Hello! It seems that you are using AdBlock - some functions may not be available. Please add us as exceptions. Thank you for understanding!
  • வணக்கம் 🙏🏻 இந்து நாவல்ஸ் தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்
  • இந்து நாவால்ஸ் தளத்தில் எழுத விரும்புவோர், indhunovel@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு செய்தி அனுப்பவும். கற்பனைகளை காவியமாக்குங்கள் ✍🏻💖
Administrator
Staff member
Messages
278
Reaction score
215
Points
63
அத்தியாயம் - 51

உறக்கக் கலகத்தில் இருந்தவளுக்கு, தான் காண்பது கனவா நினைவா என உணர்ந்து கொள்ளவே சிலநொடிகள் பிடித்தன.

தன்மீது இருக்கும் பாறை போன்ற அழுத்ததும், ரத்தம் உறிஞ்சும் அட்டையினை போல, கழுத்தில் உண்டாகும் மிம்சாரம் பாயும் உணர்வுமே உண்மையை எடுத்துறைக்க, மூளையோ அவன் தானா இவன் என நம்ப மறுத்தது.

கணவனை இத்தனை நாட்கள் கழித்து பார்த்த மகிழ்ச்சியில் துள்ளி குதித்த இதயத்தோடு, மாமா.. என உற்சாகம் பொங்க அழைக்கப் போனவளின் செவ்விதழ், மா.. எனும் போதே லபக்கென்று அசுர வேட்கயாக விழுங்கப்பட்டது, போதை ஏறிய உமிழ்நீர் சுரக்கும் சூடான கிணற்றுக்குள்.

மிம்சாரம் தாக்கிய விழிகள் இரண்டும், அதிர்ச்சியில் அகலவிரிய, பாவையின் செப்பு இதழ்களோ அவன் பற்களில் சிக்கி, கடக்மடக் கடிவாங்கும் சத்தமெழுப்பி, பெண்ணுடலை சிலிர்க்க வைத்தது.

புது மனைவியை பிரிந்த ஏக்கம் தாலாமல் விடியவிடிய தூக்கமின்றி தவித்து போன ஆத்விக்கு, இதற்கு மேலும் அவள் அருகில் இல்லை என்றால் மூச்சி விடுவது சிரமம் என தோன்றியதோ என்னவோ! திருட்டுப் பூனை பதுங்கி சென்றது கவி தங்கியிருக்கும் அறைக்கு.

அங்கோ ஏசிக் காற்று ஆகாமல், இரு தோழிகளும் தலை முதல் கால் வரை ஒற்றை பெரிய போர்வையை போர்த்திக் கொண்டு நன்றாக உறக்கத்தில் இருக்க, இரண்டில் யார் தன் மனைவி என்ற குழப்பத்தோடு தலையை சொரிந்தவன்,

'சரி திரும்பி சென்று விடலாமா..' என யோசனையாக நிற்கும் போதே, வெண்பாதம் ஒன்று போர்வையை தாண்டி வந்து சிணுங்கவும் கண்கள் பளிச்சிட்டு போனவன், மிஞ்சி அணிந்த பாதத்தின் சொந்தக்காரி தன்னவள் தான் என கண்டுகொண்டதும், உள்ளுக்குள் சுரந்த உற்சாகத்தோடு தனதறைக்கு கடத்தி வந்தவன் தான்.

மெத்தையில் படுக்க வைத்து மேலிருந்து கீழாக, கீழிருந்து மேலாக என மாறி மாறி உறங்கும் மனைவியைக் கண்கள் இடுங்க கண்டு, போர்வை போன்று அணிந்திருந்த சுடிதாரை வெறிகொண்டு முறைத்தான் கள்வன். கடைசியாக அவன் பார்த்து சென்றது புடவையில், அதுவும் போதை ஏற்றும் அவளின் குழைத்து வைத்த செங்கனிகளை, பார்வையாலே கள்ளு குடித்து சென்றானே!

இப்போதோ அன்று புடவையில் துருத்தி நின்ற அழகு பதுமையின் வளமை எல்லாம், தொலதொல சுடிதார் சட்டையில் மொத்தமாக பத்திரப்படுத்தி வைத்துக் கொண்டது, கள்வனின் கண்களில் சிக்காதவாறு.

அப்படி இருந்தும் அவன் ஸ்கேன் விழிகள் கற்பனை குதிரை ஓட்டி பாவையின் மேனியில் அச்சாரம் பதித்து, எது எது எந்தெந்த மூலையில் பதுங்கி இருக்கும் என்று சரியாக கணித்து விட்ட நிலையில், ஆணுடல் ஜிவ்வென்று கரண்ட் அடித்த உணர்வானது. மெல்ல அவளருகில் நெருங்கி ஸ்ரீரங்கநாதன் போசியில் தலைக்கு முட்டு கொடுத்து படுத்துக் கொண்ட ஆத்வி, மனைவியை ரசித்தவனின் கண்கள் நேரம் செல்ல செல்ல, கிறக்கத்தில் சொருகியது.

அதிலும் அந்த மூக்கு நுனி அவனை பித்தனாக்க, மெல்ல அவள் இடையில் கரம் பதித்து நெருங்கி, நெற்றி தொடங்கி முகம் முழுக்க ஈர முத்தத்தை பரவவிட்டு, நேராக அவள் கழுத்து வளைவில் முகம் புதைத்து, உதடு குவித்து உறுஞ்சிக் கொண்டு இருக்கும் வேளையில் கவி விழிப்பதை உணர்ந்தவன், அப்போது தொடாமல் மிச்சம் வைத்த இதழை இப்போது கவ்வி பிச்சி எடுத்தான், அவளின் அதிர்ந்த விழிகளை கண்டபடியே.

ஆடவனின் பாரமும், அவன் கொடுக்கும் முத்தமும் மூச்சி முட்டி அவளை அவஸ்தைக்கு உள்ளாக்கியது, வாய் திறந்து பேச முடியாத நிலையில்.

ம்.. ம்ம்.. என்ற சத்தமெல்லாம் கள்வனின் தடித்த அதரத்தின் உள்ளே மாயமாகிட, காளையின் கரம் செல்லும் இடங்களில் எல்லாம் கூச்சம் கொண்டு நெளிந்து துடித்த கவியோ, அதற்கு மேலும் அவன் தீண்டலை தாங்கும் சக்தியற்றவளாய், தன் இதழில் தேனருந்தும் வண்டை தன் பலம் கொண்டு தள்ளி விட்டு, அவசரமாக எழுந்து நின்றாள்.

கிறக்கம் கலைந்து விழித்தவன் கண்கள், செந்தனலாக சிவந்து போனது மனைவியின் உதாசீனத்தில். கண்கள் மூடி திறந்தவனின் அழுத்தமாக பார்வை, தலை குனிந்தபடி கையை பிசைந்து நின்றிருந்தவள் மீது அழுத்தமாக பதித்து,

"என்ன இத்தனை நாளும் நான் இல்லாம உன் கள்ளக்காதலன் நினைவுல ஜாலியா இருந்துட்டு, இப்போ என்னை கண்டதும், நான் தொட்டதும் விலகி ஓடுறியா..' என்றவனின் விஷம் தடவிய வார்த்தையில், சட்டென நிமிர்ந்தவளின் கண்ணில் கோவத்திற்கு பதில் இயலாமை தான் அதிகம் இருந்தது. இன்னும் தன்னை யார் என்று இவன் கண்டுகொள்ளவில்லையே என்ற வருத்தத்தில்.

"கேக்குறேன்ல பதில் சொல்லாம அப்பாவி முகத்தை வச்சி, என் முகத்தையே பாத்தா என்ன அர்த்தம்.." குரல் ஓங்கி ஒலிக்க எக்கி அவள் கை பிடித்து இழுக்கவும், மலர்கொத்தாக அவன் இரும்பு தேகத்தில் முட்டி மோதி விழுந்தவளின் நெற்றி சுல்லென்றது.

"ஏன் வந்ததும் வராததுமா என்கிட்ட இப்டி வம்பு பண்றீங்க, முதல்ல என்கிட்ட தேவை இல்லாம பேசுறத நிறுத்துங்க.. அப்போ தான் உங்களுக்கான மரியாதைய என்கிட்ட இருந்து எதிர்பாக்க முடியும்.." ஏதோ ஒரு வேகத்தில் வார்த்தையை விட்டவளுக்கு அதன்பின் விளைவுகள் தெரியாமல் போனது.

அடக்கப்பட்ட கோபத்துடன் கவியை பார்த்தவன் மனதில், என்ன ஓடுகிறது என்று நிச்சயம் அவளுக்கு தெரிய வாய்ப்பில்லை தான்.

நொடிபொழுதில் தன் மேலிருந்தவளை புரட்டி போட்டு தனக்கடியில் கொண்டு வந்த ஆத்வி, பாவையின் மெல்லிடையை அரக்கத்தனமாக பிடித்து நசுக்க, வலியில் முகம் சுளித்து அவனிடமிருந்து துள்ளி எழப்போனவளை எழ விடாமல் அழுத்தி பிடித்தவனாக,

"அப்பவும் சொல்றேன் இப்பவும் சொல்றேன், நீ எனக்கு இதுக்கு மட்டும் தான் யூஸ்.." என கட்டிலைக் காட்டியவன், "ஒழுங்கா எனக்கு ஒத்தொழச்சி போனா உனக்கு நல்லது, இல்ல வெறில இருக்கேன் உன்ன அலறவிட்டே சாகடிச்சிடுவேன்.."

கொஞ்சமும் கோவம் தணியாது சொன்னவன், அவளின் மிரலும் விழிகளை காண்பதை தவிர்த்தவனாக, மறுநொடியே அவள் இதழ் கவ்விய ஆத்வி, முன்புபோல் சிறிதும் பொறுமை இல்லாமல் மொத்தமாக அவளை வலிக்க விட்டு திணற வைத்தான்.

"ம்.. ம்ம்.. மாமா.. வேணா வலிக்குதுஊ.." பெண்ணின் அலறல் எல்லாம் அவன் வாய்க்குள்ளே மறைந்து, கண்ணீர் துளிகள் அவள் செவிகளை தஞ்சம் அடைந்து, பஞ்சி இதழ்கள் சிதைந்து போனது.

இது போதாதே, இடை நசுக்கிய கரங்கள் மேலேறி அல்லியின் மலர்பந்தலில் தீவிரமாக மையம் கொள்ளவும், விதிர்விதிர்த்து போனவளுக்கு அவன் முரட்டுத்தனமாக தீண்டும் தீண்டலின் வலியை தாங்க முடியாமல் கண்ணீர் விட, முரட்டுக் கள்ளனுக்கு அவையெல்லாம் உரைக்கவே இல்லை.

அவன் எண்ணமெல்லாம் மீண்டும் மீண்டும் தன்னை புரிந்துக் கொள்ளாமல் உதாசீனப் படுத்தும் மனைவியை, தன் வழியில் கதற வைக்க வேண்டும் என்பதிலேயே இருக்க, கன்னியவளின் மென்பாகங்களை சக்கை பிழைந்து ரணமாக்கி எடுத்து விட்ட பின்னே, சடாரென அவளை ஒதுக்கி தள்ளி விட்டு எழுந்தவன், கூனிக் குறுகிய நிலையில் முகத்தை மூடி அழுதுக் கொண்டிருந்தளை தீர்க்கமாக பார்த்தான்.

"எனக்கான மரியாதை எனக்கு எப்பவும் இருக்கும், உன் மரியாதை எல்லாம் எவனுக்கு டி வேணும்.. கொடுத்த பணத்துக்கு சலிச்சி போற வரைக்கும் நீ எங்கூட தான் இருக்கனும்.." மீண்டும் படுக்கையை சுட்டிக் காட்டியவன்,

"அதான் டீல்.. அதுக்காக தான் எனக்கு வர போற மனைவி இப்டிதான் இருக்கனும்ன்ற கனவை கலச்சிக்கிட்டு, உன்ன மாதிரி எதுக்கும் உதவாத ஒருத்தி கழுத்துல தாலிய கட்டினேன்.. அப்புறம் இதான் லாஸ்ட் இனிமே என் முன்னாடி சத்தமா பேசுறத இதோட நிறுத்திக்கோ, இல்ல ரொம்ப வருத்தப்படுவ.." ஒவ்வொரு வார்த்தையும் அழுத்தம் திருத்தமாக உரைத்து ஆத்வி,

"சீக்கிரம் பொட்டிபடுக்கைய கட்டிக்கிட்டு ரெடியா இரு, கோயம்புத்தூர் போகணும்.." தகவலாக சொல்லி விட்டு வெளியேறிவிட்டான்.

கவிக்கோ கடைசியாக அவன் சொன்ன வார்த்தைகள் எதுவும், அவள் மூளையை எட்டவே இல்லை. அவன் தந்த வலிகளையும் மீறி முதலில் ஆத்வி உரைத்த ஒவ்வொரு வார்த்தைகள் மட்டுமே திரும்ப திரும்ப ஒலித்துக் கொண்டு இருக்க, ஒன்றும் புரியாத மழலை போன்று பரிதவித்து கண்ணீர் விட்டு அமர்ந்திருந்தாள்.

மனைவியிடம் அன்பாக பேசி, ஆசை தீர தூக்கி கொஞ்சி, முத்துக் குளித்து கொண்டாடிட இருந்தவனின் நல்ல மனநிலையை கெடுத்து விட்டாள் கவி.

ஒவ்வொரு முறையும் அவள் செய்யும் தவறுக்கு பெரிதாக கோபம் கொண்டு, அவள் மனதை குத்திக்கிழிக்க வேண்டி, அப்போதைக்கு வாயில் வந்த வார்த்தைகளை பயன்படுத்தி அவளை காயப்படுத்தினாலும், நீலவானை மூடியிருக்கும் மேகமூட்டம் காற்றடித்தால் கலந்து செல்வது போல, கவி மீது அவ்வப்போது துளிர்க்கும் கோவமும் ஆணவனையும் அறியாமல் கலைந்து தான் செல்கிறது, அவளின் மழலை முகம் கண்ட பிறகு.

இருந்தும் அவளால் ஏற்ப்பட்ட அவமானத்தின் தாக்கம், ஆத்வியின் ஆழ்மனதை விட்டு அகலாமல், அவள் தன்னை தவறாக புரிந்துக் கொண்டு பேசும் ஒவ்வொரு கிறுக்குத்தனத்திலும், தானாக கோவம் எல்லை மீறுகிறது. அவளை பார்க்க வேண்டும் என்றே உறங்க கூட மறந்தவனாய் ஓய்வின்றி ஓடோடி வந்தவனை, கடுப்பை கிளப்பி விட்டாள் கவி.

தூக்கம் கண்ணை சுழட்டியடிக்க ஹாலில் உள்ள சோபாவில் கவுந்து விழுந்தவன் கனவில் கூட அவளே ஆட்சி செய்ய, கண்ணை திறக்க முடியா சூழலில் கூட நொந்து போனான் ஆத்வி.

யாதவ் வந்ததில் இருந்தே அறையை விட்டு வருவதில்லை ஸ்வாதி. மித்ரா இரவு தாமதமாக உறங்கியதால், காலையில் சோர்வாக விழித்து எழப் போனவளை அமுக்கி பிடித்து, தன் கை வளைவில் வைத்து முத்தமிட்டுக் கொஞ்சி கொஞ்சியே மீண்டும் அவளை உறங்க வைத்த ஆதி, அன்று வேறு ஞாயிற்றுக்கிழமை என்பதால் தானும் எழுந்துக் கொள்ள மனம் வராமல் அவளோடே உறங்கிப் போனான்.

ஆரு தன் குடும்பத்தோடு கணவன் வீட்டிற்கு சென்று விட, யாதவும் அவன் அறையில் இருந்தான். ஆகையால் பணியாளர்கள் மட்டுமே நேரத்தோடு வந்து அவரவர் வேலைகளை கண்ணும் கருத்துமாக செய்துக் கொண்டு இருந்தாலும், ஹாலில் உடலைக் குறுக்கிப் படுத்திருக்கும் ஆத்வியின் மீதும் ஒரு கண்ணை வைத்தபடி தான் வேலை பார்த்தனர்.

சாதாரண நாளாக இருப்பின் யவரும் இதை ஒரு பெரிய விடமாக கண்டுகொண்டு இருக்க மாட்டார்கள். புதிதாக திருமணம் முடிந்தவன் என்பதால் மனைவியோடு இல்லாமல் இங்கு ஏன் வந்து படுத்திருக்கிறான் என்ற எண்ணம் தான் அவர்களுக்கு.

வெகுநேரமாக அவன் பேசி சென்ற வார்த்தையும், தந்து சென்ற ரணத்தையும் நினைத்து மறுகிய கவி, பின் தெளிவு பெற்றவளாக அனைத்தையும் ஓரம் தள்ளிவிட்டு குளியலறை தேடிய போது தான், இது ஆத்வியின் அறை என உணர்ந்தாள் போலும்.

"அச்சோ அங்கிருந்து என்ன இங்க தூக்கிட்டு வந்துட்டாறா, ரொம்ப கேடி பண்றதெல்லாம் அடாவடித்தனம்.. பேசுறது எல்லாம் அபாண்டம்.. ஆனா கோவம் மட்டும் டஜன் கணக்குல வருது.." முனங்கியபடியே கீழே வந்த கவி, ஹாலில் உறங்கும் ஆத்வியை கவனிக்கத் தவறியவளாக, ஸ்வாதி இருக்கும் அறைக்கு சென்றாள்.

ஏற்கனவே உறங்கி எழுந்து விட்ட ஸ்வாதிக்கு காலையில் கொடுக்க வேண்டிய பால் சத்து கஞ்சியை, பணிப்பெண் கொடுத்து விட்டு சென்றிருக்க, அதனை உண்டு விட்டு மருந்து சாப்பிட்ட அசதியில், மீண்டும் படுத்து உறங்கி இருந்தாள்.

அவளை தொந்தரவு செய்யாமல் மாற்றுடையை எடுத்துக் கொண்டு குளியலறை சென்ற கவி, உடைகளை கலந்து குளிக்க தயாராகிய போது தான், தன் பூமேனி ரத்தம்கன்றி இருப்பதை கண்டு முகம் சுணங்கியவள், இதமாக அவ்விடங்களை வருடிவிட்டுக் கொண்ட கவி,

"ப்பா.. என்னா பிடி, அது கையா இல்ல இரும்பா.. ரொம்ப படுத்துறான் சைக்கோ மாமா.." செல்லமாக முனகிக் கொண்டே தலைக்கு குளித்து முடித்து உடை மாற்றி வெளியே வந்தவள், பூஜை அறைக்கு சென்று மித்ரா கற்றுக் கொடுத்ததை போல விளக்கேற்றி ஸ்வாமி கும்பிட்டு, நெற்றி வகுட்டிலும் தாலிக்கொடியிலும் குங்குமம் வைத்துக் கொண்டவளுக்கு, அடுத்து அந்த பெரிய வீட்டில் செய்ய வேறெந்த வேலைகளும் இல்லை.

அனைத்து வீட்டு வேலைகளையும் பணியாட்களே செய்து முடித்திட, மித்ராக்கே அங்கு சமையல் வேலைய தவிர வேறெந்த வேலையும் இல்லை. கவியின் நிலைமையோ அத்தைக்கு நேர்மார். ஸ்வாதிக்கு அறுவை சிகிச்சை முடிந்த நாளில் இருந்தே அவளுக்கு தலைவாரி, பின்னல் போட்டு விடுவது கூட மித்ரா தான்.

பாப்பு குட்டிக்கு தலை பின்னல் போட வராது. அப்டியே போட்டாலும் அது நாய் பிராண்டி வைத்ததை போல் சிரிப்பாக இருக்கும். அவளைப் பற்றி நன்றாக ஸ்வாதியின் மூலம் அறிந்துக் கொண்ட மித்ரா, பெரிதாக எந்த வேலையும் செய்ய விடுவது இல்லை.

விக்ரமை பார்த்து கொள்வது கூட இப்போது கடமையாகி போக, டிவி அரட்டை சிரிப்பு என்றே ஒவ்வொரு தினமும் சென்று விடும்.

நேரம் ஆகியதால், 'என்ன இன்னும் யாரையும் காணல' பணிப்பெண் கொடுத்து சென்ற காபியை அருந்தியபடியே ஹாலுக்கு வந்தவளின் பார்வையில் பட்டுவிட்டான், அவளின் கனவுக் கள்வன்.

"அச்சோ, என்ன இவர் இங்க வந்து படுத்து இருக்காரு.. எப்போ ஊர்ல இருந்து வந்தார்னு கூட ஒரு வார்த்தை சொல்லல, அதுக்குள்ள என்னென்ன கோக்கு மாக்குத்தனம் பண்ணி வச்சிட்டார்..

இந்த சின்ன சோபால எவ்ளோ நேரம் இவர் இருக்க ஹைட்டுக்கு காலை குறுக்கிட்டு தூங்க முடியும், மச்.. பாவம், எழுப்பி அவர் ரூம்ல படுக்க சொல்லலாம்.." இளகிய மனம் பரிதவித்து அவனை நெருங்கியவளுக்கு, 'வேண்டாம்.. நேரம் சரியில்லை அவனை நெருங்காதே..' என மேலிருப்பவன் ஓலம் இடுவது பாவம், மானுடப்பிறவி அவளுக்கு என்னங்கம் விளங்கும்.

வம்பை விலைக் கொடுத்து வாங்க முடிவு செய்து விட்டாள் போலும்.

"மாமா.. மாமா.. எழுந்து உங்க ரூம்ல போய் ஃப்ரீயா படுங்க மாமா.." அவனை தட்டி எழுப்ப, நல்ல அசதியில் உறங்குபவன் அசைந்தான் இல்லை.

'என்ன இப்டி தூங்குறாங்க..' யோசனையாக அவன் தோள்ப்பட்டையைப் பிடித்து இழுக்கவும், ஸ்ஸ்ஸ்.. என்ற சத்தம், வெவ்வேறு விதமான வலிகளின் பிரதிபலிப்பாக இருவரிடமிருந்தும் வெளிவந்தது.

இவள் கன்னத்தில் கை வைத்து முனக, அவன் தோள்ப்பட்டையைப் பிடித்துக் கொண்டு முனகினான்.

ஆத்வி எழவில்லை என்றதும், காயம் பட்ட இடம் தெரியாமல் அவ்விடத்தில் சற்று அழுத்தம் கூட்டி அவள் உளுக்கியதில், சுல்லென்ற வலியில் சடாரென எழுந்தவன், பேலன்ஸ் மிஸ்ஸாகி அடிபட்ட தோள்ப்ட்டை தரையில் வேகமாக மோதி கீழே விழுந்து விட்டான்.

முருகாஆ.. என வாயில் கை வைத்து அலறிய கவி, "அச்சோ மாமா என்னாச்சி.." தோளைப் பிடித்தபடி வலியில் நெளிந்துக் கொண்டு இருந்தவனை மீண்டும் நெருங்கி, அதே தோள்ப்பட்டையில் கரம் பதித்து அவள் தூக்க முற்ப்பட்ட வேளையில், வலியில் கோவம் எல்லை மீறி உடலை சுழட்டி எழுந்த வேகத்தில், ஆத்வியின் கரம் அவள் பட்டு கன்னத்தை பதம் பார்த்து விட்டது என்றால், ஆத்விக்கும் காயம் கொண்ட இடம் வின்வின்னென்று வலி எடுத்தது.

கீழே விழுந்து அடிப்பட்ட போது கூட வலி தெரியவில்லை. ஓய்வு எடுக்காமல் பயணம் செய்தது, காயம் கொண்ட கையில் ஐம்பது கிலோ தாஜ்மஹாலை தூக்கி சென்றது எல்லாம் சேர்த்து வைத்து, அப்போதே அவனுக்கு வலி எடுக்க தொடங்கி விட்டாலும், பெரிதாக தெரியவில்லை மனைவி மீதிருந்த ஆசையில்.

இப்போது கவி வந்து சீண்டியதும், வலியை தாண்டிய அவள் மீது உள்ள கோவமே துருத்திக் கொண்டு மேலெழுந்து, ஆத்திரத்தில் கை ஓங்கும் அளவுக்கு வைத்து விட்டது.

கன்னத்தில் கை வைத்து கண் கலங்கி நின்றவளை ஒரு பொருட்டாகக் கூட நினைக்காமல், ஆத்வி அறைக்கு செல்ல முனையும் போது தான் கண்டாள், அவன் சட்டையை தாண்டி கசிந்து வந்த குருதியை.

அதிர்ச்சியில் விழி விரித்த கவி, "என்ன இது ரத்தம் வருது.. அப்போ அங்கே ஏற்கனவே காயம் இருந்திருக்கா, அதான் நான் தொட்டதும் வலில இப்டி நடந்துக்கிட்டாறா.." படபடப்பாக அவன் பின்னோடு ஓடியவளுக்கு, என்னென்ன கைவைத்தியம் செய்ய காத்திருக்கானோ முரட்டு படவா.
 

Author: Indhu Novels
Article Title: அத்தியாயம் 51
Source URL: Indhu Novels-https://indhunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top