Hello! It seems that you are using AdBlock - some functions may not be available. Please add us as exceptions. Thank you for understanding!
  • வணக்கம் 🙏🏻 இந்து நாவல்ஸ் தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்
  • இந்து நாவால்ஸ் தளத்தில் எழுத விரும்புவோர், indhunovel@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு செய்தி அனுப்பவும். கற்பனைகளை காவியமாக்குங்கள் ✍🏻💖

அத்தியாயம் 15

Administrator
Staff member
Messages
278
Reaction score
215
Points
63
அத்தியாயம் 15
மருத்துவமனையில், அரவிந்தின் குடும்பம் அழுது கொண்டு இருக்க.. தனக்கும் இதுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதை போல கீதா இருக்க...அவளை பார்க்க பார்க்க வெறியாகியது அவனுக்கு...

அவனும் அந்த ஹோட்டளுக்கு தான் மீட்டிங்காக தந்தையுடன் வந்திருந்தான்.. மாணிக்கம் முன்னால் செல்ல, இவன் கார் பார்க் செய்து விட்டு வரும் போது, மாணிக்கம் ஒரு இடத்தை பார்த்தபடியே மயங்கி சரிய, அவர் எங்கு பார்க்கிறார் என்று, அந்த பதட்டமான சூழ்நிலைலும் பார்த்த அரவிந்துக்கு ரத்தம் கொதித்தது...

தற்போது தந்தை தான் முக்கியம் என்று, அவசரமாக அவரை தூக்கிக் கொண்டு மருத்துவமனை வந்தான்... மாணிக்கம் இப்போது நலமாக இருக்கிறார் என்று தெரிந்ததும்..
கீதாவை வெறியாக தேடி சென்று கன்னம் கன்னமாக தன் கோவம் தீரும் வரை அரைந்தவன்,

"என் குழந்தை என் கைல வர வரைக்கும் இப்டி கேவலமான வேலையப் பாத்து, என் குழந்தையும் சேத்து கலங்க படுத்தின, உன்ன கொண்ணு புதச்சிடுவேன்.. மைன்ட் இட் டேமிட்.." அவளை எச்சரிக்கை விடுத்து சென்றான்...

நாட்கள் ஓடியது.. கீதாவை பற்றி மொத்த குடும்பத்துக்கும் தெரிய, அதிர்ச்சியும் கவலையுமாக, குழந்தைக்காக பொறுத்துக் கொண்டு, அவளை அறவே வெறுத்து சகித்து கொண்டார்கள்.. ஆனால் கீதா அதை பற்றிய கவலை எல்லாம் இல்லாமல்.. தன் சுதந்திரம் இந்த குழந்தையால் தானே பறி போனது என்று பல முறை அதை அழிக்க முற்பட்டாள்.

நாட்டு வைத்தியம் முறையில் ஒரு பொடியை வாங்கி வந்து அதை நீரில் கலந்து குடிக்கப் போக, அது என்ன மருந்து என்று கண்டு கொண்ட தேவகி அதிர்ச்சியாகி அவளை தடுத்து, வந்த கோவத்தில் கீதாவை அடித்தும் விட்டார்,, அந்த ஆத்திரத்தில் அவரை பழி வாங்க யாரும் இல்லாத நேரம் பார்த்து மாடியில் இருந்து தள்ளி விட்டு கொன்றும் விட்டால்...

இந்த விடயம் அப்போது அரவிந்துக்கு தெரியாது போனது..
பாட்டி, அரவிந்தின் கவலையில் காலப்போக்கில் பிபி சுகர் என்று இன்னும் பல நோய்கள் அவரை படுத்த, சுகர் அதிகமாகி அவரின் ஒரு காலை அருவை சிகிழ்ச்சை மூலம் நீக்க வேண்டியதாக போனது...

எப்படியோ, அரவிந்தின் குழந்தை பல இன்னல்களை தாண்டி பிறந்து அவன் கையில் வந்து விட்டது... கீதாவை கையோடு விவாகரத்து பத்திரதில் கையெழுத்து போட சொல்ல, முதலில் மறுத்தவள்.. பின் அடித்து மிரட்டி கையெழுத்து போட வைத்து துரத்தி விட்டான்..

அதன் பிறகு குழந்தைக்கு எல்லாமே அரவிந்தே பார்த்து பார்த்து செய்தான்.. குழந்தைக்கு தாய் பால் தான் கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில்,, பணம் கொடுத்து ஒரு குழந்தை பெற்ற பெண்ணை தினமும் தாய் பால் கொடுக்க வைத்தான்..

குழந்தை மட்டுமே அவன் வாழ்க்கையாகி போனது.. இனி தன் வாழ்வில் மீண்டும் ஒரு திருமணம் என்பதே வேண்டாம் என்ற முடிவுக்கு வந்திருந்தான்.. தன்னை தானே மாற்றிக் கொண்டு, சிரிப்பை மறந்து, முகத்தில் இறுக்கம் குடி கொள்ள.. தந்தையின் தொழிலை எடுத்து நடத்தி அதில் வெற்றியிம் கண்டான்..

காலபோக்கில் மனைவி இறந்த துக்கம், பற்றாக்குறைக்கு மகனின் வாழ்க்கை இப்படி ஆகி விட்டதே என்ற கவலையில் இருந்த மாணிக்கம், தூக்கத்தில் இருக்கும் போதே இரண்டாவது மாறடைப்பு வந்து இறந்து விட... பெற்றோரை இழந்து அனாதையாகி போனான்...

தேவகி இறந்து போனதில் அரவிந்துக்கு சந்தேகம் இருந்து கொண்டே இருக்க.. அதை அவனின் கல்லூரி நண்பன் குமார் என்பவன் சிபிஐ ஆபீசராக இருக்க.. அவனிடம் உதவி கேட்டு கண்டு பிடிக்க சொன்னான்...

துரிதமாக செயல் பட்டு, அது கொலை என்றும் எதற்க்காக கொலை செய்ய பட்டார் என்று கண்டு பிடித்தான் குமார்.. அதன் பிறகு சும்மா இருப்பானா அரவிந்த், தன்னை ஏமாற்றியது மட்டுமில்லாமல் தன் குடும்பத்தையே இல்லாமல் செய்தவலை, இரக்கமே காட்டாமல் "கீதா தான் செய்தது தவறு தான் அரவிந்த் என்ன மன்னிச்சி விற்று, அவன் காலை பிடித்து, கண்ணீர் விட்டு கெஞ்சியும்" .. அதை துளியும் கண்டு கொள்ளாமல், அவளை போலீசாரிடம் ஒப்படைத்தான்..

இப்போது கீதா, அவன் வாழ்க்கையில் இல்லை தான்.. ஆனால், அவள் கொடுத்து சென்ற வலிகள் காயங்கள் எல்லாம் அழிக்க முடியாத பெரிய பெரிய வடுக்கலாக மாறி அவன் இதயத்தில் பதிந்து போய் இன்றளவும் இருக்கிறதே! தன் கடந்த காலத்தை எல்லாம் நினைத்து பார்த்தவன் கண்ணில் நீர் வழிந்து அவன் காதை அடைய, அதை துடைக்க கூட மனமின்றி படுத்து இருந்தான்..

தன் நினைவுகளில் இருந்து மீண்ட பாட்டி, "கண்ணா உன் வாழ்க்கைய இப்படியே கடைசி வரைக்கும் தனிமையிம் அழுகையுமா போய்டுமோன்னு பயமா இருக்கு ப்பா.. கடவுளே உனக்கு மனசுன்னு ஒன்னு இருந்தா என் பேரனோட வாழ்க்கைக்கு ஒரு நல்ல வழியக் காட்டு" என கடவுளிடம் மன்றாடியவர், கண்ணில் வடிந்த நீரை துடைத்துக் கொண்டார்...

******

ஏர்ப்போர்ட்டில், முல்லை கையில் பிறந்து ஐந்து நாட்களே ஆன குழந்தையை வைத்துக் கொண்டு, ஒரு மறைவான இடத்தில் அமர்ந்திருந்தாள்.
பயத்தில் உடல் விடவிடக்க வியர்வையில் குளித்த வன்னம் தன் நெஞ்சோடு குழந்தையை அனைத்து பிடித்தபடி, யாராவது தன்னை தேடி துரத்தி வருகிறார்களா என உயிர் பயத்தில் இப்படியும் அப்படியுமாக விழிகளை உருட்டி அச்சத்தில் இதயம் படுவேகமாக அடித்துகொள்ள பார்த்தாள்.

"அடியேய் கூறு கெட்ட சிறுக்கி மவளே நீ இங்க தான் இருக்கியா டி.." கனீரென்ற கொடூரமாக கத்திக் கொண்டே வந்து, பயத்தில் கோழிக் குஞ்சியாக நடுங்கிக் கொண்டு இருந்தவளின் தலை முடியை ஒருவன் கொத்தாக பிடித்து தூக்கி இருந்தான், அவள் அசந்த நேரம்.

அந்த வலியிலும் அந்த பிஞ்சி குழந்தையை கெட்டியாக பிடித்துக் கொண்டு, அரக்கனிடமிருந்து விடுபட திமிறி, விட சொல்லி கெஞ்ச..
அந்த அரக்கனோ விடாது அவளை எர்ப்போர்ட்டில் இருந்து தரதரவென இழுத்து வந்து வெளியே போட்டான்.

"ஏன் டி எவ்ளோ கொழுப்பு இருந்தா, எங்க எல்லார் கண்ணுலயும் மண்ணை தூவி, பொறந்ததும் குழந்தை செத்து போச்சின்னு சொல்லிட்டு, அஞ்சி நாளா குழந்தைய மறச்சி வச்சதும் இல்லாம, நீயும் எங்ககிட்டருந்து தப்பிச்சி ஓடியிருப்ப" கட்டை குரலில் கத்தி, முல்லை கன்னத்தில் ஓங்கி ஒரு அறை விட்டான் அரக்கன்.

அம்மாஆஆஆ.. என்ற அலாலோடு, கீழே விழுந்தாலும் குழந்தைக்கு எதுவும் ஆக விடாமல் நன்றாக அனைத்து கொண்டு... எப்படியாவது இங்கிருந்து தப்பிக்க வழி பார்த்துக் கொண்டே கண்களை சுழல விட,
சரியாக அதேநேரம் முல்லை விழுந்த அதிர்வில் அதுவரை அழகாக அவள் கையில் துயில் கொண்டு இருந்த குழந்தை வீல்.. வீல்.. என்ற சப்தத்துடன் ங்கஆ..ங்கஆ.. பசியில் கத்த ஆரமித்து இருந்தது.

அதில் காதை குடைந்த அந்த அரக்கன்.. "ச்ச.. இந்த சனியன் எதுக்கு இப்ப கத்துது, டேய் அவ கைல இருக்க அந்த சனியனை வாங்கி, கழுத்தை முறிச்சி போடு டா, சும்மா நொய்யி நொய்யின்ட்டு" அவன் அடியாளிடம் சொல்ல,

அவனும் அந்த அரக்கன் பேச்சை கேட்டு, முல்லையின் கையில் இருந்த குழந்தையை பிடுங்க போக. பயத்தில் ஒரு கையால் குழந்தையை பிடித்தும் மறுக் கையால் தரையில் ஊனி, பின்னால் நகர்ந்து கொண்டே போனவளின் கையில் ஒரு கல் தென் பட்டது.

அதை எடுத்து தன்னை நோக்கி வரும் அந்த தடியனின் முகத்தில் விட்டெரிந்தவளாக , சடாரென எழுந்து மின்னலாக அந்த இடத்தை விட்டு குழந்தையுடன் மூச்சிறைக்க ஓட ஆரமித்தாள் முல்லை..

அவள் ஓடுவதை கண்ட அந்த அரக்கன் வெறியாகி, தன் அடியாட்களை ஏவியவன், தானும் அவள் பின்னால் துரத்திக் கொண்டே சென்றான்...

மழை...
 

Author: Indhu Novels
Article Title: அத்தியாயம் 15
Source URL: Indhu Novels-https://indhunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top