Hello! It seems that you are using AdBlock - some functions may not be available. Please add us as exceptions. Thank you for understanding!
  • வணக்கம் 🙏🏻 இந்து நாவல்ஸ் தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்
  • இந்து நாவால்ஸ் தளத்தில் எழுத விரும்புவோர், indhunovel@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு செய்தி அனுப்பவும். கற்பனைகளை காவியமாக்குங்கள் ✍🏻💖
Administrator
Staff member
Messages
278
Reaction score
215
Points
63
அத்தியாயம் - 57

தலைகுனிந்து நின்றிருந்த மனைவியை அழுத்தமாக கண்ட ஆத்வி, "நீயெல்லாம் பொண்ணே இல்ல டி, உன்ன பாத்தாலே டென்ஷன் ஆகுது..

நீ பேசுறத காது கொடுத்து கேக்க முடியல, ஏன் டா அவசரப்பட்டு உன் கழுத்துல தாலி கட்டினோம்னு இருக்கு.. லூசு மாறி உளறிட்டு இருக்காம கிளம்பி வீட்டுக்கு போ..

நாளைக்கு உன்ன கூட்டிட்டு போய் எங்க அம்மா வீட்ல விட்டுட்டு வரேன், மார்னிங் ரெடியா இரு, இப்போ போ.."

அடக்கப்பட்ட கோபத்துடன் மொழிந்தவன், செக்யூரிட்டிக்கு அழைத்து சூடாக காபி கொண்டு வர சொல்லி விட்டு, ஒரு சிகரெட்டை எடுத்து பற்ற வைத்து ஆழமாக இழுத்த ஆத்வி, இருக்கையில் அமர்ந்து மீண்டும் வேலையை தொடங்கி விட்டான்.

இடத்தை விட்டு அசையாமல் நின்ற கவிக்கு, கோவமும் அழுகையும் போட்டிப் போட்டுக் கொண்டு வந்தது.

"என்ன அங்கே அனுப்பிட்டு அவளோட சந்தோஷமா வாழ தானே பிளான் போடுறீங்க, எனக்கு தெரியும்.." அவள் அழுகையோடு சொல்ல, மண்டை வெடிக்காத குறை அவனுக்கு.

"எங்கிட்ட குறை இருக்கு, உன்ன பிடிக்கலைனு நீங்களே என்கிட்ட நிறைய முறை சொல்லி இருக்கீங்க, அப்போ எனக்கு சரியா புரியல, நானும் அதை பெருசா எடுத்துக்கல..

ஆனா நீங்க ஒவ்வொரு முறையும் என்ன ஒதுக்கி வச்சி, ஒதுங்கிப் போகும் போது கொஞ்சம் கொஞ்சமா புரிய தொடங்கிடுச்சி.. நான் போறேன், இதுக்கு மேலயும் உங்க சந்தோஷத்துக்கு குறுக்க நிக்க நான் விரும்பல.." இம்முறை சினத்தில் சிவந்து கோவமாக திரும்பிய கவி, ஆடவனின் இறுகிய அணைப்பிற்குள் வெண்ணையாக புகுந்தாள்.

"நானா உன்ன ஒதுக்கி வைக்கிறேனா, இல்ல நீயா ஒதுங்கிப் போறியா டி.." அவளை கூர் பார்வையால் கொத்தி, ஆவேசமாக மொழிந்த நொடி, அவளது செப்பு இதழ்களை கணவனிடம் பரிக்கொடுத்து இருந்தாள் பாவை.

அடங்காமல் பேசும் வாய்க்கு அசுரத்தனமாக தண்டனைகளை அவன் வழங்க, முதலில் திடுக்கிட்டு விழித்தவள் பின் துவண்டு துடித்துப் போனாள், இதழ் முத்தத்தின் தீவிரம் தாங்காமல்.

"இனிமே தேவை இல்லாம பேசுமா டி இந்த வாயி.." உள்ளே கருவியபிடி அவள் இதழை சிதைத்து விழுங்க, மூச்சி திணறி ஹ்ம்.. என்றவளின் சத்தமும் அசுரனின் தொண்டைக்குள் விழுங்கப்பட்டது.

எத்தனை நேரம் முத்தயுத்தம் நடத்தினானோ! அவனுக்கே ஒருக்கட்டத்தில் மூச்சிமுட்டத் தொடங்க, சரியாக அந்நேரம் கதவு தட்டும் சத்தம் கேட்கவே, மது அருந்தியது போல நிற்க முடியாமல் தள்ளாடி நின்ற மனைவியை இருக்கையில் அமர்த்தி விட்ட பின்னே, வெளியே சென்று செக்யூரிட்டியிடம் இருந்து காபியை வாங்கிக் கொண்டு வந்தவன், அவளிடம் ஒரு கப்பைக் நீட்டி,

"குடி டி.." என்றான்.

மது உண்ட மயக்கம் தெளியாத நிலையில் தலையை ஆட்டியும் ஆட்டாமலும், அவன் கொடுத்த கப்பை வாங்கி, சூடு பறக்கும் காபியை அப்பயே உதட்டில் வைத்துக் கொண்டவளாக, ஸ்ஸ்ஸ்..ஹஆஆ.. என அலறியதில்,

"ஏய்.. லூசு லூசு.. ஒரு காபிய கூட சரியா குடிக்க மாட்டியா டி, யூஸ்லெஸ் ஃபெலோ.. ஒன்னுதுக்கும் லாய்க்கு இல்ல டி நீ.." கடினமாக கடிந்த ஆத்வி, அவளது பட்டு இதழை மென்மையாக வருடி விட்டு தன் அதரம் குவித்து இதமாக ஊதி விட, படபடக்கும் இமைகளை விரித்து கணவனின் பரிதவிபில் உருகிப் போனாள் கவி.

"நீங்க கடிச்சி வச்சதால தான் எரிச்சல் தாங்காம சுட்டுடுச்சி, அதுக்கு ஏன் திட்றீங்க மாமா.." பாவமாக முகத்தை வைத்து கேட்க்கும் மனைவி மீது எப்படி கோவம் கொள்வது!

மெல்ல புன்னகை பூத்துக் கொண்டவன், "ஹ்ம்.. இதை மட்டும் சரியா சொல்லு, ஆனா ஒன்னும் உருப்படியா செய்ய மாட்டேங்குற.." பெரிதாக சலித்தவனாக, நன்றாக காபியை ஆத்தி அவளிடம் கொடுத்து விட்டு, தானும் எடுத்து குடித்தவன், "சொல்லு கவிஇ.. இந்த நேரத்துல இங்க எதுக்கு வந்த.."என்றான் நிதானமாக.

இது என்ன கேள்வி என்பது போன்ற பார்வை வீசி, "உங்கள பாத்து பேச தான் வந்தேன்.." என்றாள் சத்தம் வெளிவராதக் குரலில்.

"என்ன பாத்து பேசுற அளவுக்கு, நமக்குள்ள என்ன இருக்கு கவி.." என்றபடி அவளிடம் நெருங்கி இருந்தான் ஆத்வி.

கணவனின் நெருக்கத்தில் தடுமாறிப் போனவள், "நீ.நீங்க என் ப்.புருஷன் உங்கள பாத்து பேச, காரணம் சொல்லனுமா என்ன.." கருமணிகள் அலைபாய, அவ்வார்த்தைகள் சொல்லும் போதே கன்னங்கள் செம்மை பூசி விட்டது.

"ம்ஹ்ம்.. இப்போ நீ சொல்லி தான் டி, நான் உன் புருஷன் அப்படிங்கிறதே நியாபகம் வருது.. சரி சொல்லு என்ன பேசணும்.." ஹஸ்கியாக கேட்டவனது கரமோ பாவையின் இடையில் பதிய, இதழ் கடித்து தன்னை சமன் செய்து நின்ற கவி,

"மாமா.. உங்களுக்கு வேலை இருக்கா.." என்றாள் ஒருவித எதிர்பார்போடு.

"வேலை இருந்தா என்ன இல்லாட்டி என்ன.. உனக்கு என்கிட்ட என்ன வேணும்னு சொல்லு டி, செய்றேன்.." சொன்னவனது அதரம் பாவையின் தோள் பட்டையில் உரச, உடல் சிலிர்த்துப் போனவளாக,

"உங்ககூட எங்கேயாவது வெளிய போகனும்னு ஆசையா இருக்கு மாமா, கூட்டிட்டு போறீங்களா.." என்றதும் செய்து கொண்டிருந்த வேலையை நிறுத்தி விட்டு சட்டென அவள் முகம் கண்டவன்,

"இப்போவா.." என்றபடி நேரத்தை பார்க்க, பாதினொன்றை காட்டியது மணி. இருவரும் சண்டையிட்டே நேரங்கள் கடந்து இருந்தது.

"ஹ்ம்.. கூட்டிட்டு போவீங்களா மாட்டிங்களா.." அடம் பிடித்து அவள் செல்லம் கொஞ்ச, உள்ளுக்குள் ரசித்தாலும் வெளியே காட்டாமல்,

"இம்சை டி நீ.." அவளிடம் கடுகடுத்து, "கூட்டிட்டு போறேன் வா.." உரிமையாக அவள் தோள் மீது கை போட்டு அழைத்து செல்ல, சில்லென்ற பரவசம் அவள் மனதில் தோன்றியது.

"அதை கொஞ்சம் சிரிச்சிட்டே தான் கூட்டிட்டு போனா என்னவாம்.."

"நீ பண்ற அலம்பல்க்கு இதுவே அதிகம் தான் அமைதியா வா டி.." மனைவியிடம் கடுப்பை காட்டிவிட்டு, மறுபுறம் திரும்பி அவள் அறியாமல் புன்னகைத்துக் கொண்டான்.

இரவு நேர காதலுடன் கூடிய நீண்ட நேர பயணம், இருவரின் மனசஞ்சலங்கள் நீங்கி ஏதேதோ கதை பேசிக் கொண்டே நீள, அதிகம் வாய் ஓயாமல் பேசியதென்னவோ அவன் பைங்கிளி தான்.

"மாமா உங்களுக்கு என்ன சாப்பாடு பிடிக்கும்.."

"அது தெரிஞ்சி நீ என்ன பண்ண போற, ருசியா சமைச்சி தர போறியா.." நக்கலாக இதழ் வளைக்கவும்,

"ப்ச்.. எனக்கு சமைக்க எல்லாம் வராது மாமா, ஸ்வாதி தான் உங்களுக்கு என்ன புடிக்கும் புடிக்காதுனு தெரிஞ்சி வச்சிக்க சொன்னா.. சொல்ல விருப்பம் இல்லனா விடுங்க, நான் அத்தைகிட்ட கேட்டு தெரிஞ்சிக்கிறேன்.." பதிலுக்கு அவளும் இதழ் கோணி திரும்பிக் கொள்ள,

"எல்லாம் என் நேரம் டி உன்கிட்ட மல்லுக்கட்டணும்னு.." சத்தமாகவே முனகி,
"வீட்ல அம்மா செய்ற தேங்காய் பால் சாதம் ரொம்ப புடிக்கும், மத்தபடி நான்வெஜ் தான் அதிகம் சாப்பிடுவேன்.." என்றான் சலிப்பாக.

"அப்டி என்ன அத்தை செய்ற தேங்காய் பால் சாதத்துல மட்டும் தனி ஸ்பெஷல்.." ஆர்வமாக கேட்டிட, மூக்கு விடைக்க முறைத்தவன்,

"உனக்கு பசிக்குதா அதான் சாப்பாட்டப்பத்தியே துருவி துருவி கேக்குறியா..!" அவளை சந்தேமாக பார்த்தான்.

"ஹய்யோ.. எப்டி மாமா கண்டுபிடிச்சீங்க எனக்கு பசிக்குதுனு.." என்றாள் கண்கள் மிளிரந்த ஆச்சிரியத்துடன்.

"இதுல என்ன கண்டுபிடிக்க இருக்கு, நீ சாப்பாட்ட பத்தியே பேசிட்டு இருந்த கேட்டேன்.." கூலாக தோளை குலுக்கி, இரவு முழுவதும் மூடாமல் திறந்திக்கும் பெரிய ரெஸ்டாரெண்ட் ஒன்றிற்கு அழைத்து சென்றிருந்தான்.

கண்ணாடி போல் பளபளக்கும் உயர்தர ரெஸ்டாரெண்ட்டை அதிசயத்தை பார்ப்பதை போன்று, சுற்றி முற்றியும் கண்களை உருட்டி பார்த்துக் கொண்டிருந்த மலர்பெண்ணை, இவன் ரசித்திருந்தவன் உணவு வந்ததும் தெளிந்தவனாக, "கவிஇ.. சீக்கிரம் சாப்பிடு வீட்டுக்கு போகணும்.." என்றான் விரைப்பாக.

"இப்ப தானே வெளிய கூட்டிட்டு வந்தீங்க, அதுவும் நானா கேட்டதால, அதுக்குள்ள இப்டி அவசரப் படுத்தினா எப்டி சாப்பிட்றதாம்.." முகம் சுருங்கி போகவும்,

"ஷபாஆ.. முடியல கவி உன்கிட்ட, சரி அவசரப்படுத்தல சாப்பிடு.." என்றவன் இரவு நேரம் என்பதால் இரண்டு தோசை மட்டும் உண்டு முடித்து அவளுக்காக காத்திருக்க,
கவியோ விதவிதமாக ஆர்டர் செய்த உணவுகளை குழைத்து அடித்து, ஒவ்வொரு விரலையும் வாய்க்குள் விட்டு வெளுத்து கட்டுவதை கண்டவன், "இவ என்ன வீட்ல சாப்பாடே சாப்பிடலையா இந்த வெளுவெளுக்குறா.." மனதில் நினைத்தாலும் பிடித்ததை உண்ணட்டும் என்று அவள் உண்ணும் அழகை அமைதியாக பார்த்திருந்தான்.

வெகு நேரம் ஆனது அவள் உண்டு முடிக்க, அதுவரை பொறுமையாக காத்திருந்த ஆத்வி, வீட்டை நோக்கி நோக்கி காரை செலுத்தினான்.

வீடு வரும் வரை, கடைசியாக வாங்கிய டைரிமில்க் சில்க்கை கரைய வைத்து உண்டு வந்த கவி, ஒவ்வொரு முறையும் கரைந்த போன சாக்லேட்டை விரலில் எடுத்து கண்மூடி வாயில் வைத்து சுவைக்கையில், வாயெங்கும் இளுப்பியது.

உதட்டை மீறி வழியும் டார்க் சாக்லேட், அவள் உதட்டில்ப் பட்டு, காப்பி நிற சாயம் பூசியது போல பளபளத்து மின்னும் பாவையின் இதழை கண்டவனது மனமோ, வெவ்வேறு சிந்தனையில் மூழ்கி தாபத்தோடு எச்சிலைக் கூட்டி விழுங்கியவனுக்கு, உடல் சூடு அதிகரித்துப் போனது.

"மாமா.. அப்புறம் உங்களுக்கு வேற என்னென்னலாம் பிடிக்கும்.." வெண்ணை உண்ட ராதையாக கண்கள் சிமிட்டி அவள் கேட்ட அழகில், சட்டென சடன் பிரேக் போட்டு காரை நிறுத்தியதில்,

"என்னாச்சி மாமா, ஏன் காரை நிறுத்திடீங்க.." புரியாமல் விழித்தவளை, போதை ஏறிய விழிகளால் ஒரு மார்க்கமாக பார்த்த விதம், பாவையின் மனதில் ஆயிரம் பட்டாம் பூச்சிகள் ஒன்று கூடி படபடத்துக் கொள்ளும் படபடப்பான உணர்வை உண்டாக்கியது.

"ம்.மா.மா.. எ.ஏ.ன். அப்டி ப்.பாக்குறீங்க.." திணறிய கவிக்கு, கணவனின் பார்வையில் அச்சம் பிடித்துக் கொண்டது.

பின்னால் நகர்ந்தவளின் பின்னங்கழுத்தில் கை விட்டு இழுத்து, தன் முகத்திற்கு மிக நெருக்கமாக கொண்டுவந்தவனின் விழிகளை சந்திக்க முடியாமல் அவள் திண்டாடிப் போக,
"இன்னும் எவ்ளோ நாள் டி என் உணர்வுகளை அடக்கிக்கிட்டு, உன்ன இப்டி வேடிக்கை பாத்துட்டே இருக்குறது..!" கரகரப்பாக கேட்டவனது சூடான மூச்சிக் காற்று, அவள் முகத்தில் மோதியதில் மூச்சி வாங்கிய கவி,

"வ்.வீ.ட்டுக்கு போலாம் ம். மாமா.." என்றாள்.

"ஹ்ம்.. போலாம், சாக்லேட் சாப்ட்டு நிதானமா போலாம் டி..!" என்றவனின் நாவோ, அவள் இதழை தாண்டி வழியும் சாக்லேட்டை சுவைத்து எடுக்க, கண்கள் விரித்தவளை சுவாரிசியமாக பார்த்துக் கொண்டே துடிக்கும் மனைவி இதழை சாக்லேட்டோடு சேர்ந்து மெல்ல சுவைக்க, பாவையின் தேகம் படபடப்பில் நடுங்கத் தொடங்கி விட்டது.

அதை உணர்ந்தவன் தங்கதூனின் ஊசிஇடையில் கை நுழைத்து, அழுத்தம் கூட்டி பிசைய, கொண்டவனை இறுக்கி அணைத்தவள், கணவனின் எண்ணத்திற்கு ஏற்ப இசைந்துப் போனாள் கவி.

இருவரும் ஆலிங்கனம் சேர்ந்து தீவிர முத்தத்தில் மெய்மறந்து இருந்த சமையம், ஆத்வியின் அலைபேசி சிணுங்கவும் முதலில் கவனித்து விட்ட கவி, அவனை தள்ளி விட்டு பார்வையால் சைகை செய்தவளாக, அவன் முகம் காண முடியாமல் வெட்கத்தில் தலைகுனிந்துக் கொள்ள,

"அவளே இப்ப தான் நெருங்கி வர்றா, இந்த நேரத்துல எந்த கரடி ஃபோன் பண்ணுது.." ஆழ்ந்த பெருமூச்சு விட்டு சலிப்பாக போனை எடுத்து காதில் வைத்தான்.

"டேய்.. மச்சி நாளைக்கு mr.மல்கோத்ரா கூட மீட்டிங் அட்டென் பண்ணனும்னு சொன்னியே, சரியா எத்தனை மணிக்கு மீட்டிங்.. அப்போ நீ சொன்னதை நான் சரியா கவனிக்கல.." அசோக் சொன்னதை கேட்டு, இங்கு ஆத்விக்கு வெறியேறிப் போனது.

"டேய்.. டேய்.. அறிவுக்கெட்டவனே.. அதை எந்த நேரத்துலடா கேக்குற.. முதல்லே சொல்லும் போது கவனிக்க மாட்டியா டா மாங்கா.. உன் மண்டைல மூளைக்கு பதிலா ஓட்டமுட்டையா இருக்கு.. தடிமாடு..

உனக்கெல்லாம் கடைசி வரைக்கும் கல்யாணமே ஆகாது டா.. அப்டியே ஆனாலும் கிழவனானாலும் பர்ஸ்ட் நைட் மட்டும் நடக்கவே நடக்காது டா வெங்காயம்.. போனை வைடா.." மூச்சி விடாமல் கோவத்தில் வெடித்து விட்டு போனை வைக்க, அந்த பக்கம் இருந்தவனுக்கோ வேப்பிலை பாடம் அடித்த நிலை.

அவனையே மிரண்டு போய் பார்த்திருந்த கவியை கண்டவன், "நீ என்ன டி அப்டி பாக்குற, எல்லாம் என் நேரம்.. எனக்கும் ரொமான்ஸ்க்கும் சுத்தமா நேரம் சரியில்ல.. வா மிச்சத்தை வீட்ல போய் பாத்துக்கலாம்.." கடுகடுப்பாக உரைத்தவன் முகமோ, விளக்கெண்ணெயை குடித்ததை போலிருப்பதை கண்டு, கவி சிரிக்கவும், முறைத்தபடியே வீடு வரை காரை செலுத்தி வந்தான்.

ஆத்வியை பார்ப்பதற்காக கவி வீட்டை விட்டு செல்வதை பார்த்த ஹரிதா, 'இவள் எங்கே செல்கிறாள் இத்தனை அவசரமாக' என்ற யோசனையில் மண்டை காய்ந்து, வெகு நேரமாக அவளுக்காக காத்திருந்து காத்திருந்து கண்கள் பூத்து உறக்கம் வந்தது தான் மிச்சமாகி போனது.

நேரம் ஒன்னை கடக்க அதற்கு மேலும் முடியாமல், அவள் அறைக்கு சென்று படுத்து உறங்கிய சில நிமிடங்கள் கழிந்த பின்பே, கணவன் மனைவி இருவரும் வீடு வந்து சேர்ந்தனர்.

'மாமா இன்னும் ஏன் கோவமா இருக்கீங்க, அந்த அண்ணா தெரியாம தானே ஃபோன் செஞ்சாங்க.. " கணவனின் கை பிடித்து நடந்தபடி ரீங்கார தேனியாக அவன் காதை மொய்க்க,

"சும்மா வா டி, நானே கடுப்புல இருக்கேன் நீ வேற மேல ஏத்தி விடாத.." கடுப்பு மாறாமல் அவள் கை பிடித்து அறைக்கு அழைத்து செல்ல, அமைதியாக அவனோடு சென்றவளுக்கு உறக்கம் கண்ணை சுழட்டியது.

"வயிறுமுட்ட சாப்ட்டது நல்லா தூக்கம் வருது மாமா, நான் தூங்குறேன் நீங்களும் படுங்க.." கணவனின் நிலைமை புரியாது மல்லாக்கப் படுத்து கவி உறங்கியதை கண்டு எரிச்சலாக வந்தாலும், ஒரே நாளில் எல்லாம் நடந்து விட்டால் என்ன சுவாரிசியம் இருக்கப் போகிறது!

மெல்ல மெல்ல அதுவாக நடக்கட்டும் என பெருந்தன்மையாக உறங்க நினைத்தாலும், ஆடவனின் ஆண்மை துள்ளி குதிப்பதை அடக்க முடியவில்லையே!

மேற்சட்டையை கழட்டிப் போட்டு கீழே ஷாட்ஸ் மட்டும் அணிந்தபடி அவளருகே படுத்தவனுக்கு எங்கே உறக்கம் வந்தது!

அசந்து உறங்கும் மனைவியின் அழகை கண்க்கொட்டாமல் ரசித்த ஆத்வி, அவள் செவியில் இருந்த கருவியையும் கண்ணில் இருந்த கண்ணாடியயும் கழட்டி ஓரம் வைத்தவனாக, பாவையின் பவுர்ணமி முகத்தை கண்டு நெற்றி தொடங்கி கழுத்து வளைவு வரை முத்தமிட்டு எச்சில் செய்யவும், அந்த குறுகுறுப்பில் அவள் சிணுங்கியபடி கணவனின் மார்போடு ஒண்ட வருவதை உணர்ந்து, தானாகவே இழுத்து தனது திண்ணிய மார்பில் அவள் முகத்தை புதைத்துக் கொண்டவன் மனமோ, பெரும் நிம்மதி அடைந்தது.

மெல்ல மெல்ல செங்கதிரோன் பூமியை எட்டிப் பார்த்து அதன் வெளிச்சத்தை பிரப்பவிட்ட நேரம், கணவன் மனைவி இருவரும் தங்களை மறந்து ஒருவரை ஒருவர் ஆரத்தழுவியபடி ஆழ்ந்த உறக்கத்தில் இருக்க, முதலில் விழித்த கவி, தன்னருகே மங்களாக தெரியும் உருவத்தை கண்கள் கசக்கி பார்த்தாள்.

அப்போதும் மங்கியே தெரியவும், தட்டுத்தடுமாறி கண்ணாடியை கண்டுபிடித்து எடுத்து, வேகமாக கண்ணில் மாட்டிக் கொண்டு தலை உயர்த்தி பார்த்தவளுக்கு, வெட்கம் பிடிங்கியது.

"அச்சோ இவர் என்ன இப்டி படுத்திருக்கார்.." அவஸ்தையாக கீழ் உதட்டை கடித்துக் கொண்ட கவி, நெஞ்செனும் பஞ்சனையில் வாகாக முகம் புதைத்து உறங்கும் கணவனைக் காண காண, உடல் சிலிர்த்துப் போனது.

முட்களின் நுனிக்காம்பு அவள் அணிந்திருக்கும் சட்டையும் தாண்டி, ஆணவன் முகத்தை உரசிக் கொண்டிருப்பதில் பெண்ணுடல் விறைத்துப் போக, தட்டை வைற்றில் ஜில்லென்ற காற்று தழுவும் உணர்வில், கரம் கொண்டு அங்கே ஸ்பரிசித்து பார்த்த நொடி,
"கேடி மாமா.." செல்லமாக உதடுகள் முணுமுணுத்துக் கொண்டது. வயிற்றுப் பகுதியில் ஆடை மூடாமல், அதற்கு பதில் ஆடவனின் கரம் மலைப்பாம்பாக சுற்றி இருப்பதில்.

உடலை அசைக்க முடியாமல் நெளிந்தவளின் நெஞ்சில், உறக்கத்தில் முகத்தை புரட்டி எடுத்த ஆத்வி, இரவு திருட்டுத்தனமாக பார்த்த கேடி வேலையின் பழக்கம், உறக்கத்திலும் தொடர்ந்தது போலும்.

பெண்ணவளின் கொங்கைகளை பஞ்சாக பிசைந்து, முட்களை இரு விரல்கள் கொண்டு நசுக்கியவன், பற்களால் கடித்து இழுத்தபடி, ஒன்றும் அறியாத குழந்தையாக இல்லாத வேலையினை செய்து விட்டு உறங்கிப் போனான்.

மூச்சி விடவும் மறந்தவளாக நெஞ்சிக் குழி ஏறி இறங்க, கண்கள் சொக்கி அரைகண் மயக்கித்தில் விட்டத்தை பார்த்துக்கிடந்த கவி, சற்று நேரத்தில் அவன் செய்த லீலையில் அடிவயிறு இன்பத்தில் இறுகி, மலர்பாகம் இரண்டும் உணர்ச்சிக் குவியலில் படமெடுத்து நின்று விட்டது.

நன்றாக உறங்கிக் கொண்டு தான் இருக்கிறான், திடீரென அசைந்து படுக்கையில் பாவையின் தங்கதேகத்தில், பல அந்தரங்க கேடி வேலையைப் பார்த்து விடுகிறான் திருட்டுக் கள்ளன்.

கொங்கைகள் இரண்டும் மன்னவன் கையில் சிக்குண்டு படாத பாடுபட்டுப் போக, ஹ்ம்ம்... ஹாஆ.. என சுகமான வேதனையில் துவண்டு துடித்த பாவையின் பூக்கரம், தானாக உயர்ந்து மன்னவனின் தலைக்கோதி, அவன் செய்யும் குறும்புகளை அடக்கும் விதமாக, தன் நெஞ்சோடு அழுத்திக்கொண்டது.

இத்தனை நாளும் உறங்காமல் விட்ட அசதியில் மனைவியின் சுகமான தீண்டலில், அவளை இன்னும் இறுக அணைத்தபடி நன்றாக உறங்கிப் போக, தன்னவனின் அணைப்பில் இருந்து மீள முடியாத முயல்குட்டியும், அவனது முகம் ரசித்தபடியே படுத்திருந்தாள்.

மதியம் வந்து விட்டது. கவிக்கு அவசரமாக ஸுஸு.. காலிங் செய்ய,
"என்னைக்கும் இல்லாம, இன்னைக்கு என்ன இவர் இப்டி தூங்குறாரு, இதுக்கு மேல தாங்க முடியாதே.." அவஸ்தையில் நெளிந்து, தன்மீது வாகாக படுத்திருக்கும் ஆத்வியை மெத்தையில் படுக்க வைக்க முயன்றது எல்லாம், படுதோல்வியில் முடிந்தது.

"ஐயோ ராமா.. இது என்ன சோதனை.." அவசரம் தாங்காமல் வாய் விட்டே புலம்பியவளை மேலும் சோதனைக்குள்ளாக்கும் விதமாக, கவி வயிற்றில் அவன் காலை பொத்தென போட போன நேரம், ஏதோ ஒரு உந்துததில் சரியாக உணர்ந்து கொண்டவளின் நெஞ்சம் தூக்கிவாரி போட, சட்டென அவனை புரட்டித்தள்ளி விட்டு குளியலறைக்குள் புகுந்து கொண்டாள்.

அவள் தள்ளிவிட்ட வேகத்தில் உறக்கம் கலைந்து எழுந்தவனுக்கு, உடல் முழுக்க ஜிவ்வென்று ஏதோ ஏறி, புதுவித உற்சாகம் கிடைத்த உணர்வானது.

குளியலறையில் இருந்து நீர் கொட்டும் சத்தத்தில், லேசாக புன்னகைத்து கொண்டவனின் கை விரல்களுக்கு மோட்சம் கிடைத்த உணர்வு. பாவையின் பூமேனி மேய்ந்த கரத்தில் முத்தமிட்டு, முட்கள் குத்திய விரலை கண்மூடி சப்பு கொட்டி உறுஞ்சிக் கொண்டவனது கற்பனையில், நிஜத்தில் பாவையின் முட்களை சுவைக்கும் இதத்தை தந்தது.

அன்றைய நாள் முழுக்க கொஞ்சலும் மிஞ்சலுமாக, கணவன் மனைவி இருவரும் ஒன்றாக உணவருந்தி ஊட்டிவிட்டுக் கொஞ்சி, மனைவியை சீண்டி சிவக்க வைத்த ஆத்வி, தோன்றும் போதெல்லாம் அவள் இதழில் அமுதம் பருகி குட்டிப்பசியை போக்கிக் கொண்டு, படாதபாடு படுத்தி விட்டான் அவனது கண்மணியை.

கவியும் அவன் படுத்தும் பாட்டை விரும்பியே ஏற்று கணவனுக்கு வாகாக இசைந்து போனவள், பொழுது சாயும் வேளையிலே இருவருமாக கடற்கரைக்கு செல்ல முடிவெடுத்து இருந்தனர்.

அதற்காக பலபோராட்டங்களுக்கு பிறகு, இருவரும் குளித்து முடித்து தயாராகிக் கொண்டிருக்க,
"மாமா இந்த ரெண்டு ட்ரெஸ்ல எந்த ட்ரெஸ் போட்டுக்க.." மஞ்சள் வண்ண சுடிதார் செட்டும், கரும்பச்சை நிற சுடிதார் செட்டும் எடுத்து வந்து குழப்பமாக கேட்டாள் கணவனிடம்.

அவள் எடுத்து வந்த உடையை பார்க்காமல், பாவையின் மேனியை கிறக்கமாக கண்ட ஆத்வி, "ட்ரெஸ்ஸே போடாட்டியும் நீ செம்மையா இருப்ப டி, வேணும்னா அந்த நைட்டிய கழட்டிட்டு ட்ரை பண்ணி பாரேன்.." குறும்பாக கண்ணடித்தவனை முறைக்க முடியாமல் கூச்சத்தில் திணறி நெளிந்தவள்,

"ச்சீ.. உங்க எண்ணம் எங்க போகுது பாரு, இதுல ஒன்னு சொல்லுங்க மாமா.." கன்னம் சிவந்து சிணுங்கினாள்.

"எனக்கு இந்த ட்ரெஸ் எதுவும் பிடிக்கல டி.. எப்பபாரு சாக்குபைய மாட்டிட்டு சுத்திட்டு இருக்க, ஒண்ணுமே தெரிய மாட்டுது, முக்கியமா இந்த இடுப்பு.." சட்டென அவளிடையினை இழுத்து தன்னோடு ஒட்டி நிற்க வைத்தவனாக,

"அப்புறம் இதோ இங்கே இந்த கேக் துண்டு.." அவள் எதிர்பாரா நொடி கன்னியவளின் மலைமுகடுகளை கசக்கி எடுத்த வேகத்தில், திகைத்துப் போனாள் கவி.

"அச்சோ மாமா.. என்ன பண்றீங்க, விடுங்க என்னால முடியல.." தவிப்போடு அவள் ஓடப் பார்க்க,

"இதுக்கே முடியலைனா எப்டி, ஒரு கிளாமரா ஏதாவது ட்ரெஸ் போட்டு வந்து தான் நில்லேன் டி, கண்ணுக்கு குளிர்ச்சியா இருக்கும்.." கிறக்கத்தில் அவளை இறுக்கமாக அணைத்து, இதழில் இச்.. வைக்க, மழலையாக விழித்து எச்சில் விழுங்கினாள்.

"நான் அப்டிலாம் ட்ரெஸ் போட மாட்டேன் மாமா எனக்கு பழக்கமில்ல, சுடி மட்டும் தானே வியர் பண்ணுவேன்.." சங்கடமாக உரைக்க, அவள் உணர்வுகளை புரிந்துக் கொண்ட ஆத்வி,

"சும்மா சொன்னேன் டி, உன் உடம்புல உள்ள கிளாமர் எல்லாம் நானா பாத்து தெரிஞ்சிக்கிறேன், நீ இந்த சாக்குபைய தூக்கி போட்டுட்டு புடவை கட்டிட்டு வா.. அப்பதான் உன்ன வெளிய கூட்டிட்டு போவேன்.." என்றவனை பாவமாக கண்டவள்,

"எனக்கு தான் புடவையும் கட்டத் தெரியாதே மாமா, என்ன பண்றது.." முகம் தொங்கி கேட்டவளை கண்டு நொந்து போனான் ஆத்வி.

"இது என்ன படமா டி, யூட்யூப் பாத்து அஞ்சே நிமிஷத்துல கத்துகிட்டு கட்றதுக்கு.. எனக்கும் புடவைக் கட்ட தெரியாது, ஆனா உன்ன புடவைல பாக்கணும்னு ஆசையா இருக்கே, இப்ப என்ன பண்ணலாம்.." குழப்பமாக சொல்லும் போதே சட்டென யோசனை வந்தவனாக,

"சரி கவி, ஒரு நல்ல புடவையா எடுத்து வச்சி வெய்ட் பண்ணு, நான் கீழ போய் வள்ளி அக்காவ அனுப்பி விடுறேன்.." என்ற ஆத்வி, அவள் பதிலை கூட எதிர்பாராமல், ஒரே ஓட்டமாக துள்ளி குதித்து ஓடி இருந்தான்.
 

Author: Indhu Novels
Article Title: அத்தியாயம் 57
Source URL: Indhu Novels-https://indhunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top