Hello! It seems that you are using AdBlock - some functions may not be available. Please add us as exceptions. Thank you for understanding!
  • வணக்கம் 🙏🏻 இந்து நாவல்ஸ் தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்
  • இந்து நாவால்ஸ் தளத்தில் எழுத விரும்புவோர், indhunovel@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு செய்தி அனுப்பவும். கற்பனைகளை காவியமாக்குங்கள் ✍🏻💖
Member
Messages
53
Reaction score
8
Points
8
அத்தியாயம் 14


இரவு நேர குளிர் காற்று மேனியை வருட அந்த நிசப்தமா வேளையில் சந்திரனினும் அவன் காதலி நட்சத்திரமும் வானில் காதல் கொண்டு ஊர்வலம் போக "ஹாப்பி பர்த்டே தேவ் மாமா " என தேவ்வை இருக்கி அணைத்து கொண்டாள் ரதி. அவனும் பதிலுக்கு தேங்க்ஸ் என கூறி எனக்கு வெறும் வாழ்த்து மட்டும் தான அம்மு பரிசு எதுவும் இல்லையா என கேக்க அவளோ பரிசு தான உள்ள தொட்டில தூங்குது போய் பாரு தேவ் என குறும்பாக கண்ணாடித்து கூறினாள்.


அவனும் வீர் எனக்கு பரிசு இல்ல என் வாழக்கையில கிடைச்ச பெரிய பொக்கிஷம் டி ஆனா எனக்கு வேற வேணும் நான் ஒன்னு கேப்பேன் நீ கண்டிப்பா செய்யணும். செய்வேன் சொல்லு அப்பதான் என்ன விஷயம் அப்படினு சொல்லுவேன் சொல்லு செய்வியா மாட்டியா என அவனும் அவள் கண்களை பார்த்து கேக்க


அவளும் என்ன பில்டஅப் எல்லாம் பெருசா இருக்கு அப்படி என்ன கேக்க போறீங்க தேவ் மாமா அவர்களே என கூற தேவ்ஓ நீ உன்னோட தாத்தா கூட பேசணும் இங்க தப்பு பண்ணாதவங்கனு யாரும் இல்ல ஏன் இப்ப நான் கூட தப்பு பண்ணல அப்படினு சொல்ல மாட்டேன் ஆனா இப்போ நீ என் கூட பேசுற மாதிரி அவர்கிட்டயும் பேசு
அவங்க ரெண்டு பேரும் வாழறதே அவங்க பேர பசங்க உங்களுக்காக தான் அதனால அவர் என்ன பண்ணி இருந்தாலும் அதை மறந்துட்டு அவர் கிட்ட அன்பா பேசு அவர்கூட கொஞ்சம் டைம் ஸ்பென்ட் பண்ணு சரியா அவர பிடிக்காம தான் அவர் கூப்பிட்டதும் அவர் வீட்டுக்கு போனியா சொல்லு


ரதியோ தேவ்வை மொறைத்து
பார்த்து முகத்தை திருப்பி கொண்டாள். அவனும் அவளை அணைத்து கொண்டு கோவப்படாம கேளு அம்மு என் கழுத்தில் முத்தமிட்டு அவள் மார்பு நோக்கி குனிந்து அவள் நெஞ்சின் மீது சாய்ந்து அங்கே ஒரு முத்தம் வைத்து அங்கேயே அவன் முகத்தை வைத்து தேய்த்து அவள் உணர்ச்சிகளை தூண்டி விட்டான்.



அவளும் அவன் சிகையை பிடித்து இழுத்து என்ன பண்ற என்று அவன் கொடுத்த உணர்ச்சிகளின் அளவு தாங்க முடியாமல் கேக்க அவனோ என் அம்மு கோவமா இருக்கா அதான் சமாதானம் பண்றேன் என கூற

அவளோ முறைத்து பார்த்து விட்டு
இங்க யாரும் கோவமா இல்லை அதனால நீ ஓன்னும் பண்ண வேணாம் கொஞ்சம் தள்ளி நில்லு
அப்பறம் எனக்கு என் வீராவா பிடிக்கும் அப்பா இல்லாத எனக்கு ஒரு அப்பாவ போல நிறைய பண்ணிருக்காரு ஆனா அவர் மேல சின்ன கோபம் அவ்ளோதான் இதுக்கு மேல நான் கொஞ்சம் என்னை மாத்திக்க முயற்சி பண்றேன் ஓகே வா என அவன் கன்னம் பற்றி கேக்க அவனும் சம்மதமாய் தலை அசைத்தான்.


அப்பறம் தள்ளி எல்லாம் நிக்க முடியாது இப்படி உரசிக்கிட்டே தான் நிப்பேன் என கூறி அவளை கையில் ஏந்தி கொண்டான். அவளோடு கட்டிலில் சரிந்து அவள் நெஞ்சின் மீது படுத்துக்கொண்டு மீண்டும் உறக்கத்தை தொடர்ந்தான். அவளும் அவன் நெற்றியில் முத்தமிட்டு
அவளவனை அணைத்து கொண்டு மீண்டும் சுகமான நித்திரைக்கு சென்றாள். மறுநாள் காலை தேவ் தான் ரதியிடம் கத்தி கொண்டு இருந்தான்.


வர வர இது சரியில்ல அம்மு ஒழுங்கா இது முழுசா குடி பாரு வீரே அவனுக்கு குடுத்த கஞ்சிய கூடிச்சிட்டான் ஆனா நீ இன்னும் பாதி கூட குடிக்கல இப்படி இருந்த எப்படி உடம்பு சரியாகும் சொல்லு எல்லாம் அந்த ராகவன சொல்லும் நீ வேணா சொன்ன போதும் அப்படினு விட்டுட்டு பாரு குடிக்க சொன்ன முஞ்சு மூண்ணுறு பாவணை காமிக்குது என பொறிந்து தள்ள

அவளோ பாவமா அந்த கஞ்சி கிண்ணதை பார்த்து கொண்டு இருந்தாள். அவனும் வீரை அவள் கையில் கொடுத்து விட்டு அவனே எடுத்து அவளுக்கு முழுவதும் ஊட்டி விட்டான். அவளும் அமைதியாக குடித்தாள்.


அப்போது உள்ளே வரலாமா என கேட்டுக்கொண்டே ராகவனும் வீராவும் வந்தனர். அவர்களை வரவேற்ற தேவ் இருவருக்கும் தேநீர் கொண்டு வந்து கொடுத்தான். இருவரும் அதனை கூடித்து விட்டு ரதியிடம் உடல் நிலை பற்றி கேட்டுக்கொண்டனர்.அப்போது ராகவனை பார்த்த ரதி முகத்தை திருப்பி கொண்டு வீராவின் பக்கத்தில் சென்று அமர்ந்து கொண்டாள்.

வீரா எனக்காக ஒன்னு செய்விங்களா இந்த ரெண்டு பேரும் இல்ல இல்ல இந்த மூணு பேரையும் நல்லா நாலு அடி போடுங்க அவன் என்னடான பா.. பா..னு தேவ் பின்னாடியே போறான்.இவனும் பட்டுக்குட்டி அப்படினு அவன் கூடவே சுத்திட்டு என்னை திட்டுறான். அதுக்கு இதோ இந்த ராகவ் வேற துணை போறான். நான் அவனுக்கு இம்சையாம் அதனால நா இல்லாம இவனுங்க எல்லாம் ஜாலயா இருக்க போறானுங்கலாம்.


அதனால நம்ம இன்னைக்கே ஊருக்கு போலாம் வீரா இவனுங்க இங்கயே இருக்கட்டும் என அவரிடம் கூற அவரோ சத்தமாக சிரித்து விட்டு சரி நம்ப ஊருக்கு போலாம் ஆன என்ன பாவம் உன் தேவ் நீ இல்லாம எப்படி இருப்பான் சொல்லு அப்பறம் இதோ இவன் ரதி ரதினு உன் பேர சொல்லலைனா அவனுக்கு தூக்கமே வராது இதுல நீங்க பிரிஞ்சு இருக்க போறிங்களா என கூறி சத்தமாக மீண்டும் சிரிக்க


ராகவன் தான் ரதியின் முன் சென்று மண்டியிட்டு அமர்ந்து அவள் கைகளை பிடித்து கொண்டு சாரி ரதிமா வர கூடாதுனு இல்ல கொஞ்சம் வேலை அதிகம் நீயும் இல்ல உன் தேவ்வும் இல்ல எல்லா வேலையையும் நானே முடிக்க நைட் ஆகிடுச்சு அதான் இப்ப வந்தேன் சாரி. என்கிட்டே பேச மாட்டிய சொல்லு நா உனக்காக ஒரு நல்ல செய்தி வச்சு இருக்கேன் நீ பேசலான நானும் பேசமாட்டேன் போ என அவன் கூற
ரதியோ சரி என்ன விஷயம் உன் பல்லவிய பார்க்க போறியா என கேக்க ஆமா என தலையாசைத்தான்.



வீரா இப்போது பேச ஆரம்பித்தார். ரதிமா நம்ப ராகவனுக்கும் பல்லவிக்கும் மூணு மாசம் கழிச்சி கல்யாணம் பண்ண போறோம் அதான் முதல உன்கிட்ட தான் சொல்லணும்னு உன் பாசக்கார அண்ணனும் அண்ணியும் உத்தரவு போட்டு இருகாங்க நீயும் உன் தேவ்வும் மூணு மாசம் கழிச்சி கல்யாணம் பண்ண நல்ல நாள் பார்த்து சொல்லுங்க ராகவ் போய் பல்லவிய கூட்டிட்டு வருவான் சரியா என கேக்க அவளும் சரி என சம்மந்தம் தந்தாள்.


அதான் பின் பொதுவாக பேசிவிட்டு ராகவனும் ரதியும் வீருடன் அலுவலகம் சென்று விட்டனர். இப்போது வீட்டில் தேவ்வும் வீராவும் மட்டுமே இருந்தனர்.
தேவ் தான் சென்று வீராவிடம் கேட்டான் உங்களுக்கு என் மேல கோபமே இல்லையா உங்க வீட்டு பொண்ண வீட்டவிட்டு தொரத்தி விட்டுட்டேன் ஆனா நீங்க என்னை இப்படி நல்ல பார்த்து கிட்டு இருக்கீங்க எப்படி சார் உங்க குடும்பத்தால மட்டும் இப்படி என கேக்க


அவரோ கோபமாக இனிமே சார்னு கூப்பிட வாய ஓடைச்சிடுவேன் டா ராஸ்கல் எங்க குடும்பமாமே அப்ப நீ யாரு நம்ப குடும்பன்னு சொல்லு உனக்குன்னு ஒரு தங்கச்சி, தாத்தா, அம்மம்மா, பையன், பொண்டாட்டி, மச்சான் அப்படினு நாங்க இருக்கோம் சரியா அப்பறம் உன்ன பிடிக்க ஒரே காரணம் உன் நல்ல குணம் தான் யாரும் வேணாம் என் ரதி தான் வேணும்னு சொத்தை எல்லாம் விட்டுட்டு வந்த பாரு அன்னக்கி முடிவு பண்ணேன் நீதான் என் செல்ல பேரன் அப்படினு என அவர் கூறி முடிக்க
சாரி வீரா என கூறி அவரை அணைத்து கொண்டான்.
பின் விலகி இனிமே உங்களுக்கு என்ன வேணுமோ சொல்லுங்க நான் செய்றேன் என் கேக்க அதற்கு வீரவோ அதான் நான் கேக்காமலே என் ரதியா என்கூட பேச வச்சிட்டியே அப்பறம் என்ன பெருசா எனக்கு வேணும் ஒன்னும் வேணாம் இன்னக்கி மாதிரியே நீங்க எல்லாம் ஒன்ன சந்தோசமா இருங்க எனக்கு என் மீனாட்சிக்கும் அது போதும் என கூறி மாலை போல ஊருக்கு சென்று விட்டார்.


நாட்கள் வீரின் மழலை மொழியோடும், குறும்போடும், அவள் தேவ்வின் காதலோடும் இனிமையாய் நகர்ந்தது ரதிக்கு அங்கே ராகவனும் பல்லவியும் இந்த மூன்று மாதமாக அலைபேசியிலேயே காதலை வளர்த்து கொண்டு இருந்தனர். ராகவோ அவன் காதலி ராகபல்லவி வரவிற்காக காத்து கொண்டு இருக்க, மறுபக்கம் தேவ்வும் அவன் மனைவியின் மனம் அறியாமல் தவித்து கொண்டு இருந்தான்.




ரதியின் கழுத்தில் மீண்டும் தாலி கட்டும் தேவ். ராகவ் பல்லவியின் காதல் வரலாறு. அடுத்த பாகத்தில்.....
 
Last edited:

Author: Nithya
Article Title: ரதி 🩵14
Source URL: Indhu Novels-https://indhunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top