Hello! It seems that you are using AdBlock - some functions may not be available. Please add us as exceptions. Thank you for understanding!
  • வணக்கம் 🙏🏻 இந்து நாவல்ஸ் தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்
  • இந்து நாவால்ஸ் தளத்தில் எழுத விரும்புவோர், indhunovel@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு செய்தி அனுப்பவும். கற்பனைகளை காவியமாக்குங்கள் ✍🏻💖
Member
Messages
53
Reaction score
8
Points
8
அத்தியாயம் 17

ஆதவனின் ஒளிக்கதிர்கள் முகத்தில் பட குருவிகளின் கீச்... கீச்... என்ற இசையோடு மெல்ல தன் மீன் விழிகளை திறந்தாள் பல்லவி. அவள் கண்டதோ அவளை இமை சிமிட்டாமல் காணும் ராகவனை தான். குட் மார்னிங் பேபி மா என அவன் கூற அவளும் குட் மார்னிங் அத்து இவ்வளவு காலையில இங்க என்ன பண்ற நீ என வினவ ஆடவனோ அவள் வெண் தாமரை முகத்தின் பாவனைகளை கண்டு சொக்கி தான் போனான். அவன் தலையை உளுக்கி கொண்டு அது பாட்டிமா இந்த புடவையை உன்கிட்ட கூடுக்க சொன்னாங்க. இன்னக்கி கோவில்ல பூஜை இருக்கு அதனால இத கட்டிக்கோ என அழகிய வேலைப்பாடு கொண்ட பட்டு புடவையை அவளிடம் கொடுத்தான்.

************************************************************

இங்கே ரதியின் அறையிலே...

தேவ் போதும்.. ம்ம் ப்ளீஸ் என் செல்ல மாமா தான விடிஞ்சிட்டு தேவ். வ்வ்..என தன் மீது முழு பாரத்தையும் போட்டு அவள் பெண்ணமையை களவாடி அவள் மேல் போர் செய்யும் அவளின் மன்னவனிடம் கெஞ்சி கொண்டும் கொஞ்சி கொண்டும் இருந்தாள் ரதி. ஆடவனோ அவன் பார்வையில் சிவந்த அவள் கன்னத்தில் அழுந்த முத்தம் வைத்து அவன் வேலையை செய்து கொண்டு இருந்தான்.

அவளும் விடாமல் தேவ் டேய் தேவ் மாமா போய் குளிச்சிட்டு வெளிய போகணும். சொன்ன கேளு என கெஞ்ச அவனோ பெரிய மனது பண்ணி சரி நான் இப்ப உன்ன விட்ட எனக்கு என்ன தருவ என புருவத்தை உயர்த்தி அவளை விழுங்கும் பார்வையோடு கேக்க அவளோ விட்டாள் போதும் என சரி நீ சொல்லறத நான் செய்யுறேன் இப்ப கொஞ்சம் நகரு என கூற

அப்ப பேச்சு மாறமாட்டளா என மீண்டும் கேக்க அவளும் அந்த கேள்வியின் நோக்கம் அறியாமல் சரி செய்றேன் சொல்லு என கேக்க அவனோ அவள் அருகில் சரிந்து படுத்து கொண்டு அப்ப வா போய் ரெண்டு பேரும் சேர்ந்தே குளிச்சு கிளம்பலாம் என கூற அதில் தன் மூட்டை கண்களை அதிர்ந்து விழித்த அவள் தேவ் சுதரிக்கும் முன் போர்வையோடு சென்று குளியல் அறைக்குள் சென்றாள்.

அவனும் ஓடும் அவள் பின்னே சென்று அவள் கதவை தாள் இடும் முன் இவன் சென்று தாள்ளிட்டான். அவளோ அதிர்ந்து தேவ்வை காண அவனோ ஷாவரை திறந்து விட்டு அவள் இதழ்களின் தேனை அவன் இதழ் கொண்டு உரிய ஆரம்பித்தான். அதன் பின் அந்த அறையில் இருந்து கேட்டது என்னவோ இருவரின் மோக முத்த சத்தமும் சுகமுனகல்களும் தான்.

அரைமணி நேரம் கழித்து அவளோடு சேர்ந்து குளித்து விட்டு வெளியே வந்தான் தேவ். ரதியும் அவனை மொறைத்து கொண்டு சென்று புடவை கட்ட ஆரம்பித்தாள். அப்போதும் தேவ் சென்று அவளை இழுத்து அவனின் மடிமீது அமர்த்தி கொள்ள புடவையின் மடிப்புகள் நழுவி விழுந்தது. அதில் கோபமான ரதியோ தேவ்.. வ்.. வ்.. என எதோ கூற வர அதற்குள் அவள் இதழை இவன் இதழ் கொண்டு அடைத்து விட்டான் . பின் அவள் கண்களை பார்த்து அவன் தலையை துவட்டி விடுமாறு கூற அவளும் அவன் தலையை புடவை முந்தானையால் துடைத்து விட்டாள்.

பின்பு அவனே அழகாக சிறிய விசிறி போல மடிப்புகள் எடுத்து அவளுக்கு புடவை கட்டி விட்டான்.

-----××××-----------------×××××××××-----------------------

தேவ்வும் ரதியும் வீரோடு கூடத்திற்கு வர ராகவனும் அவன் பேபியோடு வந்தான். பின் மீனாட்சி ராகவனையும் பல்லவியையும் கோவிலுக்கு சென்று வர கூறினார். தேவ்வையும் ரதியையும் திருமணத்திற்கு தேவையான பொருட்களை வாங்க வெளியே அனுப்பி வைத்தார்.

சென்ற அனைவரும் மதியம் போல வீடு திரும்பினர். மாலை தோட்டத்தில் பந்தல் அமைக்கப்பட்டு ராகவனுக்கும் பல்லவிக்கும் மஞ்சள் நலங்கு வைக்கப்பட்டது. இதில் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் எல்லாம் நலங்கு வைத்து விட்டு சென்றனர். பின் மணமக்கள் இருவரின் மீதும் மஞ்சள் நீரை ஊற்றி சடங்கை முடிவு செய்தனர்.


இங்கே தேவ்வோ மஞ்சள் வைத்து விட்டு வந்த ரதியை இழுத்து தனியாக சென்று இவன் கன்னத்தில் இருந்த மஞ்சலை அவள் கன்னத்தில் இடம் பெயர்க்க அவளின் முகமோ தக்காளி போல சிவக்க ஆடவனோ அந்த கன்னசிவப்பில் தொலைந்து தான் போனான்.அவளோ மயங்கியவனை நினைவு கொண்டு வர அவன் முகம் முழுவதும் மஞ்சளை பூசி ஓடி விட்டாள். தேவ்வும் அவள் பின்னால் துரத்தி கொண்டே ஓட கடைசியில் அவர்கள் அறையில் சென்று அவனிடம் மாட்டிக்கொண்டாள் அவள்.இருவரும் ஓடி பிடித்து மஞ்சளை பூசிக்கொண்டு கடைசியில் மேலே நீரை மாற்றி மாற்றி ஊற்றி கொண்டு முழுவதும் நனைந்தப்படி காட்சி அளித்தனார்.

பின் இருவரும் உடை மாற்றி விட்டு வர வீட்டின் கூடத்தில் ராகவன் அவன் பேபியின் கைகளில் மருதாணி வைத்து கொண்டு இருந்தான். வீராவோ குட்டி வீரோடு விளையாடி கொண்டு இருந்தார். அப்போது அங்கு வந்த மீனாட்சியோ தேவ்வின் கைகளில் மருதாணி கின்னத்தை கொடுத்து விட்டு செல்ல தேவ்வும் ரதியின் கைகளில் அழகாக வைத்து விட்டான்.

மீனாட்சியோ என்னோட எந்த பேத்தி கை நல்ல செவ்வாக்குதோ அவங்க புருஷனுக்கு தான் பொஞ்சாதி மேல பாசம் அதியமா இருக்குமாம் அதான் உங்க ரெண்டு பேருல யாருக்கு அதியமா செவக்குதுன்னு பார்க்கலாம் என கூற

தேவ், ராகவ் இருவரும் ஒரே நேரத்தில் என் பொண்டாட்டி கை தான் சிவக்கும் என கூற
அங்கே சிரிப்பாளை எழுந்தது 😂😂😂.சரி டா பேராண்டிகளா யார் கை செவக்குதோ அவங்களுக்கு தான் இந்த மோதிரம் நா பரிசா தர போறேன் என கூறி சென்றார். பின் நேரமானத்தை பார்த்த மீனாட்சியோ உணவை கொண்டு வந்து தேவ், ரதி, ராகவன், பல்லவி என நால்வருக்கும் ஊட்டி விட்டார். நால்வரும் நீண்ட நாட்கள் கழித்து பாட்டிமாவின் கையில் உண்டதில் மகிழ்ச்சியாக இருந்தனர். மீனாட்சியோ அனைவரையும் உறங்க சொல்லி கூடவே மருதாணி வைத்த கையை காலை தான் கழுவ வேண்டும் என கூறி சென்றார்.

இவர்களின் இந்த மகிழ்ந்த முகத்தை இரண்டு கண்கள் ரகசிய கேமரா மூலம் பார்த்து கொண்டு இருந்தது. அந்த கண்களோ எப்படி இந்த சிரிப்பை அழிப்பது என யோசித்து திட்டம் திட்டி கொண்டு இருந்தது.

தொடரும்......
 
Last edited:

Author: Nithya
Article Title: ரதி 🩵 17
Source URL: Indhu Novels-https://indhunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top