- Messages
- 278
- Reaction score
- 215
- Points
- 63
அத்தியாயம் 9
"இதுதான் நீ எங்களுக்கு செய்றேன்னு சொன்ன கைமாரா" என்று பாட்டி, கேட்க...
அதில் பாட்டியை வலி நிறைந்த பார்வை பார்த்த முல்லை.. ஓடி சென்று அவர் அருகில் முட்டி போட்டு அமர்ந்தவளாக, அவர் கையை பிடித்துக் கொண்டாள்.
"பாட்டி நீங்க எனக்கு பண்ண உதவிக்கு காலத்துக்கும் இப்டி உங்க காலடில உக்காந்து சேவகம் பண்ணுன்னு சொன்னாக் கூட, நான் எதை பத்தியும் யோசிக்காம சந்தோஷமா செய்வேன் பாட்டி..
"ஆனா நீங்க,, கைமாறா என்கிட்ட எதிர் பாக்குறது மட்டும் என்னைக்கும் நடக்காது பாட்டி, நடக்கவும் கூடாது பாட்டி..." என்றவளாக அரவிந்தையும் அவன் கையில் இருக்கும் குழந்தையும் பார்த்தாள் முல்லை.
அவள் கண் போன திசையை பார்த்த அரவிந்த், "ஹ்ம்.. இவ என்ன நினைக்க போறா, எல்லாம் நான் நினைச்சது தான்.. எப்படியும் என் ஸ்வீட்டிய பாத்தா அவ என்னோட வாழ சம்மதிக்க மாட்டான்னு எனக்கு தெரிஞ்ச விஷயம் தானே" மனதில் எண்ணிக்கொண்டான் வெறுமையாக.
பாட்டியும், அவள் என்ன நினைத்து குழந்தையை பார்த்து இருப்பால் என்று யூகித்தவராக,
"அம்மாடி, என் பேரன் கைல இருக்க அவன் குழந்தையாள நீ அவன் கூட வாழ முடியாதுன்னு சொல்றியா" அவள் எண்ணம் அறிய அப்படி கேட்க..
"இல்லை" என கண்ணீருடன் தலையாட்டினாள்.
"அப்புறம் என்னமா உனக்கு பிரச்சன, சொன்னா தானே எங்களுக்கும் தெரியும்,, நல்லதோ கெட்டதோ என் பேரன் கையாள உன் கழுத்துல தாலி ஏறிடுச்சு.. அத நீயே மறுத்தாலும் முடியாது.. இப்ப நீ என் பேரனோட மனைவி.. உனக்கு ஒரு பிரச்சனைனா அத பாத்துகிட்டு நாங்க சும்மா இருக்க மாட்டோம்.. தைரியமா சொல்லு.." என்றார் மென்மையாக அவள் தலை வருடி.
"நிறைய பிரச்சனைகள் வரும் பாட்டி,, அது என்ன மட்டும் பாதிச்சா பரவால்ல,, ஆனா எனக்கு வர ஆபத்து என்ன சுத்தி இருக்கவங்களையும் பாதிக்கும் பாட்டி,, அதுமட்டுமில்லாம
எனக்கு ஒரு முக்கியமான பொறுப்பு இருக்கு,, அத நான் என் முழு மனசோட நிறைவேத்தணும்,, அதுக்கு தான் இந்த ஊற விட்டே போக முடிவு எடுத்து வச்சிருக்கேன்.. அதான் பாட்டி சொல்றேன்" முல்லை கண்ணீரோடு சொன்னதை கேட்டு அதிர்ந்தவர்,
"என்னமா சொல்ற, ஊற விட்டு போறியா.. அதான் கண்ணா உன்ன துரத்திட்டு வந்தவங்கள எல்லாம் அடிச்சு போட்டுட்டானே.. இன்னும் என்ன உனக்கு பிரச்சன" என்றார் குழப்பமாக..
அரவிந்துக்கும் அதே எண்ணம் தான்.. யோசனையாக அவள் என்ன சொல்ல போகிறாள் என்று அமைதியாக பார்த்தான்...
"அது பாட்டி, இப்ப நான் எதையும் சொல்ற மனநிலைல இல்ல பாட்டி, எனக்கு இருக்க பிரச்சனை சொல்லி தீராது.. என் வாழ்க்கைல எனக்கு ரொம்ப பிடிச்ச எல்லாரையும் இழந்துட்டேன் பாட்டி, இனிமே என்கிட்ட இழக்க ஒண்ணுமே இல்ல.. பயமா இருக்கு பாட்டி...
நான் யாரு மேல பாசம் வச்சாலும், அவங்க மொத்தமா என்ன தனியா தவிக்க விட்டு போய்ட்றாங்க,, இப்ப ஒரு புது உறவு ஏத்துக்கிட்டு வாழ எனக்கு ரொம்ப பயமா இருக்கு, மறுபடியும் என்னால எந்த ஒரு இழப்பையும் தாங்கிக்க என் மனசுல தெம்பு இல்ல பாட்டி" என்று கண் கலங்கி சொன்னவளின் வார்த்தையிலும் அத்தனை வலி, அதை கேட்டவர்களுக்கும் வலிக்க தான் செய்தது.
அரவிந்த், முல்லை பேசுவதை கேட்டதும் அவனின் கடந்த கால நாட்களின் வலி நிறைந்த நினைவுகளுடன், முல்லை அவள் கண்ணில் வழியும் கண்ணீரை துடைப்பதை வெறுமையாக பார்த்தான்.
"சரிமா, நீ இவளோ சொன்ன பிறகு நான் உன்ன கட்டாயப் படுத்த விரும்பல.. நீயா உனக்கு எப்ப உன்ன பத்தி சொல்லணும்னு விருப்பம் இருக்கோ அப்ப சொல்லு,, ஆனா ஒன்னு நீ எங்கயும் போகாம இங்கயே எங்க கூட இருந்துடேன்"
பாட்டி கெஞ்சுதலாக கேப்பதை மறுக்க முடியாதவள், இன்னும் சில வேலைகள் அவள் இந்த ஊரில் இருந்தே முடிக்க வேண்டி இருப்பதால்,, தனக்கும் இப்போது தங்க ஒரு பாதுகாப்பான இடம் தேவை, தன் வேலை முடிந்ததும் பாட்டியிடம் சொல்லி விட்டு இங்கிருந்து நிரந்தரமாக சென்று விடலாம் என நினைத்தவளாக,
"சரி பாட்டி.. இருக்கேன்.. ஆனா பாட்டி எனக்கு சில வேலைகள் இருக்கு அதுக்கு நான்" என முல்லை ஏதோ சொல்ல தயங்க,
அவள் இங்கு இருக்க சம்மதம் சொன்னதில், மகிழ்ச்சியான பாட்டி முகத்தில் புன்னகை அரும்ப, அவள் தலையை ஆதூரமாக தடவி விட்டவராக
"இங்க பாரும்மா இனிமே இது உன் வீடும் கூட,, அதனால நீ என்ன செய்றதா இருந்தாலும் உன் இஷ்டம் போல எந்த ஒரு தயக்கமும் இல்லாம செய்.. யாரும் உன்ன எதுவும் கேட்க மாட்டாங்க".. பாட்டி அவர் மனதில் ஒரு எண்ணத்துடன் எதையோ கணக்கு போட்டு சொல்லவும், முல்லை முகத்தில் மெல்லிய புன்னகை அரும்ப.. சரி பாட்டி என்றாள்.
அதுவரை அரவிந்த் குழந்தையோ, வாயில் கை வைத்தபடி இவள் யாராக இருக்கும் என்ற சிந்தனையுடன்.. புதிதாக வந்திருக்கும் முல்லையையே தன் குட்டி கண்களை உருட்டி பார்த்துக் கொண்டு இருப்பதை.. முல்லையும் கவனித்துக் கொண்டே தான் பாட்டியிடம் பேச்சி கொடுத்துக் கொண்டு இருந்தால்..
இருந்தும் முதலில் பாட்டியிடம் பேசி விட்டு பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று நினைத்தவல்.. வேகமாக அரவிந்த் அருகில் சென்று, சிரித்த முகமாக அவன் கையில் இருந்த குழந்தையிடம் வா என கை நீட்டி இருந்தாள்.
இதுநாள் வரை தனியாக தந்தையின் அறைவனைப்பில் மட்டுமே வளந்த குழந்தை முல்லையின் சிரிப்பில் கவர்ந்து விட்டதோ! அவள் கை நீட்டி அழைத்ததில் புதியவல் என்ற எண்ணமெல்லாம் தோன்றமால்.. அரவிந்த் கையில் இருந்து குதூகலமாக தாவிக் கொண்டு போனது..
இப்படி குழந்தை துள்ளி குதித்து, முல்லையிடம் சென்றது, அரவிந்துக்கு ஒருவித எரிச்சலாகி போனது.. இத்தனை நாளும் தன்னையே டாடி டாடி என்று சுற்றி வந்த குழந்தை இன்று முல்லையிடம் ஆர்வமாக தாவியது அவன் மனதில் ஏதோஒரு வெறுமையை ஏற்படுத்தியது போலும்.
ஆசையாக முல்லையும் குழந்தையை தூக்கிக் கொண்டவள்.. "ஹெலோ குட்டி உங்க பேரு என்ன", முல்லை அவள் கன்னம் கிள்ளிக் கொஞ்சினாள்.
அதற்க்கு குழந்தையும், "அனுஸ்ரீ" என மழலை மொழியில் சொல்லி.. சற்று நேரத்திரிக்கெல்லாம்.. இருவரும் ஒன்றாக ஐக்கியம் ஆகி, சிரித்து பேசி கொஞ்ச தொடங்கி இருக்க,
அதை பார்த்த அரவிந்த் கோவமாக எழுந்து அவன் அறைக்கு சென்று விட்டான்..
பாட்டியோ, இருவரும் கொஞ்சிக் கொள்வதை பார்த்து, உள்ளம் குளிர்ந்து போனார்..
மழை...
"இதுதான் நீ எங்களுக்கு செய்றேன்னு சொன்ன கைமாரா" என்று பாட்டி, கேட்க...
அதில் பாட்டியை வலி நிறைந்த பார்வை பார்த்த முல்லை.. ஓடி சென்று அவர் அருகில் முட்டி போட்டு அமர்ந்தவளாக, அவர் கையை பிடித்துக் கொண்டாள்.
"பாட்டி நீங்க எனக்கு பண்ண உதவிக்கு காலத்துக்கும் இப்டி உங்க காலடில உக்காந்து சேவகம் பண்ணுன்னு சொன்னாக் கூட, நான் எதை பத்தியும் யோசிக்காம சந்தோஷமா செய்வேன் பாட்டி..
"ஆனா நீங்க,, கைமாறா என்கிட்ட எதிர் பாக்குறது மட்டும் என்னைக்கும் நடக்காது பாட்டி, நடக்கவும் கூடாது பாட்டி..." என்றவளாக அரவிந்தையும் அவன் கையில் இருக்கும் குழந்தையும் பார்த்தாள் முல்லை.
அவள் கண் போன திசையை பார்த்த அரவிந்த், "ஹ்ம்.. இவ என்ன நினைக்க போறா, எல்லாம் நான் நினைச்சது தான்.. எப்படியும் என் ஸ்வீட்டிய பாத்தா அவ என்னோட வாழ சம்மதிக்க மாட்டான்னு எனக்கு தெரிஞ்ச விஷயம் தானே" மனதில் எண்ணிக்கொண்டான் வெறுமையாக.
பாட்டியும், அவள் என்ன நினைத்து குழந்தையை பார்த்து இருப்பால் என்று யூகித்தவராக,
"அம்மாடி, என் பேரன் கைல இருக்க அவன் குழந்தையாள நீ அவன் கூட வாழ முடியாதுன்னு சொல்றியா" அவள் எண்ணம் அறிய அப்படி கேட்க..
"இல்லை" என கண்ணீருடன் தலையாட்டினாள்.
"அப்புறம் என்னமா உனக்கு பிரச்சன, சொன்னா தானே எங்களுக்கும் தெரியும்,, நல்லதோ கெட்டதோ என் பேரன் கையாள உன் கழுத்துல தாலி ஏறிடுச்சு.. அத நீயே மறுத்தாலும் முடியாது.. இப்ப நீ என் பேரனோட மனைவி.. உனக்கு ஒரு பிரச்சனைனா அத பாத்துகிட்டு நாங்க சும்மா இருக்க மாட்டோம்.. தைரியமா சொல்லு.." என்றார் மென்மையாக அவள் தலை வருடி.
"நிறைய பிரச்சனைகள் வரும் பாட்டி,, அது என்ன மட்டும் பாதிச்சா பரவால்ல,, ஆனா எனக்கு வர ஆபத்து என்ன சுத்தி இருக்கவங்களையும் பாதிக்கும் பாட்டி,, அதுமட்டுமில்லாம
எனக்கு ஒரு முக்கியமான பொறுப்பு இருக்கு,, அத நான் என் முழு மனசோட நிறைவேத்தணும்,, அதுக்கு தான் இந்த ஊற விட்டே போக முடிவு எடுத்து வச்சிருக்கேன்.. அதான் பாட்டி சொல்றேன்" முல்லை கண்ணீரோடு சொன்னதை கேட்டு அதிர்ந்தவர்,
"என்னமா சொல்ற, ஊற விட்டு போறியா.. அதான் கண்ணா உன்ன துரத்திட்டு வந்தவங்கள எல்லாம் அடிச்சு போட்டுட்டானே.. இன்னும் என்ன உனக்கு பிரச்சன" என்றார் குழப்பமாக..
அரவிந்துக்கும் அதே எண்ணம் தான்.. யோசனையாக அவள் என்ன சொல்ல போகிறாள் என்று அமைதியாக பார்த்தான்...
"அது பாட்டி, இப்ப நான் எதையும் சொல்ற மனநிலைல இல்ல பாட்டி, எனக்கு இருக்க பிரச்சனை சொல்லி தீராது.. என் வாழ்க்கைல எனக்கு ரொம்ப பிடிச்ச எல்லாரையும் இழந்துட்டேன் பாட்டி, இனிமே என்கிட்ட இழக்க ஒண்ணுமே இல்ல.. பயமா இருக்கு பாட்டி...
நான் யாரு மேல பாசம் வச்சாலும், அவங்க மொத்தமா என்ன தனியா தவிக்க விட்டு போய்ட்றாங்க,, இப்ப ஒரு புது உறவு ஏத்துக்கிட்டு வாழ எனக்கு ரொம்ப பயமா இருக்கு, மறுபடியும் என்னால எந்த ஒரு இழப்பையும் தாங்கிக்க என் மனசுல தெம்பு இல்ல பாட்டி" என்று கண் கலங்கி சொன்னவளின் வார்த்தையிலும் அத்தனை வலி, அதை கேட்டவர்களுக்கும் வலிக்க தான் செய்தது.
அரவிந்த், முல்லை பேசுவதை கேட்டதும் அவனின் கடந்த கால நாட்களின் வலி நிறைந்த நினைவுகளுடன், முல்லை அவள் கண்ணில் வழியும் கண்ணீரை துடைப்பதை வெறுமையாக பார்த்தான்.
"சரிமா, நீ இவளோ சொன்ன பிறகு நான் உன்ன கட்டாயப் படுத்த விரும்பல.. நீயா உனக்கு எப்ப உன்ன பத்தி சொல்லணும்னு விருப்பம் இருக்கோ அப்ப சொல்லு,, ஆனா ஒன்னு நீ எங்கயும் போகாம இங்கயே எங்க கூட இருந்துடேன்"
பாட்டி கெஞ்சுதலாக கேப்பதை மறுக்க முடியாதவள், இன்னும் சில வேலைகள் அவள் இந்த ஊரில் இருந்தே முடிக்க வேண்டி இருப்பதால்,, தனக்கும் இப்போது தங்க ஒரு பாதுகாப்பான இடம் தேவை, தன் வேலை முடிந்ததும் பாட்டியிடம் சொல்லி விட்டு இங்கிருந்து நிரந்தரமாக சென்று விடலாம் என நினைத்தவளாக,
"சரி பாட்டி.. இருக்கேன்.. ஆனா பாட்டி எனக்கு சில வேலைகள் இருக்கு அதுக்கு நான்" என முல்லை ஏதோ சொல்ல தயங்க,
அவள் இங்கு இருக்க சம்மதம் சொன்னதில், மகிழ்ச்சியான பாட்டி முகத்தில் புன்னகை அரும்ப, அவள் தலையை ஆதூரமாக தடவி விட்டவராக
"இங்க பாரும்மா இனிமே இது உன் வீடும் கூட,, அதனால நீ என்ன செய்றதா இருந்தாலும் உன் இஷ்டம் போல எந்த ஒரு தயக்கமும் இல்லாம செய்.. யாரும் உன்ன எதுவும் கேட்க மாட்டாங்க".. பாட்டி அவர் மனதில் ஒரு எண்ணத்துடன் எதையோ கணக்கு போட்டு சொல்லவும், முல்லை முகத்தில் மெல்லிய புன்னகை அரும்ப.. சரி பாட்டி என்றாள்.
அதுவரை அரவிந்த் குழந்தையோ, வாயில் கை வைத்தபடி இவள் யாராக இருக்கும் என்ற சிந்தனையுடன்.. புதிதாக வந்திருக்கும் முல்லையையே தன் குட்டி கண்களை உருட்டி பார்த்துக் கொண்டு இருப்பதை.. முல்லையும் கவனித்துக் கொண்டே தான் பாட்டியிடம் பேச்சி கொடுத்துக் கொண்டு இருந்தால்..
இருந்தும் முதலில் பாட்டியிடம் பேசி விட்டு பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று நினைத்தவல்.. வேகமாக அரவிந்த் அருகில் சென்று, சிரித்த முகமாக அவன் கையில் இருந்த குழந்தையிடம் வா என கை நீட்டி இருந்தாள்.
இதுநாள் வரை தனியாக தந்தையின் அறைவனைப்பில் மட்டுமே வளந்த குழந்தை முல்லையின் சிரிப்பில் கவர்ந்து விட்டதோ! அவள் கை நீட்டி அழைத்ததில் புதியவல் என்ற எண்ணமெல்லாம் தோன்றமால்.. அரவிந்த் கையில் இருந்து குதூகலமாக தாவிக் கொண்டு போனது..
இப்படி குழந்தை துள்ளி குதித்து, முல்லையிடம் சென்றது, அரவிந்துக்கு ஒருவித எரிச்சலாகி போனது.. இத்தனை நாளும் தன்னையே டாடி டாடி என்று சுற்றி வந்த குழந்தை இன்று முல்லையிடம் ஆர்வமாக தாவியது அவன் மனதில் ஏதோஒரு வெறுமையை ஏற்படுத்தியது போலும்.
ஆசையாக முல்லையும் குழந்தையை தூக்கிக் கொண்டவள்.. "ஹெலோ குட்டி உங்க பேரு என்ன", முல்லை அவள் கன்னம் கிள்ளிக் கொஞ்சினாள்.
அதற்க்கு குழந்தையும், "அனுஸ்ரீ" என மழலை மொழியில் சொல்லி.. சற்று நேரத்திரிக்கெல்லாம்.. இருவரும் ஒன்றாக ஐக்கியம் ஆகி, சிரித்து பேசி கொஞ்ச தொடங்கி இருக்க,
அதை பார்த்த அரவிந்த் கோவமாக எழுந்து அவன் அறைக்கு சென்று விட்டான்..
பாட்டியோ, இருவரும் கொஞ்சிக் கொள்வதை பார்த்து, உள்ளம் குளிர்ந்து போனார்..
மழை...
Author: Indhu Novels
Article Title: அத்தியாயம் 9
Source URL: Indhu Novels-https://indhunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Article Title: அத்தியாயம் 9
Source URL: Indhu Novels-https://indhunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.