Hello! It seems that you are using AdBlock - some functions may not be available. Please add us as exceptions. Thank you for understanding!
  • வணக்கம் 🙏🏻 இந்து நாவல்ஸ் தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்
  • இந்து நாவால்ஸ் தளத்தில் எழுத விரும்புவோர், indhunovel@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு செய்தி அனுப்பவும். கற்பனைகளை காவியமாக்குங்கள் ✍🏻💖
New member
Messages
26
Reaction score
1
Points
3
அசுரன் 12

"ப்ச்.. என்னனு தெரில அந்த ரூபனையும் சதீஷையும் சாரு வேலைய விட்டு தூக்கிட்டாரு ஆமா எதனாலன்னு உனக்கு தெரியுமா?"

"ஹும்... எனக்கு தெரியாது சுஷ்மா எப்படியோ அந்த இம்சைங்க போனதே ரொம்ப நல்லது."

"ஆனாலும் சார் எந்த ரீசனும் இல்லாம அந்த ரூபனையும், சதீஷையும் வேலைய விட்டு தூக்குவாருன்னு நான் நெனச்சு கூட பாக்கவே இல்ல."

"ஏய் சுஷ்மா அவங்க ரெண்டு பேரையும் வேலைய விட்டு தூக்கியாச்சு. அத்தோடு முடிஞ்சு போச்சு இப்ப எதுக்கு சும்மா அதைப்பத்தி பேசிட்டு இருக்க. உனக்கு வேற வேலையே இல்லையா?"

"இல்லடி அது வந்து.."

"இங்க பாரு சும்மா அதையே பேசாத. நீ எதுக்காக அவங்கள பத்தி சும்மா கேள்வி கேட்டுகிட்டே இருக்கன்னு எனக்கு நல்லாவே தெரியும். நேத்து தான அந்த ரூபன் உனக்கு ப்ரொபோஸ் பண்ணா நீ யோசிச்சு சொல்றேன்னு சொல்லிருந்தல்ல இப்போ அவ கிட்ட உன் காதல சொல்லணும்னு நினைச்சுக்கிட்டு இருந்த. அதுக்குள்ள இப்படி ஆகிப்போச்சு அதானே?" அவள் சொல்லவும் அதற்கு அவளும் ஆமாம் என்பது போல மேலும் கீழும் தலையை ஆட்ட,

"தெரியும் கண்டிப்பா நீ அவன் பிரப்போஷுக்கு ஓகே சொல்லுவேன்னு தெரியும்டி. வேணாம் டி இதெல்லாம் விட்டு தொலை. அவன் நல்லவனே கிடையாது. அனுபவத்துல சொல்றேன் கேட்டு நடந்துக்கோ என்னால எதையும் வெளிப்படையா பேச முடியாது. ஏன்னா உன்கிட்ட நான் ஏதாவது சொல்லப்போய் அது நீ வேணும்னே சொல்லுவியோ இல்ல பேச்சுவார்த்தையில் சொல்லுவியோ அது லீக் அவுட் ஆயிடும். அப்புறம் என்னை பத்திதான் இந்த ஆபீஸ்க்கு ஹாட் டாபிக்கா இருக்கும். அதுக்கு நான் ஆளாக விரும்பலப்பா. எனக்கு நிறைய வேலை இருக்கு. உனக்கு நல்லது சொல்லனும்னு தோணுச்சு தயவுசெஞ்சு அவங்க காண்டாக்ட் நம்பர் எல்லாம் இருந்துச்சுன்னா பிளாக்ல போட்டுட்டு வீட்ல பாக்குற பையன கல்யாணம் பண்ணிக்கோ அவ்வளவுதான் என்னுடைய அட்வைஸ். எடுத்துக்கிட்டாலும் சரி எடுத்துக்காம போனாலும் சரி இதுக்கு மேல இதை பத்தி என்கிட்ட பேசாத" கோபத்துடன் எண்ணையில் போட்ட கடுகாய் பொரி, பொரிவென பொரித்து தள்ளிவிட்டு அவள் வேகமாக சென்றுவிட அவளை ஆவென வாயை பிளந்தபடி பார்த்துக் கொண்டிருந்தாள் சுஷ்மா.

இவர்கள் இவ்வாறு பேசிக் கொண்டிருப்பதை தன்னுடைய கேபினுக்கு செல்லும் வழியில் சுடரிகா கேட்டுக் கொண்டுதான் இருந்தாள். அவளுக்குமே சற்று குழப்பமாகத்தான் போய் முடிந்தது.

'அது எப்படி நேற்று இவர்கள் என்னிடம் கேவலமாக தகாத வார்த்தைகள் எல்லாம் பேசிக் கொண்டிருந்தார்கள். அது எனக்கு மட்டும் தானே தெரியும். எப்படி ரெண்டு பேருமே அட்ட டைம்ல சார் வேலை விட்டு தூக்குவாரு ஒண்ணுமே புரியலையே... குழம்பிப்போனவளுக்கு அதற்கு மேல் குழம்பி போய் மண்டையை பியித்து கொள்ள மனதில் இடம் இல்லை.
அதற்கு அடுத்து அவளுக்கு வேலைகள் குவிந்து போய் கிடக்க அவளது கேபினில் போய் உட்கார்ந்தவள் மடமடவென வேலைகளை பார்க்க ஆரம்பித்தாள்.

"குட் மார்னிங் சார் குட் மார்னிங் சார்" என ஒவ்வொருவரும் வணக்கம் வைக்க, ஒரு சிறு கண்ணசைவில் தலையசைவையும் காமித்து விட்டு, அவன் நேராக அவனது அறைக்கு வர, அங்கு அவனுக்காகவே காத்திருந்தவள் போல, கையில் ஐபேடுடன் நின்று கொண்டிருந்தாள் சுடரிகா.

அவளை மேலிருந்து கீழாக கூர்மையான விழிகள் துலைத்தெடுத்தவன் காலையில் அவள் ஒட்டு துணி கூட இல்லாமல் பார்த்த காட்சிதான் அவன் கண்முன்னே வந்து காட்சியளித்தது. என்னதான் அவள் இப்பொழுது உடையே அணிந்திருந்தாலும் அவனுக்கு அந்த காட்சி மட்டும் மனதை விட்டும் கண்களை விட்டும் போகாமல் அப்படியே நிலைத்து மோக பார்வையாய் பதிந்து போய்விட்டாள் யாழினி.

அவளை பார்த்ததும் உக்ரன் அப்படியே சிலையாக அதே இடத்தில் நின்று கொண்டே இருந்தவனுக்கு அவள் சார் எனும் விளிப்பில் தான் நினைவுக்கு வந்தான்.

"என்ன விஷயம் சொல்லு?" கடுமையான குரலுக்கு சொந்தக்காரன் போல உக்ரன்னுக்கு, அவ்வளவு கடுமை வார்த்தைகளில்.

"சார் நம்ம கார்மெண்ட்ஸ்ல சரக்கு வந்து இருக்கு சார் அதுல கிளாத் மெட்டீரியல்ஸோட குவாலிட்டி செக்ஸன்ல இருக்குற மேனேஜர், க்ளாத்ஸ் அவ்ளோ குவாலிட்டியா இல்லன்னு சொல்றாரு சார்"

"ம்ம்... சரி இப்ப அதுக்கு நான் என்ன பண்ணனும்?"

"இல்ல சார் அவங்க உங்களை நேரடியா பார்த்து பேசணும்னு சொல்றாங்க சார்" சற்றே திணறினாலும் சொல்ல வந்ததை தெளிவாக சொல்லி முடித்தாள் சுடரி.

"அவங்க எதுக்கு என்ன பாக்கணும் அத ரீப்ளேஸ்மென்ட் பண்ணிட்டு அத விட நல்ல பெட்டர் குவாலிட்டியான க்ளாத்த வாங்கிக்க வேண்டியது தானே? இதுல எதுக்கு அவங்க என்னைய பாக்கணும்னு சொல்றாங்க. எனக்கு ஏற்கனவே லாட் ஆஃப் வொர்க். இதுல இந்த சின்ன விஷயத்தையும் நான் தான் பார்க்கணுமா?" காலையில் உக்ரன் எழும் போதே அவனுக்கு இன்றைக்கு, உலகத்தில் மிகப் பெரும் தரம் வாய்ந்த காஸ்டியூம் டிசைனர்ஸ் மீட்டிங் நடக்க விருப்பதாக குறுஞ்செய்தியாக வந்திருந்தது.

"திடீரென எதுக்கு இந்த மீட்டிங்" என்று அவன் கேள்வி எழுப்ப,

"இது திடீர்னு ஏற்பாடு பண்ண மீட்டிங் தான் உடனடியா பெங்களூர் வாங்க ஈவினிங் பைஃவ் ஓ க்ளாக் மீட்டிங்" என அதில் மீண்டும் குறுஞ்செய்தியாக வந்திருக்க, அதில் சற்றே கடுப்பான உக்ரன் இன்றைக்கு அவன் தன் நண்பனுடன் சேர்ந்து, ஹாக்கி விளையாட போகலாம் என்று நினைத்து வைத்திருந்தான். அது போச்சே என்ற கடுப்பு அவனுக்கு,

சிறுவயதிலிருந்து ஹாக்கி என்றால் அவனுக்கு மிகவும் பிடித்தமானது. அதில் நேஷனல், இன்டர்நேஷனல் லெவலில் பதக்கமும் வாங்கி இருக்கிறான். அதன் காரணமாக அவன் இன்றைக்கு கொஞ்சம் டைம் இருக்கவும், விளையாடலாம் என நினைத்து வைத்திருக்க, அது இப்படி மாறி போனது. அதிலேயே மூட் பயங்கர அப்செட் வருத்தம் எல்லாமே வந்துவிட்டது. அதற்கு மருந்தாக வந்தாளோ என்னவோ நம் நாயகி சுடரிகா.

அவளின் அழகு வதனத்தை பார்த்த பின்பு தான் அவன் கொண்டிருந்த கோவம் கொஞ்சம் கொஞ்சமாக இறங்கியது. அதில் இப்பொழுது மீண்டும் அவள் இப்படி ஒரு செய்தியை சொல்லி இருக்க, மேற்கொண்டு அவனுக்கு கோவம் சூடேறி, அவளின் மீதே கோபத்தை காமிக்க,

"நான் என்னடா பண்ண? என் மேல எதுக்குடா நீ கோபத்தை காமிக்கிற போடா. அவங்க மேல உன் கோபத்தை காமி ஆளும் மூஞ்சியும்" மனதிற்குள் திட்டிக் கொண்டாள். அதை தவிர வேறு எதுவும் அவளால் இப்போதைக்கு செய்ய முடியவில்லை.

சுடரிகா விஷயம் சொல்லிவிட்டு பாவமாக அவனது முகத்தை பார்த்துக் கொண்டிருக்க, ஆனால் அவனுக்கோ காலையில் பார்த்த நினைவுதான் மீண்டும் மீண்டும் வந்து அவனை அலைகழித்து கொண்டே இருந்தது.

அவனையும் அறியாமல் அவன் ஆண்மை அவனை தட்டி எழுப்ப,

"டேய் உனக்கு என்னடா வேணும் கொஞ்ச நேரம் தான் அமைதியா இறேன்டா அவளைப் பார்த்தாலே நீ என்ன இப்படி எழும்புற இடுப்பின் கீழ் அவஸ்தை புரியாமல் அவள் அவனை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டே இருக்க, இவ என்ன இப்படி பாக்குறா அப்டியே ஆளை விழுங்குறது போல, சாதாரணமா இப்படித்தான் பார்ப்பாளா? இல்ல என்னை மட்டும் இப்படி பாக்குறாளா?" மனதிற்குள் புலம்பியவனாக,

"வர சொல்லுங்க" கோபமாக சொல்லிவிட்டு, உக்ரன் இருக்கையில் அமரவும் அவனை பார்ப்பதற்காகவே வெயிட்டிங் ஹாலில் உட்கார்ந்திருந்தவர்கள் அவனது அறைக்குள் நுழையவும்,

"என்ன விஷயம்?" என்றான்.

"சார் நேத்து ஈவினிங் வந்த கிளாத் மெட்டீரியல்ஸ் எதுவுமே சரி இல்லை சார் எல்லாமே ரொம்ப தரம் கம்மியா இருக்கு"

"சோ வாட் அதுக்கு நான் என்ன பண்ணனும் ரீப்பிளேஸ் பண்ணிட்டு நல்ல குவாலிட்டியா வாங்கிக்க வேண்டியதுதானே? இது ஒரு சின்ன விஷயம். இது என்கிட்ட வந்து சொல்லனுமா?"

"சாரி சார் இது உங்களை பொறுத்த வரைக்கும் சின்ன விஷயம் தான். ஆனா நம்ம கம்பெனியை பொருத்தவரைக்கும் ரொம்ப பெரிய விஷயம் இல்லையா? நம்ம கம்பெனியிலிருந்து டெலிவரி ஆகுற கிளாத் மெட்டீரியல்ஸ் எல்லாமே நாம ரொம்ப குவாலிட்டியா கொடுத்துக்கிட்டு இருக்கோம். அதுவும் விலை கம்மியாகவும் எளிய மக்களும் வாங்கக்கூடிய அளவிலும் நம்ம செஞ்சுக்கிட்டு இருக்கோம். இது உங்களுக்கு நான் சொல்லி தெரிய வேண்டிய அவசியம் இல்ல."

"மிஸ்டர் வாய் இருக்குங்குறதுனால இதுவேனாலும் பேசுவியா? யாரு மேன் நீ? என்ன சொன்ன எனக்கு இது சின்ன பிரச்சனையா? ஆமாயா எனக்கு இது சின்ன பிரச்சனைத்தான். அதை நான் ஈஸியா சாட்டவுட் பண்ணிருவேன். பட் உன்னால முடியலல பிரச்சனை எங்க நடக்குது? எதனால நடக்குதுன்னு பையின்டவுட் பண்ணி, உன்னால ஏன் மேன் முடியல? அப்புறம் என்ன இதுக்கு உனக்கு மேனேஜர்ன்னு போஸ்ட் போஸ்ட் போட்டு கொடுத்துருக்கேன். ஆனா நீ இப்ப லெக்சர் எடுத்துட்டு இருக்க?" கடுப்பில் அவன் எகிறி குதிக்க,

"சார் சாரி சார். நேரடியா விஷயத்துக்கு வந்தர கடந்த ஆறு மாசமா கிளாத் மெட்டீரியல்ஸ் எதுவுமே குவாலிட்டி இல்ல சார். இதோட நான் 3, 4 டைம்ஸ் வரைக்குமே ரிட்டர்ன் பண்ணி நல்ல கிளாத் வாங்கிட்டேன். ஆனாலுமே ஆறு மாசத்துக்கு முன்னாடி வாங்குன க்ளாத்துக்கும் இப்ப நான் வாங்கிட்டு இருக்குற கிளாத்தோட குவாலிட்டியும் சரியில்ல சார். இது ஒன் டைம் டூ டைம்னா விட்ருவேன். ஆனா இதுவே ஒவ்வொரு மாதமும் தொடருது. ப்ளீஸ் இதுக்கு சரியான ஆக்சன் எடுங்க சார் இதுக்கு பின்னாடி யாரோ இருப்பாங்களோன்னு எனக்கு சந்தேகமா இருக்கு" சொல்லிவிட்டு அத்தோடு அவர் தன்னுடைய உரையை முடித்துக் கொள்ள, அவனோ யோசனையில் ஆழ்ந்தான்.

"ஓகே இப்ப நீங்க போங்க இந்த பிரச்சனையை வித்தின் ஒன் ஹவர்ல நான் சரி பண்றேன் நீங்க போகலாம்"

"சார் இன்னைக்கு ஈவினிங்க்குள்ள நம்ம டெலிவரி பண்ணி ஆகணும் கிளாத் எவ்ளோ சீக்கிரம் நம்ம கைக்கு கிடைக்குதோ அப்போ தான் நம்ம ஸ்டிச் பண்ணி கொடுக்கவே முடியும் சார் பதைபதைப்புடன் அவர் சொல்வதைக் கேட்டு கண்களை அழுத்தமாக மூடியவன், ஹாஃப்னவர் அதுக்குள்ள உங்களுக்கு ஆறு மாசத்துக்கு முன்னாடி எப்படி அதே குவாலிட்டியான மெட்டீரியல்ஸ் கைக்கு கிடைச்சதோ, அதைவிட நல்ல மெட்டீரியல் கைக்கு வந்து சேரும் இப்ப நீங்க போகலாம்." சொன்னவன் தன்னுடைய மொபைல் போனை எடுத்து யாருக்கோ பேச, அங்கிருந்து என்ன பதில் கிடைத்ததோ இதழை ஓரமாக வளைத்து சிரித்தவன்,

"டூ இட் நவ்" சொல்லிவிட்டு போனை அணைக்க, உக்ரன் சொன்ன நேரத்திற்குள்ளாகவே அந்த கிளாத் மெட்டீரியல்ஸ் அனைத்தும் அவனது கம்பெனிக்கு வந்து சேர்ந்தது.

உக்ரானந்த் போன் பேசியதும் அரைமணி நேரத்துக்குள்ளாகவே கிளாத் மெட்டீரியல்ஸ் அனைத்தும் கம்பெனிக்கு வந்து சேரவும், அனைத்தையும் கண்ணசைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள் சுடரிகா.

"எப்படி இது சாத்தியம் யாருக்கோ போன் செஞ்சாரு. லாஸ்ட்டா டூ இட் நவ்ன்னு சொன்னாரு. அதுக்குள்ள எப்படி இந்த கிளாத் மெட்டீரியல் வந்துச்சு. அப்போ தரம் குறைவா கொடுத்த ஆளுங்க யாரா இருப்பாங்க? ஒண்ணுமே புரியலையே? தலையை சொரிந்தபடியே, அவள் அங்கே உட்கார்ந்திருக்க,

"வேலையை பாரு" அதட்டல் அவனிடம் தென்பட,

"இதோ சார்" இதழை கடித்து கண்களை சிமிட்டி கணினியில் முகம் பதிக்க அவளது ஒவ்வொரு அசைவையும் அணு அணுவாக ரசித்தானோ அல்லது பார்த்தானோ அவனுக்கே வெளிச்சம். ஆனாலும் அவளை மட்டுமே பார்க்க தோன்றுகிறது அவனுக்கு.,, ஆனால் இவன் தன்னை பார்த்துக் கொண்டிருக்கிறான் என்பது கூட தெரியாமல் அவள் பாட்டுக்கு தன்னுடைய வேலையை முடித்துவிட்டு,

"சார் டைம் முடிஞ்சது நான் கிளம்புறேன்" என்றாள்.

"ஓகே நாளைக்குண்டான ஷெடியூல் எல்லாமே நீ என்கிட்ட சொல்லணும்னு அவசியம் இல்ல என்னோட ஈமெயிலுக்கு மெசேஜ் பாஸ் பண்ணிடு. நாளைக்கு நான் ஆபீஸ் வரமாட்டேன். என் இடத்தில் இருந்து நீ எல்லா அரேஞ்ச்மெண்ட்ஸும் பண்ணிடு. ஓகே நான் இப்ப போயாகணும்." அவளுக்கு முன்னதாகவே கிளம்பியவன், கார் பார்க்கிங்கில் காரை எடுத்துக் கொண்டு வெளியே வர, அவளோ சரியாக ஆஃபீஸை விட்டு வெளியே வந்திருந்தாள்.

சுடரிகா பஸ் நிறுத்தத்தில் அங்கே நின்று கொண்டிருக்க,

"எப்படியும் வீட்டுக்கு தான் போக போறா பேசாம வீட்ல கொண்டு போய் விட்டுட்டு போலாமா?" எனும் யோசனை திடீரென அவனுக்குள் முளைத்தது.

"நீ எதுக்குடா அவளை கொண்டு போய் வீட்ல விடனும் அவளுக்கும் உனக்கும் என்ன சம்பந்தம் இருக்கு? ஓஹோ புதுசா தாலி கட்டிட்டோங்கிற மம்மதியில திரியிறியா? அதெல்லாம் சுட்டு போட்டாலும் நீ நினைச்சு கூட பாக்க கூடாது. ஜஸ்ட் அவ காண்ட்ராக்ட் மனைவி உனக்கு. அவ்வளவுதான் சொல்லப்போனா மனைவி என்கிற அந்தஸ்துக்கு கூட அவள் தகுதியே இல்லாதவ, அதுவும் அவள் ஒரு அனாதை பொண்ணு. நோ வே அதுக்கு சான்சே இல்ல. இவள எல்லாம் அழைச்சிட்டு போய் வீட்ல விடனுங்கிற அவசியமும் எனக்கு இல்ல" என நினைத்தவன் அடுத்த இரண்டே நிமிடத்தில் காரை அவளின் முன்னால் நிறுத்த, அவனுக்கு முன்னதாகவே, இருசக்கர வாகனத்தில் அவளை ஒருவர் அழைத்துக் கொண்டு போக அவனும் வாயை ஆவென பிழந்து விட்டான்.

"யார் அந்த அவர்? அந்த அவருக்கு சொந்தக்காரர் யாராக இருக்கும்?"

"கெஸ் இட்."

தித்திக்கும்...
 

Author: shakthinadhi
Article Title: அசுரன் 12
Source URL: Indhu Novels-https://indhunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top