Hello! It seems that you are using AdBlock - some functions may not be available. Please add us as exceptions. Thank you for understanding!
  • வணக்கம் 🙏🏻 இந்து நாவல்ஸ் தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்
  • இந்து நாவால்ஸ் தளத்தில் எழுத விரும்புவோர், indhunovel@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு செய்தி அனுப்பவும். கற்பனைகளை காவியமாக்குங்கள் ✍🏻💖
Member
Messages
53
Reaction score
8
Points
8
முரடனின் மகிழம் பூ அவள் 🌼

எபி 1

விழுப்புரம் மாவட்டம் அருகே ஜீவநதி கிராமம் பெயருக்கு ஏற்றதை போலவே வற்றாத ஆறுகளும் பசுமையான நிலங்களையும் கொண்ட சிறிய கிராமம்... அதை சுற்றி அந்தியூர், தேனுற்று, மாங்குளம், போன்ற கிராமங்கள் உள்ளன... வருண பகவானே கொடை வெயில் தாங்காமல் இங்கு தான் தங்கி செல்வரோ?? என்னவோ?? கண் படும் தூரம் எல்லாம் பச்சை பசலேனா மரங்களும்.. காடுங்களும் சுழ்ந்து இயற்கையே ஆட்சி செய்யும் அழகிய கிராமம்...

இயற்கை அன்னையின் அருட்கொடைக்கு பஞ்சமில்லது குறிஞ்சி.. முல்லை.. மருதம்.. என மூன்றும் சேர்ந்த இயற்கை அன்னையின் செல்ல பிள்ளை... இயற்கை முறை விவசாயம்... பாலிஷ் செய்யப்படாத அரிசி.. பருப்பு... செக்கில் ஆட்டிய சுத்தமான எண்ணெய்... பிளாஸ்டிக் பயன்பாடு இல்லாத கிராமமாக திகழ்ந்து வருகிறது...

கந்தன் டீ கடை....

🎶🎶அழகென்ற சொல்லுக்கு முருகா
உந்தன் அருளன்றி உலகிலே பொருளேது முருகா

அழகென்ற சொல்லுக்கு முருகா
உந்தன் அருளன்றி உலகிலே பொருளேது முருகா

அழகென்ற சொல்லுக்கு முருகா🎶🎶 என்ற அங்கே இருந்த ரேடியோ பாட்டு இசைக்க...

அந்த கடை உரிமையாளர் மணி டீ போட்டு கொண்டு இருந்தார்... அப்போது 30 வயதில் ஒரு வாலிபனும் அவர் உடன் 50 வயது பெரியவர் ஒருவரும் வர " அண்ணா ரெண்டு டீ... " என்றான் அந்த வாலிபன்..

கடைக்காரரோ டீ எடுத்து கொடுக்க...

அந்த வாலிபனோ டீயை குடித்த படி " அண்ணா இங்க பார்வதி அம்மா வீடு எங்க இருக்கு ??... " என்றான் கேள்வியாக

கடைக்காரன் மணியோ " என்ன விசியம் பா எதுக்கு அவங்க வீட்ட தேடி வந்து இருக்கீங்க ??.. பார்த்த வெளியூர் மாதிரி இருக்கு... " என கேக்க

அவனோ " நாங்க அந்தியூர்ங்க, இங்க நாங்க என் தங்கச்சிக்கு அவங்க பேரனை மாப்பிளை பாக்க வந்தோம்... " என கூற

யாரு?? அந்த முரடனுக்கா... சரியா போச்சு போங்க... 24 மணி நேரமும் குடியும் கூதியலுமா இருக்கவனுக்கு யாரவது பொண்ணு கொடுப்பாங்களா ??... என சிரித்த படி கேக்க

அந்த வாலிபனோ " அது எல்லாம் ஏற்கனவே தெரியும் நீங்க வீட்டை மட்டும் காமிங்க... " என்றான் விடுகென...

மணியோ " அதோ அங்க இருக்கே ரெண்டு வீடு ஒரு வாசல் அதுல இடது பக்கம் இருக்க வீடு தான்... " என கூற

அவர்களும் பணத்தை கொடுத்து விட்டு அங்கு சென்றனர்... அங்கே கடையில் இருந்த குமார், கணேசனோ மணியை கண்டு " யாருன்னே அது நானும் கேக்கணும்னு நினைச்சேன் ஏன் அந்த வீட்ல மட்டும் ஒரு வாசல் ரெண்டு வீடு... " என்றான்

மணியோ " அது ஒரு காலத்துல ஒன்னா இருந்த ஒரே வீடு தான்... இந்த 10 வருசமாதா இப்படி இந்தியா பாக்கிஸ்தான் மாதிரி பிரிஞ்சி இருக்கு... " என கூற

குமார் : ' என்ன சொல்றிங்க அண்ணா.. அப்படி என்ன தான் நடந்துச்சு சொல்லுங்க... ' என கேக்க

மணியோ " சொல்றேன்... அந்த வீட்டோட தலைவர் விஜயராங்கன் அவர் மனைவி தான் பார்வதி ரெண்டு பெரும் நகமும் சதையும் போல அப்படி ஒரு அன்னோனியமான தம்பத்திங்க... அவங்களுக்கு ரெண்டு பசங்க சிவராமன்.. செண்பகம்... பசங்க வளந்ததும் அவங்களுக்கு கல்யாணமும் பண்ணி வச்சி பேரன் பேத்தி எல்லாம் பொறந்தங்க.... மத்த பேர பசங்கள விட அவங்களுக்கு அவங்க முத்த பேரன் ராவணன் மேல தான் பாசம் ஜாஸ்தி...

10 வருஷம் முன்னாடி எதோ குடும்ப சண்டையில ரெண்டா பிரிஞ்ச வீடு தான்... இப்ப வர சேரவே இல்ல... அப்ப வீட்டை விட்டு சிறுவர் ஜெயிலுக்கு போன ராவணன் திரும்பி இங்க ரெண்டு வருஷம் முன்ன தான் வந்தான்... பேரன் போன அதிர்ச்சியில பெரியவரும் நிரந்தரமா போய்ட்டாரு அப்ப இருந்து அந்த அம்மா மட்டும் தனியா அந்த வீட்ல இருக்கு... ஒரு நல்லது கெட்டதுக்கு கூட புள்ளைங்க கிட்ட பேசுனது கிடையாது... " என வருத்தமாக முடிக்க

கணேசனோ " அப்ப அந்த பையன் எப்படி ??... " என்றான்

" அவனா சரியான முரடன் அவன்... எப்பவும் குடிச்சிட்டு... அந்த ஆட்டக்காரி வீடே கதின்னு இருப்பான்... பத்து பேர் வேலைய ஒத்த ஆளா செய்வான்... இந்த பத்து வருசமும் என்ன வேலை பாக்குறான்னு எல்லாம் யாருக்கும் தெரியாது ஆனா அவன் அப்பத்தாக்கு மூணு வேலை சாப்பாட்டுக்கும் காசு அனுப்பி வச்சிடுவான்... அப்பத்தான்ன உசுரு அவனுக்கு... " என இராவணனின் வரலாற்றை பற்றி பேசி கொண்டே இருக்க...

---

இங்கே ராவணன் வீட்டில்....

அப்பத்தாவோ வீட்டிற்கு வந்த இருவரையும் அமர வைத்து பேசி கொண்டு இருக்க... அந்த வாலிபனோ " என் பெரு கலையரசன் இது என் அப்பா கண்ணையன் நாங்க சிவராமன் ஐயா சம்மந்தி... உங்க பேரனுக்கு பொண்ணு பாக்குறத சொன்னங்க அதான் என் தங்கச்சி அவள பேசி முடிக்கலாம்னு வந்து இருக்கோம்... " என கூற

அப்பத்தாவோ " யாரு அந்த வாணி அப்பா வா நீரு... சரி பொண்ணு போட்டோ இருக்கா... " என கேக்க

" ஆமா அம்மா, இது பொண்ணு போட்டோ பெரு மகிழினியால்... " என பெண்ணின் போட்டோ வை அப்பத்தாவிடம் கொடுக்க..

அவரோ அதை பார்த்து " பொண்ணு மஹாலக்ஷ்மி ஆட்டம் லட்சணமா இருக்கா.. சரி கல்யாணம் அடுத்த மாசமே வச்சிக்கலாம்..." என்றார்

கண்ணையனோ " சரிங்க அம்மா... அப்ப நாங்க புறப்படுறோம்... " என வெளியே சென்றனர்...

---

சரி வாங்க நம்ம ஹீரோ என்ன பண்றன்னு பார்த்துட்டு வரலாம் 😂😂😂

🎶🎶தண்ணி தொட்டி தேடி வந்த
கண்ணுகுட்டி நான்
தண்ணி தொட்டி தேடி வந்த
கண்ணுகுட்டி நான்

இன்னும் கொஞ்சம் ஊத்து
சுதி கொஞ்சம் ஏத்து
மூக்கு வழி வந்தா
ஊத்துறத நிறுத்து
இன்னும் கொஞ்சம் ஊத்து

சுதி கொஞ்சம் ஏத்து
மூக்கு வழி வந்தா
ஊத்துறத நிறுத்து

எனக்கு ராகமெல்லாம்
தண்ணி பட்ட பாடு
இன்னிக்கு டப்பாங்குத்து கச்சேரி கேளு

எனக்கு ராகமெல்லாம்
தண்ணி பட்ட பாடு
இன்னிக்கு டப்பாங்குத்து கச்சேரி கேளு

ஒரு ராகம் திசை மாறி இசை மாறுது
மானம் போச்சு கானம் போகாது
ரோஷம் பார்த்தாலே போதைதான் ஏறாது

தண்ணி தொட்டி தேடி வந்த
கண்ணுகுட்டி நான்
தண்ணி தொட்டி தேடி வந்த
கண்ணுகுட்டி நான்

இந்த சூரியன் வழுக்கி
சேத்தில் விழுந்தது மாமி
என் கண்ணை கட்டி காட்டுல விட்டது
சாமி சாமி சாமி

சாரயத்தை ஊத்து
உன் ஜன்னலைத்தான் சாத்து
சாரயத்தை ஊத்து
உன் ஜன்னலைத்தான் சாத்து🎶🎶🎶 என பார்யில் ஆடி பாடி காலை 9 மணிக்கே சரக்கு கேட்டு அரப்பட்டம் செய்யும் குடிமகன்களின் தலைவனே நம் நாயகன் தான்.. அந்த ராவணன் இலங்கையை ஆண்டான் இந்த ராவணானோ குடிமகன்களின் இதயத்தை ஆண்டு கொண்டு இருக்கிறான்.. 😂😂

பாரில் மாதம் ஒரு முறை இலவசமாக மது விருந்து வைப்பது... மதியம் 12 மணிக்கு திறக்கும் கடையை காலை 9 மணிக்கே திறக்க வைப்பது... இது தாங்க நம்ப நாயகன குடிமகன்களுக்கு பிடிக்க காரணம்...

காலை 10 மணிக்கே தள்ளாடிய படி வீட்டிற்குள் நுழைந்த பேரனை கண்ட அப்பத்தாவோ " என்ன ராவணா இது காலங்கத்தாலேயே இப்படி குடிச்சிட்டு வந்து இருக்க... " என கோபமாக கத்த

அவனோ " அப்பத்தா ஏன் வந்ததும் வராததுமா இப்படி கத்திகிட்டு இருக்கறவ... முத சொத்தை கொண்ட அப்பத்தா பசிக்குது... " என கூற

பசி என்றத்தில் கோபத்தை மறந்து வேகமாக சென்று உணவை எடுத்து வந்து பரிமாறினார்... அவனும் உண்டு கொண்டே " நீ சாப்டியா... " என்றான்

" நான் காலையிலேயே கஞ்சி குடிச்சிட்டேன்... நீ ஏன்டா இப்படி சோறு கூட திங்காம பசியில கிடைந்து அலையுற... ஏன் நேரமா சோறு திங்க கூடாதடா... " என உரிமையாக கடிந்து கொள்ள...

அவனோ " இந்த கேள்வி கேக்குற வேலை எல்லாம் வேணாம் சொல்லிட்டேன்... " என எழுந்து அவன் அறைக்கு சென்று விட்டான்...

அப்பத்தாவோ " இப்ப என்ன சொல்லிட்டேன்னு இப்படி பாதி சாப்பாட்டுல எழுந்து போற.. டேய்!! ராவணா... " என கத்த

அவனோ எப்போதே உறங்கி போய் இருந்தான்...

தொடரும்...

எபி எப்படி இருக்குனு கமெண்ட்ஸ் சொல்லிட்டு போங்க மக்களே...
 

Author: Nithya
Article Title: முரடன் 🌼 1
Source URL: Indhu Novels-https://indhunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top