Hello! It seems that you are using AdBlock - some functions may not be available. Please add us as exceptions. Thank you for understanding!
  • வணக்கம் 🙏🏻 இந்து நாவல்ஸ் தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்
  • இந்து நாவால்ஸ் தளத்தில் எழுத விரும்புவோர், indhunovel@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு செய்தி அனுப்பவும். கற்பனைகளை காவியமாக்குங்கள் ✍🏻💖
Administrator
Staff member
Messages
238
Reaction score
213
Points
63
அத்தியாயம் - 35

வாடர்ன் சொன்ன பிறகு தான் நேரத்தை கவனித்தாள் கவி. நெஞ்சமெல்லாம் படபடவென அடித்துக் கொண்டது. மாலைப் பொழுதே வரவேண்டியவள் நேரத்துக்கு வராததை கூட கவனித்தில்க் கொள்ளாமல் அப்படியா அலட்சியமாக இருந்திருக்கிறோம் என்று நினைக்கும் போது தன் மீதே அவளுக்கு கோவம் வந்தது.

"அக்கா, என்ன சொல்றீங்க ஸ்வாதி இன்னும் ஹாஸ்டல் வரலையா.. வேற ரூம்ஸ்ல எல்லாம் நல்லா செக் பண்ணி பாத்தீங்களா, அவ கண்டிப்பா இந்நேரத்துக்கு எல்லாம் ஹாஸ்டல் வந்திருப்பாளே.." என்றாள் பதட்டமாக.

"ஏம்மா கவி, அவ வந்திருந்தா என்ட்ரன்ஸ் நோட்ல சைன் பண்ணி இருக்க மாட்டாளா.. இல்ல CCTV ல பதிவாகி இருக்காதா.. இருந்தும் நல்லா தேடிப் பாத்துட்டு தான் வந்து உன்கிட்ட சொல்றேன், அவ வரலமா, இது போதாதுன்னு அவ நம்பர்க்கு போனும் போட்டு பாத்தேன் எடுக்கல.." என்றார் வார்டன்.

அடுத்து என்ன செய்வது என்று புரியாத கலக்கமான நிலை. "ஸ்வாதி என்மேல கோச்சிக்கிட்டு என்ன பாக்க பிடிக்காம எங்கயாவது போய்ட்டியா.."உள்ளுக்குள் கேட்டுக் கொண்டவளுக்கு அழுகை முட்டியது. அவளின் தன்நம்பிக்கை தைரியம் எல்லாம் ஸ்வாதியோடே சென்று விட்ட உணர்வு.

இதற்கு மேலும் தாமதிக்கக் கூடாது தாமே அவளை எங்கிருந்தாலும் தேடிக் கண்டுபிடித்து அழைத்து வருவோம் என்று,
"ஏம்மா கவி இந்த நேரத்துல நீ வெளியப் போகக் கூடாது பொறுமையா இரு, எதுவா இருந்தாலும் காலைல பாத்துக்கலாம்.." வாடர்ன் தடுக்க தடுக்க, அவரை மீறி வெளியே ஓடி இருந்தாள் கவி.

நல்லிரவு நேரம், நாய்கள் குறைக்கும் அச்சுருத்தும் சத்தத்தை கூட கருத்தில் கொல்லாமல், நடு வீதியில் ஸ்வாதி வேலை பார்க்கும் அலுவலகத்திற்கு மூச்சிறைக்க ஓடினாள் கவி. அவசரத்திற்கு ஒரு ஆட்டோ கூட கிடைக்கவில்லை.

யாதவின் அலுவலகம் ப்ரம்மாண்டமாக உயர்ந்து நின்று, அந்த இரவிலும் ஜொலித்துக் கொண்டிருக்க, வாச்மென் கம்பை வைத்துக் கொண்டு அமர்ந்தவாங்கிலே நல்ல உறக்கத்தில் இருந்தார். அவரை அவசரமாக எழுப்பிய கவி, ஸ்வாதியைப் பற்றி விசாரிக்க,

"சாயங்காலம் 6.00, 6.30 க்கு எல்லாம் ஒருத்தர் விடாம போய்ட்டாங்க உள்ள யாரும் இல்ல.." என்றவர் அலட்சியமாக சொல்லி மேலும் உறக்கத்தை தழுவ, அடுத்து என்ன செய்வது என்ற புரியாத நிலையில், நெஞ்சைப் பிடித்தபடி சுற்றும் முற்றும் கலங்கிய விழிகளால் பார்த்துக் கொண்டிருந்தவளுக்கு அப்பட்டமான பயம் வந்துவிட்டது.

'இந்த ஊரில் அப்படி யாரையும் தங்களுக்கு தெரியாத போது, எங்கு சென்றிருப்பாள்..' என்ற குழப்பமே கவியை அடுத்த அடி எடுத்து வைக்க முடியாத அளவிற்கு தடுத்து நிறுத்தியது.

நேரம் செல்ல செல்ல ஸ்வாதிக்கு ஏதாவது ஆபத்தோ என்றெல்லாம் மனம் அடித்துக் கொள்ள, "ச்ச.. ச்ச.. அப்டிலாம் எதுவும் இருக்காது.." தனக்கு தானே பைத்தியம் போல பேசிக் கொண்டு, வீதி வீதியாக ஓடிக் கொண்டிருந்தாள்.

அதிகாலை 6.30 மணி.

மருத்துவமனை வளாகத்தில் வாழ்க்கையே வெறுத்த நிலையில் ப்ரம்மை பிடித்தவள் போல, ஆறுதல் கூற கூட ஒருவருமின்றி, உணர்வற்ற உருவாக அமர்ந்திருந்தவளின் கண்ணில் மட்டும் நிற்காத அருவியாக கண்ணீர் பெருக்கெடுத்துக் கொண்டே இருந்தது.

அனைத்தும் ஒரே இரவில் நடந்தேறி விட்டது. ஒருவருக்கு பிரச்சனைகளும் சோதனைகளும் வரலாம், ஆனால் வாழ்க்கையே வெறும் பிரச்சனைகளாகவும் சோதனைகளாகவும் அமைந்தால் என்னதான் செய்வது!

நிலைக்குத்திய பார்வை நீர்த் திரைகளோடு எங்கோ வெறித்திருக்க, சிறிது நேரத்தில் icu அறையில் இருந்து அவசரமாக வெளியே வந்த மருத்துவரின் முன்னால், இதயம் துடிக்க ஓடி வந்து நின்றாள் கவி.

"பேஷண்ட்டோட ரிலேட்டிவ்ஸ் யாரும் இல்லையா, நீ யாருமா பேஷண்ட்க்கு.." அவர் குரலில் அத்தனை தீவிரம்.

"இல்ல டாக்டர், அவ என் பிரண்ட். எங்க ரெண்டு பேர்க்கும் நாங்க தான் ஒருத்தருக்கு ஒருத்தர் துணை.. எதுவா இருந்தாலும் என்கிட்டே சொல்லுங்க டாக்டர் ப்ளீஸ்.." என கையெடுத்துக் கும்பிட்டவளுக்கு, பயத்தில் உடலெல்லாம் நடுங்கி மயக்கம் வருவதை போலிருந்தது.

"சரிமா என்கூட வா" என பெருமூச்சு விட்டு அவளை அவர் அறைக்கு அழைத்து செல்ல, உடலில் வலுவின்றி சுவற்றைப் பிடித்துக் கொண்டு தள்ளாடி நடந்து சென்றாள், தன் தலையில் பெரிய குண்டை இறக்கப் போவது அறியாமல்.

"டாக்டர், அவளுக்கு ஒன்னும் பிரச்சனை இல்ல தானே.." அழுகையில் உதடு பிதுக்கி பாவமாக கேட்டிட,

"எப்டி சொல்றதுனு தெரியலமா, ஆனா சொல்ல வேண்டிய கட்டாயம்.. அந்த பொண்ணோட இதயம் ஒரு பக்கம் முழுசா சிதஞ்சி நசுங்கி இருக்கு, ப்ளீட் வேற அதிகமா இருக்கு, எங்களால முடிஞ்சவரை அதிக ப்ளீட் இல்லாம கட்டுப் படுத்தி இருக்கோம்..

ஆனா சொல்ல முடியாது, இன்னும் பன்னிரண்டு மணி நேரத்துக்குள்ள பேஷண்ட்க்கு இதய மாற்று சிகிச்சை செஞ்சாகனும்.. இல்லனா அந்த பொண்ணு பிழைக்கிறது ரொம்ப ரொம்ப கஷ்டம்.." மருத்துவர் கூற, தலையில் இடியை இறக்கியது போல அதிர்ச்சியில் உறைந்துப் போனாள் கவி.

மேலும் மருத்துவர் தொடர்ந்தவறாக, "அது மட்டும் இல்லாம அந்த பொண்ண ரேப் அட்டம்ட் பண்ணிருக்காங்க, தொடைகள்ள அங்கங்க அதுக்கான காயங்கள் இருக்கு.." என்றதும் ஜீவன் மரிந்து உணர்வில்,

"ஐயோ கடவுளே.. இன்னும் எங்களுக்கு எத்தனை கஷ்டங்களை தான் கொடுப்ப.. இதை எல்லாம் கேக்கவா அவளை எனக்கும், எனக்கு அவளையும் கொடுத்த.. என் ஸ்வாதி யாருக்கு அப்டி என்ன பாவம் பண்ணா.. அவளுக்கு இப்டி ஒரு நிலைமை.." நெஞ்சில் அடித்துக் கொண்டு கதறி அழுதவளை தேற்றுவதற்குள், மருத்துவருக்கு பெரும் தலைவலி ஏற்பட்டது.

"இங்க பாருமா, இங்க இப்டி அழுதுட்டு இருக்கக் கூடாது.. பேஷண்ட்ட பத்தின தகவலை சொல்லியாச்சு, தாமதிக்காம மேற்கொண்டு என்ன பண்ணணுமோ அதை செய்ங்க.. எங்களுக்கு இவங்க ஒரு பேஷண்ட் மட்டுமில்ல, மத்த பேஷண்ட்ஸயும் கவனிக்க போகணும்.."
சற்று கடுமையாக உரைத்த மருத்துவர், மேலும் சிகிச்சைக்கு எட்டு முதல் பத்து லட்சங்கள் வரை ஆகும் என கூறி சென்று விட, மொத்தமாக இடிந்துப் போனாள் கவி.

காலையில் கவியிடம் கோவமாக பேசிவிட்டு வந்த பிறகு, ஸ்வாதி தனது வேலையினை ஏனோ தானோவென செய்துக் கொண்டு இருந்தாள். மதிய உணவு இடைவேளையின் போது அனைவரும் உண்ண சென்றிருக்க, இவள் மட்டும் மேஜையில் தலை சாய்த்து கண் மூடி இருந்தவள் முதுகை யாரோ தீண்டிய உணர்வில், சட்டென கண் திறந்துப் பார்க்க, செந்தில் தான் கண்ணில் காதல் பெருக்கெடுக்க நின்றிருந்தான்.

அவனை அலட்சியமாக பார்த்த ஸ்வாதி, "என்ன வேணும்.." என்றாள் சிடுசிடுப்பாக.

"எனக்கென்ன வேணும்னு தெரிஞ்சிகிட்டே இப்டி கேட்டா எப்டி ஸ்வாதி, நான் உன்ன விரும்புறேன், பதிலுக்கு நீயும் என்ன விரும்பனும்.." என்றான் சிரித்தபடி.

"கட்டாயப்படுத்தி காதல வாங்க முடியாது mr. நானே டென்ஷன்ல இருக்கேன் நீங்க வேற மேலும் ஏத்தி விடாதீங்க.. உங்க வேலையப் பாருங்க" காரமாக பேசி அவ்விடம் விட்டு செல்லப் போக,

"ஸ்வாதி கொஞ்சம் நில்லு, நான் உன்ன கட்டாயப்படுத்தல, ப்ளீஸ் என்காதல கொஞ்சம் புரிஞ்சிக்க முயற்சி பண்ணு.." கீழே இறங்கி வந்தான் அவன். ஆனால் அவள் இறங்கவில்லையே!

"நோ சார், நான் உங்கள இப்ப இல்ல எப்பவும் விரும்ப மாட்டேன்.. இதோட இந்த எண்ணத்த விட்டுட்டு போய் வேலையப்பாருங்க.." என்றதும் கோவம் அதிகரித்தது அவனுக்கு.

"நீ எம்டிய மனசுல வச்சி தானே இப்டியெல்லாம் பேசுற, ஒத்துக்குறேன் என்ன விட அவர் எல்லா விதத்துலயும் ஒசந்தவர் தான்.. அதுக்காக எல்லாம் என் எண்ணத்தை என்னால மாத்திக்க முடியாது, எனக்கு நீ வேணும்..

பாத்தேன் அவரு இருக்கும் போது படில ஒட்டி ஒரசி நின்னு ரெண்டு பேரும் பேசிக்கிறது, போன்ல கொஞ்சிகிறது எல்லாம்.. நீ இங்க வேலைக்கு சேந்த ரெண்டு மூணு நாளுல புரிஞ்சிக்கிட்டேன், அவருக்கும் உன்மேல இன்ட்ரஸ்ட் இருக்குனு..

அதுக்கு தான் பிளான் பண்ணி, உன்ன அவர் திட்டி வெறுக்கனும்னு தான், நீ கஷ்டபட்டு ரெடி பண்ண பிராஜெக்ட்டையே கொளறுபடி செஞ்சி வச்சேன்.. ஆனா நீ அதோட காபிய சேஃப்டியா எடுத்து வச்சு காரியத்தையே கெடுத்து விட்ட.." பற்கள் நரநரக்க செந்தில் சொன்னதை எல்லாம் கேட்டவளுக்கு பேரதிர்ச்சி தான்.

அவனை அர்ப்பமாக பார்த்த ஸ்வாதி, "இப்படியும் ஒரு கேவலமான பிறவியா.." என நினைத்து, இவனிடம் இதற்கு மேலும் பேசுவது வீண் என்று அங்கிருந்து சென்றாள்.

மாலை வரை அலுவலகத்தில் இருந்தவள், சரியாக 6.30 அளவில் சாலையின் ஓரம் நடந்து சென்றவளை காரில் வந்த செந்தில் மர்மாக தூக்கி வந்தான், முழுதாக கட்டப்படாத கட்டிடம் ஒன்றுக்கு.

காரிலே ஸ்வாதி ஆழ்ந்த மயக்கத்திற்கும் சென்றிருந்தாள், வீரியமான மயக்க மருந்தை அவள் மூக்கில் அழுத்தியதில். எத்தனை நேரம் மயக்கத்தில் இருந்தாளோ! அவளை கடத்தி வந்த செந்திலும் நன்றாக குடித்து விட்டு, மயக்கத்தில் இருந்தவளிடம் ஏதேதோ உளறிக் கொண்டே மட்டையாகிப் போனவனுக்கு, நள்ளிரவுக்கு மேல் முழிப்புத் தட்டியது.

சிமெண்ட் தரையில் மயங்கிய நிலையில் இருந்த ஸ்வாதியை வக்கிரப் பார்வையோடு நெருங்கி, அவள் ஆடைகளை கிழித்தெறிந்து தன் கீழ்த்தரமான புத்தியால் அவள் மேல் படர்ந்தவன், சரியாக முழுதாக அவளுள் இணைய போகும் தருணம் மயக்கம் தெளிந்து கண் விழித்தவளுக்கு உயிர் போகும் அதிர்ச்சி.

அதை விட தான் இருந்த நிலை உணர்ந்து மனம் வெம்பித் துடித்து அழுகை வெடித்தது. ஒரு வயதுக்கு மேல் பெற்றவர்களே பார்க்க உரிமை இல்லாத உடலை, ஒரு வக்கிரன் பார்த்து விட்டானே என்பதை அவளால் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை.

தன் முழு பலம் கொண்டு அவனை கீழே தள்ளிவிட்டு எழுந்து ஓடப் போன ஸ்வாதி, ஆடையில்லா தன் நிலையை எண்ணி நொந்து, கிழிந்து கிடந்த உடைகளை எடுத்துக் கொண்டு ஓட,
"நீ எங்கே போனாலும் விடமாட்டேன் டி.." என ஓலமிட்டவாரே அவளை விடாமல் தூரத்தினான் செந்தில்.

இருவருக்கும் நடுவே பலமான போர்க்களம் நடந்தது அங்கு. 5 மாடி கட்டிடத்தில் உள்ள இரண்டாம் தளத்தை சுற்றியும் ஓடிய நிலையில், கையில் கிடைத்ததை எல்லாம் தூக்கி வீசினாள் அவன் மீது வெறியாக. செந்தில் கண்ணில் மண்ணை தூவி விட்டு மறைவான இடத்திற்கு வந்து உடைகளை அணிந்துக் கொண்டவளாக, வாய் பொத்தியபடி சத்தம் வராமல் கதறி அழுதாள் ஸ்வாதி.

"ஏய்.. ஸ்வாதி எங்கே இருக்கே டி.. மரியாதையா நீயா வெளிய வந்துடு, நானா உன்ன கண்டு பிடிச்சேன் அப்புறம் உன்ன யாராலும் காப்பாத்த முடியாது.." பெரும் குரலெழுப்பிய செந்தில், கத்திக் கொண்டே முழுதாக கட்டப்படாத அறைகளை சுற்றியும் தேட, ஒரு சுவற்றின் பின்னே உள்ளடங்கிய மூச்சுடன், உடல் மொத்தமும் நடுங்கிய நிலையில், குத்துக்காலிட்டு வாய் பொத்தி அமர்ந்திருந்தாள்.

ஒற்றை சுவர் இருவரையும் பார்க்க விடாமல் தடுத்து இருந்தாலும், பாவையின் நிழல் அடங்காமல் அந்த மிருகத்துக்கு காட்டிக் கொடுத்து விட்டதே! வயிறு வரை இருந்த சுவற்றின் வழியே, குதிரை போல் எகுறி குதித்த செந்தில்,

"மாட்டியா..." என நக்கலாக பார்க்க, ஆஆ.. என பயந்து அலறிய ஸ்வாதி, தரையில் புரண்டு விழுந்து தட்டுத்தடுமாறி அவன் கையில் சிக்காமல் ஓடினாள்.

அவனும் விடாமல் அவளை துரத்தவும், பின்னால் பார்த்துக் கொண்டே ஓடிய ஸ்வாதி, கட்டுமான கம்பிகளை அடுக்கி வைத்திருப்பதை கவனிக்காமல் ஓடவும், அதில் ஒற்றைக் கால் சிக்கி பிரட்டி விட்ட நிலையில், இரண்டாம் தளத்தில் இருந்து கீழே விழுந்த வேகத்தில் தலையில் இருந்து ரத்தம் பீரிட்டது.

துடிதுடித்து உயிருக்குப் போராடிய ஸ்வாதியை கண்ட செந்தில், அவள் நிச்சயம் இறந்து விடுவாள் என பயந்து போனவனாக, கொஞ்சமும் ஈவிறக்கமின்றி தப்பி ஓடி இருந்தான்.

காலையில் நேரத்தோடு கட்டுமான வேலைக்கு வந்தவர்கள், ரத்தக்கிளறியாக இருந்த பெண்ணை கண்டு அதிர்ச்சியாகி, காவல் நிலையத்துக்கு அழைத்து சொல்ல, அவர்கள் வந்து பரிசோதனை செய்த பிறகு தான், கொஞ்சமே கொஞ்சம் உயிர் இருப்பதை உறுதி செய்து, மருத்துவமனையில் கொண்டு வந்து சேர்த்தனர்.

பிறகு அவளை பற்றி விசாரித்து அவள் தங்கும் விடுதிக்கு தெரியபடுத்த, இரவெல்லாம் கால்கடுக்க தோழியை தேடியலைந்து சோர்ந்து போய் விடியக்காலை நான்கு மணியளவில் விடுதிக்கு வந்த கவியிடம் விடயத்தைக் கூறியதும், கத்தி அழுது ஆர்ப்பாட்டம் செய்து மருத்துவமனை வந்தவளுக்கு, பெரும் அதிர்ச்சிகளே காத்திருந்தது.

ஸ்வாதி விழுந்த வேகத்தில் அவளின் இதயம் சிதைந்து, உயிர்க்கு போராடிக் கொண்டு இருப்பதை கேட்டே கவி சுக்குநூறாக உடைந்து போயிருக்க, அவளை யாரோ பலவந்தப்படுத்த முயற்சி செய்திருப்பது அறிந்த உடன், உயிர்வரை துடித்துப் போனாள்.

ஸ்வாதியின் உயிர் பிழைக்க வைக்க, இனி கவி எடுக்கப் போகும் முடிவுகள் என்ன??
 

Author: Indhu Novels
Article Title: அத்தியாயம் 35
Source URL: Indhu Novels-https://indhunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top