Hello! It seems that you are using AdBlock - some functions may not be available. Please add us as exceptions. Thank you for understanding!
  • வணக்கம் 🙏🏻 இந்து நாவல்ஸ் தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்
  • இந்து நாவால்ஸ் தளத்தில் எழுத விரும்புவோர், indhunovel@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு செய்தி அனுப்பவும். கற்பனைகளை காவியமாக்குங்கள் ✍🏻💖
Member
Messages
53
Reaction score
8
Points
8
காலை கதிரவன் அவன் காதலி அலைக்கடலை முத்தமிட வெட்கம் கொண்ட வானமோ செந்நிறமாய் சீவந்தது. பறவைகளின் ஒலியில் கண்களை திறந்தான் ருத்ரதேவன். வேகமாக கிளம்பிய தேவ் காலை உணவை சமைத்து விட்டு உறங்கும் ரதி மற்றும் வீரின் நெற்றியில் முத்தமிட்டு வெளியே சென்றான்.


ஆர். எம். மருத்துவமனை..

ருத்ரதேவனும் தேவராகவனும் அந்த அறையில் எதிர் எதிரே அமர்ந்து இருந்தனர்.முதலில் தேவ் தான் பேச ஆரம்பித்தான்.

தேவ் : இனிமே என் பொண்டாட்டி உங்க தங்கச்சி ரதி என்கூட தான் இருப்பா

ராகவ்: சந்தோஷம் இனிமே தேவ் புராணம் இல்லாம நான் நிம்மதியா என் காதலி கிட்ட பேசுவேன்.

தேவ் : என்னது என் புராணமா புரியல, நியாமா நீங்க என் மேல கோபம் தான் படனும் ஆனா இப்படி பொறுமையா பேசுறீங்க

ராகவ் : உன் மேல் எனக்கு உன்ன கொலை பண்ற அளவு கோபம் இருந்தது தான். ஆனா அவளே உன்ன விட சொல்லிட்டா அப்பறம் யாருக்காக நான் கோபப்படணும் சொல்லு

எப்ப பாரு என் தேவ் சமைச்ச சாப்பாடு மாறி இல்ல, என் தேவ் போட்ட ஜூஸ் மாறி இல்ல, என் தேவ் எப்படி என்ன பிரிஞ்சு இருப்பாரு, என் தேவ் நான் கேட்ட உடனே வாங்கு தருவாரு, என் தேவ் நான் கேக்காமலே அடிக்கடி வெளியே கூப்பிட்டு போவாரு அப்படினு எப்பப்பாரு தேவ் தேவ்னு உன் பொண்டாட்டி இந்த ஒரு வருஷமா என் காதுல ரத்தம் வர அளவு பேசிட்ட அதனால நீயே வச்சிக்கோ சரியா அப்பறம் என்னைக்காவது என் தேவ் வந்து என்னை கூப்பிட்டா நான் கூட போய்டுவேன்னு சொன்ன

தேவ் : அப்பறம் என் என்னை பார்த்து நான் ராகவ் கிட்ட போறேன்னு ஒரே அடம் அப்பறம் நான் வேண்டாம்னு சொல்லி என்கிட்டயே சண்டை போடுற முடியல என கேக்க

ராகவ் : அவளால நீ இல்லாம இருக்கவும் முடியாது அதே நேரம் நீ அன்னக்கி விட்டு போய்ட்டேனு கோபமும் இருக்கு அதான் இப்படி உன்ன வச்சு செய்ற அனுபவி ஒரு வருஷம் என்ன வச்சு செய்ஞ்சா அதான் இப்ப நீயே போய் மாட்டிக்கிட்டாள என்ஜோய் பண்ணு

தேவ் : அப்பறம் நேத்து அவ ஒன்னு கேட்ட நான் நீலவேணிக்கு விஷம் மட்டும் தான் கொடுத்தேன் ஆனா நீங்க தான மணிமேகலை தொழில் நஷ்டம் ஏற்றப்படுத்தி விட்டது. அப்பறம் ஊட்டில ராம் க்கு அச்சிடேன்ட் பண்ணது

ராகவ் : ஆமா நான் தான் பண்ணேன். அன்னக்கி நீ அந்த ராம்மை சரியா அடிக்கல அதான் நல்ல கொஞ்சம் கவனிச்சு விட்டேன். அப்பறம் என் ரதி என் குழந்தை அவள போய் கொடும படுத்தின அந்த மணிமேகலை சும்மா விட மனசு வரல அதான் அவங்க கம்பெனியா மூட வச்சுட்டேன்.

சார் மட்டும் என்ன கொஞ்ச வேலைய பார்த்து வச்சு இருக்கீங்க நானாவது சின்ன வேலை தான் செஞ்சேன் ஆனா நீங்க அந்த ஆர். ஆர். கான்ஸ்டருக்ஷன்ஸ் எம். டி. ஐ கொலை பண்ணல இதுல என்ன வேற சொல்லுற போடா

தேவ் : ஆமா நான் தான் என் அம்முவை கொலை பண்ண முயற்சி பண்ணன் அதனால போட்டுட்டேன். சரி இப்ப என் அம்முவோட ஹெல்த் எப்படி இருக்கு

ராகவ் : இப்ப அவ நார்மல் தான் ஆனா ரொம்ப ஜாக்கிரதையா பார்த்துக்கோ மச்சான். இது ரெண்டாவது பாய்சன் அட்டாக் அவ உயிரோட இருக்குறதே பெரிய விஷயம் சரியா அப்பறம் அவ ரொம்ப மன உளைச்சால இருக்க நீதான் அவளுக்கு மருந்து, அவகிட்ட பேசு அவளுக்கு பிடிச்சதெல்லாம் செய், அப்பறம் பத்திய சாப்பாடு, பச்ச காய்கறி பழங்கள் அது மட்டும் கொடு அப்பறம் பால் கொடுக்காத அவளுக்கு பிடிக்காது.

தேவ் : எனக்கு தெரியும் அதான் தேங்காய் பால் மட்டும் கொடுத்தேன். எண்னை, உப்பு, காரம் இல்லாம தான் சமைக்குறேன். இனிமே அப்படியே கொடுக்குறேன். அப்பறம் எப்ப என் தங்கச்சி வரப்போற

ராகவ் : கவி இன்னும் அஞ்சு மாசம் கழிச்சு வருவா. சரி என் மருமகனை நல்ல பாத்துக்கோடா மச்சான்

தேவ் : சரிங்க மாமா அவர்களே என் அம்மு தேடுவா வரேன். பாய்
என கூறி விடை பெற்று சென்றான்.


தேவ் வீட்டில் நுழையும் போது கண்டது என்னவோ வீரோடு குழந்தையாய் மாறி விளையாடும் அவன் அம்முவை தான். அவன் சென்று குளித்து விட்டு ரதியின் அருகில் அமர்ந்தான்.

சாப்டியா அம்மு, என கேக்க அவளோ ஆம் என தலை அசைத்தாள்.

அவனோ குழந்தையை வாங்கி கொண்டு குழந்தையோடு கொஞ்ச நேரம் விளையாடிவிட்டு தோளில் போட்டு தட்டி உறங்க வைத்தான். உறங்கிய குழந்தையை தொட்டிலில் போட்டு விட்டு ரதியின் அருகில் சென்றான்.

ரதியிடம் சென்று நான் உனக்கு விவாகரத்து கொடுக்குறேன் ஆனா நீ வீர என்கிட்ட கொடுத்துவிட்டு உன் அண்ணன் கூட போய்விடு என கூற

கோபமான ரதியோ தேவ்வை கீழே தள்ளி அவன் மேல் விழுந்து அவனை சரமாரியாக அடித்தாள். அவனோ அவள் கைகளை மடக்கி பிடித்து நீதானா நேத்து கேட்ட இப்ப நானே தரேன் சொல்லுறேன் இப்படி பதில் சொல்லாம அடிக்குற ஏன் சொல்லு நான் வேணுமா? வேணாமா? சரி நான் கேக்குற கேள்விக்கு பதில் சொல்லு
நான் வேலைக்கு போறேன்னு தெரிஞ்சி எனக்கு வேலை போட்டு கொடுத்த, குழந்தைக்கு நான் சொன்ன பெயர் தான் வச்சு இருக்க, மயக்கத்துல கூட உனக்கு நான் தான் நியாபகம் வரேன், எனக்கு ஒண்ணுன்னா இன்னைக்கு வர என்ன விட நீதான் அதிகமா துடிக்குற
அப்பறம் என் அம்மு நான் வேண்டாம் அப்படினு நீயே ஒரு பொய்யான முகமூடிய போடுக்குற எனக்கு இப்பவே சொல்லு

அவளோ நான் எல்லாத்தையும் எதுக்குறேன் மிஸ்டர். ருத்ரன் ஆனா நீ சொன்ன வார்த்தையை காப்பாத்துவ அப்படிங்குற நம்பிக்கை எனக்கு இல்ல. அன்னக்கி மட்டும் நீ போகலான நம்ம பிரிஞ்சு இருக்கவே வேண்டாம். அப்பறம் வீர் அவன் என்ன பண்ணினான். பொறந்த நிமிஷத்துல இருந்து ஊசி மருந்து ஹாஸ்பிடல் அப்படினு இருக்கான் அதுக்கு நீதான் காரணம் அப்படினு நினைக்கும் போது ரொம்ப வலிக்குது.
நீதானா சொன்ன உன் அம்மா அப்பா நிலா மாறி இல்லாம கடைசி வர இருப்பேன்னு சொல்லிட்டு என்னடா போன என கேட்டு அவன் மார்பில் முகத்தை புதைத்து கொண்டு அழுதாள்.


அவனும் ஆதரவாய் அவளை அணைத்து கொண்டு முதுகை வருடி விட்டான். அவளும் கொஞ்ச நேரத்தில் தன்னை சமன் செய்து கொண்டு எனக்கு கொஞ்சம் டைம் வேணும் என்னால நீ இல்லாம இருக்க முடியாது அப்படிக்கறது எவ்வளவு உண்மையோ அதே மாறி பழசை எல்லாம் மறக்க டைம் வேணும் ஆனா அதுக்குள்ள உன்ன பார்த்து எதாவது கோபமா பேசிடுவேன் தான் விலகி இருதேன் அதுக்குள்ள தான் நீ இப்படி கூட்டிட்டு வந்துட்டா அப்பறம் என்ன சொன்ன வீர் மட்டும் போதுமா நான் இல்லாம அப்பாவும் மகனும் மட்டும் இருந்துவிடுவீங்களா உனக்கு நான் வேணாமா சொல்லு சொல்லுடா மிஸ்டர் ருத்ரன் எனக்கு பதில் சொல்லு என கூறி அவனை முறைக்க அவனோ அவள் இதழில் முத்தமிட்டான்.


சிறிது நேரம் கழித்து அவனே அவளை விட்டு விரலால் அவள் இதழ் ரேகையை வருடி கொண்டே இனிமே மிஸ்டர் ருத்ரன் அப்படிலாம் கூப்பிட கூடாது ஒழுங்கா தேவ் மாமா அப்படினு கூப்டு இல்ல இப்படிதான் தண்டனை தருவேன் சரியா என கேக்க

அவளும் அவன் தந்த மயக்கத்தில் தலையை அசைத்தாள். அவனும் சிரித்து கொண்டே மீண்டும் முத்தம் வைத்து அது உண்மை தான் நீங்க இல்லாம நாங்க இல்ல தான் எப்பவும் நீ வேணும் என கூறி அவளை விட்டு விலகி சென்று சமைக்க ஆரம்பித்தான்.


அவளும் அவன் பின்னாலேயே சென்று சமையல் மேடையில் அமர்ந்து கொண்டு அவனை வைத்த பார்த்து கொண்டு இருந்தாள். மதியம் மோர் குழம்பு, காரம் இல்லாமல் வாழைக்காய் வறுவல் என சமைத்து அவனே ரதிக்கு ஊட்டி விட்டான்.


அன்று இரவு வீரின் அழுகுரல் கேட்டு கண் விழித்தான் தேவ். வீர் மட்டும் தொட்டில் இருந்தான் ஆனால் ரதியை காணவில்லை. அவனும் வீரை தட்டி கொடுத்து தூங்க வைத்து விட்டு பால்காணி நோக்கி சென்றான்.
அங்கே தான் ரதி வானை வெறித்து கொண்டு நின்று கொண்டு இருந்தாள்.

தேவ்வும் அவளை பின் இருந்து அணைத்து அவள் கழுத்தில் முகம் புதைத்து கொண்டு தூங்கலாய அம்மு என கேக்க அவளோ தூக்கம் வரல தேவ் எனக்கு ஒரு மாறி பயமா கவலையா தெரியல மனசுக்கு ஒரு மாறி இருக்கு என கூற அவனும் என்னாச்சு அம்மு ஒன்னும் ஆகாது அதான் நான் இருக்கேன்ல என்னை மீறி தான் உனக்கு சாவுக்கூட வரும் சரியா என கேக்க

அவளும் அவன் கன்னத்தில் அறைந்து விட்டு அவன் இதழை பற்றி ஆழமாக முத்தம் வைத்து இதழை கடித்து விட்டாள். அவன் கண்களை பார்த்து இனிமே எனக்கு முன்னாடி சாவு பத்தி பேசுனா நானே உன்ன கொன்னுடவேன் பார்த்துக்கோ என கோபமாக கூற அவனோ அதுக்கு என் ராட்சசி இப்படி கடிச்சு வச்ச வலிக்குதுடி இனிமே இப்படி பேச கூடாதுன்னு சொன்ன செய்ய போறேன் அதுக்கு என் எப்படி என அவன் இதழை பார்த்து கேக்க
அவளும் மீண்டும் மென்மையாய் முத்தம் வைத்து ஹாப்பி பர்த்டே தேவ் மாமா என இருக்கி அணைத்து கொண்டாள்.


சென்னை வரும் வீரராகவன். தேவ்வை அவர் ஏற்று கொள்வார. அடுத்த பாக்கத்தில்.....
 
Last edited:

Author: Nithya
Article Title: ரதி 🩵13
Source URL: Indhu Novels-https://indhunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top