Hello! It seems that you are using AdBlock - some functions may not be available. Please add us as exceptions. Thank you for understanding!
  • வணக்கம் 🙏🏻 இந்து நாவல்ஸ் தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்
  • இந்து நாவால்ஸ் தளத்தில் எழுத விரும்புவோர், indhunovel@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு செய்தி அனுப்பவும். கற்பனைகளை காவியமாக்குங்கள் ✍🏻💖
Member
Messages
53
Reaction score
8
Points
8
முரடனின் மகிழம் பூ அவள் 🌼

எபி 3

அங்கே கண்ணில் அனல் தெறிக்க கை முஷ்டியை திருகிய படி... குதி காலால் எம்பி வேட்டியை மடி கட்டி கொண்டு ஐய்யனார் போல நின்று இருந்தான் ராவணன்..

மற்றவர்களோ அவன் நின்ற தோரணையை கண்டு பயந்த படி... " இங்க பாரு பிரச்சனை வேணாம் ஒழுங்கா அந்த பொண்ண எங்க கூட அனுப்பி வச்சிட்டு.. இல்லைனா பயங்கர பிரச்சனை ஆகிடும்... " என ஓடுவதற்கு தயாராக நின்ற படி கூற

ராவணனோ " உங்களால முடிஞ்சத பண்ணிக்கோங்க டா... அந்த பொண்ண எங்க சேர்க்கணும்மோ அங்க சேர்த்தாச்சு... " என்றான் அவன் காட்டு குரல் அதிர

அதில் பயந்த அவர்களோ ' இருடா உன்ன ஆளுங்கள கூட்டிட்டு வந்து என்ன பண்றேன்னு பாரு... ' என கூறிய படி ஓடிவிட்டனர்...

ராவணனோ " தைரியமான ஆம்பளையா இருந்தா வாங்க டா... இங்கயே தான் இருப்பேன்... " என கர்ஜித்து விட்டு உள்ளே செல்ல..

பக்கத்து வீட்டில் இருந்த மொத்த குடும்பமும் அதை தான் வேடிக்கை பார்த்து கொண்டு இருந்தது... அவன் தந்தை சிவராமனோ " வெக்கம் கெட்ட ஜென்மம்... " என திட்டி விட்டு உள்ளே சென்று விட்டார்..

உள்ளே நுழைந்ததும் அப்பத்தாவோ " டேய்!! ராவணா எதுக்கு நீ அங்க போன... " என்றார் கோபமாக

" தினமும் எதுக்கு போவேனோ அதுக்கு தான் போனேன்... " என்றான் அசாராமல்

அப்பத்தாவோ " டேய்!! இத்தன நாள் போன சரி ஆனா இப்ப தான் உன்ன நம்பி ஒரு பொண்ணு இருக்கா அவ என்ன நினைப்பா... " என கோபமாக கத்த

அவனோ " நான் இப்படி தான்... தெரிஞ்சி தானே கழுத்த நிட்டுனா அப்பறம் என்ன வந்துச்சு... இந்த கருமத்துக்கு தான் கல்யாணம் வேணாம்னு தல தலையா அடிச்சிகிட்டேன்... " என கத்தி விட்டு அவன் அறைக்கு சென்று கதவை அடித்து சாற்றி கொண்டான்..

அறைக்குள் இருந்த மகிழினியோ அவன் செய்கைகளை எல்லாம் கண்ணில் நீர் வழிய பார்த்து கொண்டு இருந்தாள்.. அவனோ அங்கே ஒருத்தி இருப்பதையே மறந்து அவன் உடைகளை எடுத்து தோளில் போட்டு கொண்டு வெளியே போக திரும்ப...

அவன் முன் சென்று நின்றவளோ " நேத்து அங்க தான் போனீங்களா ??... " என ஒரு வழியாக திக்கி திணறி கேட்டு விட்டாள்..

புருவம் இடுங்க பெண் அவளை கூர்மையாக பார்த்த அவனோ " உன் கேள்விக்கெல்லாம் என்னால பதில் சொல்ல முடியாது... " என கதவை திறக்க போக

எதோ தைரியத்தில் மீண்டும் அவன் முன் சென்று நின்றவளோ " ஏன் சொல்ல மாட்டீங்க... நான் உங்க பொண்டாட்டி தான.. " என்றாள் பயத்தை மறைத்த படி..

அதில் அழுத்தமாக அவளை பார்த்தவனோ " ஓ! அப்படியா... நேத்து அந்த உரிமையா நான் எடுத்து இருக்குமோ... " என்றான்

அதில் விக்கித்து போனவள் பேச வார்த்தை இன்றி தொண்டையில் எச்சில் விழுங்க தடுமாறி நிற்க...

அதை கண்ட ராவணனோ " உன் எல்லை குள்ளையே இரு தேவை இல்லாத விசயத்துல தலையிடாத... அதுவும் இந்த ராவணனை கேள்வி கேக்குற வேலை எல்லாம் வச்சிக்காத... " என்றான் முகத்தில் அடித்தார் போல... அதில் அவள் அப்படியே உறைந்து நிற்க... அவனும் வெளியே சென்று விட்டான்..

இப்படியே ஒரு வாரம் செல்ல...

அன்று காலை முதல் பெண் அவளோ எதோ யோசனையிலே அன்றைய பொழுதை கழிக்க... மாலை போல வீட்டின் பின் பக்கம் இருந்த முல்லை பூக்களை பறித்து கொண்டு இருந்தாள்..

அப்போது பக்கத்து வீட்டில் இருந்து அங்கே வந்த ஒரு நடுத்தர வயது ஆணோ " என்ன புது பொண்ணே இப்படி தனியா கஷ்ட படுற.. ஏன் உன் புருஷன் உன்ன சரியா கவனிக்கலையா... நான் வேணும்னா உனக்கு ராத்திரிக்கு துணைக்கு வர வா... " என அசிங்கமான வார்த்தைகளில் பேச

அதை கேட்ட மகிழினியோ ஏற்கனவே அவனை வாணி கல்யாணத்தில் பார்த்த பயத்தில் உடல் எல்லாம் வேர்க்க கையில் இருந்த கூடையை இருக்கி பிடித்து கொள்ள... அவன் தான் சிவராமனின் தங்கை மகன் சேது பார்க்க நல்லவன் வேஷத்தில் இருக்கும் விஷ பாம்பு...

அப்போதும் அடங்காத அவனோ " என்ன சொல்லு வர வா... " என பெண் அவளின் கையை பிடிக்க வர

அதற்குள் அவளை இழுத்து அணைத்து கொண்ட இரும்பு கரமோ " என் பொண்டாட்டிய பார்த்துக்க எனக்கு தெரியும் உனக்கு இங்க என்ன டா வேலை... " என்றான் காட்டு குரல் அதிர

ராவணனை அங்கு எதிர்பாராத அவனும் பேய் அடித்ததை போல நிற்க...

அதில் பயந்த மகிழினியோ இன்னும் அவன் மார்பில் ஒட்டி கொள்ள... ஒரு கையால் அவளை அணைத்து கொண்டு மறு கையால் சேது வாயில் ஒரு குத்து விட்டு " இனிமே உன்ன என் வீட்டு பக்கம் பார்த்தேன் அன்னைக்கு தான் உனக்கு கடைசி நாள் பொழச்சி போட நாயே.. " என மனைவியை அணைத்த படி உள்ளே சென்று விட்டான்..

உள்ளே சென்றதும் பெண் அவளை விலக்கி அவள் கன்னத்தில் ஓங்கி அறைய அதில் தலை சுற்ற கீழே விழுந்தாள் மகிழினி... ராவணனோ கண்கள் சிவக்க " ஏய்!! வாயில என்ன கொழுக்கட்டையா வச்சி இருக்க.. அந்த நாய் பேசும்போதே இரண்டு செவில் மேலேயே விடுவியா விட்டுட்டு பயந்து கிட்டு நிக்குற... " என கத்த

அப்போது தான் வெளியே சென்று விட்டு வந்த அப்பத்தாவோ " டேய்!! ராவணா இப்ப எதுக்கு வந்ததும் வராதத்துமா அவள போட்டு அடிக்குற... " என கேட்ட படி மகிழினியை தூக்கி அணைத்து கொள்ள..

" பின்ன என்ன அவ பண்ண வேலைக்கு கொஞ்சுவங்களா சொல்லு... அந்த நாய் கைய பிடிச்சி இழுக்க வருது ஓங்கி ஒன்னு அவன் கன்னத்துல வைக்க வேணாம்... அத விட்டுட்டு பயத்துல அப்படியே நிக்குறா... " என கத்த

அவரோ " யாரு அந்த சேது வா.. அந்த நாய் ஏன் இங்க வந்தான்.. சரி விடு அவ தான் பூச்சிய பார்த்து கூட பயப்படுற ஆளுன்னு தெரியாத உனக்கு இன்னொரு வாட்டி கை நிட்டுற வேலை எல்லாம் வச்சிக்காத... என அவனை பார்த்து கூறி விட்டு.. நீ வா தாயீ நாம போலாம் " என மகிழினியை அழைத்து கொண்டு அறைக்குள் சென்றார்..

---

அங்கு சிவராமன் வீடு...

செண்பகம் : அண்ணா அது தான் சொத்தை விதச்சுல எங்க பங்கை கொடுத்தீங்கன்னா நான் என் பொண்ணுக்கு கொடுத்துட்டு வந்துருவேன்...

சிவராமன் : என்ன செண்பகம் உன் பங்கு 20 லட்சம் தான் அப்பவே கொடுத்துட்டேனேல அப்பறம் என்ன??... என்றார் கேள்வியாக

செண்பகம் : மொத்தம் 50 லட்சத்துக்கு வித்தோம் அண்ணா.. அதுல பாதி 25 லட்சம் இன்னும் எனக்கு 5 லட்சம் வேணும்... என கேக்க

சிவராமனோ சற்று கோபமாக " என்ன செண்பகம் இது.. அந்த பொறுக்கி பயலுக்கு கல்யாணம் பண்ணி அவன் பொண்டாட்டி கையெழுத்து போடணும் தானே அவசரமா என் மருமக அக்காவ அந்த ஒன்னும் இல்லாதவனுக்கு கல்யாணம் பண்ணி வச்சோம்... இந்த விசியம் வெளிய தெரியாம இருக்க நான் எத்தன பேருக்கு செட்டில் பண்ணேன் தெரியுமா...

இல்ல இன்னேரம் நாம அந்த பொறுக்கி பயனுக்கும் ஒரு பங்கு கொடுக்க வேண்டிய நிலைமை வந்து இருக்கும்.. அதனால இனிமே அந்த பணத்தை பத்தி எல்லாம் கேக்காத நீ... " என்றார்

அதை கேட்ட செண்பகமோ " அதுக்கு இப்படியா அண்ணா பண்ணுவா எதோ 5, 10 கொடுப்பன்னு பார்த்தா இப்படி லட்ச கணக்குல கொடுத்து இருக்க... " என்றாள் பணம் போன கடுப்பில்

அவரோ " எனக்கு வேற வழி தெரியல செண்பகம் அதன் எல்லாருக்கும் பணம் கொடுத்து அந்த நிலத்தை வித்துட்டேன்... என்ன இதுல அவனுக்கு கல்யாணம் ஆகிடுச்சு... சரி விடு ஒரு நாள் உண்மை தெரிஞ்சி அந்த பொண்ணே அவன விட்டு ஓடி போக போகுது... " என்றார்

---

இங்கு இரவு அறைக்குள் நுழைந்த ராவணன் கண்டதோ தரையில் உடலை குறுக்கி கொண்டு படுத்து இருந்த மகிழினியை தான்.. மெதுவாக அவள் அருகே அமர்ந்தவனின் கண்களில் தப்பாமல் பட்டது அவன் அடித்ததில் தக்காளி பழம் போல சிவந்து வீங்கிய கன்னமும்... அழுது சோர்ந்த முகமும்... பொறுமையாக அவளை தூக்கி சென்று மெத்தையில் படுக்க வைத்தான்..

பின் அவன் சட்டை பையில் இருந்து களிம்பை வெளியே எடுத்து பெண் அவள் கன்னத்தில் தடவி விட...

எரிச்சலின் மேல் குளிர்ந்த உணர்வை கண்டு தூக்கத்தில் இருந்து அடித்து பிடித்து எழுந்தாள் மகிழினி... அதை கண்ட ராவணனோ " ஏய்!! என்னாச்சி இப்ப எதுக்கு இப்படி வலையில மாட்டுன மீன் மாதிரி துள்ளிகிட்டு இருக்க... " என்றான் இரும்பு முழுங்கிய குரலில்

மகிழினியோ " அது நா..ன் எப்..படி இங்க... " என ஒரு வழியாக மெத்தையில் இருப்பதை கண்டு பயந்த படி கேக்க

அவனோ " ஏன் நான் தான் படுக்க வச்சேன்.. நீ தான போன வாரம் சொன்ன என் பொண்டாட்டின்னு அதான் உன்கிட்ட என் உரிமைய காட்ட தூக்கிட்டு வந்தேன்... " என அசறாமல் அவள் தலையில் ஒரு குண்டை போட

அதில் முட்டை கண்கள் அதிர விழித்து கொண்டு இருந்தாள் மகிழினி...

தொடரும்...

கதை எப்படி இருக்குனு சொல்லிட்டு போங்க மக்களே...
 

Author: Nithya
Article Title: முரடன் 🌼 3
Source URL: Indhu Novels-https://indhunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top