Hello! It seems that you are using AdBlock - some functions may not be available. Please add us as exceptions. Thank you for understanding!
  • வணக்கம் 🙏🏻 இந்து நாவல்ஸ் தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்
  • இந்து நாவால்ஸ் தளத்தில் எழுத விரும்புவோர், indhunovel@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு செய்தி அனுப்பவும். கற்பனைகளை காவியமாக்குங்கள் ✍🏻💖
Member
Messages
53
Reaction score
8
Points
8
அத்தியாயம் 6


திருமணத்திருக்கு வந்து இருந்த சில பெண்கள் ரதியையும் ருத்தரணை சேர்த்து தவறாக பேசிக்கொண்டு இருந்தனர். இதனை ருத்தரனும் கவனித்து கொண்டு தான் இருந்தான். அப்போது குழந்தையின் அழு குரல் கேட்க குழந்தையை நோக்கி சென்றான்.
குழந்தை மங்கள வாத்திய சத்தத்தினால் பயந்து அழ ஆரம்பித்தது. ருத்ரனோ வீரை தூக்கி கொண்டு கோவிலின் குளம் அருகே சென்று வேடிக்கை காண்பித்து அழுகையை நிறுத்தினான். அவனும் அழுத களைப்பில் உறங்கி விட்டான்.


அப்போது அங்கே இருந்த பெண்மணி ரதியிடம் வந்து சுப நிகழ்ச்சி நடக்கும் இடத்திற்கு உன்னை போல கணவன் இல்லாமல் பிள்ளையோடு இருக்கும் பெண் வரலாமா என கேட்க இன்னொரு பெண்மணியோ புருஷன் இருக்கானா இல்ல அப்பன் பேர் தெரியாத குழந்தையா என கேட்க கோபமான ரதியோ
போதும் நிறுத்துங்க என்னை பத்தி என்ன தெரியும் உங்களுக்கு ஹான் சொல்லுங்க கொஞ்சம் விட்ட உங்க இஷ்டத்துக்கு பேசிக்கிட்டே போறீங்க என அவள் கத்த அங்கே சலசலப்பு ஏற்பட்டது.

அதற்குள் அங்கு விடயம் அறிந்து வீரோடு வந்த ருத்ரனோ தன் ருத்ர விழிகளோடு அந்த பெண்களை பார்த்து யாரை பார்த்து என்ன வார்த்தை சொன்னிங்க ஹான் அவ யாரு தெரியுமா உங்க வீட்டு பையன் வேலை பாக்குற கம்பெனி சி இ ஓ. உங்களுக்கு விருப்பம் இல்லைனா கூப்பிடமா இருக்கனும் அத விட்டுட்டு அவளை பார்த்து தப்பா பேச நீங்க யாரு? உங்களுக்கு யாரு அந்த உரியமைய கொடுத்தது சொல்லுங்க. என அவன் கோபமாக கத்த

அப்போதும் அடங்காத அந்த பெண்மணியோ நீ யார் அதை கேட்க உனக்கும் அவளுக்கும் என்ன சம்பந்தம் என வினவ ருத்ரனோ சத்தமாக அவ என் பொண்டாட்டி நான் அவ புருஷன் ருத்ரதேவன் ரதிமலர். இது என் பையன் ருத்ரவீர் ருத்ரதேவன் என கர்வமாக சொன்னான்.
இதை கேட்க அவர்கள் வாய்யோ கம் போட்டத்தை போல ஓடிகொண்டது. இதுக்கு மேல யாரும் அவளை பத்தி தப்பா பேசுனீங்க நான் சும்மா இருக்கமாட்டேன் சொல்லிட்டேன் என அவன் கோபமாக கூறி முடிக்க.

அங்கே வந்த மணமகன் தினேஷ் ஓ நடந்த சம்பவங்களுக்காக இருவரிடமும் மன்னிப்பு கேட்டான். ரதியோ பரவாயில்ல என கூறி விட்டு திருமண பரிசை தினேஷ்யிடம் கொடுத்து விட்டு கோவில்லை விட்டு வெளியே சென்றாள். அவள் பின்னாலே ருத்ரனும் வீரோடு வந்தான்.
வீரை ரதியிடம் கொடுத்துவிட்டு அவன் மகிழுந்தை எடுத்து வந்தான். மூவரும் அதில் ஏறி ருத்ரனின் வீடு நோக்கி சென்றனர்.

ருத்ரன் வாகனத்தை செலுத்தும் வேகத்திலே அவன் கோபத்தின் அளவு தெரிந்தது. பத்தே நிமிடத்தில் வீட்டின் முன் மகிழுந்தை நிறுத்தினான். பின் வீரை ரதியிடம் இருந்து வாங்கி கொண்டு வீட்டிற்குள் நுழைந்தான். அவன் பின்னால் ரதியும் வந்தாள். உறங்கிய வீரை மெத்தையில் படுக்க வைத்து சுற்றி தலையணையை அடுக்கி வைத்து விட்டுட்டு வெளியே வந்தான் ருத்ரதேவன்.


அவன் வரும் போது ரதி சோபாவில் அமர்ந்து இருந்தாள். வீட்டின் கதவை சாற்றி விட்டு அவளுக்கு எதிரே வந்து அமர்ந்தான். பின் ரதியை பார்த்து எனக்கு எல்லா உண்மையும் தெரியணும் அதுவும் இப்பவே இன்னைக்கே எந்த கட்டு கதையும் வேணாம் உண்மையா மட்டும் சொல்லு பதில் சொல்லு பாப்பா இல்ல நீ என் அம்மு பாப்பா இல்ல.
சொல்லு எங்கே என் அம்மு என் பாப்பா எங்க சொல்லு ஒரு வருஷத்துக்கு முன்னாடி என் மேல உயிரே வச்சுயிருந்த அவ நான் தான் கோவத்தில அவளை தொலைச்சுட்டேன்.
இப்ப அவ எங்க போன சொல்லு அந்த பொம்பள உன்ன அப்படி பேசுது அப்ப கூட உன்னக்கு என் பெறகூட சொல்ல கஷ்டமா இருக்கா சொல்லு
சொல்லுங்க தி கிரேட் ஆர். எம். குரூப்ஸ். சி. இ. ஓ. ரதிமலர் ராஜதேவ பாண்டியன் சொல்லுங்க சொல்லுடி என அவன் கோபமாக கத்த ரதியோ அருகில் இருந்த தண்ணீர் எடுத்து அவனிடம் கொடுத்தாள்.


அவனும் மறுக்காமல் முழுமையாக அதை குடித்தான். இவ்வளவு நேரம் அமைதியை கடைபிடித்தவள் இப்பொது பேச ஆரம்பித்தாள். எல்லாத்தையும் சொல்றேன் நல்லா கேளுங்க மிஸ்டர். முன்னால் கணவர் ருத்ரதேவன் அவர்களே என நக்கலாக கூறினாள்.
ஏய்..... என அவன் கோபமாக பேச வர தன் கைபேசியில் இருந்து விவாகரத்து பத்திரிற நகலை காண்பித்தாள்.


இரண்டு வருடங்களுக்கு முன்........

ராஜதேவபாண்டியன் - மலர்க்கொடியினியால் அவர்களின் பிள்ளைகள் தான் தேவராகவன் மற்றும் ரதிமலர். ராகவனுக்கு ஐந்து வயது இருக்கும் போது ரதி பிறந்தாள். அவள் பிறத்ததும் அதிக ரத்த போக்கினால் மலர்க்கொடி இறந்து விட்டாள். மனைவியின் பிரிவை தாங்க முடியாத பாண்டியனோ ராகவனின் பதினைந்து வயதில் மாரடைப்பால் இறந்து விட்டார்.
அதன் பின் குழந்தைகள் இருவரையும் ஆர். எம். குரூப்ஸ் யையும் நிலவொளியினியல் மலர்க்கொடியின் தங்கை தான் பார்த்து கொண்டாள்.


சில வருடங்கள் கழித்து...........

தேவ ராகவன் குழந்தை நல மருத்துவர் ஆனான். ரதியோ பி. பி. ஏ. இரண்டாம் ஆண்டு படித்து கொண்டு இருந்தாள். நிலாவின் உடலில் புற்று நோயின் பாதிப்பு அதிகம் ஆனதால் ஆர். எம். குரூப்ஸ். சி. இ. ஓ. வாக ரதிமலர் பதவி ஏற்று கொண்டு கம்பெனியை வளர்ச்சியை நோக்கி எடுத்து சென்றாள். பதினேழு வயது முதல் அயராது பாடுப்பட்டு அந்த கம்பெனிகாக உழைக்கிறாள்.


ரதியின் கல்லூரியில் BEST YOUNG BUSSINESS MAGNETS என்ற போட்டி ஒரு மாதம் நடைபெற உள்ளது. அதில் ரதியும் கலந்து கொள்ள இருக்கிறாள். இன்று போட்டியின் ஆரம்ப நாள் அதற்காக ரதி வேகமாக போடி நடக்கும் அரங்கம் நோக்கி சென்று கொண்டு இருந்தாள். அவள் மனமோ ஒரு வித படபடப்பில் அதிகமாக துடித்துக்கொண்டு இருந்தது.


அப்போது எதிரே வந்த ஒரு மாணவன் மீது மோதி விட்டாள். அவள் கண்களோ இமைக்க மறந்து அவன் கண்களை பார்த்து கொண்டு இருந்தது. பார்வையாலே ரதியின் மனதை கொள்ளை கொண்ட அந்த மாயா மன்மதன் யாரோ... முதலில் தெளிந்த அவன் ரதியை பார்த்து கவனமாக போங்க பாப்பா என கூறி சென்றான். சென்ற அந்த மன்மத தேவனை பற்றியே யோசித்து கொண்டு இருந்தாள் இந்த நவீன காலத்து ரதிதேவி..




யார் அவன்.? என் அவனை பார்த்து ரதி தடுமாற வேண்டும்.. விடை அடுத்த பதிவில்.......
 
Last edited:

Author: Nithya
Article Title: ரதி 🩵6
Source URL: Indhu Novels-https://indhunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top