Hello! It seems that you are using AdBlock - some functions may not be available. Please add us as exceptions. Thank you for understanding!
  • வணக்கம் 🙏🏻 இந்து நாவல்ஸ் தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்
  • இந்து நாவால்ஸ் தளத்தில் எழுத விரும்புவோர், indhunovel@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு செய்தி அனுப்பவும். கற்பனைகளை காவியமாக்குங்கள் ✍🏻💖
Member
Messages
53
Reaction score
8
Points
8
அத்தியாயம் 16


சென்னை வந்த ராகவனும் பல்லவியும் முதலில் பார்க்க வந்தது ரதியை தான். வீட்டின்னுள் நுழைந்த ராகபல்லவி பாப்பு என்ற கூவளோடு சென்று ரதியை அணைத்து கொண்டாள். பதிலுக்கு ரதியும் கவிமா என அவளை கட்டி கொண்டாள். இருவரும் சுற்றி இருக்கும் அனைவரையும் மறந்து தனி உலகில் பாசமழையை பொழிந்து கொண்டு இருந்தனர்.


பின் கொஞ்ச நேரம் கழித்து வீரா, மீனாட்சி, தேவ் என அனைவரிடமும் பேசிவிட்டு சென்று பயணக்கலைப்பில் அவர்களுக்கு என உள்ள அறையில் குளித்து விட்டு உறங்கினர் ராகவனும் பல்லவியும். மாலை போல இரு மகிழுந்தில் ஆந்திரா நோக்கி சென்றனர்.


ஒன்றில் வீரா, மீனாட்சி, ராகபல்லவியும் இரண்டாவது மகிழுந்தில் ரதி, தேவ், வீர், ராகவ் என ஆந்திர மாநிலம் நோக்கி சென்று கொண்டு இருந்தனர். அப்போது ராகவ் முகம் அமைதி மற்றும் சோகமாக இருக்க அதை கவனித்த தேவ் ராகவிடம் பேச ஆரம்பித்தான்.

தேவ் : ஏன் மச்சான் அமைதியா இருக்க

ராகவ் : என்ன விஷயம்னு உனக்கு தெரியாத 😏

தேவ் : சரி விடு இன்னும் மூணு நாள் தான அதுக்கு அப்பறம் தங்கச்சி கூட தான இருக்க போற அதுக்கு ஏன் இப்படி மூஞ்சிய தூக்கி வச்சிட்டு வர 🙂

ராகவ் : ஏன் டா சொல்லமாட்ட, உனக்கு என்ன உன் பொண்டாட்டி பின்னாடி உக்காந்து வர எனக்கு அப்படியா? கொஞ்சம் கூட என் பேபிக்கு என்னைய பார்த்த பாவமா இல்ல போல அதான் அவ தாத்தா கூப்பிட்டதும் அவங்க கூட போய்ட்டா என சோகமாக கூற 😌

ரதி : சரி அதுக்கு கல்யாண மாப்பிளை நீ இப்படியா வருவ கொஞ்சம் சிரி என கூற

தேவ் : ஆமா, இப்படி இருக்காதாடா மச்சான். என்னால பார்க்க முடியல சரி சிரிக்க வேணாம் உன்னோட காதல் கதை கொஞ்சம் சொல்றியா என கேக்க 🙂

ரதி : ஆமா எனக்கும் சொல்லு ப்ளீஸ் ராகவ். நான் உன் பாசமான ரதி தான சொல்லு என கெஞ்ச

ராகவனும் அவனுடைய கதையை கூற அராம்பித்தான்.

( வாங்க நண்பர்களே நம்மளும் கதை குள்ள போகலாம் )

ராகபல்லவி பெயரை போலவே மிகவும் மேன்மையான மனதினை கொண்டவள் அவள். தனியாக அனாதை இல்லத்தில் வளர்ந்த அவளை பெற்றோரோடு சென்று வார வாரம் சனிக்கிழமை சந்தித்து வருவான் தேவராகவன். அவள் இருந்த இல்லம் பிற்காலத்தில் ஆர். எம். குரூப்ஸ் க்கு சொந்தமான இல்லமாக மாற்றப்பட்டது.

அங்கே இருந்த குழந்தைகளை ராகவனின் தந்தையே கல்வி கற்க ஏற்பாடு செய்தார். இன்றும் அந்த இல்லத்தை ரதியும் ராகவனும் நடத்தி வருகின்றனர்.பின்பு ராகவனோடைய வகுப்பில் தான் பல்லவியும் சேர்ந்து படிக்க ஆரம்பித்தாள்.


பள்ளி முதல் கல்லூரி வரை ஒன்றாகவே படித்து வந்தனர் இருவரும். பார்த்த முதல் நாளே பல்லவியை கண்டு ராகவ் பேபி என அழைக்க அது அப்படியே தொடர்கிறது. ரதி அவள் அன்னையின் வயிரில் இருக்கும் போது அடிக்கடி பல்லவியும் ராகவனும் வந்து பேசிவிட்டு செல்வர்.

பின்பு அன்னை தந்தையை இழந்த ராகவனுக்கு நல்ல தோழியாக அரவணைத்து பார்த்து கொண்டவள் தான் பல்லவி. பல்லவிக்கு தன்னை சொந்த பேத்தி போல பார்க்கும் வீரா மீனாட்சி பிள்ளையை போல காக்கும் ராகவனின் பெற்றோர் மற்றும் தோழியாய் நடத்தும் நிலாவின் மீது அளவு கடந்த பாசமும் மரியாதையும் உண்டு. இன்றும் இவளின் முதல் குழந்தை அவளின் பாப்பு ரதி தான்.


பள்ளியில் எட்டாம் வகுப்பு முடியும் நேரம் பல்லவி பெரிய பெண் ஆனதால் முழுதாக இரண்டு மாதங்கள் பள்ளி வரவில்லை. அப்போது தான் ராகவன் அவள் இல்லாமல் மிகவும் சோகத்தையும் தனிமையையும் உணர்ந்தான். அந்த இரண்டு மாதமும் அவனுக்கு அவன் பேபி இல்லா பள்ளி, அவள் முகம் காணாத தினம், அவள் ஊட்டி விடாத மதிய உணவு, என அனைத்தும் அவன் பேபியை சார்ந்து இருக்க இரண்டு யுகம் போல கழிந்தது அவனுக்கு.

இரண்டாம் மாத முடிவில் சென்று அந்த இல்லத்தில் அவன் பேபியை கண்டான். இத்தனை நாள் பிரிவின் ஏக்கம் அவள் நினைவு என அனைத்தையும் சேர்த்து வாடிய கன்று போல இருந்தவன் அவளை கண்டவுடன் அவன் முகத்தில் அப்படி ஒரு பொலிவு. தாயை கண்ட பசு போல அவளிடம் மகிழ்ச்சி உடன் சென்றான்.


அதன் பின் வந்த நாட்களில் அவன் பேபியை நன்றாக பார்த்து கொண்டான். வருடங்கள் வார நாளிதழ் போல கடக்க இதோ இருவரும் இளங்கலை மருத்துவம் முடித்து இருந்தனர். அவன் பேபியின் ஆசைக்காக அவளை முதுகலை படிப்பிற்காக லண்டன் அனுப்பி வைத்தான்.


கல்லூரி முடித்ததும் அவளிடம் அவன் காதலை கூற அவளும் அவன் காதலை ஏற்றுக்கொண்டாள். இருவரும் ஒரே முடிவாக ரதிக்கு திருமணம் முடிந்த பின் திருமணம் செய்து கொள்ளலாம் என முடிவு செய்து இருந்தனர்.பல்லவிக்கும் அவள் ராகவனை பிரிந்து இருக்க முடியாமல் அடிக்கடி சென்னை வந்து விடுவாள். அந்த வேளையில் தான் நிலாவின் மரணம், ரதியின் கல்யாணம், தேவ் - ரதியின் பிரிவு என நடக்க இவர்களின் திருமணமும் தள்ளி கொண்டே சென்றது.


இதுவரை

அவன் கலங்கும் வேளையில் தோழியை மாறி மடிதாங்கினால்.....

அவன் தவறு செய்யும் போது கண்டித்து அன்னையை மாறினால்....

அவன் கொஞ்சும் வேளையில்அவனிடமே மழலை மொழி பேசி மகளாய் மாறினால்...

அவன் மொத்த காதலும் அவளுக்கு என அனைத்தும் பெற்று அவனின் காதலியானால்....

அவனும் அப்படித்தான் அவளுக்கு நண்பனாய், தந்தையாய், தாய்யாய், காதலானாய், பாதுகாவலனாய் அவளிடம் பழகி வந்தான். இருவரின் நெருக்கமும் அவர்களின் விரல்கள் பின்னி கொள்வதிலும், பார்வைகள் மாற்றிகொள்வதிலும் தானே தவிர வேறு எதுவும் இல்லை.


ராகவன் கதையை சொல்லி முடிக்க அனைவரும் வீராவின் வீட்டை அடைந்து இருந்தனர். இரவு வானில் மேகத்தில் நிலவு ஒளிந்து விளையாட ரதியை காற்று கூட இடமில்லாமல் அணைத்து அவள் இதழில் தேனை தேடி கொண்டு இருந்தான் தேவ். அவளும் அவன் அடர்ந்த கேசத்தில் விரல்களை நுழைத்து அவனுக்கு ஒத்துழைப்பு கொடுத்து கொண்டு இருந்தாள்.

அவன் விரல்களோ அவள் உடலில் ஊர்வலம் போக அருகே கேட்ட வீரின் குரலில் அவன் உதட்டை கடித்து அவனிடம் இருந்து ம்ம்ம் என்ற சத்தத்தோடு மூச்சு வாங்க இதழை பிரித்து எடுத்தாள் அவள். ஆடவனோ ரத்தம் காசிந்த அவன் இதழை துடைத்து கொண்டே கண்ணால் அவளிடம் காண்பிக்க அவளோ கண்ணால் மெத்தையில் கண்ணகளை உருட்டி ஆ.. ஊ.. ஓ.. மா.. என கூறி கை கால்களை அசைத்து கொண்டு இருந்த வீரை காண்பித்தாள்.

ரதி சென்று வீரை தூக்கி கொள்ள ரதியின் மடியில் படுத்து கொண்டான் தேவ். அவனும் ரதியை பார்த்து பாட சொல்லி கேக்க அவளும் பாட ஆரம்பித்தாள்.

🎶✨ நெடுந்தூரம் உன் இசை கேக்கும் பிறை நீக்கி பௌர்ணமியக்கும்
வெதக்காட்டில் விண்மீன் பூக்கம்
விழிச்சாலும் நெசந்தான் ❤️✨🎶

🎶✨ உயிர் அலையும் நேத்தி முத்தம்
போதும்வருங்காலம்
வாசனை சேர்க்கும் 🩷✨🎶

அவள் பாடிமுடிக்கும் போது தேவ்வும் வீரும் உறங்கி விட இருவருக்கும் நடுவில் வீரை படுக்க வைத்து உறக்கம் கலையாமல் தேவ்வின் தலையை தலையணையில் மாற்றி விட்டு இருவரையும் சேர்த்து அணைத்தது போல படுத்துக்கொண்டாள் ரதி.



ரதிக்கும் பல்லவிக்கும் மருதாணி வைத்துவிடும் தேவ் மற்றும் ராகவ்.
அடுத்த பாக்கத்தில்...
 

Author: Nithya
Article Title: ரதி 🩵16
Source URL: Indhu Novels-https://indhunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top