முரடனின் மகிழம் பூ அவள் 🌼
எபி 2
திருமணம் என்றால் சொர்க்கத்தில் நிச்சயிக்க படுமாம்... வித விதமான பூக்களும், அலங்காரமும் செய்த பந்தலின் கீழே உறவுகள் நண்பர்கள் என அனைவரின் கேலி கிண்டல் பேச்சுகளும்... அலப்பறை ஆர்ப்பாட்டமும்... புது பட்டும்... அக்னி குண்டமும்... பஞ்ச பூத்தமும் சாட்சி நின்று.... மணமகனின் காதல் பார்வையும் மணமகளின் வெக்கம் கலந்த புன்னகையும் சேர்ந்து இனிதாக நடைபெறும் என்பார்கள்...
ஆனால் இங்கோ மாவட்ட ரெஜிஸ்டர் ஆபீஸ்யில் வெறும் நால்வர் சாட்சிக்காக நிற்க.. சாதாரணமான டிசைன்ர் புடவையில் முகத்தில் கிலோ கணக்கில் சோகமும் கவலையும் போட்டி போட நின்று இருந்தாள் பெண் அவள்... அவள் தான் மகிழினியால் பெயருக்கு ஏற்றதை போல மென்மையான குழந்தை மனம் கொண்டவள்...
அதற்கும் ஒரு படி மேல் ராவணன்... இரும்பை முழுங்கியது போல ஒரு முக பாவனையோடு ரோபோ போல பெண் அவள் கழுத்தில் அந்த மஞ்சள் தாலியை கட்டி அவன் சரி பாதியாக மாற்றி கொண்டான்...
அங்கே இருந்த அலுவலர் சில கோப்புகளை காட்ட இருவரும் அதில் கை எழுத்து போட்டு திருமணத்தை பதிவு செய்தனர்... அவளோ தான் வந்த வேலை முடிந்தது என ராவணனும் மற்றவர்களும் சென்று விட... மகிழினியோ திருவிழாவில் தொலைந்த குழந்தை போல கண்களில் நீர் கோர்த்து விழும் நிலையில் திரு.. திருவென விழித்து கொண்டு நின்றாள்...
பெண் அவள் அருகே வந்த அப்பத்தாவோ " வா தாயீ நாம வீட்டுக்கு போகலாம்... " என அழைக்க
அவளோ எதோ யோசனையாக " அது அவரு... " என காற்றுக்கே கேக்காத குரலில் கேக்க
அப்பத்தாவோ " அவன் எதாவது முக்கியமான வேலையா போய் இருப்பான்.. சாயங்காலமா அவனே வீட்டுக்கு வருவான் தாயீ.. நீ முதல வா நாம கிளம்புவோம்... " என பெண் அவளை ஒரு ஆட்டோ பிடித்து வீட்டிற்கு அழைத்து சென்றார்.
---
கணவன் இல்லாமல் தனியே கழுத்தில் புது மஞ்சள் தாலியோடு நிற்கும் பெண் அவளிற்கு ஆரத்தி எடுத்து கொண்டு இருந்தார் பார்வதி அம்மாள்...
அதை பக்கத்து வீட்டில் இருந்து கண்ட செண்பகமோ சிரித்த படி " என்னடி இது புதுசா இருக்கு புருஷன் இல்லாம பொண்டாட்டிய மட்டும் தனியா நிக்க வச்சி ஆரத்தி எடுக்குறாங்க... " என கூற
தேவகியோ " அந்த முரடனுக்கு வாகப்பட்டா இப்படி தான் கடைசி வர ஒத்தையில நிக்கணும்... இன்னேரம் அவ எந்த ஆட்டக்காரி வீட்ல கெடக்குறானோ... " என பரிகாசம் செய்து சிரிக்க
அப்பத்தாவோ திரும்பி " ஏய்! வேலை வெட்டி இல்லாதவழுகளா முத உன் வீட்ல இருக்க குப்பையை பாருடி... அதுக்குள்ள அடுத்த வீட்டு கதைக்கு வந்துட்டா... போங்கடி... " என கூறி மகிழினியை அழைத்து வீட்டிற்குள் சென்றார்..
மகிழினியோ அப்போது தான் வீட்டை சுற்றி பார்த்தாள்... அளவான வீடு தான் இரண்டு படுக்கை அறைகள், ஒரு சமையல் அறை, விசாலமான கூடம், முளையில் ஒரு சிறிய பூஜை கப் போர்டு... பின் பக்கம் சிறிய கிணறு அருகே குளியல் அறையும் துணி துவைக்க கல்லும்... இரண்டு மூன்று கொடியும் இருந்தது...
அவள் மனமோ இத்தனை நாள் அவள் தங்கி இருந்த ஓலை குடிசையோடு இந்த வீட்டை ஒப்பிட்டு பார்த்து கொண்டு இருக்க... அவள் அருகே வந்த அப்பத்தாவோ " இங்க பாரு மகிழினி முத பால் காய்ச்சி சாமி கும்பிட்டு மதியானதுக்கு சமைச்சுடு... நான் சாப்டு தோட்டத்துக்கு போய்ட்டு நாளைக்கி காலையில வரேன்... ராத்தரிக்கு என் பேரன் வந்துடுவான்... " என்றார்
அவளோ மறுப்பு கூறாமல் அமைதியாக அவர் கூறிய அணைத்து வேலைகளையும் பார்க்க சென்றாள்... முதலில் பாலை காய்ச்சி சாமி படம் முன் வைத்து பூஜை செய்து விட்டு... அடித்து அங்கே இருந்த காய்கறிகள் கொண்டு சாம்பார், கூட்டு, பொரியல், ரசம் என சமைத்து முடித்து கூடத்தில் கொண்டு வந்து வைத்தார்...
அப்பத்தாவோ மகிழினியின் சமையலை உண்டு விட்டு " ரொம்ப நல்லா சமைச்சி இருக்க தாயீ... என்ற அம்மை கை பக்குவம் அப்படியே இருக்கு உனக்கு... " என்றார்
மகிழினியோ எதோ புரியாத மொழி கேட்பது போல விழித்து கொண்டு இருந்தாள்... அப்பதாவோ சிறிய தூக்கு சட்டியில் உணவை எடுத்து கொண்டு தோட்டத்திற்கு சென்று விட்டார்...
வீட்டில் இப்போது மகிழினி மட்டும் தான் தனியாக இருந்தாள்... அவள் நினைவோ நேற்று நடந்த சம்பவத்திற்கு சென்றது... எப்போதும் போல அந்த பெரிய வீட்டில் இருந்த வேலை எல்லாம் முடித்து விட்டு மாலை அவளுக்கேன இருந்த அந்த குடிசைக்கு சென்றாள்..
அப்போது அவள் பெரியப்பா கண்ணையன், பெரியம்மா ஆண்டாள், அண்ணன் கலையரசன் என மூவரும் அங்கே வர... அவர்களை மிரட்சியுடன் பார்த்து கொண்டு இருந்தாள் பெண் அவள்.. அவள் பெரியம்மா தான் " இங்க பாரு டி நாளைக்கி உனக்கு கல்யாணம்... இந்தா இந்த புடவையா காலையில குளிச்சிட்டு கட்டிக்கோ... " என ஒரு டிசைன்ர் புடவையை அவளிடம் கொடுக்க..
அவளும் மிரட்சியோடு அதை வாங்கி கொண்டாள்... அவள் அண்ணனோ " நாங்க சொல்றத மீறி எதாவது பண்ண உன்ன கொலை பண்ணவும் தயங்க மாட்டேன்... " என மிரட்டி விட்டே சென்று இருந்தான்...
இத்தனை நாள் மனதில் இருந்த பாரம் தீரும் வரை அழுத்தவள் அப்படியே உறங்கி போனாள்...
நள்ளிரவு நேரம் பேய்... பிசாசு... கூட சுற்றி விட்டு அதன் இடத்திற்கு சென்று இருக்கும்... நாய்கள் குறைத்து கொண்டு இருக்க... மகிழினி வீட்டின் கதவு பட்.. பட்... என தட்டும் சத்தம் கேட்டது..
அதில் உறக்கம் கலைந்த மகிழினியோ பயத்தோடு தொண்டையில் எச்சில் விழுங்கிய படி... யாரு??... என யோசித்த படி கதவின் துவாரம் வழியே வெளியே எட்டி பார்த்தாள்.. அங்கே ராவணன் முழு போதையில் தள்ளாடியா படி நிற்க...
அதன் பின் தான் சற்று பயம் நீங்கி கதவை திறந்தாள்... கதவை திறந்தது தான் தாமதம் சடாரென உள்ளே நுழைந்த ராவணனோ " ஏய்! கதவ திறக்க உனக்கு இவ்வளவு நேரமாடி... " என அவன் காட்டு குரல் அதிர கத்த
அதில் மேலும் பயந்த பெண் மான் அவளோ " இல்ல... அது தூங்கிட்டேன் மன்னிச்சிடுங்க... " என்றாள் மெல்லிய குரலில்
அதை கேட்ட ராவணனோ " ஏய்!! உன்ன இங்க யாரும் தூங்க வேணாம்னு சொல்லல... " என்றான் அவன் இரும்பு குரல் அதிர
அதில் எச்சில் விழுங்கிய மகிழினியோ இரு கன்னத்தை கரங்கள் கொண்டு மூடிய படி நிற்க...
ராவணனோ பெண் அவளின் செய்கைகளை பார்த்த படி அவன் அறை நோக்கி செல்ல...
அதை கண்ட மகிழினியோ தைரியத்தை வர வைத்து கொண்டு " எங்க கொஞ்சம் நில்லுங்க... " என அவன் முன்னே சென்று வழியை மறைத்த படி நின்றாள்
அவனோ என்ன விசியம் சொல் என்பதை போல ஒரு பார்வை பார்க்க...
அவளோ " இல்ல சாப்பிடாம போறீங்க... சாப்பாடு எடுத்து வைக்கவா... " என்றாள்
அவனோ பதில் கூறாமல் அமைதியாக கூடத்தில் சென்று அமர்ந்து கொள்ள... பெண் அவளும் வேகமாக உணவை சூட வைத்து கொண்டு வந்து பரிமாறினாள்...
அவனும் ஒரு வாய் உணவை உண்டு விட்டு " அப்பத்தா எங்க அவங்க சாப்பிடங்களா ??... " என்றான் கேள்வியாக
அவளோ " அவங்க மதியமே சாப்டு தோப்பு வீட்டுக்கு போய்ட்டாங்க... " என்றாள்
அவனோ பெயருக்கு கூட நீ சாப்டியா என கேக்காமல் அவள் வைத்த மொத்த உணவையும் உண்டு விட்டு போய் படுத்து கொண்டான்..
மகிழினியோ அவன் சாப்பிட்ட தட்டு உணவு பத்திரம் அனைத்தையும் கொண்டு சென்று சுத்தம் செய்து விட்டு கூடத்திலே படுத்து கொண்டாள்...
----
சூரியன் தன் ஆதிக்கத்தை கிழக்கு வானில் செலுத்தில் பூமி எங்கும் வெளிச்சத்தை பரப்ப... மகிழினியோ எழுந்து குளித்து விட்டு வாசல் தெளித்து கோலம் போட்டு கொண்டு இருந்தாள்...
அப்போது அங்கு வந்த அப்பத்தாவோ " என்னமா வெள்ளனவே எழுந்துட்ட போல.. சரி நான் பால் வாங்கியந்தே இந்த போய் கொஞ்சம் காபி தண்ணி போடு... " என அவள் கையில் கொடுத்து அனுப்பினார்..
பெண் அவள் போட்டு கொடுத்த காபியை ரசித்து குடித்து கொண்டு இருந்தார் அப்பத்தா...
அப்போது வாசலில் இருந்து " வீட்ல யாருங்க... " என ஒருவனின் குரல் கேக்க
அப்பத்தா வெளியே சென்று பார்த்தார்.. அங்கே இரண்டு மூணு பேருடன் நடுத்தர ஆள் ஒருவன் " இங்க பாருங்க ம்மா.. உங்க பேரன் நேத்து எங்க இடத்துக்கு வந்து ஒரு 17 வயசு பொண்ண கூட்டிகிட்டு வந்துட்டான்... வந்தோமா.. படுத்தோமா.. காச கொடுத்தோமா.. போனோமான்னு.. இல்லாம அவனுக்கு எதுக்கு இந்த தேவை இல்லாத வேலை...
அந்த பொண்ணுக்கு எவ்வளவு டிமாண்ட் தெரியுமா ??... ஒழுங்கா அந்த பொண்ண திருப்பி அனுப்ப சொல்லுங்க... இல்லைனா அந்த பொண்ணுக்கு பதில் அவன் பொண்டாட்டிய... " என அவன் முடிக்கும் முன் வாயில் ரத்தம் வடிய கீழே சரிந்தான் அவன்...
அங்கே கண்ணில் அனல் தெறிக்க கை முஷ்டியை திருகிய படி... குதி காலால் எம்பி வேட்டியை மடி கட்டி கொண்டு ஐய்யனார் போல நின்று இருந்தான் ராவணன்...
தொடரும்...
கமெண்ட்ஸ் முக்கியம் மக்களே...
எபி 2
திருமணம் என்றால் சொர்க்கத்தில் நிச்சயிக்க படுமாம்... வித விதமான பூக்களும், அலங்காரமும் செய்த பந்தலின் கீழே உறவுகள் நண்பர்கள் என அனைவரின் கேலி கிண்டல் பேச்சுகளும்... அலப்பறை ஆர்ப்பாட்டமும்... புது பட்டும்... அக்னி குண்டமும்... பஞ்ச பூத்தமும் சாட்சி நின்று.... மணமகனின் காதல் பார்வையும் மணமகளின் வெக்கம் கலந்த புன்னகையும் சேர்ந்து இனிதாக நடைபெறும் என்பார்கள்...
ஆனால் இங்கோ மாவட்ட ரெஜிஸ்டர் ஆபீஸ்யில் வெறும் நால்வர் சாட்சிக்காக நிற்க.. சாதாரணமான டிசைன்ர் புடவையில் முகத்தில் கிலோ கணக்கில் சோகமும் கவலையும் போட்டி போட நின்று இருந்தாள் பெண் அவள்... அவள் தான் மகிழினியால் பெயருக்கு ஏற்றதை போல மென்மையான குழந்தை மனம் கொண்டவள்...
அதற்கும் ஒரு படி மேல் ராவணன்... இரும்பை முழுங்கியது போல ஒரு முக பாவனையோடு ரோபோ போல பெண் அவள் கழுத்தில் அந்த மஞ்சள் தாலியை கட்டி அவன் சரி பாதியாக மாற்றி கொண்டான்...
அங்கே இருந்த அலுவலர் சில கோப்புகளை காட்ட இருவரும் அதில் கை எழுத்து போட்டு திருமணத்தை பதிவு செய்தனர்... அவளோ தான் வந்த வேலை முடிந்தது என ராவணனும் மற்றவர்களும் சென்று விட... மகிழினியோ திருவிழாவில் தொலைந்த குழந்தை போல கண்களில் நீர் கோர்த்து விழும் நிலையில் திரு.. திருவென விழித்து கொண்டு நின்றாள்...
பெண் அவள் அருகே வந்த அப்பத்தாவோ " வா தாயீ நாம வீட்டுக்கு போகலாம்... " என அழைக்க
அவளோ எதோ யோசனையாக " அது அவரு... " என காற்றுக்கே கேக்காத குரலில் கேக்க
அப்பத்தாவோ " அவன் எதாவது முக்கியமான வேலையா போய் இருப்பான்.. சாயங்காலமா அவனே வீட்டுக்கு வருவான் தாயீ.. நீ முதல வா நாம கிளம்புவோம்... " என பெண் அவளை ஒரு ஆட்டோ பிடித்து வீட்டிற்கு அழைத்து சென்றார்.
---
கணவன் இல்லாமல் தனியே கழுத்தில் புது மஞ்சள் தாலியோடு நிற்கும் பெண் அவளிற்கு ஆரத்தி எடுத்து கொண்டு இருந்தார் பார்வதி அம்மாள்...
அதை பக்கத்து வீட்டில் இருந்து கண்ட செண்பகமோ சிரித்த படி " என்னடி இது புதுசா இருக்கு புருஷன் இல்லாம பொண்டாட்டிய மட்டும் தனியா நிக்க வச்சி ஆரத்தி எடுக்குறாங்க... " என கூற
தேவகியோ " அந்த முரடனுக்கு வாகப்பட்டா இப்படி தான் கடைசி வர ஒத்தையில நிக்கணும்... இன்னேரம் அவ எந்த ஆட்டக்காரி வீட்ல கெடக்குறானோ... " என பரிகாசம் செய்து சிரிக்க
அப்பத்தாவோ திரும்பி " ஏய்! வேலை வெட்டி இல்லாதவழுகளா முத உன் வீட்ல இருக்க குப்பையை பாருடி... அதுக்குள்ள அடுத்த வீட்டு கதைக்கு வந்துட்டா... போங்கடி... " என கூறி மகிழினியை அழைத்து வீட்டிற்குள் சென்றார்..
மகிழினியோ அப்போது தான் வீட்டை சுற்றி பார்த்தாள்... அளவான வீடு தான் இரண்டு படுக்கை அறைகள், ஒரு சமையல் அறை, விசாலமான கூடம், முளையில் ஒரு சிறிய பூஜை கப் போர்டு... பின் பக்கம் சிறிய கிணறு அருகே குளியல் அறையும் துணி துவைக்க கல்லும்... இரண்டு மூன்று கொடியும் இருந்தது...
அவள் மனமோ இத்தனை நாள் அவள் தங்கி இருந்த ஓலை குடிசையோடு இந்த வீட்டை ஒப்பிட்டு பார்த்து கொண்டு இருக்க... அவள் அருகே வந்த அப்பத்தாவோ " இங்க பாரு மகிழினி முத பால் காய்ச்சி சாமி கும்பிட்டு மதியானதுக்கு சமைச்சுடு... நான் சாப்டு தோட்டத்துக்கு போய்ட்டு நாளைக்கி காலையில வரேன்... ராத்தரிக்கு என் பேரன் வந்துடுவான்... " என்றார்
அவளோ மறுப்பு கூறாமல் அமைதியாக அவர் கூறிய அணைத்து வேலைகளையும் பார்க்க சென்றாள்... முதலில் பாலை காய்ச்சி சாமி படம் முன் வைத்து பூஜை செய்து விட்டு... அடித்து அங்கே இருந்த காய்கறிகள் கொண்டு சாம்பார், கூட்டு, பொரியல், ரசம் என சமைத்து முடித்து கூடத்தில் கொண்டு வந்து வைத்தார்...
அப்பத்தாவோ மகிழினியின் சமையலை உண்டு விட்டு " ரொம்ப நல்லா சமைச்சி இருக்க தாயீ... என்ற அம்மை கை பக்குவம் அப்படியே இருக்கு உனக்கு... " என்றார்
மகிழினியோ எதோ புரியாத மொழி கேட்பது போல விழித்து கொண்டு இருந்தாள்... அப்பதாவோ சிறிய தூக்கு சட்டியில் உணவை எடுத்து கொண்டு தோட்டத்திற்கு சென்று விட்டார்...
வீட்டில் இப்போது மகிழினி மட்டும் தான் தனியாக இருந்தாள்... அவள் நினைவோ நேற்று நடந்த சம்பவத்திற்கு சென்றது... எப்போதும் போல அந்த பெரிய வீட்டில் இருந்த வேலை எல்லாம் முடித்து விட்டு மாலை அவளுக்கேன இருந்த அந்த குடிசைக்கு சென்றாள்..
அப்போது அவள் பெரியப்பா கண்ணையன், பெரியம்மா ஆண்டாள், அண்ணன் கலையரசன் என மூவரும் அங்கே வர... அவர்களை மிரட்சியுடன் பார்த்து கொண்டு இருந்தாள் பெண் அவள்.. அவள் பெரியம்மா தான் " இங்க பாரு டி நாளைக்கி உனக்கு கல்யாணம்... இந்தா இந்த புடவையா காலையில குளிச்சிட்டு கட்டிக்கோ... " என ஒரு டிசைன்ர் புடவையை அவளிடம் கொடுக்க..
அவளும் மிரட்சியோடு அதை வாங்கி கொண்டாள்... அவள் அண்ணனோ " நாங்க சொல்றத மீறி எதாவது பண்ண உன்ன கொலை பண்ணவும் தயங்க மாட்டேன்... " என மிரட்டி விட்டே சென்று இருந்தான்...
இத்தனை நாள் மனதில் இருந்த பாரம் தீரும் வரை அழுத்தவள் அப்படியே உறங்கி போனாள்...
நள்ளிரவு நேரம் பேய்... பிசாசு... கூட சுற்றி விட்டு அதன் இடத்திற்கு சென்று இருக்கும்... நாய்கள் குறைத்து கொண்டு இருக்க... மகிழினி வீட்டின் கதவு பட்.. பட்... என தட்டும் சத்தம் கேட்டது..
அதில் உறக்கம் கலைந்த மகிழினியோ பயத்தோடு தொண்டையில் எச்சில் விழுங்கிய படி... யாரு??... என யோசித்த படி கதவின் துவாரம் வழியே வெளியே எட்டி பார்த்தாள்.. அங்கே ராவணன் முழு போதையில் தள்ளாடியா படி நிற்க...
அதன் பின் தான் சற்று பயம் நீங்கி கதவை திறந்தாள்... கதவை திறந்தது தான் தாமதம் சடாரென உள்ளே நுழைந்த ராவணனோ " ஏய்! கதவ திறக்க உனக்கு இவ்வளவு நேரமாடி... " என அவன் காட்டு குரல் அதிர கத்த
அதில் மேலும் பயந்த பெண் மான் அவளோ " இல்ல... அது தூங்கிட்டேன் மன்னிச்சிடுங்க... " என்றாள் மெல்லிய குரலில்
அதை கேட்ட ராவணனோ " ஏய்!! உன்ன இங்க யாரும் தூங்க வேணாம்னு சொல்லல... " என்றான் அவன் இரும்பு குரல் அதிர
அதில் எச்சில் விழுங்கிய மகிழினியோ இரு கன்னத்தை கரங்கள் கொண்டு மூடிய படி நிற்க...
ராவணனோ பெண் அவளின் செய்கைகளை பார்த்த படி அவன் அறை நோக்கி செல்ல...
அதை கண்ட மகிழினியோ தைரியத்தை வர வைத்து கொண்டு " எங்க கொஞ்சம் நில்லுங்க... " என அவன் முன்னே சென்று வழியை மறைத்த படி நின்றாள்
அவனோ என்ன விசியம் சொல் என்பதை போல ஒரு பார்வை பார்க்க...
அவளோ " இல்ல சாப்பிடாம போறீங்க... சாப்பாடு எடுத்து வைக்கவா... " என்றாள்
அவனோ பதில் கூறாமல் அமைதியாக கூடத்தில் சென்று அமர்ந்து கொள்ள... பெண் அவளும் வேகமாக உணவை சூட வைத்து கொண்டு வந்து பரிமாறினாள்...
அவனும் ஒரு வாய் உணவை உண்டு விட்டு " அப்பத்தா எங்க அவங்க சாப்பிடங்களா ??... " என்றான் கேள்வியாக
அவளோ " அவங்க மதியமே சாப்டு தோப்பு வீட்டுக்கு போய்ட்டாங்க... " என்றாள்
அவனோ பெயருக்கு கூட நீ சாப்டியா என கேக்காமல் அவள் வைத்த மொத்த உணவையும் உண்டு விட்டு போய் படுத்து கொண்டான்..
மகிழினியோ அவன் சாப்பிட்ட தட்டு உணவு பத்திரம் அனைத்தையும் கொண்டு சென்று சுத்தம் செய்து விட்டு கூடத்திலே படுத்து கொண்டாள்...
----
சூரியன் தன் ஆதிக்கத்தை கிழக்கு வானில் செலுத்தில் பூமி எங்கும் வெளிச்சத்தை பரப்ப... மகிழினியோ எழுந்து குளித்து விட்டு வாசல் தெளித்து கோலம் போட்டு கொண்டு இருந்தாள்...
அப்போது அங்கு வந்த அப்பத்தாவோ " என்னமா வெள்ளனவே எழுந்துட்ட போல.. சரி நான் பால் வாங்கியந்தே இந்த போய் கொஞ்சம் காபி தண்ணி போடு... " என அவள் கையில் கொடுத்து அனுப்பினார்..
பெண் அவள் போட்டு கொடுத்த காபியை ரசித்து குடித்து கொண்டு இருந்தார் அப்பத்தா...
அப்போது வாசலில் இருந்து " வீட்ல யாருங்க... " என ஒருவனின் குரல் கேக்க
அப்பத்தா வெளியே சென்று பார்த்தார்.. அங்கே இரண்டு மூணு பேருடன் நடுத்தர ஆள் ஒருவன் " இங்க பாருங்க ம்மா.. உங்க பேரன் நேத்து எங்க இடத்துக்கு வந்து ஒரு 17 வயசு பொண்ண கூட்டிகிட்டு வந்துட்டான்... வந்தோமா.. படுத்தோமா.. காச கொடுத்தோமா.. போனோமான்னு.. இல்லாம அவனுக்கு எதுக்கு இந்த தேவை இல்லாத வேலை...
அந்த பொண்ணுக்கு எவ்வளவு டிமாண்ட் தெரியுமா ??... ஒழுங்கா அந்த பொண்ண திருப்பி அனுப்ப சொல்லுங்க... இல்லைனா அந்த பொண்ணுக்கு பதில் அவன் பொண்டாட்டிய... " என அவன் முடிக்கும் முன் வாயில் ரத்தம் வடிய கீழே சரிந்தான் அவன்...
அங்கே கண்ணில் அனல் தெறிக்க கை முஷ்டியை திருகிய படி... குதி காலால் எம்பி வேட்டியை மடி கட்டி கொண்டு ஐய்யனார் போல நின்று இருந்தான் ராவணன்...
தொடரும்...
கமெண்ட்ஸ் முக்கியம் மக்களே...
Author: Nithya
Article Title: முரடன் 🌼 2
Source URL: Indhu Novels-https://indhunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Article Title: முரடன் 🌼 2
Source URL: Indhu Novels-https://indhunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.