Hello! It seems that you are using AdBlock - some functions may not be available. Please add us as exceptions. Thank you for understanding!
  • வணக்கம் 🙏🏻 இந்து நாவல்ஸ் தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்
  • இந்து நாவால்ஸ் தளத்தில் எழுத விரும்புவோர், indhunovel@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு செய்தி அனுப்பவும். கற்பனைகளை காவியமாக்குங்கள் ✍🏻💖

அத்தியாயம் 13

Administrator
Staff member
Messages
276
Reaction score
215
Points
63
அத்தியாயம் 13

விண்ணை விட்டு பிரிந்து ஆசையாக மண்ணை தொட்டுக் கொண்டு இருந்தது மழை துளிகள்...
மதிய வேலை, மழையின் காரணமாக அரவிந்த் &கோ பட்டாளம் எல்லாம், கல்லூரி வளாகத்தில் உள்ள ஷெட் போன்ற அமைப்பை கொண்ட இடத்தில் அமர்ந்து கிண்டலும் கேலியுமாக, சிரித்து பேசி அரட்டை அடித்துக் கொண்டு இருந்தனர்.

"டேய் மச்சா அரவிந்த், நீ எல்லாப் பொண்ணுங்களையும் பாக்குற, நல்லா அவளுங்களுக்கு தெரியற மாறியே சைட்டும் அடிக்கிற.. அவளுங்களும் நீ சைட் அடிக்கிறேன்னு தெரிஞ்சே ஒன்னும் சொல்லாம, பதிலுக்கு உன்னையே திரும்ப சைட் அடிச்சிட்டு போறாலுங்க..

ஆனா, எந்த பொண்னையும் இதுவரை நீ லவ் பண்ணல.. எத்தனையோ அட்டு பீசு'லருந்து நல்லா குல்பி மாறி இருக்க பொண்ணுங்க வரை, உன்ன தேடி வந்து ப்ரொபோஸ் பண்ணாலும் நீ சிரிச்சிகிட்டே வேண்டான்னு டீசெண்டா ரிஜெக்ட் பண்ணிட்ற.." ஒருவன் தன் சந்தேகத்தை கேட்டுகொண்டு இருந்த போதே,

"அப்புறம் ஏன் டா நீ தேவ இல்லாம சைட் அடிக்கிற, அதான மச்சா குமாரு நீ கேக்க வர".. ஷெட்டின் பைபில் சாய்ந்து நின்று, கையில் இருந்த ஒரு புத்தகத்தை, சுழட்டி சுழட்டி மேலே போட்டு பிடித்தபடி கேட்டான் அரவிந்த்.

மற்ற அனைவரும், அவன் சொல்லப் போகும் பதிலுக்காக ஆர்வமாக காத்திருக்க.. புத்தகப்புழு விக்கி மட்டும் எதையும் காதில் வாங்காமல் கடைசி வருட சமஸ்டர்க்காக மும்புரமாக படித்து கொண்டு இருப்பதை பார்த்தவன்..

"டேய் ஷாருக்கு, அவன் கையிலருந்து அந்த புக்க புடுங்கு.. எப்பப்பாரு புக்கும் கையுமா, காண்டாவுதா இல்லையா" அரவிந்த் சொன்னதும்
அவனை நிமிர்ந்து முறைத்த விக்கி,

"நான் படிக்கிறது, உனக்கு ஏன் டா காண்டு ஆவுது.., ஒருத்தன் படிச்சி முன்னேறணும்னு நெனச்சா உங்களுக்கு எல்லாம் பொறுக்காதே" புலம்பி தள்ளினான்.

"டேய் டேய், மூடுடா.."

"நீ என்னய சொன்னியா இல்லை புக்க சொன்னியா..x

ம்ம்..ரெண்டையும் தான்..." அரவிந்த் நக்கலடிக்க..
"ரொம்ப ஓவராதான் போற டா.. பாத்துட்டே இரு, உன்னோட இந்த கொழுப்பு எல்லாம் ஒரு நாள் அடங்க போவுது.." சலித்தபடி பித்தகத்தை மூடி வைத்தான்..

"அதையும் பாக்கலாம்" என்றவன்..
"டேய், குமாரு எதுல. விட்டேன்"

"லவ்ல விட்ட மச்சா.."

"ஹான்.. அது ஒன்னும் நீங்க எதிர்பாக்குற அளவுக்கு பெரிய காரணம் இல்லடா..
என் மனசுக்கு பிடிச்ச மாதிரி நான் ஒரு பொண்ண பாத்தா கண்டிப்பா நானே போய் ப்ரொபோஸ் பன்னி லவ் பண்ணுவேன் டா.. அப்புறம், எங்க கல்யாணம் எப்டி தெரியுமா மச்சி நடக்கணும்.. இதே மாதிரி ஜோன்னு பெயிற ஒரு மழை நாளுல... நானும் அவளும் மனக்கோலத்துல, இடிகள் கெட்டி மேலம் கொட்டி, மின்னல்கள் அக்னி சாட்சியா வச்சி.. மழை துளிகள் அர்ச்சதை தூவ, நான் எனக்கு இணையானவ கழுத்துல மழைல நனைஞ்சிகிட்டே தாலி கட்டணும்.. " அரவிந்த் கற்பனையாக, அவன் திருமண நாளை கண் முன் நிறுத்தி கூறினான்...

இவன் கற்பனை, நிஜத்தில் நடந்தது, அவன் மனைவி முல்லையின் கழுத்தில் மங்களனான் பூட்டும் போது..

அப்பொழுது, வெள்ளை சுடிதார் அனிந்து, தலையை விரித்து விட்டு, அழகு தேவதையாக, மழையில் நனைந்துக் கொண்டே ஓடி வந்து, மழைக்கு ஒதுங்குவதற்கு ஏதுவான இடத்தை தேடியபடி வந்தவள், அரவிந்த் பட்டாளம் இருக்கும் அந்த ஷெட் கண்ணில் பட.. அங்கு ஓட ஓரளவு திட்டமான ஹீல்ஸ் அணிந்து இருந்தவளின் கால்கள் சட்டென பிரட்டி விட்டது.

முதுகை காட்டி கற்பனையில் கதை சொல்லிக் கொண்டு இருந்தவனின், முதுகுபுர சட்டையை பிடிமானத்திற்க்காக பிடித்து இழுக்க, அதில் நிலை தடுமாறி விழும் முன் சுதாரித்த அரவிந்த் பைப்பை பிடித்துக் கொண்டு திரும்பிப் பார்த்தான்.

அவளை பார்த்த நொடி அசந்து போனாலும்.. உடனே தன்னை மீட்டுக் கொண்டு.. என்ன, என்பது போல் அவளை பார்க்க..

அரவிந்த் அவளை பார்த்து அசந்து போனானோ என்னவோ.. ஆனால், அவள் தான் அரவிந்தை கண்டு அசந்து போனாள்.. அரவிந்த் நண்பர்கள் கூட்டமும் வாயை பிளந்து அந்த பெண்ணை பார்க்க... சுற்றி அனைவரையும் கண்டவன்.. அவள் வெகுநேரமாகியும் ஒன்றும் பேசாமல் இருக்கவே "ஹெலோ" என்றான் அவள் முகத்துக்கு நேராக கையை ஆட்டி.

"ஹான் சொல்லுங்க" என்றவலை வினோதமாக பார்த்தவன், "எதுக்கு என் சட்டைய பிடிச்சி இழுத்த" அரவிந்த் புன்னகையுடன் கேட்டதும் அதில் மயங்கியவள்,
"அது மழைல வழுக்கி விட்டு ஸ்லிப்பர் பிரட்டி விட்ருச்சி, அதான் எங்க விழுந்துருவனோன்னு உங்க சட்டைய.." அவள் சொல்லி முடிக்கவில்லை,

"ஏன் நாம மட்டும் தனியா விழனும், பக்கத்துல சும்மா தானே இவன் நிக்கிறான், அதனால இவனையும் சேத்தே கீழ தள்ளி விடுவோம்னு, என் சட்டைய பிடிச்சி இழுத்த சரிதானே" இடை புகுந்து கூறி முடித்தவனை பதறி போய் பார்த்தவளாக,

"ஐயோ அப்டி நெனச்சி நான் இழுக்கல, ஏதோ ஒரு பதட்டத்துல" என்று இழுக்கவும்,.

"ஹேய்.. ஜஸ்ட் ஃபன்யா.. சும்மா தான் சொன்னேன்... ஆமா உன்ன நான் இங்க பாத்ததே இல்லையே, நீயூ ஜாயினியா.."

"ஹ்ம்.. ஆமா, இன்ஜினியரிங் செகண்ட் இயர்.. ஜாயின் பன்னி இருக்கேன்" முத்து பற்கள் தெரிய சிரித்தபடி சொன்னவளை ரசனையாக பார்த்திருந்தான்..

"உன் பேர் என்ன, இதுக்கு முன்னாடி எங்க படிச்ச.. ஏன் பாதில இங்க வந்து ஜாயின் பண்ற.." அவன் அடுக்கான கேள்வி எழுப்ப,

"நான் கீதாஞ்சலி, இதுக்கு முன்னாடி டெல்லில படிச்சேன், அங்க தான் நான் பொறந்து வளந்த இடமும் கூட.. அப்பா ரயில்வேஸ்டேஷன்ல கிளெர்க் வேலை பாக்குறாரு,, திடிர்னு இங்க டிரான்ஸ்பர் பண்ணிட்டாங்க.. இங்க எங்க பாட்டி வீடு இருக்கு அங்க தான் இப்போ இருக்கோம்.. " என்று இன்னும் பல அவன் கேட்காத விஷயங்களை கூட அவளாகவே சொல்லி வளவளத்துக் கொண்டு இருந்தவளை, இமை வெட்டாமல் பார்த்துக் கொண்டு இருந்தான்...

இப்படியே இனிமையான பேச்சி வார்த்தைகளுடன் நாட்கள் ஓடவும் இதன் நடுவில் அரவிந்தின் நண்பர்களுடன் எல்லாம் சிறிது பிளவு ஏர்பட்டது. காரணம் கீதா தான். எப்போதும் அவனுடன் அட்டை போல் ஒட்டிக் கொண்டே திரிய நண்பர்கள் கூட்டம் கடுப்பாகி, அவனுடன் அதிகமாக பேசுவதை நிறுத்தி இருந்தனர்..

விக்கிக்கு மட்டும் ஏனோ, பார்த்தது முதல் கீதாவிடம் பேச பிடிக்காமல் போனது,, அவளிடம் என்னவோ தவறுள்ளது போல் அவன் உள் மனம் எடுத்து சொல்ல.. அதை பல முறை அரவிந்திடமும் சொல்லி விட்டான்..

ஆனால் அவன் தான், "அதெல்லாம் ஒன்னு இல்ல டா சும்மா உனக்கு அப்டி தோணுது, நல்ல பொண்ணு டா அவ.". என்று சொல்லி பேச்சை மாற்றி விடுவான்..

அவனும் ஒன்றும் சொல்ல முடியாமல், ஆமா, நல்ல பொண்ணு நினைத்து.. அமைதியாகி விடுவான்..

கல்லூரி படிப்பு முடிந்து, மேலும் இரண்டு வருடங்கள் ஓடியது... அரவிந்த் கல்லூரி முடித்தும் பொறுப்பில்லாமல் வேலை வெட்டிக்கு எதுக்கும் செல்லாமல், எந்நேரமும் கீதாவுக்கு டிரைவர் வேலை பார்த்துக் கொண்டும், அப்பா காசில் அவளுக்கு தண்ட செலவு செய்து கொண்டும்.. அப்போ அப்போ அவளை சைட் அடித்துக் கொண்டும் நாட்கள் ஓடியது..

அவளும் கல்லூரி படிப்பை முடித்து ஒரு ஐடி கம்பனியில் வேலைக்கும் சேர்ந்து விட்டால்.. இன்னுமும் அரவிந்த் அவனின் பணியை எந்த மாற்றமுமின்றி கீதாவுக்காக தொடர்ந்துக் கொண்டு தான் இருந்தான்..அவளும் அவனை வேலைக்கு போ குடும்பத்தை பார் என்று இதுவரை ஒரு வார்த்தை கூட வாய் திறந்து சொன்னது இல்லை...

அரவிந்த் நண்பர்கள் எல்லாம் வேலை குடும்பம் என்றும் செட்டில் ஆகி விட.. சுத்தமாக யாரிடமும் கனெக்ஷன் இல்லாமல் போனது.. விக்கி கல்லூரி முதல் மாணவனாக வந்து, அவனை வெளிநாட்டில் வேலைக்கு எடுத்துக் கொண்டார்கள்.. அதோடு அரவிந்தையும் மறந்து தன் வேலையில் மூழ்கி குடும்பத்தை பார்க்க ஆரம்பித்து இருந்தான்..

ஒரு நாள், அவளாக அவனுக்கு போனில் அழைத்து.. பார்க் வர சொல்லி, அவனுக்காக காத்திருந்தால்.. அவன் என்ன ஆபீஸ் வேலையா செய்கிறான்... அடுத்த பத்து நிமிடத்தில் அவள் முன் நின்றவனை ஏற இறங்க பார்த்தவள்..

கல்லூரியில் பார்த்ததை விட இன்னும் நன்றாக மெருகேரி அழகாக இருந்தவனை பார்க்க பார்க்க அவளுக்கு என்ன தோன்றியதோ!

சுற்றி யாராவது இருக்கிறார்களா என்று பார்த்தவள், யாரும் இல்லை என்று தெரிந்ததும், வேகமாக அவன் இதழை கவ்வி இருந்தால்..

இதை சற்றும் எதிர்ப்பார்க்கவில்லை, என்றது அவன் முகத்திலே அப்பட்டமாக தெரிந்தது..

இதுவரை, கீதாவை அழகாக இருந்தால் ரசித்து பார்ப்பான், பாராட்டுவான், அவ்வப்போது சைட் அடிப்பான், அதை தாண்டி அவன் மனதில் எந்த ஒரு எண்ணமும் அவள் மேல் தோன்றியதில்லை, பார்ப்போர் எல்லாம் காதலியா என்று கேட்டாள், விளையாட்டாக ஆம் என சொல்லி சிரித்து விட்டு கடந்து விடுவான்..

அவளை பிடிக்கும் அதனால், ஒரு நண்பனாக ஜாலியாக அவளிடம் பழகுகிறான் அவனை பொறுத்தவரை.. ஆனால் அவள் எந்த எண்ணத்தில், அவனுடன் பழகுகிறாளோ.. அவளுக்கே வெளிச்சம்...

மழை...
 

Author: Indhu Novels
Article Title: அத்தியாயம் 13
Source URL: Indhu Novels-https://indhunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top