்காந்து காத்துட்டு இருந்தேன்.. நடு நேரமாகியும் நீ வரவே இல்லையே.. இப்ப எப்டி உன் ரூம்ல படுத்து தூங்குற"
"ஹான்.. அப்டி கேளுங்கம்மா, நைட்டெல்லாம், என்ன மட்டும் தனியா விட்டு, எங்க போய் ஊர் சுத்திட்டு வந்தான்னு" விக்கி சொல்ல,
தலையை சாய்த்து அவன் புறம் பார்த்த அரவிந்த்.. "எல்லாம் இந்த பக்கி வேல தானா இருடி உனக்கு இருக்கு" என கருவியவன்.. "அது வந்து அம்மா நான், வெளிய ஊர் சுத்த போகல, ஊர் சுத்தி பாக்க வந்தவங்கள பாக்க போனேன்" என்றான்.
"டேய், நீ எதுக்கு சம்மந்தமே இல்லாம அவங்கள பாக்க போன, உனக்கு அவங்க யாரு சொந்தமா பந்தமா அப்டின்னு, கேளுங்கம்மா.." விக்கி எடுத்து கொடுக்க..
"அதானே நீ எதுக்கு யாரையோ பாக்க போன, அதுவும் நைட் நேரத்துல..." அரவிந்த் விக்கியை முறைத்து பார்க்க.. "உன் முறைப்புக்கு எல்லாம் நான் பயப்பட மாட்டேன் தம்பி" எனும் வகையாக, வரும் போதே கையோடு கொண்டு வந்த டைரி மில்க்கை பிரித்து சுவைக்க ஆரம்பித்தான்.
"அங்க என்னடா அவன முறைச்சிட்டு இருக்க, எனக்கு இங்க பதில் சொல்லு.." தேவகி கத்த...
"ம்மா, அது ஒன்னு இல்ல அவங்களுக்கு ஒரு சின்ன ஆக்சிடென்ட் அதான் ஹாஸ்பிடல் போய்ட்டு, நானே அவங்கள அவங்க வீட்ல ட்ராப் பண்ணிட்டு வந்தேன் போதுமா.." என்றவன் அங்கு இறு க்காமல், டைரிமில்க்கை கண் மூடி சுவைத்துக் கொண்டு இருந்தவன் தலையில் "நங்"கென்று ஒரு கொட்டு வைத்து குளியல் அறைக்கு ஓடி விட்டான்...
தலையை தேய்த்துக் கொண்டே, மீதம் கையில் உள்ளதையும் விக்கி சுவைக்க,..
தேவகி தலையில் அடித்துக் கொண்டு சென்று விட்டார்..
ஏழு ஆண்டுகளுக்கு முன்..
அரவிந்த் கடைசி வருட கல்லூரி படிப்பை முடிக்க போகும் நேரம் அது..
அதுவரை அவன் வாழ்வில் அம்மா அப்பா, பாட்டி, நண்பன் விக்கி என்று நிறைவான மகிழ்ச்சியாக இருந்தவன் தான்..
குறும்புக்காரன்.. ஆணழகன், பல பெண்களின் மனதில் காதல் மன்னன்.. அரவிந்த் அனைத்து பெண்களையும் பேதம் இல்லாமல் விதவிதமாக சைட் அடிப்பதில் குறும்புக் கண்ணன்.. படிப்புக்கும் அவனுக்கும் ஏணி வைத்தாலும் எட்டாத ஒன்று,, வீட்டிற்கு ஒரே பிள்ளை.. செல்லப் பிள்ளை.. பாட்டிக்கு சொல்லவே வேண்டாம்.. பேரனை யாரும் ஒரு வார்த்தை சொல்ல விட மாட்டார்..
அதனாலே, பாட்டிக்கும் தேவகிக்கும் அடிக்கடி சண்டை வரும்.. அரவிந்துக்கு ஒரு கெட்ட பழக்கம், அவன் எப்போதெல்லாம் இரவில் மழை வருமோ அப்போதெல்லாம் எல்லார் கண்ணிலும் மண்ணை தூவி விட்டு, என்பீல்டை எடுத்துக் கொண்டு மழையில் நனைத்தபடி நீண்டதொரு ரெய்டு போவது மிகவும் பிடித்தமான ஒன்று...
அதை கண்டு பிடித்து தேவகி கேட்கும் போது எல்லாம், மாமியார் மருமகள் சண்டை அங்கு அரங்கேறும்.. அதில் பாவம் அம்மாவுக்கும் மனைவிக்கும் நடுவில் மாட்டிக் கொண்டு மாணிக்கம் முழிக்க... அரவிந்த் கூலாக காலை ஆட்டியபடி படுத்து, கடலை சாப்பிட்டுக் கொண்டே, அம்மா பாட்டி சண்டையை சுவாரிசியமாக பார்த்துக் கொண்டு இருப்பான்..
தந்தை மாணிக்கம்.. குணத்திலும் மாணிக்கம் தான்.. அவர் சிறிதாக இன்டீரியர் பிசினஸ் செய்துக் கொண்டு, அளவான வருமாதித்தில் வீட்டையும் கவனமாக பார்த்துக் கொண்டு இருக்கிறார்.. அன்னை தேவகி, தங்கமானவர்,..
பாட்டி ஒரு இடத்தில் இருக்கமாட்டார், நன்றாக ஆடி ஓடி சுற்றி திரிந்தவர்..
அரவிந்த் கல்லூரிக்கு படிக்க போனதை விட, அங்கு வரும் பெண்களை சைட் அடித்ததே அதிகம்.. பல பெண் தோழிகள், எல்லாம் ஒரு எல்லையுடன் நிறுத்திக் கொள்வான்.. சுருக்கமாக சொன்னால் அடக்கமான பிலே பாய்..பாவம் விக்கி அவன் ஒரு புத்தகப் புழு,, கல்லூரி முதல் நாள் பார்த்ததில், அரவிந்தின் பால் வடியும் முகத்தை பார்த்து படிப்பாளி என நினைத்து, ஏமாந்து நண்பனாக அவனுக்கு வாக்கப்பட்டு போனவன்.. அன்றிலிருந்து புத்தக புழுவையும் எங்கு போனாலும் இழுத்துக் கொண்டே தான் ஊர் சுற்றுவான்..
இப்படியே அவன் வாழ்க்கை எந்த ஒரு கவலையும் கஷ்டமும் இல்லாமல் ஜாலியாக சென்று கொண்டு இருக்க..
அப்போது தான் அவன் வாழ்க்கையே புரட்டிப் போடும் விதமாக, அந்த நாள் வந்தது..
கார்கால மாதம் அது.. காலை வேலையில் வானமெங்கும் கருமேகங்கள் சூழ்ந்து நன்றாக இருட்டி, அங்குமிங்கும் பலத்த மழை வரப்போகும் அறிகுறியாக தூறல் போட்டுக் கொண்டு இருக்க.. அரவிந்த் படிக்கும் இல்லை இல்லை சைட் அடிக்கும் கல்லூரி என்று சொன்னால் தான் சரியாக இருக்கும்....
அவன் கல்லூரியில் அடியெடுத்து வைத்து வந்தால் அவள்.. அதுவரை தூரளாக போட்டுக் கொண்டு இருந்த மழைத் துளிகள், அவள் கல்லூரி நோக்கி நடந்துக் கொண்டு இருக்கும் போதே இடியுடன் மின்னல் வெட்ட,, வேகமாக மண்ணில் இறங்கியது மழையாக...
மழையில் நனைந்து வந்தவளை தேவதை என நினைத்து மனதை பறிகொடுக்க போகிறவனுக்கு, பாவம் அன்று தெரியவில்லை, அது தேவதை உருவில் இருக்கும் அரக்கி என்று..
மழை...
Author: Indhu Novels
Article Title: அத்தியாயம் 12
Source URL: Indhu Novels-https://indhunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Article Title: அத்தியாயம் 12
Source URL: Indhu Novels-https://indhunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.